தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-37

தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?

How can we overcome evil surmisings and evil speaking?

(a) இருதயத்தை சுத்திகரிப்பதன் வழியாக

நீதி 4:23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.”

F409 [p2]: –

சிந்தனைகள் உருவாகும் இருதயம், அதில் உள்ள ஆவியையும் கவனிக்காமல், மாம்சத்தை சுத்திகரித்து, நாவுக்கு கடிவாளம் போடுவது வீணாக இருக்கும். ஏனெனில் இருதயத்தில் உருவாகும் சிந்தையே வார்த்தைகளினாலும், கிரியைகளினாலும் மாம்சத்தில் அசுத்தங்களை வெளிப்படுத்துகிறது. விடாமுயற்சியோடு ஜெபிப்பதினால் மட்டுமே நாம் இவைகளை சுத்திகரிக்க முடியும். “நம்மை சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” நாம் முழுமையாக சுத்திகரிக்கப்படாவிட்டாலும், நம்முடைய இருதயத்திலும், அதில் உள்ள நோக்கத்திலும், சிந்தையிலும், ஆவியிலும் நாம் பூரணமாக சுத்திகரிக்கப்படவேண்டும். (இருதயத்தில் சுத்திகரிக்கப்பட்டால் காலப்போக்கில் நம்முடைய வார்த்தைகளும் கிரியைகளும் பரிசுத்தப்படுமே) ஆகவே நம்முடைய ஆண்டவர் நம்முடைய இருதயத்தில் உள்ள பரிசுத்தத்தையும் அவருக்கு உண்மையாக இருக்கும் நிலையையும், காலப்போக்கில் புதிய சரீரத்தை பெறுவதற்கான அன்பின் பிரமாணத்தை பார்க்கக்கூடியவராக இருக்கிறார். ஏனெனில் “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.” – மத் 5:8

(b) ஜெபத்தின் வழியாக

சங் 141:3 “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.”

சங் 19:12-14 “தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக் காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும் பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.”

R2249 [col.3 p2]: –

நாம் தேவனோடு உடன்படிக்கை ஏற்படுத்தினால் நம்முடைய ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் சோதனைகளிலும், பிரச்சனைகளிலும் நம்முடைய ஆண்டவர் அருகிலிருந்து நமக்கு தேவையான காரியங்களை அவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதை ஏற்றுக் கொண்டு அதற்கு தகுந்தபடி நடந்தால் நாம் சரியாக வழி நடத்தப்படுவோம். ஆகவே, நம்முடைய தேவைகளுக்கு ஏற்றபடி அவருடைய உதவிகளை வேண்டி ஜெபிக்கவேண்டும். நித்தமும் அவருடைய கிருபைக்காகவும், ஆசீர்க்காகவும் பொதுவாக ஜெபிக்க வேண்டும். சோதனையின் நேரத்தின் போது முழு நம்பிக்கையோடும், அவர் அன்பை புரிந்துகொண்டு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நமக்கு நடக்கிறது என்ற நம்பிக்கையோடு, அவர் நமக்காக யாவையும் செய்வார் என்ற உறுதியோடும், நம்முடைய இருதயம் உடனடியாக நம்முடைய ஆண்டவரை நோக்கி உயரவேண்டும். இப்படிப்பட்ட நேரங்களில் நாம் நம்முடைய ஆண்டவரின் ஆலோசனையைக் கேட்கும்போதும், நீதி, சத்தியம், பரிசுத்தம், அன்பில் வளர்ச்சி அடைவதற்கு உதவிகளை நாடும்போது நிச்சயமாக நாம் அவருக்குள் நெருங்குவோம். இப்படியாக, நாம் மணி நேரங்களுக்கு ஒரு முறையும், தினமும், மாதந்தோறும் மற்றும் இறுதியாக் முழு வெற்றியையும் கண்டடைவோம்.

(c) நம்முடைய மனதை பரிசுத்தமும், தூய்மையான சிந்தைகளினால் முழுமையாக நிரப்புவதின் வழியாக

பிலி 4:8 “கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.”

R2890 [col.2 p3 to subhead end] – சிந்தனையை கட்டுப்படுத்துவது

மனிதர்களுடைய மூளை வித்தியாசப்படுவதினால் எல்லோருடைய சிந்தையும் நிச்சயமாக வித்தியாசப்படும் என்றும், ஒரு மனுஷன் தன்னுடைய மூளை அமைக்கப்பட்ட விதத்திற்கு இசைவாக மட்டுமே சிந்திக்க முடியும் என்றும் சிலர் நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சிந்தையைச் சீர்தூக்கிப் பார்த்து அதில் உள்ள தீமையானவைகளை களைந்து நன்மையான சிந்தனைகளை ஊக்குவிப்பதற்கு நாம் கற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு காரியத்தை செய்வதற்கு, நமக்கு ஒரு மாதிரி முன்னிருக்க வேண்டும். நம்முடைய வார்த்தைகளையும், கிரியைகளையும் கட்டுப்படுத்துவது போல நம்முடைய சிந்தைனைகளையும் கட்டுப்படுத்தலாம். நம்முடைய விருப்பத்தை நமக்கு முன் தலையாக நிறுத்தி அதற்கு உள்ள சிந்தனைகளை சிந்திக்க வேண்டும் என்று முடிவு செய்து அவைகளை ஊக்குவிக்கும் சிந்தனைகளை வளரச் செய்து எதிரிடையான சிந்தனைகளை தவிர்க்க வேண்டும். ஆகவே முதலில் நம்முடைய சித்தம் சரியானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கவேண்டும். அடுத்ததாக அவைகளை மட்டும் சிந்திப்பதற்கு நாம் உறுதி கொள்ள வேண்டும். இதற்கு எதிராக காணப்படும் சிந்தனைகளைக் கட்டாயமாக தடை செய்ய வேண்டும். உலக ஜனங்களின் மத்தியில் தன்னுடைய விசேஷித்த ஜனங்கள் ஆண்டவருக்கு முன்பாக தங்கள் இருதயத்தை தொடர்ந்து ஏறெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வசனங்கள் கூறுகிறது. “என் மகனே உன் இருதயத்தை எனக்குத் தா…” மனப்பூர்வமாக பாவம் செய்பவர்களை தேவன் இப்படியாக அழைப்பதில்லை. தேவனுடைய புத்திரர்களாக இருப்பவர்களை தேவன் அழைக்கிறார். ஏனெனில் தேவனுடைய புத்திரராய் இருப்பவர்கள் கிறிஸ்து இயேசுவின் மேல் உள்ள விசுவாசத்தினால் தங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தேவனுடைய சிந்தைக்கு இசைவான சிந்தையைக் கொண்டு இருக்கிறார்கள், மேலும் நாளுக்கு நாள் அவர்கள் பூரணப்பட்டு கொண்டு இருப்பதால் தங்களுடைய இருதயங்களையும் சித்தங்களையும், தேவனுக்கே அர்ப்பணித்து விடுகிறார்கள்.

இப்படியாக இருதயத்தையும் அதிலுள்ள சித்தத்தையும் தேவனிடம் கொடுத்தபின் தெய்வீக சித்தத்தை அறிந்து கொள்ளவும் தெய்வீக சிந்தைனைகளை பெற்றுக்கொள்ளவும் வார்த்தைகளினாலும், கிரியைகளினாலும் அவைகளுக்குக் கீழ்ப்படிய முயற்சிக்க வேண்டும். இவைகளின் சரியான அளவில் வளர்ச்சியடைந்தால், புதிய சிந்தை சுலபமான முறையில், வெகு சீக்கிரத்தில் வளர்ச்சியடையும். அப்பொழுது நம்முடைய ஆவிக்குரிய விருப்பங்கள், நம்பிக்கைகள், முயற்சிகள் அனைத்தும் புதிதாக்கப்படும். அல்லது புதிய துவக்கங்களை உருவாக்கும். ஆகவே தேவனுடைய தெய்வீக சித்தமும் திட்டமும் விசுவாசிகளுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இப்படியாக அவர்கள் அறிவில் வளர்ச்சியடைந்து இவைகளை குறித்தே சிந்தித்து, தெய்வீக திட்டத்தினாலும் விருப்பத்தினாலும் இருதயத்தை நிரப்பும் போது வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு நாம் மறுரூபமாக்கப்படுவோம்.

R3129 [col.2 p1:4]: –

பிலி 4:9 “நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.” என்ற இந்த வசனத்தை எத்தனை பேரால் கூறமுடியும்? இதுவே ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் வைக்கப்பட்ட அளவுகோலாகும்” ஏனெனில், ஒவ்வொருவரும் ஆண்டவரின் பிரதிநிதியாய் இருப்பதினால் அவருக்குள் காணப்படும் சகலமும் ஒரு கிறிஸ்தவனுக்குள் காணப்பட வேண்டும். அவர்களின் வார்த்தைகளினாலும் கிரியைகளினாலும் நடமாடும் நிரூபங்களாக இருந்து மற்ற சகோதரர்களின் நன்மைகளை நாட வேண்டும். இப்படியிருப்பதால் சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார் என்று அப்போஸ்தலர் சொல்லுகிறது ஆச்சரியமல்லவே. இப்படியிருந்தால் தேவன் அந்த அப்போஸ்தலரோடிருந்தார். அவரோடு மட்டுமல்ல, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்ற கூடிய ஒவ்வொருவரோடும் இருப்பார்.

பிலி 4:10 “என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம் மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.” அப்போஸ்தலரை குறித்து சிந்தித்தார்கள் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகிறது. மேலும் அவரை சேவிப்பதற்கான வாய்ப்பை அதிகரித்து கொண்டார்கள். அதற்குப் பின் அவர்களுடைய வார்த்தைகளை உங்களுக்கு நேரிடவில்லை.” என்று உரைத்தார்.

மற்ற சகோதரர்களின் உணர்வுகளை தேவையில்லாமல் காயப்படுத்தி விடக்கூடாது என்று தேவனுடைய இந்த மனுஷன் எவ்வளவு கவனமாக இருந்தார் என்று சற்று சிந்தித்து பாருங்கள். தேவனுடைய அன்பை பிரதிபலிக்க வேண்டிய நாமும் எவ்வளவு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நம்முடைய நாவினாலும், கிரியைகளினாலும் மற்றவர்களை காயப்படுத்தாமல் காயத்தை ஆற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். தனக்கு குறைச்சலிருப்பதாக அப்போஸ்தலர் குறிப்பிடாமல் மகிழ்ச்சியாயிருப்பதற்கு அவர் கற்றுக் கொண்டார் என்பதை மையப்படுத்தி பேசுகிறார். கவலைக் கேதுவான சிந்தனைகளை நம்மைவிட்டு அகற்றி, ஜெபத்தினால் தேவனிடம் பெற்ற அனைத்திற்கும் நன்றி செலுத்தினால் சமாதானத்தை பலனாக அடைவோம். நம்முடைய தேவைகள் எவ்வளவாய் இருப்பினும், இப்படிப்பட்ட மனநிலையில் பிதா கொடுக்கக்கூடிய காரியங்களில் நாம் நிச்சயமாக திருப்தி அடைவோம். நமக்கு தேவையான அனைத்தையும் பிதாவாகிய தேவன் பூரணமாக கொடுத்து கொண்டிருக்கிறார் என்று விசுவாசித்தோமானால் நிச்சயமாக நாம் பெற்ற அனைத்திலும் திருப்தியடைவோம் என்று பவுல் நமக்கு கற்றுத்தருகிறார். “எல்லாவற்றிலும் மனரம்மியமாக இருக்க கற்றுக் கொண்டேன்” நாம் விசுவாசத்தினால் ஜீவிப்பவர்கள். ஆகையால் மற்றவர்களின் உழைப்பினாலும், வேலையினாலும் நாம் திருப்தி அடையக்கூடாது. நாம் பெறக்கூடிய ஆவிக்குரிய வாய்ப்புகளில் திருப்தி அடைந்து விடக்கூடாது. நம்மால் முடிந்த வரைக்கும் இன்றும் அதிகமான வாய்ப்புகளில் நம்முடைய தாலந்துகளை பயன்படுத்தி முடிந்தவரை கர்த்தரின் பணிகளை செய்வதற்கு ஜெபத்தில் மன்றாட வேண்டும். இப்படிப்பட்ட முயற்சிகளின் பலன்களால் நாம் திருப்தியடையலாம்.

பறவைகளை பிழைப்பூட்டும் பரலோக பிதா, காட்டு புஷ்பங்களை அழகாக உடுத்தக்கூடிய பரலோக பிதா நம்முடைய தேவைகளை எந்த அளவுக்கு கவனித்து நம்மை பராமரிப்பார் என்பதை சிந்திக்க வேண்டும். ஆகவே தேவன் நமக்குக் கையளித்ததில் முழு திருப்தியடைந்து நம்முடைய பங்கை நம்மால் முடிந்த வரைக்கும், தேவனுடைய சித்தத்திற்குச் செயலாற்ற வேண்டும். தேவன் நமக்குக் கொடுத்த வாய்ப்புகளில் நம்முடைய தாலந்துகளையும், திறமைகளையும் பயன்படுத்தி கிடைக்கக்கூடிய பலன்கள் குறைவாயிருக்கும் பட்சத்தில் நாம் நிறைவான பலன் பெறும்வரை, திருப்தியடையக்கூடாது. “போதும் என்ற மனதோடுக்கூடிய தெய்வ பக்தியே மிகுந்த ஆதாயம்” என்ற வார்த்தைகள், நம்முடைய தாலந்துகளையும் வாய்ப்புகளையும் அசட்டை செய்துவிடக் கூடாது. ஏனெனில், நாம் நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு நாம் பெற்ற அனைத்தின் மேலும் நல்ல உக்கிரானக்காரனாக இருந்து அவைகளை நாம் விருத்தியாக்கிக் கொள்ள வேண்டும்.

R3596 [col.1 p2 through col.2 p2]: “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்”

[பிரமாணம்] VII சுத்தமுள்ளவர்களாயிருங்கள்: தேவனுக்கும் மனுஷனுக்கும் முன்பாக திறந்த மனசாட்சியுடன் இருங்கள். முதலில் இதை உங்களின் சிந்தைகளில் துவங்குங்கள். தீமையான எந்தக் காரியங்களையும் உங்கள் மனதில் நுழைத்து விடாதேயுங்கள். இதை உறுதிப்படுத்திக் கொள்ள கிறிஸ்து இயேசுவை கண் முன் மாதிரியாக வையுங்கள். எப்போதெல்லாம் தீமையான எண்ணங்கள் உங்கள் சிந்தனைக்குள் வந்தாலும் உடனடியாக தேவனிடத்தில் ஜெபத்தில் ஏறெடுங்கள். உங்கள் சிந்தையை ஜெபத்தோடு எப்போதும் இணைந்து வையுங்கள். “என்னுடைய வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரீதியாக இருப்பதாக.”

[பிரமாணம்] VIII வசனங்களில் உள்ள வெவ்வேறு குறிப்பிட்ட பிரமாணங்களை பின்பற்றுவதற்கு நாம் முயற்சிக்கும் போது தெய்வீக பிரமாணத்தின் கீழ் மறைந்துள்ள, கோட்பாடுகளை ஆழமாக புரிந்துக் கொள்ள அதிகமாக முயற்சிக்க வேண்டும். இந்தக் காரியம் நம்முடைய வாயின் வார்த்தைகள் சரியானதா தவறானதா என்று சீர்தூக்கி பார்க்க உதவியாயிருக்கும். உண்மையில், தெய்வீக பிரமாணத்தின் கோட்பாடுகளை நாம் எந்தளவுக்கு புரிந்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு தெய்வீக வார்த்தைகளில் உள்ள தேவனுடைய ஆவியை நாம் பெற முடியும். – சங் 110:97-105

[பிரமாணம்] IX குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பாங்கையும், சண்டைப் போடக்கூடிய குணமும் கிறிஸ்துவின் அன்பின் ஆவிக்கு எதிராய் செயல்படக்கூடியது.

இந்த உலகத்தில் மாம்சத்தையும், பிசாசையும், விதவிதமான கண்ணிகளையும் மேற்கொள்வதற்கு சிறிதளவு வாதம் செய்யக் கூடிய தைரியம் தேவைப்படுகிறது. நம்முடைய ஆண்டவரின் பார்வையில் நியாயமான காரியங்களுக்காகவும், ஞானமான காரியங்களுக்காகவும், நமக்குள் இருக்கும் பாவத்திற்கு எதிராக இந்தக் குணத்தை பயன்படுத்துவது நமக்கு பயனுள்ளதாக இருக்கும். சாத்தானுக்கும், அவனுடைய சகல இருள் மற்றும் மூட நம்பிக்கையான வல்லமைகளுக்கும் எதிராக, தேவனுடைய ஜனங்களை மீட்பதற்கு மேலும் இந்தக் குணத்தை பயன்படுத்தலாம். இதை நல்லப் போராட்டம் என்று வசனங்கள் குறிப்பிடுகிறது. நன்மைக்காகவும், சத்தியத்தியத்துக்காகவும், அவருடைய ஜனங்களின் சுயாதீனத்திற்காகவும், இந்த யுத்தக் களத்தில் நல்ல போர்ச்சேவகர்களாக நாம் போராடுகிறோம். நம்முடைய அதிபதியின் மகிமைக்காகவும், வாக்குவாதம் செய்யக்கூடிய இந்தக் குணம், நன்மையான நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதை இப்பிரபஞ்சத்தின் தேவன் விரும்புவதில்லை. சாத்தான் நேரடியாக ஒருவரை திசைதிருப்பாவிட்டாலும், மறைமுகமாக அந்த வேலையை செய்வான், நியாயமான காரணங்களுக்காக சண்டையிடத் துவங்கி, அதுவே அவர்களின் குணலட்சணங்களாக மாற்றிவிட அவன் ஊக்குவிப்பான். காலம் செல்ல செல்ல அவர்கள் இருளின் வல்லமைக்குள் தள்ளப்பட்டு, சகோதரர் மத்தியிலிருக்கும் சின்ன சின்ன குறைகளுக்கும், அறியாமைக்களுக்கும் எதிராக சண்டைபோட்டு தேவனுடைய அன்புக்கு தங்களை குருடாக்கி கொள்கிறார்கள். இறுதியில் அந்த நபரை தேவனுக்கு எதிராக போராட செய்யும் சாத்தானின் இலக்கு வெற்றி பெறும். இதை குறித்து நாம் எச்சரிப்போடு இருக்க வேண்டும். முதலில் நம்மை நாம் சோதித்தறிந்தபின் மற்றவர்களுக்கு இடறல் உண்டாகாதபடிக்கு நம்முடைய நடைகளையும் வார்த்தைகளையும் காத்துக் கொண்டு நம்முடைய இருதயங்களுக்குள் இருக்கும் தவறான கருத்துக்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டும். “ஒரு பட்டணத்தை அடக்குவதைக் காட்டிலும், தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்” சத்தியத்தை காத்துக் கொள்வதற்கு நமக்குள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். சுயமகிமைக்காக அல்ல, சத்தியத்தின் மேல் உள்ள அன்பும், ஆண்டவரின் மேல் உள்ள அன்பும் அவருடைய ஜனமாகிய நம்முடைய சகோதரர்கள் மேல் வைக்கக் கூடிய அன்பும், நமக்குள் வளர்ச்சி அடைய நாம் பிரயாசப்பட வேண்டும். இதனிமித்தம், அனைவரிடமும் கனிவாயும், பொறுமையாயும், அன்பாகவும், மனத்தாழ்மையுடனும் நடப்பதற்கு வழி வகுக்கும். இப்படியாக தேவனுடைய வார்த்தையாகிய ஆவியின் பட்டயம் நமக்குள் வல்லமையாக செயல்பட்டு, தேவையில்லாத காரியங்களை வெட்டியெறிய அனுமதிப்போம்.

[பிரமாணம்] X – ஆகவே சகல விதமான சிந்தைகளுக்கும் உணர்வுகளுக்கும், பகை, பொறாமை, கோபம், மூர்க்கம் போன்ற குணங்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருக்கும் சகல காரியங்களுக்கும் நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஒரு நொடி பொழுதிலும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடம் கொடுத்து விடாதீர்கள். எனெனில் இவைகள் நம்மை மிகப் பெரிய அழிவுக்கு கொண்டு செல்லும். நம்மை மட்டுமல்ல, நம்மை சேர்ந்தவர்களும் நஷ்டம் அடைவார்கள். உங்களுடைய இருதயங்களையும் உங்கள் விருப்பங்களையும், உங்கள் நோக்கங்களையும் தேவனுக்கும் அவருடைய சகல சிருஷ்டிகள் மேலுள்ள அன்பினால் நிரப்புங்கள் விசேஷமாக அவருடைய ஆவியை பெற்று, அவருடைய வழியில் நடப்பவர்களிடம் நாம் அதிகமான அன்பை காட்ட வேண்டும்.

R2588 [col.1 p4,5]: –

உங்கள் இருதயத்தில் கற்றுக் கொண்ட நன்மையான காரியங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முயற்சித்து, அப்போஸ்தலனுடைய வார்த்தைகளை என்றும் தியானிக்க வேண்டும். “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள்.” (பிலி 4:8)

ஏனெனில், இவைகளையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள், மற்றவர்களிடம் இவைகளை குறித்தே பேசுவார்கள். ஆகவே நம்முடைய இருதயத்தை நல்ல விஷயங்களினால் நிரப்புவது மிக முக்கியமானதாகும். ஏனெனில் இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பதை அறிந்திருக்கிறோம். (லூக் 6:45)

இப்படிபட்ட முயற்சிகளினால் அவர்கள் தேவனுடைய புத்திரர்களாக அழைக்கப்படுவார்கள் என்ற விலைமதிப்புள்ள வாக்குறுதியை பெறுவார்கள். இவர்கள் தேவனுடைய ஆவியைப் பெற்று, தேவகுமாரனின் சாயலை தங்களுக்குள் பதிய வைத்து சத்தியத்தினால் சுத்திகரிக்கப்பட்டு, இறுதியில் ஒளியில் உள்ள பரிசுத்தவான்களின் பங்கை அடைவார்கள். இப்படிப்பட்ட இருதயங்களை பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரர்களாக, தன்னுடைய ஒரே பேறான குமாரனுடைய உடன் சுதந்திரர்களாகவும் அவருடைய இராஜ்யத்தில் அங்கீகரிக்கப்படுவோம். மேலும் நம்மை நாம் அறிந்து கொள்வதற்கு இந்தப் பரீட்சை பயனுள்ளதாயிருக்கும். ஓரளவுக்கு பிறரையும் பிறரின் ஆவிக்குரிய நிலையையும் நாம் புரிந்து கொள்ளலாம். ஆகவே தேவனுடைய பிள்ளைகளாக வளர்ச்சியடையக்கூடிய நாம் மிக ஜாக்கிரதையுள்ளவர்களாக இருந்து, நம்முடைய நோக்கங்களும் சிந்தனைகளும் சமாதானத்துக்குரியதாக இருக்கிறதா என்று நித்தமும் கவனிக்க வேண்டும்.