“ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்” என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-LOVE-Q-38

"ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?

How shall we fulfil the command, “Love one another”?

R2453 [col. 2P2-5]: –

இந்த “சகோதரர்களுக்கான” இறுதி மற்றும் மிகவும் தேடப்படுகிற சோதனையாதெனில், “சகோதரர்களுக்கான அன்பு” மாத்திரமே, இதில் விழித்திருந்து, போராயுதம் தரித்தவர்களும் கூட விழுந்து விடுவார்கள். எனவே இந்த சோதனையில் இராஜ்யத்திற்குள் பிரவேசிப்பதற்கு ஏராளமானவர்கள் தகுதியற்றவர்களாக கணக்கிடப் படுவார்கள். (ரோமர் 8:20) ம் வசனத்திற்கு இசைவாக அன்பின் ஆவியைப் பெற்றிருப்பர், “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளி களாயிருக்கிறோம்.” என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. – 1 யோவான் 3:14,16, 1 பேதுரு 1:22, 3:8. யுகத்தின் முடிவில் (வெளி 3:10) சிறப்பான சலுகை மற்றும் சிறப்பான விசாரணையில், மற்ற சோதனைகளை போல, இதுவும் கவனத்திற்குரியதும், கூர்மையாகவும் இருக்கும். நாம் இவைகளை வெற்றிகரமாக சந்திக்க, நாம் தயாராக இருப்பதற்கு, இந்த சோதனைகள் எப்படி வரும் என்பதை இப்போது பார்க்கலாம். (a) “மனுஷனுடைய சகோதரத்தும்” என்று அறிவிக்கிற தெய்வீக வார்த்தையை மதிக்காத உலகத்தின் அளவற்ற தளத்தின் மீதும் அல்ல. இது தீமையின் பிள்ளைகளையும் கடவுளின் பிள்ளைகளையும் அடையாளம் கண்டுகொள்ளும். பிந்தையவர்கள் அனைவரும். கனப்படுத்தப்பட்டு, நேசிக்கப்பட்டு, “சகோதரர்களாக” மதிக்கப்படுவார்கள்- மன்னிப்புக்காகவும், ஆண்டவரின் ஊழியத்திற்காகவும், முழுமையாக அர்ப்பணிப்புக்காகவும், அனைவரும் கிறிஸ்துவின் மாபெரும் இரத்தத்தின் மேல் நம்பிக்கையுள்ளவர்கள். (b) இப்படிப்பட்டவர்கள் “பாபிலோனில்” அல்லது அவளை விட்டு வெளியே மூட நம்பிக்கைகளினாலும், தவறான போதனைகளினாலும் குருடாக்கப்பட்டு, விலங்கிடப்பட்டு, நித்திரையில் காணப்பட்டால், விழித்திருக்கக்கூடிய ஒரு சிலுவையின் போர் வீரனாக, சர்வாயுதங்களை தரித்துக்கொண்டு, மகிழ்ச்சியோடு சிறந்த மற்றும் விரைவான முறையில் ஞானமாக மீட்பு பணியை வேகப்படுத்த வேண்டியது அவரது கடமையாகும். எந்த ஒரு தன்னுணர்வு, சுய-புகழ் அல்லது சுயத்தின் ஆவி அவரை தடுக்க வேண்டாம். அன்பின் ஆவியே அவருடைய முழு வல்லமையை உற்சாகப்படுத்த வேண்டும். சகோதரர்களுக்காக தன்னுடைய ஜீவனையே கொடுக்கக்கூடிய அளவுக்கும் அன்பின் ஆவி செயல்பட வேண்டும். இந்த ஆவியைப் பெற்றிருக்கும் அனைவரும், அவிசுவாசத்தை நோக்கி குருட்டுதனமாக வழிநடத்தப்பட்டதினால். ஆண்டவரிடம் அவர்கள் கொண்டுள்ள பிடியை விட்டுவிடுவதற்கான அபாயத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வாஞ்சிக்க வேண்டும். (c) “இரட்சிப்பின் அதிபதியின்” (எபிரெயர் 2:10) அதே ஆவி, இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் சகோதரர்களை மட்டும் அல்ல, தம்மைப் போலவே சர்வாயுதங்களை தரித்திருக்கும் சகோதரர் களுக்காகவும் ஜீவனை கொடுக்கக்கூடிய அன்பில் அவர்களை வழிநடத்தும். அவர் சகோதரர்களின் சோதனையில் இறங்கி, அவர்களின் பாதரட்சை மற்றும் அவர்களின் சர்வாயுதவர்கங்களின் எல்லா பாகங்களையும் சரிசெய்துக்கொள்ள உதவுவார்கள். மூத்த சகோதரராகிய நம்முடைய இரட்சிப்பின் அதிபதியைப் போல, யார் ஒருவரும், குறிப்பான பலவீனத்திலோ, இடறலடையக் கூடியவர்களையோ இகழவோ, கடிந்துக் கொள்ளவோமாட்டார். இதற்கு எதிரிடையாக, பலமுள்ளவர்களுடைய ஐக்கியத்தில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாலும், பலவீனரிடம் மிக கவனமுள்ளவராக, உதவிச்செய்யக்கூடியவராகவும் இருப்பார். பரஸ்பர பாராட்டல்களுக்கும், மகிழ்ச்சிக்கும், பலவான்கள் தங்களைத் தாங்களாகவே கூட்டிச் சேர்ப்பதற்கு இது நேரம் இல்லை சகோதரர்கள் தங்கள் சார்பாக தங்களுடைய ஜீவனையும் கொடுக்கக்கூடிய அன்பை பெற்றவர்கள் இனிவரும் காலத்தில் கூடுவார்கள். “நல்லது உத்தமனும் உண்மையுமுள்ள ஊழியக்காரரே – உங்கள் ஆண்டவருடைய மகிழ்ச்சிக்குள் பிரவேசியுங்கள்.” என்று சொல்லும் ஆண்டவரின் வார்த்தைகளை கேட்பார்கள்.

R3180 [col. 1 P2]: –

ஒரு காரியம் உண்டு, எவ்வாறாயினும், நம்முடைய சக சிருஷ்டிகளுக்கு மட்டுமல்ல, நம்முடைய சொந்த குடும்பத்தாருக்கும், நமது சொந்த சுற்றப்புறத்தினருக்கும் மட்டுமல்லாமல், எல்லா மனிதர்களுக்கும் நாம் எப்போதும் தொடர்ந்து கடன்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். அதாவது அன்பில் கடன்பட்டிருக்கிறோம். தெய்வீக சட்டத்தின் கீழ் நாம் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம். அன்றாட கிறிஸ்தவ கடமைகளில் இது ஒரு பகுதியாகும். ஒரு பெற்றோர் அல்லது குடும்பத்தின் உறுப்பினர், அவர் வீடு மற்றும் அதன் வசதிகளும் சலுகைகளும், அமைதியாக மற்றும் நல்லிணக்கத்திற்கும் ஆதரவாக செயல்படுகிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். அவரது அயலகத்தார் மற்றும் நண்பர்களிடையே உள்ள அவரது செல்வாக்கு, தீமைக்காகவும், சண்டைக்காகவும் அல்ல நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் இருக்கும்படியாக பார்த்துக்கொள்ளவேண்டும். “ஆகையால், நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். அவர் எல்லா நேரங்களிலும் தனது சொந்த நேரத்தையும் வசதிகளையும் செலவழித்து எல்லா மனுஷருக்கும் நன்மை செய்ய தயாராக இருக்கவேண்டும். சகோதரார்களுக்காக தம் ஜீவனை கொடுக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும். அதாவது சத்தியத்தை அறிவிப்பதற்கு, நேரத்தை செலவிடுவதற்கும், தீய நாட்களில் சத்தியத்தில் நிலைத்து நிற்க, ஆண்டவருடைய சகோதரர்களுக்கு எந்த விதத்திலும் அவருடைய சர்வாயுதவர்க்கங்களை அணிந்துக்கொள்ள, உதவி செய்யும்படிக்கு, ஒவ்வொரு நாளும், ஜீவனை கொடுப்பதற்கு வாய்ப்புகளை தேடவேண்டும்.

R2330 [col. 1 P3, 4]: இந்த பிரமாணத்தின் நடைமுறை செயல்பாடு

மற்றும் சகோதரர்களுக்கான அன்பு, வெறுமனே பிரிவினையினாலோ, குழுமனப்பான்மையினாலோ அல்லது நாம் விரும்பும் இயற்கை குணங்களை உடைய சகோதரர்கள் மேல் வைக்கும் அன்பை இது பொருள்படுத்தாது. இது புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட அனைவர் மற்றும் அன்பின் பொன்னான பிரமாணத்தின் படி நடக்க முயல்கிற அனைவர் மேலுள்ள அன்பை இது பொருள்படுத்துகிறது. நம்முடைய சிந்தனைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் பொருந்தாதபடிக்கு, சிலர் இயற்கையான வளர்ச்சி மற்றும் மனநிலையை தனித்தன்மையாக கொண்டிருந்தார்களானால், நாம் அவர்களை நேசித்து, அவர்களை சந்தோஷப்படுத்தி, மகிழ்ச்சியோடு அவர்களுக்கு ஊழியம் செய்வோம். ஏனென்றால், அவர்கள் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். அவரால் அங்கீகரிப்பை பெற்று, புதிய உடன்படிக்கையின் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, இராஜரீகமான சுயாதீன பிரமாணத்தையும் ஜீவனையும் தங்களுடைய நிலைபாடாக ஏற்படுத்திக்கொண்டனர். ஆகவே நாம் அவர்களை இனி மாம்சத்தின் தனித்தன்மைகளாகிய முடிச்சுகள், திருப்பங்களின்படி அறியாமல், புதிய சுபாவத்தில் உள்ள “புது சிருஷ்டிகளாக” அறிந்திருக்கிறோம். அதாவது, நம் ஒவ்வொருவருக்கும் அன்பின் பிரமாணத்திற்கு எதிரான, நம்முடைய சொந்த இயல்பான வஞ்சகங்கள், சாதுரியங்களை கண்டறிந்து, இந்த மாம்சத்தின் அபூரணங்களை கூடுமான அளவுக்கு துரிதமாக புறம்பாக்க நாம் முயலவேண்டும். மற்றும் அவைகள் கூடுமான அளவுக்கு மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாட்டிலிருந்து, கிறிஸ்துவின் சரீரத்தின் பல்வேறு அங்கத்தினர்கள் என்றுமே குறைபாடுகளை குறிப்பிடமாட்டார்கள். அல்லது மற்றவர்களை பழிப்பதற்கும் கேலிக்குரிய காரியங்களுக்கும் அவர்கள் இணங்கமாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவரும் முடிந்த அளவுக்கு தங்களுடைய சொந்த குறைபாடுகளை மூடி மறைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் போல மற்றவர்களின் குறைபாடுகளை மறைப்பார்கள். மற்றும் தங்களிடம் பரிவுணர்வோடிருப்பது போல, மற்றவர்களைச் சூழும் பிரச்சனைகளில், அவர்களிடம் பரிவுணர்வோடிருந்து, ஆண்டவரும் அவரிடம் பரிவுணர்வோடு நடந்துக்கொள்ள விரும்புவார்கள்.. “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்ட வர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர் கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் (கிறிஸ்துவின் சிந்தை, அன்பு) அவருடையவனல்ல” (ரோமர் 8:9)

R3547 [col. 1P3]: –

நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்று கர்த்தர் கற்பித்ததை குறித்து நமக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால் “நான் உங்களை நேசித்தது போல” என்ற இந்த வார்த்தைகளில் உள்ள சிந்தனையை எண்ணி வியப்படைகிறோம். ஆண்டவர் நம் ஒவ்வொருவர் மீதும் வைத்திருக்கும் அதே அன்பை நாம் எவ்வாறு ஒருவருக்கொருவர் காட்டமுடியும்? இது நம்முடைய முதல் கேள்வி. இது இயலாத காரியம் என்று முதலில் நாம் பதில் அளிக்கலாம். ஆனால் நாம் ஆண்டவருடைய ஆவியினால் அதிகதிகமாக நிரப்பப்படும் போது, அவருடைய எல்லாவற்றின் மேலும், பரிபூரண அன்பின் நிலைப்பாட்டிற்கு கிட்டத்தட்ட வந்தடைகிறோம். இந்த அன்பு மற்றவர்களை காயப்படுத்த மறுப்பதோடு, சகோதரர்களுக்கு நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடையும். ஆம், இது ஒருவருடைய சொந்த நேரத்தையும் வசதிகளையும் இழந்து நன்மை செய்யக்கூடிய அதிகமாக அன்பாகும். இவ்வாறு இயேசு நம்மனைவரையும் நேசித்தார். அவருடைய விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே நம்மை மீட்டார். மற்றும் நாம் எந்த அளவுக்கு கிருபையிலும், அறிவிலும் அவருக்கான அன்பிலும் வளருகிறோமோ, அந்த அளவுக்கு நாம் கிறிஸ்துவை போல, கிறிஸ்துவின் அன்பை பெறுவோம். இந்த அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேற்றமாக இருக்கிறது. ஒருவர் சகோதரர்களுக்காக இப்படிப்பட்ட அன்பை பெற்றிருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி, ஏங்கி தவித்துக் கொண்டிருக்கும் சர்வசிருஷ்டிகளின் மேல் பரிவுணர்வுள்ள அன்பைப் பெற்றிருப்பார்கள் மற்றும் அவர்கள் சார்பாக ஒரு சிறிய அளவிலான காரியம் செய்ய முடியும் என்ற மகிழ்ச்சி அடையவார்கள், மற்றும் ஆதாமின் இனத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்காகவும், தாம் நியமிக்கப்பட்ட நேரத்திலும், அவருடைய மகிழ்ச்சியிலும், ஒரு மிகபெரிய அற்புதமான ஆசீர்வாதத்தை அவர் வைத்திருப்பது இரட்டிப்பான சந்தோஷமாகும்.

R3639 [col. 2 P4, 5]: –

தேவ ஜனங்களை காயப்படுத்துவதற்கான எதிராளியின் கருவிகள் – புகழ்ச்சி மற்றும் தற்பெருமை அல்லது கர்வம். இந்த உண்மையை உணர்ந்துக்கொள்ளும், அதற்கு ஏற்றபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உண்மை, தேவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள் யார் ஒருவரும், தரியுவைப்போல புகழ்ச்சி அல்லது அதிகாரத்தின் உச்சியிலோ, வைக்கப்படக்கூடாது. அல்லது அவர்களை தனிப்பட்ட வணக்க வழிபாடு செய்யக்கூடாது. ஆயினும், பேசுவதற்கு, சிறிய உலகங்கள், சிறிய சாம்ராஜ்யங்கள், அறிமுகமான சிறிய வட்டங்கள் உள்ளன. இவைகளில், அதே கொள்கைகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செயல்படலாம். தேவ ஜனங்களின் ஒவ்வொரு சிறிய குழுவிலும், தாலந்துகள் அல்லது பிற விதிமுறைகளின் காரணமாக, நிறுவனத்தின் அன்பிலும் மரியாதையிலும் ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கலாம். இது நியாயமானது மட்டுமல்ல, நீதியானதும் கூட என்று ஆண்டவருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டுகிறது. இவர்கள் உண்மையுள்ள ஊழியர்களாக இருந்தால், இவர்கள் நேசிக்கப்பட வேண்டும், இவர்கள் செயல்களுக்காக கௌரவிக்கப்படவேண்டும். ஆனால் அவர்கள் இன்னும் நம்முடைய சகோதரர்களாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும், எந்த அர்த்தத்திலும் தேவனுக்கே உரிய மரியாதையையும், பக்தியையும் அவர்களுக்கு கொடுத்துவிடக்கூடாது. எந்த வழியிலும், வழிபாடுகளிலும், தலைமையான தேவன் மட்டுமே தகுதிப்பெற்றவர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த கொள்கையில், எந்த மாகாணமும், சபைகளின் கூட்டமைப்புகளும் தலையிடக்கூடாது. சபையின் சகோதர, சகோதரிகள், உண்மையுள்ள மூப்பர்களை மிகவும் உயர்வாக மதிக்கும்போது, வேறேந்த விதத்திலும் வீணான தற்பெருமையை தூண்டிவிடும்படிக்கும், அவர்களை புகழவோ, முகஸ்துதியோ செய்து, இதனால் அவர்கள் தேவனுக்கும் அவருடைய மந்தைக்கும் ஊழியர்களாக இராதபடிக்கு நீக்கப்படாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவனுடைய குடும்பங்களில் எந்தவொரு திறமையும் உள்ள ஒவ்வொரு மூப்பரும், பெருமை, நீசமான ஆசைகள் மற்றும் இலட்சியத்தின் நன்னெறித் தாக்கங்களுக்கு எதிராக அவர்கள் காத்துக் கொள்ள வேண்டும். மேலும் சத்தியத்தையும் அதன் அறிவைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் திறமையைப் பெற்றவர்கள் தேவனுக்கு மட்டுமே சேர வேண்டிய மகிமையை தாங்கள் பெற்றுக்கொள்வதற்கு எதிராக அவர்களை காத்துக்கொள்ளவேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி மனத்தாழ்மையே. நம்முடைய முக்கியமான பாடமாகும். இது எந்த அளவுக்கு புறகணிக்கப்படுகிறதோ, அதன் விளைவாக, அந்த அளவுக்கு பிரச்சனைகளை நிச்சயமாக சந்திக்கவேண்டும்.

F489 [P2] through F490: ஒழுங்கீனமான கலப்புதல் இங்கு கூறப்படவில்லை

அப்போஸ்தலர் மூலமாக, ஆண்டவர் தெளிவாக கற்றுக்கொடுக்கிற காரியங்களாவன ஆண்டவருடைய கிருபையும், சிலாக்கியங்களும் எல்லா புது சிருஷ்டிகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அது அவர்களுடைய வைராக்கியம், அவருக்காக அவர்கள் கொண்ட அன்பு, மற்றும் அவருக்குள் காணப்படும் கொள்கைகளை பொருத்தே உள்ளது. மற்றும் அழிவுக்குரிய சரீரத்தின் நிறம், பால், இனம் முதலானவை, அவருடைய ஜனங்களின் நீயாயத்தீர்ப்பு வழங்குவதிலும், மதிப்பிடுகையிலும், இறுதியாக வெகுமதி கொடுப்பதிலும் எந்தவிதமான பாகுபாட்டையும் காட்டாது.

இந்த விஷயத்தில் பிதாவின் சித்தத்தை அறிந்து, புது சிருஷ்டிகள் அனைவரும், ஒரே கண்ணோட்டத்தை உடையவர்களாக இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவுக்குள் அனைவரையும் “சகோதரர்கள்” என்று எண்ணி, அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டு, அனைவருக்கும் சேவைச் செய்ய நாடவேண்டும். தேவனுக்காக அதிக அளவு வைராக்கியத்தைக் காட்டிய வர்களுக்கு அவர் சலுகைகாட்டி, கனப்படுத்தினார். இதுபோன்ற செய்வதற்கு தேவனை தவிர, நாம் எந்த விஷயத்திலும் சகோதரர்களிடையே பாகுபாடு காண்பிக்கக்கூடாது. இந்த நிறம், பால், இனம் என்பவைகளை ஒதுக்கிவிட்டு, பாகுபாடு பார்க்காமல் இருப்பது புது சிருஷ்டிகளாகிய நமக்குரியது, மேலும், நம்முடைய அழிவுக்குரிய சரீரங்களையும், அவர்கள் உலகத்தோடு கொண்டுள்ள உறவையும், ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள உறவையும் ஓரளவுக்கு மாத்திரமே பாதிக்கிறது. ஆகவே இருபாலருக்கும் இடையில் உள்ள உறவும், நடத்தையும் உரிய முறையில் புது சிருஷ்டிகளால் காக்கப்படவேண்டும்.

இவர்கள், உண்மையிலேயே, உலகத்தாரைக் காட்டிலும் அதிக அளவு ஞானமும், முன்யோசனையும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் தெளிந்த புத்தியின் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, ஒரு புதுசிருஷ்டியாக இருப்பதினால், மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்க முற்படுகிறபடியால், அவர்களுடைய மாம்ச பெலவீனங்களைப் பொறுத்த வரையில், இருபாலருக்கும் இடையில் உள்ள சில சரியான நடத்தை, கற்பு, வரையறுப்பதைக் குறித்து, உலகத்தாரைக் காட்டிலும் இன்னும் அதிக ஜாக்கிரதை உள்ளவர்களாக இருப்பது அவர்களுக்கு நல்லது. புதுசிருஷ்டி எந்த அளவுக்கு ஆவிக்குரிய வாழ்க்கையை வஞ்சிக்கிறதோ, புது சிருஷ்டியின் நலனுக்கு எதிராக பாலிய இச்சைகள் யுத்தம் செய்கின்றன என்று உணரும் அளவுக்கு, அதே விகிதத்தில் அவர்களுடைய பாதங்களுக்கு செம்மையான பாதைகளை உண்டு பண்ணவும், அவர்களுக்கும், இச்சைகளுக்கும் இடையில் எத்தனை தடைகளை, உறுதியாக உண்டுபண்ண முடியுமோ அந்த அளவுக்கு புது சிருஷ்டி உலகத்தாரைக் காட்டிலும் அதிகமாக செய்ய முயற்சிக்க வேண்டும். இந்த விவாதம் ஜாதி வேறுபாடுகள் பார்ப்பதற்கும் பொருந்தும். மாம்சத்தில் உள்ள உறவுக்கும். ஐக்கியத்திற்கும். ஆவியின் உறவிற்கும் ஐக்கியத்திற்கும் இடையில் பெரிய வித்தியாசம் உண்டு. புது சிருஷ்டியின் நலன்கள் மாம்சத்தில் தனியாக பிரிக்கப்பட்டு இருப்பதால், பொதுவாக பாதுகாக்கப்படுகின்றன. என்று நாம் நம்புகிறோம். ஏனெனில், ஒரு ஜாதியினரின் குறிக்கோள்கள், விருப்பங்கள், வாஞ்சைகள், நிலைமைகள் போன்றவை இன்னொரு ஜாதியினரின் குறிக்கோள்கள் போன்றவைகளோடு ஏறக்குறைய முரண்பட்டே இருக்கின்றன.

ஆகவே, மனுக்குலத்தின் பல்வேறு ஜாதியினர். அவர்கள் புதுசிருஷ்டிகள் என்றிருக்கும்போது. அவர்களின் ஆவிக்குரிய நலன்களின் தனித்தன்மையின் அளவின் மூலம் நன்கு பாதுகாக்கப்படலாம். புது சிருஷ்டிகளுக்கும் மாம்சத்தில் உள்ளவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் இதன் அடிப்படையில் தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டால், எந்தவித பிரச்சனையும் இருக்காது. கிறிஸ்து இயேசுவுக்குள் ஆண்களும் பெண்களும் ஒரே சகோதரத்துவத்தில் உள்ளபடியால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதற்கு, இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் அப்போஸ்தலரின் வார்த்தைகள் ஆதரவு அளிக்கிறது. அதேபோல, இந்த இரண்டு பாலாருக்கும் இடையில் எந்த விதமான வரைமுறையற்ற காரியத்தை அது குறிப்பிடுகிறது என்றும் ஒருவரும் புரிந்துகொள்ளக்கூடாது. ஆனாலும், ஆவிக்குரிய மேன்மையிலும், உறவிலும், ஒருவருக்கொருவரும் மற்றும், எல்லாருக்கும் செய்ய வேண்டிய ஆவிக்குரிய மற்றும் உலகத்துக்குரிய கடமைகளை குறித்தும் நமக்கு ஒரு நிலைப்பாட்டை அது ஏற்படுத்துகிறது.