அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-LOVE-Q-22

அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?

Why is love called “the perfect law of liberty”?

“சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்” யாக்கோபு 1:25

F377 through F378? சுயாதீனத்தின் பரிபூரணப் பிரமாணம்

புதுசிருஷ்டியானது சரியான கட்டுப்பாடுகள், சட்டங்கள் இல்லாமல் ஆண்டவரால் அதிக சுயாதீனமாக விடப்பட்டிருக்கிறது என்று யாராவது நினைக்க முற்படுவார்களானால், அன்பு என்று ஒரே வார்த்தையில் சுருக்கமாகச் சொல்லப்பட்ட, இந்த தேவப்பிரமாணத்தின் நீளம், அகலம், பொதுவான விசாலத்தையும் காணும்போது, நிச்சயமாகவே அவர்கள் ஒரு மனமாற்றத்தைக் காண்பார்கள், அப்போஸ்தலர் அதை “சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப்பிரமாணம்” (யாக்கோபு 1:25) என்று அழைக்கிறார். இது மற்றவர்களுக்கு அல்ல, தேவன் அவருடைய ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட புது சிருஷ்டிக்கு மாத்திரமே இந்தப் பிரமாணத்தை பயனுள்ளதாக்குகிறார். ஏனெனில், மற்றவர்கள் இன்னமும் மோசேயினுடைய பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாய், பணிவிடைக்காரர்களாய் “கிறிஸ்து விடுதலையாக்குகின்ற சுயாதீனத்திற்குத்” தகுதியில்லாதவர்களாய், குமாரர்களென்னப்படாதவர்களாகவும், இல்லையெனில் அவர்கள் ஆதியில் கொடுக்கப்பட்ட பிரமாணத்தின்படி மரண ஆக்கினைக்குட்பட்டிருக்கிறார்கள். ஆக்கினைக்குட்படுத்தப்பட்ட பாவிகள் இன்னும் புறம்பானவர்களாய், அந்நியராய், நம்பிக்கை இல்லாதவர்களாய், தேவனற்றவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் பொதுவான முறையில் முடிவாக உலகத்திற்கு இரட்சிப்பைக் கொண்டு வருகின்ற தேவனின் கிருபையைக் குறித்து அறியாதவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் இது வெகு சிலருக்கே தற்காலத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும் திரளான ஜனக்கூட்டம் திவ்விய அன்பின், மீட்பின் செய்தியை கேட்கக்கூடாதபடிக்கு சத்துரு தடைப்பண்ணி இருக்கிறான். அவன் (சாத்தான்) தப்பறையான உபதேசத்தினால் மனுக்குலத்தின் பெரும்பாலானோரின் மனதைக் குருடாக்கி, அவர்களது செவிகளை அடைத்து வைத்திருக்கிறான் (2 கொரிந்தியர் 4:4, 1 தீமோத்தேயு 4:1) சுயாதீனம் என்பது பொல்லாதவர்களுக்கல்ல. அது அவர்களை சிறைப்படுத்துவதை சமுதாயம் காண்கிறது. ஆகவே பரிபூரண சுயாதீனப்பிரமாணம் என்பது பொல்லாதவர்களுக்கானது அல்ல. ஆனால் அது நல்லவர்களுக்கும், பரிபூரணமானவர்களுக்கும் உரியதாகும். ஆயிரம் வருட யுகத்தில் உலகமானது ஒரு அன்பின் பிரமாணத்திற்குள் விடப்படமாட்டாது. ஆனால் கீழ்ப்படிகிற ஒரு பிரமாணத்திற்கு உட்பட்டு, நீதியாகவும் கிருபையுடனும் ஆட்சி செய்யப்படும். இராஜ்யத்தின் முடிவு வரும்வரை (மனப்பூர்வமாய் தீங்குசெய்கிறவர்கள் இரண்டாம் மரணத்தில் வேரற்றுப் போகும் வரை) மனுக்குலம் திவ்விய திட்டத்திற்கு முற்றிலுமாக ஒத்துப்போனவர்கள், பரிபூரணமானவர்கள் என்று நிரூபிக்கப்படும் வரை, சுயாதீனப் பிரமாணமாகிய அன்பின் கீழாக, அதன் பொன்னான கற்பனைக்குக் கீழாக வைக்கப்படமாட்டார்கள். அவர்கள் சிறுவர்களாக இருக்கும் வரை அவர்கள் பணிவிடைக் காரர்களைப் போல எண்ணப்படுவார்கள். (எபிரெயர் 13:17) புது சிருஷ்டியானது இப்போது சுயாதீனப் பிரமாணத்திற்குக் கீழாக இருக்கிறது. அது அவ்விதமாகவே நடத்தப்படுகிறது, ஏனென்றால், “பழையவைகளெல்லாம் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. “இப்போது அவர்கள் பாவத்தை வெறுக்கிறார்கள், நீதியை நேசிக்கிறார்கள். இப்போது அவர்கள் அவர்களுடைய சுயாதீனத்தை, மாம்சத்தை திருப்திப்படுத்துவதற்குக் கிடைத்த தருணமாக உபயோகிக்கவில்லை. ஆனால் அதை அழிப்பதற்கும், பாவத்தில் சந்தோஷப்படாமல், பாவத்தை அப்புறப்படுத்தவும். உலகத்தை அதிலிருந்தும், அதன் சம்பளமாகிய மரணத்திலிருந்தும் விடுவிக்கவும் ஆண்டவரோடு இணைந்து செயல்படும்படியாக தங்களுடைய பூமிக்குரிய வாஞ்சைகளைப் பலியாகச் செலுத்த ஒரு தருணமாக உபயோகிக்கிறார்கள், தேவ ஆவியாகிய இந்தப் புதிய ஆவிக்குள் மறுபடியும் பிறந்து, மேலும் கிறிஸ்துவின் பள்ளியில் மாணாக்கர்களாகச் சேர்ந்து, அவரைக் குறித்து கற்றறிந்து அவருடைய பாதப்படியில் நடக்கிற இவர்கள், இவர்கள் மாத்திரமே. சுயாதீனப் பிரமாணத்திற்குக் கீழாக வைக்கப்பட முடியும். அவர்கள் தங்கள் புத்திர சுவிகாரத்தின் ஆவியை இழந்து போவார்கள் என்றால், அவர்கள் புத்திரராய் இருக்கமாட்டார்கள். இந்த சுயாதீனப் பிரமாணத்திற்குக் கீழாக இருப்பதில்லை. கிறிஸ்து விடுதலையாக்குகிற இந்த சுயாதீனத்தை இப்போது உபயோகிக்கக் கற்றுக்கொள்பவர்கள், இந்தப் பரிபூரண அன்பின் பிரமாணத்தின் கீழாக அர்ப்பணிப்பின் மூலமாக வருகிறவர்கள், இதற்குக் கீழாக இருக்கும் போது தங்களுடைய ஜீவனையே சகோதரருக்காகவும், சத்தியத்திற்காகவும். நீதிக்காவும் அளிக்கிறவர்கள், இப்படிப்பட்ட உண்மையுள்ளவர்கள், உலகத்தை ஆசீர்வதிக்கிற பெரிய வேலையில், தேவனுடைய பிரியமான குமாரனோடு, அவருடைய பிரிநிதிகளாகவும், உடன் சுதந்திரராயும் இருக்கத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணப்படுவார்கள். அவர்களுடைய வேலைக்கு இந்தத் தகுதி எவ்வளவாய் தேவைப்படுகிறது. போதகர்களாகவும், உதவிக்காரர்களாகவும். நியாயம் தீர்க்கிறவர்களாகவும், உலகத்தை ஆளுகிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்கு இந்தத் தகுதி மிகவும் அவசியம் என்பது தெளிவாகிறது. இப்படியாக ஆயிரம் வருட யுகத்தின் போது பூமியிலுள்ள எல்லா குடும்பங்களையும் ஆசீர்வதிப்பதற்கு இது மிகவும் தேவைப்படுகின்றது. அதாவது இரக்கமும் உண்மையுள்ள இராஜரீக ஆசாரியராக இருக்கும்படி இவர்கள் அதிகமாக வளர்ச்சியடைய வேண்டும். மேலும் அன்புக்குரிய தகுதியில் சோதிக்கப்பட வேண்டும்.

R2440[col.1 P2-5]: –

தேவனுடைய வார்த்தையாக இருக்கும் விளக்கின், சத்திய ஒளியின் பொதுவான தாக்கத்தினால், மூடநம்பிக்கையின் நிலைக்குறைகளை தகர்த்து, ஜனங்களை விடுதலைச் செய்கிறது. ஆனால் இந்த விளைவுகள், கிறிஸ்துவின் பள்ளியில் இராதவர்களுக்கு இலாபமாக இருக்குமா என்பது கேள்விக்குரியது. மற்றவர்களுக்கு, சுயாதீனம், அறிவின் வெளிச்சம், எந்த அளவுக்கு ஆசீர்வாதங்களை கொண்டுவருமோ, அந்த அளவுக்கு கேட்டின் கருமூலமாக இருக்கவும் வாய்ப்புண்டு. இது அடிக்கடி, சுயநலம், ஒழுக்கக்கேடு. தற்பெருமை, சண்டை மனபான்மை, அதிருப்தி மற்றும் பொதுவான சந்தோஷம் இழந்த நிலைக்கு வழிநடத்தும். சில விதங்களில் மட்டுமே விடுவிக்கப்பட்டு, மற்றவைகளில் கட்டப்பட்டவர்களாக இருப்பவர்களின் மேல் இந்த தீய விளைவுகள் வரும். மற்றும் இன்றைய நாகரீக உலகில், பெரும்பான்மையான பெயர் சபைகள் உட்பட, இது பொதுவாக வளர்ந்து வரும் நிலையில் உள்ளது. ஆனால் உண்மையான சீஷர்கள், பெரிய போதகரின் வார்த்தைக்கு செவிசாய்த்து, எல்லாவற்றிலும் தொடர்ந்து அவருடைய மாணவர்களாக இருப்பவர்கள், மூடநம்பிக்கைகள் மற்றும் அறியாமைகளிலிருந்து மட்டுமல்லாமல், பாவ ஊழியத்திலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள். மற்றும் அவர்களின் சொந்த பலவீனங்களை மற்றும் கறைகள் மற்றும் தெய்வீக சிந்தையாகிய சத்தியத்தின் சரியான புரிந்துக்கொள்ளுதலைப் பெறுவார்கள். இதன் விளைவாக, அவர்களின் சுயாதீனம், அவர்களை காயப்படுத்துவதற்குப் பதிலாக ஆசீர்வதிக்கும். தற்பெருமை மற்றும் பெருமைக்கு பதிலாக மனத்தாழ்மையைக் கொண்டுவரும், கோபத்திற்கு பதிலாக பெருந்தன்மையும் இரக்கத்தையும் கொண்டுவரும், ஆத்துமாவின் அதிருப்தி மற்றும் கசப்புக்கு பதிலாக சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருகிறது. உண்மையாகவே. குமாரன் மட்டுமே நம்மை விடுதலையாக்க முடியும். எனினும், நம்முடைய விடுதலை மாம்சத்திற்குரியதல்ல, மாறாக, இது புதுசிருஷ்டியின் இருதயம், சிந்தை, சித்தத்திற் கான விடுதலை, என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்த பொக்கிஷத்தை நாம் மண்பாண்டத்தில் பெற்றிருக்கும் வரையில், இந்த விடுதலை அவசியம் நிறைவுபெறாது. ஆகவே இந்த புது சிருஷ்டி இந்த அபூரணமான மாம்ச சரீரத்தை அதனுடைய கருவியாகவும். மாதிரியாகவும் பயன்படுத்த வேண்டும். கிறிஸ்துவுக்குள் இந்த “சகோதரர்கள்”, “உன்னதமானவரின் புத்திரர்கள்”, அவர்களின் முதலாம் உயிர்த்தெழுதலில், பங்கடையும்போது, முற்றிலுமாக விடுதலை பெறுவார்கள்,- “நான் எழுந்திருக்கும் போது உமது சாயலில் திருப்தியாவேன்.” பாவம் செய்பவர்கள் பாவத்திற்கு ஊழியர்களாக இருப்பதினால், விடுதலை யாவதில்லை, என்பதை நம்முடைய ஆண்டவர் சுட்டிக்காட்டுகிறார். “பாவஞ் செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” என்று அப்போஸ்தலர் அறிவிக்கிறார். மேலும், “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1 யோவான் 3:8, 1:8)” என்றும் கூறுகிறார். அப்படியானால், “பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, நீங்கள் நீதிக்கு அடிமைகளானீர்கள்” (ரோம 6:18) என்ற இந்த எதிர்த்தரப்பு அறிக்கைகளை நாம் எவ்வாறு சமரசப்படுத்துவது?

R3145 [col.2P2 to end]

“குமாரன் ஒருவரை விடுதலையாக்கினால் அவர் உண்மையில் விடுதலையாவார்.” என்பது உண்மையே. மேலும், நாம் அனைவரும் கிறிஸ்து நமக்கு அளித்த விடுதலையில், சுயாதீனத்தோடு உறுதியாக நிற்க நாடவேண்டும். அதேநேரத்தில் நம்மை காட்டிலும் பலவீனமுள்ளவர்கள் இடறல் அடையும்படிக்கு நம்முடைய சுயாதீனத்தை பயன்படுத்தாதபடிக்கு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதும் உண்மையாகும். வேறுபாடுகள் உள்ள கிறிஸ்துவின் சுயாதீனத்தை நாம் பயன்படுத்த இயலாது. நம்மை விடுதலையாக்கின கிறிஸ்துவுக்குள்ளான சுயாதீனம், இரண்டு நோக்கு நிலையிலிருந்து காணலாம் – யூதர்கள் புசிப்பதற்கு சுதந்திரம் பெறாதது போல இராமல், நமக்கு எந்த கட்டுபாடின்றி புசிப்பதற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருதால், புசிப்பதை தவிர்பதற்கும் நமக்கு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. – மேலும் கிறிஸ்துவின் ஆவியை உடையவர்கள் மற்றும் அவருடைய அடிசுவடுகளை பின்பற்ற விரும்பும் யாரானாலும் சரி, அவர்கள் பெற்ற சுதந்திரத்தை ஆண்டவருக்கென்று பயன்படுத்துவதற்கு, முன்னதாகவே உடன்படிக்கை செய்துவிட்டார்கள். மாம்சத்தின் விருப்பங்கள், இலக்குகள் மற்றும் இன்சுவை அருந்துவதில் முன்னேற்றம் அடையவதற்காக அல்ல மாறாக, சுயத்தை பலிசெலுத்துவதிலும், ஆண்டவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றி அவருக்காகவும், சகோதரகளுக்காகவும் அவர்களின் உதவிக்காகவும் தங்களுடைய ஜீவனையே கொடுப்பதற்காகவே நாம் பெற்ற சுதந்திரத்தை பயன்படுத்தவேண்டும். சுயாதீனத்தின், இந்த இரண்டு பயன்பாடுகளில் ஏற்றளவு வேறுபாடுகள், சுயநலமான அதன் பயன்பாடு, சுய திருப்தி (மனநிறைவு) மற்றவர்களின் ஆர்வங்களை பொருட்ப்படுத்தாமை என்று பொருள்படும். அதன் அன்பார்ந்த பயன்பாடு, மற்றவர்களின் அதன் விருப்பங்களுக்காக, சுயத்தை பலி செலுத்துவதற்கு நம்மை தூண்டும் அல்லது ஊக்குவிக்கும்.

ஆனால் காரணம் என்ன ? – ஒருவர் மற்றொருவருடைய உள்ளத்தை தெளிவாக புரிந்துகொள்ளும், பொறுப்பை பெறுவதற்கு எந்த கொள்கையை நினைவில் வைக்க வேண்டும்? பலவீனமானவர்கள் தன்னுடைய சொந்த உள்ளத்தை பாதுகாத்து, தன்னுடைய நடைமுறை ஒழுகிற்கு ஏற்றவாறு புசிக்கலாம் அல்லது அதை தவிற்கலாம் அல்லவா? கூடுமானால், இது சரியாக இருக்கும் என்று அப்போஸ்தலர் விவரிக்கிறார். ஆனால் பலவீனமான சிந்தையுள்ள நபர், சீர் தூக்கி பார்க்கும் வல்லமையில் ஆற்றலற்றவராக இருப்பவர், எல்லா கோணங்களிலும் பலவீனமாக இருப்பது போல தோன்றலாம். இதனால் மற்றவர்களின் வழி நடத்துதலிலும் பாதிக்கப்படக் கூடிய அளவுக்கு அவருடைய சொந்த மனசாட்சியே அங்கீகரிக்காதபடிக்கு அவருடைய பலவீனமான தாழ்வு நிலையிலான அறிவு அல்லது சீர் தூக்கி பார்க்கும் வல்லமையில் ஆற்றலற்ற நிலை காரணமாக உள்ளது. ஒருவர் தன்னுடைய மனசாட்சியில் பாதிப்புகள் ஏற்படாதபடிக்கு விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவை புசிக்கலாம் அல்லது தன்னுடைய மனசாட்சி காயப்படாமல், விக்கிரகங்கள் உள்ள ஆலயத்தில் அமர்ந்து விருந்துண்ணலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு காரியம் செய்வது தவறு என்று மற்றவர் உணர்ந்து, உறுதியான அவருடைய சகோதரனின் எடுத்துக்காட்டை பின்பற்றுவதற்கு கடும் முயற்சிகளை எடுத்து அது அவருக்கு ஒரு பாவமாக ஏற்படும்படிக்கு தன்னுடைய மனசாட்சியை மீற செய்யும். மனசாட்சியின் எப்படிப்பட்ட மீறுதலும், அந்த காரியம் தன்னிலே தவறாக இருந்தாலும், சரியாக இருந்தாலும், மனப்பூர்வமான பாவத்தின் திசையை நோக்கி எடுத்து வைக்கக்கூடிய ஒரு படியாகும். இது ஆண்டவருடைய ஐக்கியத்திலுமிருந்தும் தோழமையிலிருந்தும் நம்மை தொலைவில் வழிநடத்தக்கூடிய கீழ் நோக்கி செல்லும் பாதையாகும். மேலும் மொத்தமாக மனசாட்சிக்கு மீறி நடந்து, கூடுமானால் இரண்டாம் மரணத்திற்கும் வழிநடத்தும். – “எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக் கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?” (1 கொரிந்தியர் 8:11) என்று அப்போஸ்தலர் இந்த காரியத்தை குறித்து முன்னிலைப்படுத்துகிறார்.

விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளை புசிப்பது பாவமா? என்பது கேள்வி அல்ல. ஆனால் நம்முடைய சகோதரன் சபையாக இருக்கும் கிறிஸ்துவுக்குள்ளான ஒரு சகோதரனுக்கு மட்டும் அல்ல, மாம்சத்தின்படி ஒரு சக மனுஷருக்கும் கூட இடறல் உண்டாக்கும் எந்த காரியத்தை செய்தாலும், அது புது சிருஷ்டியின் பிரமாணமாகிய அன்பின் ஆவிக்கு விரோதமான பாவமாக இருக்குமா? – ஏனெனில் கிறிஸ்து முழு உலகத்தின் பாவங்களுக்காக மரித்தாரே. ஒரு சகோதரனுக்கு இடறல் உண்டாக்குவது, அன்பின் பிரமாணத்திற்கும், ஆண்டவரின் கட்டாயமான உத்தரவுக்கும் எதிரான, கொடிய குற்றமாகும். (ரோமர் 14: 13,21, மத்தேயு 18:6) ஆனால், அவருடைய பார்வையில் – சகோதரர்களாகவும், விசுவாச வீட்டாராக மாறுவதற்கும் தடை செய்யக்கூடிய தடுக்கல்களாக இருப்பதும் குற்றமாக இருக்கும். நம்முடைய மனசாட்சியின் சகலவிதமான தடையுத்தரவுகளையும் அறிவு களைந்து போட்டாலும், நம்முடைய சுதந்திரத்தை முழுமையாக அடக்கிவைத்தாலும், அன்பே முதலாக பிரவேசித்து, நாம் செயலாற்றவதற்கு முன்னதாக நம்முடைய சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” என்று கூறி அன்பு நம் மேல் ஒரு உறுதியான கற்பனையை வைக்கிறது. ஆகவே, ஒவ்வொரு கேள்வியையும் தீர்மானிக்க வேண்டியது அன்பு மட்டுமே. அறிவோ, சுதந்திரமோ (சுயா தீனமோ) அல்ல.

இப்போது நாம் ஆண்டவரோடு நிற்கக்கூடிய நிலையை எடுத்துக்கொண்டும், நம்முடைய சுயாதீனத்தை பயன்படுத்துவதில் எந்த விதத்திலாவது மற்றவர்களை காயப்படுத்துவதின் நிமித்தம் அவைகளை பயன்படுத்துவதை மறுத்து, அவர்களின் நலனுக்காக பலிசெலுத்துவதை தேர்ந்தெடுப்போம் என்று தீர்மானிக்கலாம் நம்முடைய எஜமானனும், நம்முடைய இரட்சகரும் அவருக்குண்டான எல்லாவற்றையும் கொடுத்தது போல இந்த பாடத்தின் கடைசி வசனத்தில், அப்போஸ்தலனுடைய வார்த்தைகளை ஏற்றுகொண்டு ஒரு சகோதரனை காயப்படுத்தும் எந்த கிரியைகளையும் இனி ஒரு போதும் செய்ய வேண்டாம் என்று தீர்மானிக்கலாம் – நம்முடைய எந்த சுயாதீனமானாலும் சரி, அது தன்னில் தான் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் சரி, ஒரு சகோதரனுக்கு காயத்தை ஏற்படுத்துமேயானால், அந்த சுயாதீனத்தை நாம் பயன்படுத்தாமல், அதை அவருடைய விருப்பத்திற்கு விட்டுகொடுப்போம். அவருடைய சார்பாக, நம்முடைய ஜீவனையே அவருக்கு கொடுக்கும் அளவுக்கு அதை நாம் அவருக்காக பலி செலுத்துவோம்.

இது, ஒருவேளை சில சந்தர்ப்பங்களில், இந்த கொள்கை, தவறாக பயன்ப்படுத்தக்கூடிய அபாயமும் நேரிடலாம். எடுத்துகாட்டாக, மாம்சம் புசிப்பது தவறு மற்றும் மிருகங்களின் தோல்களை காலணிகளாக பயன்படுத்துவதும் தவறு என்று ரசியாவிலிருந்து கனடாவுக்கு குடியேறிய சமயப்பிரிவினர் கூறலாம். அப்போது இந்த விஷயத்தில் உங்களுடைய பலவீமான மனசாட்சிக்கு நீங்கள் உடன்பட்டு, நீங்கள் மாம்சமும் புசிக்கக்கூடாது, மிருகங்களின் தோல்களினால் செய்யப்பட்ட காலணிகனளயும் அணியக்கூடாது. நம்முடைய சுயாதீனத்தை விட்டுகொடுக்க வேண்டும் என்று அப்போஸ்தலன் விவரித்த காரியங்கள் இப்படிப்பட்ட கேள்விக்கு அல்ல என்று நாம் அறிந்திருக்கிறோம். சமுதாயத்தின் வழக்கமும் இந்த மனங்குழம்பிய ஜனங்களுக்கு முரண்பட்டதாக உள்ளது. மேலும், இந்த கேள்வியை பொருத்த வரையில், அவர்களின் சமசீரற்ற மனநிலைக்கு இணங்குவது, அவர்களின் தவறான வழியில் நடத்துவதற்கு உதவுவதாகும். நாம் மாம்சம் புசிப்பதை தவிர்ப்பது அல்லது தோலினால் செய்த காலனிகளை அணியாமல் இருப்பது, அந்த விதமான வார்தையிலும் மேம்பட்ட நோக்கத்தில் காணும்படிக்கு அவர்களுக்கு உதவியாக இராது. அல்லது நாம் மாம்சம் புசிப்பது அல்லது தோல் காலணிகளை அணிவது, அவர்களின் மனசாட்சியை எந்த விதத்திலும் குறுக்கிடாது. அணல் மூட்டும் இடங்களில் சபை கூடுவது மற்றும் சௌகரியமான இருக்கைகள் கொடுக்கப்படுவதை சில ஜனங்கள் தடைசெய்ததுபோல தேவனை ஆராதிக்கும் போது இசை கருவிகளை பயன்படுத்துவதில் மற்ற சகோதரர்கள் இயல்பான வெறுப்புகள் இருக்கலாம். சகோதரர்களின் சுயாதீனத்தினால் அவர்கள் மனசாட்சி காயப்பட்டதென்றும், அவர்களின் விருப்பத்திற்கேற்ப, இப்படிப்படட் சுதந்திரங்களை அடக்கவேண்டும் என்று கோருவதால் இவைகள் சில நேரங்களில், அப்போஸதலரின் சான்றுகளை பழிகூறலாம். இவர்கள் அப்போஸ்தலர்களின் சான்றுகளை தவறாகச் செயற்படுத்துகிறார்கள் – என்பதே நம்முடைய பதிலாகவும் உள்ளது. சபையில் பொதுவான தீயசெயல் ஏற்படும் விதத்தில், ஒவ்வொருவருடைய மனதில் திடீரென மாறும் மனப்பாங்குக்கு இசைவாக கர்த்தருடைய ஜனம் இருக்க வேண்டும என்பது பொருள் அல்ல. மூட நம்பிக்கைகள் சபையில் ஊக்கவிக்கப்பட கூடாது. அல்லது அதன் ஆவிக்குரிய நன்மைகளும். சுயாதீனமும் அவைகளின் காரணத்திற்காக பலி செலுத்திவிடப்படக்கூடாது. இருப்பினும், கர்த்தருடைய ஜனங்களின் அனைத்து நிகழ்வுகளிலும் அன்பு என்பது ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். மற்றும் அந்த ஜனங்கள் தவறுதலாக சகோதரர்கள் மீது அவர்கள் பெலவீனத்தின் மீது பழி சுமத்தும் போதும் கூட, அன்போடு நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்களின் எதிர்ப்புகள் முதலியான பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். தீமையாக தோன்றும் சகலத்தையும் தவிர்த்து, தங்களுடைய சகோதரர்களும் இதே சிலாக்கியத்தை பெற்றவர்களாக, கர்த்தர் அவர்களிடத்தில் எதிர்ப்பார்க்கக்கூடிய எல்லாவற்றையும் எதுவானாலும் அவைகளை செய்ய முழு சுந்ததிரம் பெற்றிருக்கிறார்களா என்பதை பார்க்கவேண்டும். மனசாட்சிக்கு கட்டுப்பட்டு. பாடல்களை கருவியோடு அல்லது இராகத்தோடு பாட முடியவில்லை என்றால் அவர்கள் அமைதியாக இருக்கக்கடவர்கள் அல்லது வீடுகளில் அவர்கள் பாடிக்கொள்ளட்டும். இசை கருவிகளோடு தேவனை ஆராதிப்பதும் விக்கிரக கோவில்களில் புசிப்பதும் முற்றிலும் ஒரு வேறுப்பட்ட காரியமாகும்.

ஏறக்குறைய இதே போல ஒரு கேள்விக்கு அதாவது பெயர் சபைகளில் புரோடெஸ்டன்ட்டு அல்லது கத்தோலிக்கர்களின் பொதுவான ஆராதனையில் கலந்து கொள்வததைப்பற்றி அப்போஸதலரின் முடிவு, இன்று நமக்கு முன்வரலாம். பூசை பலியில் கலந்துகொள்வது, இந்த கேள்வியை பொருத்த வரையில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுயாதீனம் உண்டு. ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த சிந்தையில் முழுமையாக இணங்கி, சொந்த மனசாட்சியின் வழிநடத்துதலை பின்பற்ற வேண்டும். நம்முடைய தீர்ப்பின்படி, விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை புசிப்பதைகாட்டிலும் ரோம கத்தோலிக்க, கிரேக்க கத்தோலிக்க, அல்லது உயர்ந்த மேற்றாண ஸ்தலத்தில் பூசை பலியில் கலந்து கொள்வது மிக பெரிய குற்றமாகவும், ஏனெனில் இது கர்த்தருக்கு அருவருப்பான காரியமாக உள்ளது. (எபிரெயர் 7:25, 10:14) கர்த்தருடைய போஜனத்தில் பங்கு பெறுவதை பொருத்தமட்டில், பெரும்பாலான புரோட்டஸ்டண்டு மதத்தினரிடம், அதில் எந்த தீமையும் நாம் கண்டதில்லை. வேத வசனத்தின்படி இப்படிப்பட்ட ஒரு அனுசரிப்பு பொருத்தமற்றதாக இருப்பதை உணர்ந்தாலும் அதில் பங்கெடுப்பவர்களின் பயபக்தியுள்ள தேவாராதனை அறிவாற்றுலுடன் இருக்கலாம். ஆயினும், பாபிலோனின் ஆராதனைகளிலும் ஆண்டவரின் இராபோஜனத்தை குறித்து தவறான பொருள்கொள்ளும், அவளுடைய பந்தியில் தவறாமல் பங்குகொள்ளுதல், கண்டனத்திற்குரியதாகும் – நம்முடைய சொந்த ஆவிக்குரிய முன்னேற்றத்தின் இழப்புக்கும் இன்னும் சிலருடைய புரிந்துகொள்ளுதலில் பலவீனமாக இருப்பவர்கள் இடறுவதற்கான அபாயம் ஏற்படலாம். ஆகவே நம்முடைய ஆலோசனை என்னவெனில், ஒரு பக்கத்தில் ஒரு பெயர் சபையின் கட்டிடத்திற்குள் அவர்களின் ஆராதனையை கேட்பதற்காக நுழைவதற்கு நம்மை கட்டுப்படுத்திகொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் தொடர்ந்து அவர்களின் ஆராதனையில் கலந்து கொண்டு அவர்களின் தவறுகளுக்கு இணங்குதலை நாம் தெரிவிக்க வேண்டியதும் இல்லை – விதிவிலக்காக இப்படிப்பட்ட சபை கூட்டங்களில் சத்தியத்தை அறிவிப்பதற்கு முழு வாய்ப்பை நமக்கு கொடுக்கப்பட்டால் மட்டுமே, அவைகளில் கலந்து கொள்ளலாம்.

நம்முடைய காலத்தில் இந்த கொள்கையின் மற்றொரு எடுத்துக்காட்டு, மதுபானத்தை குறித்த கேள்வியில் காணப்படுகிறது. ஒரு மனுஷன் குடித்து தன்னுடைய சுயநினைவை இழந்து தனக்கும் கூடுதலாக மற்றவர்களுக்கும் தீங்கு விளைவித்து சிருஷ்டிகருக்கு அவமதிப்பை ஏற்படுத்தாமல் மதுபானம் அருந்தும் வரையில் விவாதங்களுக்கு இடம் இல்லை. தேவனுக்கு அவமதிப்பை ஏற்படுத்தாமல், மற்றவர்களுக்கோ தமக்கோ எந்த கேடும் விளைவிக்காமல், மதுபானத்தை பயன்படுத்துவதை பொருத்த வரையில் சுயாதீனத்திற்கான கேள்வி இங்கு எழும்புகிறது. பொதுவாக உலகத்திற்கு வெறியூட்டும் போதையான மதுபானங்கள் ஒரு கொடிய அபாயத்தை விளைவிக்கும் சோதனை என்ற உண்மையை அனைவரும் கண்டறிந்திருக்கிறார்கள். மது அருந்துவதில் சுய கட்டுப்பாட்டின் முழு ஆற்றல் பெற்றிருக்கிறோம் என்று, என்னும் சகோதரர்களுக்கு நமது ஆலோசனை என்னவெனில், இப்பாடத்திற்கு அப்போஸ்தலர் கூறும் வாதத்தை பொருத்திப்பார்க்க வேண்டும் மற்றும் கர்த்தரை மேலும் மகிமைபடுத்த தம்மை விட பெலவீனமானவர்களின் சுதந்திரத்தை, மிதமாக அருந்த உபயோகிக்காமல், முழுவதுமாக விட்டொழித்தல், (அ) உரிமைகளின் தியாகம் என்னும் திசையில் உபயோகிக்கலாம் என்பதை தீர்மானிக்கவேண்டும்.

இது வரையில் நாம் அறிந்திருக்கிறபடி. இக்காலத்தில் நம்முடைய இனத்தை அழிக்கும் போதை பொருட்கள் மிக கொடூரமான கொள்ளை நோய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பலர் மிகவும் பலவீனர்களாக இருப்பதினால் மரபு வழியில் அதில் விழுபவர்கள், ஒரு முறை அதற்கு இணங்கிவிட்டால் மொத்தத்தில் அந்த போதை வஸ்துவின் கட்டுபாட்டை எதிர்க்க முடியாமல் போய்விடுகிறது. நீதிக்கும் மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்கும் கர்த்தரிடத்தில் தங்களுடைய ஜீவனை. இந்த விஷயத்தில் தங்களை வெறுத்து, இப்படிப்பட்ட சுதந்திரங்களையும், சிலாக்கியங்களையும் சகோதரர்களின் விருப்பத்திற்கு மற்றும் பொதுவாக இந்த உலகத்தின் விருப்பத்தையும் விட்டு கொடுக்க வேண்டும் என்று கேட்பது அதிகபட்சமானதாகும்.

இதேபோல, மனுக்குலத்தை பாவத்திற்குள் வழி நடத்துவதற்கு சாத்தான் பயன்படுத்தும் பல கவர்ச்சியான வஞ்சனைகளாகிய சீட்டு விளையாட்டு, புகையிலை பயண்படுத்தல் போன்ற காரியங்களுக்கு இப்படிப்பட்ட வாதங்கள் தூண்டி விடப்படலாம். முழுமையாக, குறிப்பிட்டிருக்கும்படி இது அன்பின் சான்றாக உள்ளது. நாம் கர்த்தருடைய கிருபையில் வளர்ச்சி அடைந்தால், அதற்கேற்படி அவருடைய அன்பின் ஆவியில் வளர்ச்சி அடையும் போது, நாம் மகிழ்ச்சி அடைந்து, நம்முடைய சொந்த நலனுக்காக மாம்சத்தின் சகல அசுத்தங்களையும் புறம்பே அகற்றுவதோடு மட்டும் அல்லாமல், நம்முடைய கர்த்தரை போலவும் மாறுவோம். ஆனால் அன்பின் எடுத்துக்காட்டாக, மற்றவர்களிடம் ஏற்படுத்தும் தீங்கான தாக்கங்களை ஏற்படுத்தும் ஏதுவானாலும் சரி, அவர்களை பொருத்த வரையில் நம்முடைய தனிப்பட்ட சுதந்திரமாக இருந்தாலும் சரி அனைத்தையும் நம்மை விட்டு அப்புறப்படுத்துவதற்கு விருப்பமுள்ளவராக இருக்க வேண்டும்.

நம்முடைய பொன்னான விரிவுரை இங்கு இடம் பெற்றுள்ளது – கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டிகளாக இருக்கும் அனைவரும் இதை கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் – “ஆகவே நாம், மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும், நாமும் ஆசீர்வாதங்களை பொறுவதற்கும், கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக அவருக்குள் சிருஷ்டிகளாக கட்டியெழுப்பப்படுவதற்கும் சமாதானத்தை” ஏற்படுத்தும் காரியங்களை பின் தொடரலாம்.