நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-3

நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?

Are we to be “temperate in all things”?

1 கொரிந்தியர் 9:25 “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.”

R2155 [cal.1 P4]: –

மூன்றாவது சேர்த்தலாகிய சுய கட்டுப்பாடு, நல்ல குணத்தில் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். “பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்” என்பது ஞானமுள்ள மனுஷனின் ஆலோசனை. பல வெற்றிகரமான தளபதிகள் இன்னும் தன்னை வெல்லவும் கட்டுப்படுத்தவும் கற்றுக்கொள்ளவில்லை. சுய கட்டுப்பாடு என்பது நம் உணர்வுகள், எண்ணங்கள் சுவைகள், பசியார்வம், உழைப்பு, சந்தோஷம், துக்கம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுடன் தெடர்புடையது. இவைகளை வளர்ச்சி அடைய செய்வது, மிக உயர் தர குணங்களை வளர்ச்சி அடைய செய்வதே பொருள். விசுவாசத்தோடு கூடிய சுய கட்டுப்பாடு, மன உறுதி, பரத்தில் இருந்து வரும் ஞானம், தெய்வீக காரியங்களிலும், பூமிக்குரிய விஷயங்களின் தீர்ப்பு, நடத்தை, தற்காலிக விவகாரங்களை ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றிலும் அதிகரிக்கும் வைராக்கியத்தை குறிக்கிறது. “உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக,”

R2119 [col.2 P2 to end]: –

நமக்கு முன்னுள்ள பாடத்தில், இதுபோன்ற ஒவ்வொரு கேள்விக்கும் சரியான ஆவிக்குரிய எடுத்துக்காட்டு இருப்பதை அப்போஸ்தலர் அறிவிக்கிறார். நம்முடைய அயலகத்தார்கள் தேவனுடைய கட்டளை என்று நம்பி, வாரத்தின் முதல் நாளில் ஆராதனையில் சந்தித்தால், நாமும் முழு சுதந்திரத்தோடே அதே நாளில் முழுமையாக கூடுகையை நடத்தலாம். இதை நாம் கடமையாகவோ, கட்டளையாகவோ அல்ல, மாறாக கிறிஸ்து நம்மை விடுதலையாக்கின சுதந்திரத்தை, முழுமையான மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவேண்டும். உண்மையில், ஒரு கடமையாகவோ, கட்டளையாகவோ அல்லாமல் சுதந்திரமாகவும், சிலாக்கியமாகவும் நாம் உணரும்போது, அந்த நாளை நாம் அதிக மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும். ஆயினும் நாம் கொடுக்க வேண்டிய அற்பமான சுதந்திரங்களும் உள்ளது. உதாரணமாக நம்முடைய அயலவர், அவர் யூத சட்டத்தின் கீழ் இருப்பதாக நினைத்து, ஒரு ஆணி அடிப்பதையும் ஓய்வு நாளின் மீறுதல் என்று கருதலாம். நியாயப்பிரமாணத்தின் கீழ் அல்ல, கிருபையின் கீழ் இருக்கிறோம் என்பதை அறிந்த நாம், ஒரு ஆணி அடிப்பதில் எந்த பாவமும் இல்லை என்பதை உணர்கிறோம். ஆனால் அந்த விடியத்தில் நமது சுதந்திரத்தை சரியாக ஒதுக்கி வைத்துவிட்டு, அன்றைய அமைதியையும், சமாதானத்தையும் தக்கவைப்பதற்கு நாம் ஒத்துழைக்கவும் இணங்கவும் வேண்டும். உண்மையில், நம் நண்பர்களின் தவறுகள் பல விஷயங்களில் நமக்கு ஒரு ஆசீர்வாதமாகவும், கிருபையாகவும் உள்ளதை நாம் உணர்கிறோம். சுதந்திரமும் சிலாக்கியமும் தேவனுடைய சட்டமாக அல்ல என்ற இந்த விஷயத்தை நாம் புரிந்துகொள்வது போல, பலரும் புரிந்துகொண்டால், பெரும்பான்மையானவர்கள் எந்த நாளையும் விசேஷித்து கொள்ளமாட்டார்கள். விரைவில் அது மற்ற நாட்களைப் போல மதிக்கப்படலாம். ஆகவே, ஓய்வு மற்றும் அமைதிக்காக மற்றும் பரிசுத்தமானவைகளைப் பற்றிய தியானத்திற்காக ஒரு நாள் ஒதுக்கப்படுவதற்கான சட்டம் அமைத்த தேசத்தில் நாம் வாழ்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் அந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கு எந்த காரணத்தையும் நாம் காணாவிட்டாலும் கூட, அதன் சட்டபூர்வமான மதச்சார்பற்ற நியமனத்தின் உண்மை, பூமிக்குரிய வேலைகளைத் தவிர்ப்பதற்கு போதுமான ஆதாரமாக இருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக, ஆவிக்குரிய விஷயங்களில் விசேஷ ஐக்கியத்திற்கு ஒரு நாள் இருப்பதற்கான ஞானத்தையும், ஆரம்பகால கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாள் மிகச் சரியானஒன்று என்பதையும் நாம் காண்கிறோம். ஒரு புதிய வாரத்தின் தொடக்க நாள் நமது புதிய ஓய்வு, புதிய நம்பிக்கைகள் மற்றும் புதிய ஜீயனை குறிக்கிறது – இவை அனைத்தும் நம் ஆண்டவரின் உயிர்த்தெழுதலில் இருந்து தோன்றியது.

“குறுகிய வழியில்” நடக்க விரும்புவோருக்கு அப்போஸ்தலரின் ஆலோசனையையும் முன்மாதிரியையும் நெருக்கமாக பின்பற்றுவதற்கு அறிவுறுத்துகிறோம். மேலும் அவர்கள் கிறிஸ்துவில் சுதந்திரமாக இருப்பதை உணர்ந்து, அனைவருக்கும் அவர்களை ஊழியக்காரர்களாக ஆக்கிக்கொண்டு, “கூடுமானால் எல்லா மனுஷருக்கும் விசேஷமாக விசுவாச வீட்டாருக்கும் நன்மை செய்ய நாடவேண்டும்.” அப்போஸ்தலர் எந்த கயநல நோக்கங்களுக்காக தனது சொந்த சுதந்திரத்தை இதற்காக நீக்கிவிடாமல், சுவிசேஷத்தின் மீதான அன்பு மற்றும் மற்றவர்களுக்கு அதன் குணப்படுத்தும் ஆசீர்வாதமான தைலத்தை வழங்குவதற்காகவே இப்படி செய்தார்.

இது அவரது சொந்த சிந்தையில் இருந்து வந்தது. கிறிஸ்துவின் ஆவி எங்கிருந்தாலும், அது பெறப்படுகிறது. அது அபிவிருத்தி செய்யப்பட்டால் அது விரைவில் அல்லது பிற்பாடு மற்றவர்களின் நலனில், குறிப்பாக ஆவிக்குரிய நலன்களி மற்றும் விவகாரங்களில் இந்த சுய வெறுப்பின் தன்மை வெளிப்படுத்தும், (1 கொரிந்தியர் 9:24-27) கிறிஸ்துலில் நமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும், கிறிஸ்தவ போதனையின் சாராம்சம், அந்த சுதந்திரங்களின் பயன்பாட்டில், நம்மையே மறுப்பதல்ல என்பதை அப்போஸ்தலர் நமக்குக் காண்பிக்கிறார். முழு விருப்பத்தோடு நீதிக்காக செயல்படும் ஊழியக்காரர்களாக மாறுவதற்காகவே, பாவத்தின் அடிமைகளாகிய நாம், விடுவிக்கப்பட்டோம் – “மரண பரியந்தம்” சுபத்தை தியாகம் செய்தலோடு ஊழியம் செய்வதற்காக, யூதர்கள், மோசேயின் கீழ் உள்ள பணிவிடைக்காரர்களின் வீடு, கடமையான சட்டங்களால் ஊழியக்காரர்கள் பிணைக்கப்பட்டிருந்தனர், இதன் பொருளும், அர்த்தமும் அவர்களுக்கு விளக்கமாக சொல்லப்படவில்லை. ஆனால் கிறிஸ்து தலையாக இருக்கும் குமாரர்களின் வீடு, முழு பலத்தோடு தேவனை அன்பு கூர்ந்து, நம்மை நேசிப்பது போல பிறனையும் நேசிக்கவேண்டும் என்ற ஒரே பிரமாணத்தை தவிர, வேறு எல்லா சட்டத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு புறத்தில் நமக்கு வழங்கப்பட்ட இந்த சுதந்திரம், மறுபுறம் மிக பெரிய சோதனையாக உள்ளது. அவருடைய ஊழியக்காரர்களாக, தேவனுக்காகவும், அவருடைய ஜனங்களுக்காகவும், இந்த உலகிற்காகவும், நாம் வைத்திருக்கும் அன்பை நிரூபிப்பதற்கு, நாம் எந்த அளவிற்கு நம்முடைய சுதந்திரத்தை கைவிட தயாராக இருக்கிறோம் என்ற பொறுப்பு நம்மேல் விடப்படுகிறது.
அப்போஸ்தலர் தனது காலத்தில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில், முக்கியமான பந்தயமாகிய ஓட்ட பந்தயத்தை, கொண்டு இதை விளக்குகிறார். ஓட்ட புந்தய வீரர்கள் ஓடுவதற்கு விடுதலை பெறுகிறார்கள், அதேபோல கிறிஸ்தவர்களாகிய நாமும் நியாயப்பிரமாணத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, பந்தய பொருளை பெற்றுகொள்ள, ஓடும்படியாக சுதந்திரம் பெற்றுள்ளோம். ஆனால் சில அங்கீகரிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு இணங்கி, “அதன்படி ஓடுபவர்” மட்டுமே ஜெயங்கொள்பவராக முடிசூட்டப்படுவார்

கிறிஸ்து இயேசுவில் பரம அழைப்பின் பந்தய பொருளைப் பெறுவதற்கான ஓட்ட பந்தயத்தில் ஓட அர்ப்பணித்த கிறிஸ்தவர்கள், இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இது இயேசுவின் இரண்டாம் வருகையில், நிறுவப்படும் மகிமையான இராஜ்யத்தில் அவருடன் உடன் சுதந்திரவாளிகளாக ஆளுவதற்கான பரிசாகும். நம்முடைய ஓட்ட பந்தயம், எந்த இலக்கும் இல்லாமல், நம்பிக்கை இல்லாமல், வெறுமனே நம் கயத்தை மறுப்பதற்காக இல்லாமல், பாவங்களுக்கான பரிகாரமாக இல்லாமல், அல்லது நற்குணத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக இல்லாமல், இந்த விடியத்தில், தேவனுடைய தயவினால், நம்முடைய கயத்தை வெறுப்பதற்கு ஒரு உன்னதமான மற்றும் ஒரு பெரிய அளவிலான ஊக்கத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். பந்தயத்தின் முடிவில் உண்டான பரிசு “நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே”, மற்றும் உண்மையுள்ள சிறு மந்தைக்கு “ஜீவ கிரீடமும்”, இராஜ்யத்தின் மகிமையையும் பெறுவர். ஆகவே நாம்நிச்சயமற்று, சந்தேகத்துடன், பரிசு என்னவென்று தெரியாமல் ஓடவில்லை. ஏனென்றால் ஆண்டவர் தனது சொந்த வார்த்தைகளால் நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம்.

நாம் ஜெயங்கொள்பவர்களாகவும், ஆண்டவரின் அங்கீகாரத்தை பெறுவோம் என்று நம்பினால், நாம் எல்லாவற்றிலும் மிதமானவர்களாகவும், எல்லாவற்றிலும் சுயநலமற்றவர்களாகவும் இருக்கவேண்டும் என்று அப்போஸ்தலர் இந்த தொடர்பைச் சுட்டிக்காட்டுகிறார். இதை அவர் இருபத்தேழாம் வசனத்தில் வலியுறுத்துகிறார், பந்தயத்தின் ஆரம்பத்திலேயே நாம் முழுமையாக தேவனுக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்பது அவசியமில்லை, ஆனால் தொடர்ந்து வளமான மற்றும் நிறைவான புதிய மனமும், கிறிஸ்துவின் சிந்தையும் நமக்குள் உட்பட்டு கொண்டே இருக்கவேண்டும். மற்றபடி, பழைய விழுந்து போன இயல்புகள் எழும்பி, புதிய சிந்தைக்கும், கிறிஸ்துவின் சிந்தைக்கும் இடையூறு விளைவித்தால், நாம் மாம்சத்தின் விருப்பத்தை மீண்டும் நம்மை கட்டுப்படுத்த அனுமதித்தால், நாம் மிக இழிவான முறையில் பந்தயத்தில் இருந்து நிறுத்தப்பட்டு, “ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டோம்” என்று எண்ணிகொள்ளலாம். ஏனெனில், மாம்சத்தின் சிந்தை மரணத்திற்கு வழிவகுக்கிறது, ஆனால் கிறிஸ்துவின் ஜீவியத்தில் உள்ள புதிய சிந்தையால் நாம் சத்திய வார்த்தையினால் ஜெநிப்பிக்கப்பட்டு, விசுவாசத்தின் மூலம் நித்திய ஜீவனுக்கும், நித்திய மகிமைக்கும் வழிநடத்தப்படுகிறோம்.