Q-10
1 கொரிந்தியர் 9:27- ” மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”
F600 [P1]
ஆனால் பழைய விருப்பம் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நிராகரிக்கப்பட்டு, இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. (ஆண்டவர் மற்றும் அவரது நிலைப்பாட்டில் இருந்து விஷயங்களை பார்க்கும் அனைவராலும்,) மேலும் பாவத்தை பொறுத்தவரை மாம்சம் மணித்துவிட்டதாக கருதப்பட்டாலும், தேவனுக்கு முன் வாக்குத்தத்தங்களினால் உயிர்ப்பிக்கப்பட்டு, புதிய சித்தத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. (ரோமர் 6:11; 8:11) மாம்சம் மற்றும் அதன் சித்தத்தின் மரணமும் மற்றும் தேவனுக்காகவம், சத்தியத்திற்காகவும், பொன்னான பிரமாணத்தின் கட்டுபாட்டின் கீழ் புதிய சித்தத்திற்கான ஊழியராக அந்த மாம்சத்தின் உயிர்த்தெழுதலும், எண்ணப்பட்ட அல்லது கருதப்பட்ட விஷயங்கள் மட்டுமே. “மரித்த” மற்றும் “ஜீவனுள்ள” நிலைமைகள், பழைய விருப்பத்தின் எந்தவொரு வாழ்க்கை அல்லது செயல்பாட்டிற்கும் மற்றும் மாம்சத்தின் மீது அதன் செல்வாக்கிற்கும் புதிய சித்தத்தின் எதிர்ப்பை தொடர்ந்து பராமரிக்கவேண்டும். புதிய சித்தம் அலட்சியமாகி, ஜீவனுள்ள ஆவிக்குரிய விஷயங்களிலும் தொடர்ந்து மாம்சத்தை பயன்படுத்தத் தவறினால், மாம்சம் மிக விரைவில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, புதிய சித்தத்திற்கு எதிராக அதன் சொந்த இயக்கங்கள் மற்றும் ஆசைகளை நிறைவேற்றிகொள்ளும் ஆகையால், புதிய சித்தம் வளர்ச்சிகளுக்காக தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அப்போஸ்தலர் அதை வெளிப்படுத்துவது போல, பழைய விருப்பத்தையும் அதன் ஆசைகளையும் கட்டுப்படுத்தவேண்டும் – அல்லது மாமிசத்தின் விருப்பங்களையும் லட்சியங்களையும் தொடர்ந்து துன்புறுத்தி அல்லது மரிக்கவைக்க வேண்டும். “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” (1 கொரிந்தியர் 9:27) என்று அப்போஸ்தலர் தன்னைப் பற்றி கூறி, இதற்கு விளக்கம் அளிக்கிறார்.
F488 [P2] through F489 [P1]
இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு, பார்க்கும்போது, இந்த புதிய சித்தத்திற்கு முன் ஒரு கடினமாக பணி இருப்பதை உடனடியாகக் காணலாம். (1) மாம்சத்தை முழுமையாக பலி செலுத்தி, தேவனை பிரியப்படுத்தல். (2) மாம்சத்திற்கான தேவையையும், கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு அவைகள் எந்த அளவிற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்பதை தெளிவாகக் கண்டறியவேண்டும். (3) மரணம் அல்லது ஜீவன் என்பதால், இந்த கேளிக்கைகள் மற்றும் சலுகைகள் எந்த அளவிற்கு உடன்படிக்கையை மீறச் செய்யும் என்பதையும் காணவேண்டும். ஏனெனில், “மாம்சத்தின் படி பிழைத்தால் சாவோம், ஆவியின்படி மாம்சத்தை கொன்றால் நாம் பிழைப்போம்” – இறுதியில் உயிர்த்தெழுதலின் போது பரிபூரணம் அடைவோம். இங்கு மற்றொரு சிரமம் எழுகிறது. மாம்சம் தானாக முன்வந்து மரிக்காது. புதிய சிருஷ்டியின் விருப்பம், சிந்தை, சித்தம் ஆகியவற்றினால் அது கொல்லப்படவேண்டும். எனவே, தேவனுடைய விருப்பத்தின்படி, மாம்சத்திற்கு சில இரக்கங்கள் (கொடுப்பனவை) கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்து, இவைகளை சாதகமாக பயன்படுத்த மாம்சம் மிகவும் ஞானமுள்ளது. “தேவைகளுக்கு அதிகமானவைகளையும் “அதிகமான கொடுப்பனவைகளையும் கோருவதோடு, மாம்சத்திற்கு அல்லாத சுதந்திரத்தையும் உரிமைகளையும் கோருகிறதாக இருக்கிறது.
இது பலியின் உடன்படிக்கைக்கு குறுக்கீடுகளாக இருக்கும். நம்முடைய மரிக்கக்கூடிய சரீரங்களில் செய்யப்படும் இந்த முயற்சிகள், சில சமயங்களில் பாவத்திற்கு சாக்குப்போக்கு சொல்லி கொண்டு, சில சமயங்களில் பலிகளை தவிர்த்து, புது சிருஷ்டிக்கு அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்தும். அடிக்கடி தற்காலிகமாக தடுமாற்றத்தில் அல்ல, சொந்த மாம்சத்தின் வஞ்சகத்தையும் பலவீனத்தையும் படிப்படியாக கற்றுக்கொண்டு, பரத்தில் இருந்து வருகிற ஞானத்தினாலும் கிருபையினாலும் தன்னுடைய சரீரத்தை புதிய சிந்தைக்கு அதிகதிகமாக கீழ்படுத்துவதில் தேர்ச்சி பெறும் வரையில், புது சித்தத்திற்கு மாம்சத்தை கீழ்படுத்த முடியாது. (1 கொரிந்தியர் 9:27) இயற்கையான இருதயம், மாம்சத்தின் விருப்பம், கொல்லப்பட்டாலும், எந்த அர்த்தத்திலும் அது கட்டுப்பாட்டில் இல்லை என்றும், “எல்லாவற்றிற்கும் மேலாக அது வஞ்சகமானதும்”, சில சமயங்களில் “மிகவும் துன்மார்க்கமானதும்” புதிய சித்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் தீவிரமான முயற்சியில், புது சிருஷ்டியை அழித்துவிடும் என்றும் அதாவது ஆவியின்படி அல்ல, மாம்சத்தின் படி நடந்து, பழைய சிருஷ்டியை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாம்சம் செயல்படும் என்ற ஆண்டவரின் வார்த்தைகளை புரிந்துக்கொள்ள சில கசப்பான அனுபவத்தின் முலம் புது சிருஷ்டிகள் கற்றுக்கொள்கிறார்கள்.
R2878 [col.1 P3,4]
இந்த விஷயத்தில் ஏதேனும் அனுபவம் பெற்றவர்கள் மற்றும் அவர்களின் போர் ஆற்றலை எப்படி எங்கு இயக்கவேண்டும் என்று கற்றுக் கொண்ட அனைவரும், அவரிடம் உள்ள ஒவ்வொரு போர் துகள்களின் பயிற்சிக்கான முழு வாய்ப்பு இருப்பதைக் கண்டறிகிறார்கள். (1) – தன்னில், தொடர்ந்து, அப்போஸ்தலர் வெளிப்படுத்துவது போல, “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு. என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” (1 கொரிந்தியர் 9:27) ஓ, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடுவதில் எவ்வளவு ஆற்றல் மற்றும் எவ்வளவு நிலைத் தனிமையம், சுயத்தை வெல்லுவதற்கு, ஆண்டவன் மேல் எவ்வளவு விசுவாசமும் தேவைப்படுகிறது. “அவைகளால் நாங்கள் … எந்த எண்ணத்தையும் (முடிந்தவரை ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும்) கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 10:5) போராடுவதற்கு நிறைய காரியம் இருக்கிறது. பாவம் மற்றும் சுயத்திற்கு எதிரான சண்டை, மாம்சத்தின் விருப்பத்துடன் போராடுதல் மற்றும் ஒவ்வொரு அடியிலும் அதை எதிர்த்து, அதை மோசமாக்கி, அதன் பாசங்குகளையும், ஆசைகளையும் கொன்றுபோடுவது போன்ற நம் அனைத்துவித விருப்பங்களுக்கும் வாய்ப்புள்ளது. ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் நல்ல போர் சேவகர்களாக கடினத்தன்மையை தாங்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும், இந்த தற்போதைய அனுபவங்களை போராடுதல் என்றும் அப்போஸ்தலர் பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
(2) விரைவாக சுயத்தின் மீதான வெற்றி கிடைத்தவுடன், எந்த விதமான கிளர்ச்சியும் எழும்பாமல், இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுக்கும் முழுமையாக அடிபணிந்து நடத்த, சரீரத்தில் அனைத்து பகுதிகளிலும் புதிய சிந்தை பாதுகாப்பு அரண்களை அமைத்தபின்னர், மீதமுள்ள அனைத்து ஆற்றல்களையும், ஆண்டவருக்காகவும், சகோதரர்களுக்காகவும், சத்தியத்திற்காகவும், தவறுகளை எதிர்க்கவும், “அவனுடைய தந்திரங்கள் நாம் அறியாதவைகள் அல்லவே” என்று அப்போஸ்தலர் அறிவித்தபடி பிசாசின் அனைத்து சூழ்ச்சிகளுக்கு எதிராகவும் போராடுவதற்கு போதுமான வாய்ப்புகளை பெறுவோம்.