Q-2
R 2585 [col. 293]
ஆவியில் எளிமை என்பதற்கும் பொருளாதாரத்தில் எளிமை என்பதற்கும் குறிப்பான வித்தியாசம் உண்டு. பூமிக்குரிய காரியத்தில் எளிமையாக இருப்போர் ஆவிக்குரிய விஷயத்தில் பெருமையாக இருக்கும் அநேகரை கண்டிருக்கலாம். ஆனால் நம்முடைய பொருளாதாரமோ, நம்முடைய அறிவை சார்ந்த தாலந்துகளோ அல்லது மற்ற எந்தக் காரியமோ, தெய்வீக பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படும் காரியங்கள் அல்லது அங்கிகரிப்பை பெறும் காரியங்கள் மட்டுமே மனத்தாழ்மையில் நடப்பிக்கும் காரியங்களாகும். பரத்திலிருந்து ஞானத்தை பெறும் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட மனநிலை அவசியம் தேவைப்படுகிறது. இவர்கள் ஒவ்வொரு நொடியிலும், தங்களுக்குண்டான எல்லா குறைவுகளையும், மனத்தாழ்மையோடு உணரவேண்டும். இல்லா விட்டால் இக்காலத்தில், தேவன் கிருபையாக அளிக்க விரும்பும் ஞானத்தையும், ஆசீர்வாதங்களையும் இலவசமாக பெறமுடியாது. மேலும், ஆரோக்கியமான இருதயத்தைப் பெறுவதற்கு, மனத்தாழ்மையுள்ள மனதே அடிப்படையாக தேவைப்படுகிறது. ஆகவே ஒருவர் நீதியாக சிந்திக்கும் மனநிலையில் இருந்தால், அவர் நிச்சயமாக மனத்தாழ்மையுள்ளவராக இருப்பார். எனவே நாம் கிறிஸ்துவின் சிந்தயை பெறுவதற்கு முதலில் மனத்தாழ்மையாக இருக்கவேண்டும்.
R2586 [col. 1P2]
மூன்றாவதாக சாந்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள் என்று ஆண்டவர் உரைக்கிறார். அல்லது தன்னடக்கம் என்றும் கூறலாம். “தெய்வீக சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, பொறுமையாகவும், சாந்தத்தோடும் ஆண்மீக நோக்கங்களை கொண்டிருக்கிறது” என்று இதை குறித்து வெப்ஸ்ட்டர் அகராதி விளக்கம் அளிக்கிறது. பொறுமையோடும், சாந்தத்தோடும் தன்னை தெய்வீக சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பதற்கும், தங்களுடைய சுயநலத்திற்காக பொறுமையோடு இருப்பதற்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு. பட்டியலிலிருக்கும் முதல் குணமாகிய மனத்தாழ்மையைப் பெறாவிட்டால், பொறுமையோடு தெய்வீக சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பது கூடாத காரியமாகும். பெறுமையுள்ளவர்களும், சுயநலமானவர்களும் தெய்வீக சட்டத்திற்கு தங்களை கீழ்படுத்துவது இயலாத காரியம். அவர்கள் தங்களை உயர்த்தி, தங்களுடைய நியாயத்தீர்ப்பை (தேவன் அவர்களின் பாவங்களை கிருபையாக மன்னித்ததை) தவறாக பயன்படுத்தி, தெய்வீக பாதுகாப்பின் மேல் உள்ள நம்பிக்கை முற்றிலுமாக அற்றுப்போக தக்கதாக தங்களுடைய நல்மனசாட்சி தவறாக வழிநடத்திவிடுகிறது. ஆனாலும் அவர்கள் மிக சரியான பாதையில் நடப்பதாக எண்ணுகிறார்கள்.
R1962[col. 1 P 1]
மற்ற வார்த்தைகளுக்கு ஆண்டவர் தாமே திறவுகோலை தருகிறார். “என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். நான் சாந்தமும் மனத்தாழ்மையுள்ளவருமாக இருக்கிறேன்.” உண்மையில், இளைபாறுதலுக்குரிய ஆவி – சாந்தமும், அமைதியான இருதயத்திலே தங்கும். நீடிய பொறுமையைக் காத்துக்கொண்டு, தேவனுடைய சித்தத்தை பிரியத்தோடு செய்து, அவருடைய நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமாகி, அவருடைய ஞானத்தின் ஆலோசனைகளில் நடந்து, எல்லா தீமைகளையும் மேற்கொண்டு, சாதகமான சூழ்நிலையிலும், சாதகமற்ற சூழ்நிலையிலும் நல்ல சாட்சிகளுடன் வெளிப்படும் பட்சத்தில் நமக்குள்ளிருக்கும் சாந்தம் வளர்ச்சியடையும்.