CD-EVILSPEAK-Q-8
R2248 (col.1 p7 through col.2 p5): –
எந்த விதமான பாவங்களும் சிந்தையில் இரகசியமாக தோன்றாமல் பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுவதில்லை என்று அனைத்து கிறிஸ்தவர்களின் நன்மையான வழியில் பெற்ற அனுபவங்களும், “பாவத்திற்கு எதிரான போரட்டமும் கற்பிக்கிறது. பெருமையின் ஆலோசனையின்படி ஒருவர் தன்னைதான் மிக மேன்மையாக உயர்த்திக்கொள்வது பாவமான ஒரு சிந்தையாகும். பேராசையினால் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்தாகவும் இருக்கலாம், அல்லது மாம்சத்திற்குரிய விருப்பமாகவும் இருக்கலாம். இவைகளைப் பற்றி நம்முடைய சிந்தையில் வரும் ஆலோசனைகள் பாவம் அல்ல. இப்படிப்பட்ட காரியங்களுக்கு நாம் செவிகொடுப்போமா, கொடுக்கமாட்டோமா என்று நம்முடைய சிந்தையைத் தூண்டுகிறது. நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளில், நம்மை சுற்றியுள்ள காரியங்களில் நம்மை நாம் காத்து கொள்ளலாம். அநேகர் தீமையான சிந்தைனைக்கு இணங்கினாலும், அவ்வப்போது தீமையான கிரியைகளைச் செய்வதற்கு எல்லாவிதமான ஆலோசனையும் புறக்கணித்து விடுவார்கள். ஆனால் ஒருவேளை அந்தத் தீமையான சிந்தனை ஊக்குவிக்கப்பட்டால் அது இரகசிய பாவமாக மாறிவிட்டு, காலப்போக்கில் பாவத்தின் செயல்பாடுகள் விருத்தி அடைந்து, பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும். இது தீமையான நடத்தையிலிருந்து மிக மோசமான நிலையை சென்றடையும். எடுத்துக்காட்டாக – ஒருவருடைய மேன்மையையும், பேர் புகழையும், மகிமையையும் இரகசியமாக கெடுத்து, அதனால் அவர்களுக்கு வரும் அனைத்து நன்மைகளையும் நாம் பெறுவதற்கான தீமையான சுய நலமுள்ள ஆலோசனையை நாம் ஊக்குவித்தால், பகையும் விரோதங்களும், சச்சரவுகளும் நம்மை வெகு சீக்கிரத்தில் சூழ்ந்துகொள்ளும். அவரைப்பற்றி மற்றவர்களிடம் புறம் கூறுதல் மற்ற மாம்சத்தின் கிரியை அனைத்திற்கும் நாம் எளிதாக வழி நடத்தப்படுவோம். துவக்கங்கள் எப்போதும் சிறியவைகளாக இருக்கும். அதை மேற்கொள்வது எளிதாக இருக்கும். அதே நேரத்தில் அது வளர்ச்சி அடைந்துவிட்டால் அதை கட்டுப்படுத்துவது மிக கடினம். “இரகசியமான பாவங்களிலிருந்து என்னை சுத்திகரியும் அவைகளினால் பகிரங்கமான பாவங்களுக்கும் என்னை காத்தருளும்” என்று தீர்க்கதரிசனமாக ஜெபித்திருக்கிறார்கள்.
“அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.” என்று யாக்கோபு 1:14,15 வசனங்களை நாம் வாசிக்கிறோம். இங்கு அதே கருத்து வேறுவிதத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. சோதனையின் போது முதலில் சிந்தையில் வரும், அசுத்தமான அல்லது கனிவற்ற அல்லது அவிசுவாசமுள்ள ஆலோசனை தோன்றுகிறது. ஆனால் அது பாவம் அல்ல. அதே தீமையானவைகளை செய்வதற்கு அசைபோடும் போது, நம்முடைய சிந்தைகளை திசை திருப்பி வசீகரமான யோசனைகளால் ஈர்க்கப்பட்டு தீமைகளை செயலாற்ற முடிவு செய்கிறது. இந்தக் கட்டத்தில் நாம் எதை விரும்புகிறோம் என்பது உறுதிப்படுகிறது. (தீமையானதை பற்றியிருக்கிறோமா அல்லது புறக்கணித்து விடுகிறோமா?) ஒருவேளை நாம் தவறான முடிவுகளை எடுப்போமானால் அதைத் தொடர்ந்து இரகசியமான தவறுகள் துவங்குகிறது. சாதமான சூழ் நிலையில் மட்டுமே இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதன் விளைவாக பகிரங்கமான பாவங்கள் வெளிப்படும். எட்டுத்துக்காட்டாக பிறனை பற்றித் தவறான காரியத்தைக் கூறி அல்லது புறங்கூறி செயல்களை சொல்லும்போது தீமையான செயல்களை செய்யும் தீமையான ஆலோசனை ஜாக்கிரதையாக துவங்கி விடுகிறது. அதற்குப்பின் பகிரங்கமாக வெளிப்படும். அவர்களின் முழு வாழ்க்கையும் பாதிக்கப்படும் அளவுக்கு எப்போதும் அவர்கள் அபாய நிலையில் இருப்பார்கள். ஏனெனில் எந்த நேரத்திலும் அவர்கள் அத்துமீறி செயல்பட்டு மிகப் பெரிய குற்றங்களை மனமுவந்து, துணிகரமாக திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். அதன் சம்பளமாகிய மரணம், அதாவது இரண்டாம் மரணத்தை பெற்றுக்கொள்வதற்கு வழிவகுத்துவிடும்.
R2568 (col.2p2): –
சோதனை என்றால் பாவம் இல்லை என்ற மற்றொரு பாடமும் நமக்குண்டு. இப்படியாக நம்முடைய ஆண்டவரும் சோதிக்கப்பட்டார். அவருக்குள் பாவம் இல்லாததினால் அவைகளை அவர் மேற்கொண்டார். அதேபோல அவருடைய சகோதரர்களும் சுத்த இருதயத்தோடும் சுத்த நோக்கத்தோடும் பிதாவின் சித்தத்தை தேடுபவர்கள், அவருடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும். நமக்குள் சோதனைகளை அனுமதித்தால் மட்டுமே பாவம் நமக்குள் நுழையும். ஆனால் தவறான சிந்தை வந்தபின் தாமதிக்கும்போது, சோதனையின் வலிமையை அதிகரிக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மேலும் சாத்தான் சோதனை காரணாக இருந்து நம்மை தவறான பாதையில் நடத்தி அதில் அகப்படுத்த மிகவும் சிரமப்பட்டு முயற்சிகள் எடுக்கிறான் என்பது குறிப்பிடக்கூடியதாக இருக்கிறது. ஆனால் தேவன் அப்படி அல்ல, “அவர் எந்த மனுஷனையும் சோதிப்பதில்லை” (யாக் 1:13) அவர் சாத்தானையும் அவனுடைய பிரதி நிதிகளையும் அவருடைய ஜனங்களை சூழ்ந்துகொண்டு சோதிக்க அனுமதித்தாலும் அந்தச்சோதனைகள் மூலமாக அவர்கள் தீமையை எதிர்த்து அதிகமான விசுவாசத்தை பெற கிறிஸ்துவின் குணலட்சணத்தில் வளர்ச்சி அடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நம்முடைய விசுவாசத்தின் பலம் அதிகரிப்பதற்காக இந்தச் சோதனைகள் அனுமதிக்கப்பட்டாலும் நம்முடைய திராணிக்கு மேல் நாம் சோதிக்கப்படுவதற்கு அவர் அனுமதிப்பதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள வழியையும் ஏற்படுத்துவேன் என்ற உறுதியையும் தேவன் நமக்கு தருகிறார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.