நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-15

நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?

Why does the Apostle rank patient-endurance above even Love?

“தீத் 2:2 – “முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.”

2 தீமோ 3:10 – “நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்.”

R2723 (col.1 P2-col.2 P2)

நம்முடைய பாடத்திற்கு ஏற்ற வார்த்தைகளை தீத்து 2:1-15ம் வசனங்களில் பவுல் குறிப்பிடுகிறார். கிரேத்தா தீவில் உள்ள விசுவாசிகளின் சபைக்கு கண்காணியாக இருந்த தீத்துவுக்கு சில கட்டளைகள் கொடுக்கப்பட்டது. இந்தக் கட்டளைகள் தத்தம் செய்த விசுவாசிகளைத் தவிர வேறோருவருக்கும் பொருந்தாது. குறிப்பாக கிரேத்தாவில் உள்ளவர்கள் ஆறு வகுப்பாராகப் பிரிக்கப்படுகிறார்கள். (1) முதிர் வயதுள்ள புருஷர்கள் (2) முதிர்வயதுள்ள ஸ்தீரிகள் (3) வாலிபர் (4) இளம்பெண்கள் (5) கிறிஸ்துவுக்கு சுதந்தரவாளிகள் – ஊழியக்காரர்கள் (6) தீத்து (7) இந்தப் பாடம் சபையில் உள்ள எல்லா வகுப்பினருக்கும் சொல்லப்படும் அறிவுரைகளோடு முடிவடைகிறது.

போதகராக இருந்த தீத்துவுக்கு, ஒவ்வொரு வகுப்பாரைப் பற்றிய சிந்தை தன்னுடைய மனதில் இருந்ததாக, ஞானமாக ஊழியம் செய்து அவர் அவரை அந்தந்த நிலைக்குக் கொண்டுவர பாடுபட்டிருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அவருடைய கவனத்திற்கு பவுல் கொண்டுவந்தார். “நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு.” என்று சொல்லி, அதற்குப் பின்வரும் சகல கட்டளைகளையும் அதன் அடிப்படையில் தெரியப்படுத்தினார். கிரேத்தா தீவிலிருந்தவர்கள் நல்ல குணலட்சணம் இல்லாதவர்களும், ஞானத்தில் குறைவுள்ளவர்களாகவும் இருந்ததினால், அப்போஸ்தலனாகிய பவுல், இப்படிப்பட்ட அறிவுரையைக் கொடுத்தார் என்று கருதுகிறார்கள். ஆனால் இங்கு கட்டளையாகச் சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் கடைசி காலத்தில் உள்ள நமக்கு, இவ்வளவாகச் சத்தியத்தில் வெளிச்சம் பெற்றிருந்து, எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது என்று பார்க்கலாம்.

முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்க வேண்டும் என்று புத்தி சொல்லுகிறார். அவர்களுடைய வாழ் நாட்களின் அனுபவங்கள் மட்டும் அல்ல, அவர்களுடைய கிறிஸ்துவ ஜீவியத்திலும் அவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களுக்குள் நல்லொழுக்கத்தையும், முதிர்ச்சியையும் கொண்டு வரவேண்டும். இந்த மூன்று குணங்களும் தங்களுடைய அழியக்கூடிய இந்தச் சரீரத்தில் அதிகமாக நிலைத்திருந்தால், அவர்களை புது சிந்தை அருமையாகச் செயல்படும். ஆனால், புது சிருஷ்டிகளுக்கு இதற்குக் கூடுதலாக மற்றும் மூன்று குணங்கள் தேவைப்படுகிறது – தேறின விசுவாசம், முழுமையான அன்பு, நீடிய பொறுமை, அப்போஸ்தலனின் உள்நோக்கத்தின்படி கிரேக்க வார்த்தையில் சொல்லப்படும் விசுவாசம், அன்பு, பொறுமைக்குள் அநேகவிதமான விசுவாசம், அநேக விதமான அன்பு, அநேக விதமான பொறுமை என்றும் அவைகள் என்னென்ன பொருளை உடையது என்றும் குறிப்பிடுகிறார். விசுவாசம், அன்பு, பொறுமை இவைகள் தேவனுடையவைகள் என்றும் “தேவனால் அவர்கள் போதிக்கப்படுவார்கள்” என்றும் எழுதியிருக்கிறபடி அவருடைய வார்த்தைகளின் மூலம் தம்முடைய ஜனங்களுக்கு இவைகளைக் கட்டளையிடுகிறார் என்றும் நம்முடைய மனதில் பதிய வைக்கும்படி இப்படியாக பிரித்துச் சொல்லியிருக்கிறார்.

ஆவியின் கனியின் வரிசையில் அன்பு முதலாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், அப்போஸ்தலனாகிய பவுல் தற்செயலாக விசுவாசத்தை முதலில் எழுதவில்லை. ஒருவர் சத்தியத்தின் ஆவியைப் பெறாமல், சத்தியத்தைப் பெறமுடியாது. ஆகவே சத்தியத்தின் முக்கியத்துவம் விசுவாசத்தையே சார்ந்துள்ளது.

ஒரு மனுஷன் எதை நம்புகிறான் என்ற அவசியமில்லை. ஆனால் அவன் என்ன செய்கிறான் என்பது அவசியம் என்று அடிக்கடி நமக்குச் சொல்லப்படுகிறது. இதற்கு முழுமையான விசுவாசமே முக்கியமானது என்று நாம் பதில் அளிக்கலாம். ஏனெனில், இந்த விசுவாசத்தினால் நம்முடைய நடத்தை ஒழுங்குபட்டு, ஊக்குவிக்கப்படும். நாம் பெற்ற சத்தியத்தின் அளவுக்கேற்றபடி நமக்குள் விசுவாசம் இருக்கும். ஏனெனில் நமக்குள் சத்தியம் இருந்தால் மட்டுமே நாம் சுத்திகரிக்கப்படமுடியும் – அதற்குப் பதிலாக நாம் தவறுகளைப்பற்றிக் கொண்டிருந்தால், அவைகள் நமக்குள் இருக்கும் சத்தியத்தைக் கட்டுப்படுத்தி, அதை பலனளிக்கவிடாது. இந்த ஒரு சூழ்நிலையில் நாம் சுத்திகரிக்கப்படுதலின் அளவு குறைந்து கொண்டே போகும். ஆகவே நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்முடைய ஆண்டவரின் ஜெபத்தை நினைவில் கொள்ளவேண்டும் – “உம்முடைய வசனமே சத்தியம், உம்முடைய சத்தியத்தினால் அவர்களைப் பரிசுத்தமாக்கும்.”

அதே போல் தற்செயலான அன்புக்கு முன் அவர் பொறுமையை வைக்கவில்லை. இயல்பான வாழ்க்கையில் பொறுமையைக் கற்றுக்கொண்டாலும், எடுத்துக்காட்டாக – உலகப்பிரகாரமானக் குறிக்கோள், ஆசைகளுக்காகக் காத்திருப்பது நம்முடைய இருதயத்தைப் பாதிப்பதில்லை. ஆனால், வெளியிலிருந்து தடைகள் மிகப்பலமாக வரும்போது, அதுவரைக்கும் இருந்த பொறுமை எல்லை தாண்டி முந்தியிருந்த பதற்றத்தை விட பொறுமையற்ற சூழ்நிலை வந்துவிடும். இறுதிவரைக்கும் பொறுமையாக இருப்பது நம்முடைய இருதயங்களில் ஏற்படும் மாற்றமாக இருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருக்கும் சுயநலம் என்னும் ஊற்றை, அன்பு என்ற ஊற்றாக மாற்ற வேண்டும்.

இந்தக் குணங்கள் எவ்வளவு மகத்துவமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தினங்களில், இப்படிப்பட்ட குண நலன்கள் உள்ள முதியோர்களைக் காண்பது அரிதாகவே இருக்கிறது. ஆனால் சபைகளில் உள்ள மூத்த சகோதரர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும், அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்க வேண்டும். அவர்களுடைய புதிய சிந்தை தேவனுடைய விசுவாசமுள்ள தேவனுடைய வார்த்தைகளினால் நிறைந்து, அவர்களின் இருதயங்கள் அன்பினால் நிரப்பப்பட்டு, சகலவிதமான நற்குணங்களை வெளிப்படுத்த வேண்டும். இவையனைத்தையும் ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் பொறுமையாக இருக்க வேண்டும். எல்லா மூத்த சகோதரர்களும் தேவனுக்குமுன் பூரண புருஷர்களாக இருந்து, ஜீவனுள்ள தலையாகிய கிறிஸ்துவின் சரீரத்தின் அளவுக்கு வளர்ச்சியடைந்து, அவருடைய சாயலை தரித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய சிந்தையில் இந்தச் சாயலை முன்வைத்து நம்முடைய கிறிஸ்துவ வாழ்க்கைக்கு மாதிரியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

R2791 (COL. 2 P3, 5) – R2792 (col.1 P1)

அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய வார்த்தைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் கிறிஸ்துவ குணங்களில் நீடிய பொறுமையை அன்பைக் காட்டிலும் மேலான இடத்தில் கோடிட்டுக் காட்டுகிறார். பரிசுப்பொருளைப் பெற்றுக்கொள்ள இந்த ஒரு எல்லை வரைக்கும் நாம் ஓடவேண்டியவர்களாக இருக்கிறோம். எடுத்துக்காட்டாக தீத்துவுக்கு (தீத்து) கிறிஸ்துவ மேன்மையானக் குணங்களைப்பற்றி எழுதும்போது விழித்திருந்து, ஜாக்கிரதையுள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும், விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாகவும், பொறுமையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிறார். இந்தக்குணங்கள் அனைத்தையும் பெற்றிருப்பவர்கள் கடைசி பரீட்சையாகிய பொறுமையில் ஜெயிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது, சந்தோஷத்துடன் சகிக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

அன்பு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி, நாம் பெறும் பரிசு பொருளுக்கு இலக்காக வைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த ஒரு குணம் அன்பைவிட சிறந்ததாக நாம் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேட்கலாம். இந்தப் பொறுமை நம்முடைய வாழ்க்கையில் ஒரு பகுதியில் மட்டும் செயல்படுவதில்லை. மாறாக, துவக்கம் முதல் முடிவுவரைக்கும் இந்தப் பொறுமை நமக்குத் தேவைப்படுகிறது. ஆதியில் அனுபவிக்கும் உபத்திரவங்களில் நாம் நீடிய பொறுமையோடு இருந்தால், நாட்கள் வேகமாக செல்லும்போது வரும் அதிகமான சோதனைகளில் நாம் நீடிய பொறுமையில் உறுதிப்பட்டவர்களாக ஆவியில் வளர்ச்சியடைவோம். முதலாவது கால் பங்கில், அதற்குப் பின் அரைபங்கு, அதற்குப் பின் முக்கால் பங்கு அதற்குப் பின் பூரணமான அன்பின் வளர்ச்சி நம்மை பரிசுப்பொருளைப் பெற தகுதிப்படுத்துகிறது. நாம் நம்முடைய சிநேகிதர்களை மாத்திரம் அல்ல, சத்துருக்களையும் சிநேகிக்கக் கூடிய அன்பைப் பெற்றுக் கொண்டபின் எதிர்பார்க்கப்பட்ட விசுவாசத்தோடும், சந்தோஷத்தோடும், நீடிய பொறுமையோடும் தேவன் அனுமதிக்கும் கடைசி சோதனைகளில் ஜெயித்துக் காட்ட வேண்டும். ஆகவே அப்போஸ்தலன் – “அனைத்தையும் செய்து முடித்த பின் பொறுமையோடு நிலைத்திருங்கள்”, “குறிக்கப்பட்ட நிலையை அடைந்தபின் பொறுமை தன்னுடைய வேலைகளைப் பூரணமாகச் செய்ய அனுமதியுங்கள்”. உங்களுக்குள் இருக்கும் நீடிய பொறுமை, நீங்கள் பெறப்போகும் பரிசுக்காக வளர்ந்திருக்கும் அன்பை மட்டும் இல்லாமல், மற்ற குணங்களையும் ஆழமாக வேர்கொண்டு உங்களுக்குள் ஸ்தாபிக்கப்படுவதை நிரூபிக்க எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும் சந்தோஷத்துடன் சகிப்பதற்கு உங்களைப் பழக்குவிக்கும்.

ஆம், நம்முடைய ஆண்டவராம் இயேசு இந்தத் தீமையான உலகத்தில் பாடுகளை அனுபவித்ததைப் போல, நாமும் அனுபவிக்க தேவன் செய்த ஏற்பாடுகளை நாம் கண்டோம். இதன் மூலம் நம்முடைய ஆண்டவரின் குணங்களை நமக்குள் ஆழமாகப் பதியவைத்து, நம்மை எந்த விதத்திலும் வீழ்த்தும் காரியங்களுக்கு மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக நம்மை காத்துக் கொள்ளும்.