விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-FAITH-Q-23

விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?

What are the hindrances to full assurance of faith?

“நான் உங்களை கைவிடுவதே இல்லை” என்று தேவன் சொல்லிய வாக்கின் அடிப்படையில், “போதும் என்ற மனதோடுக்கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்” என்று அப்போஸ்தலன் வலியுறுத்திச் சொல்லிய காரியத்தை நம்முடைய பாடத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆம், உண்மையில் தேவனுடைய பராமரிப்பையும், அவருடைய ஞானமும், கிருபையும் நம்மிடம் செயல்படுகிறதை உணரவேண்டும் என்பதே இதன் முக்கிய கருத்தாக இருக்கிறது – மேலும், நாம் நமக்காக தேர்வு செய்யும் காரியங்களைவிட தேவன் நமக்கு அனுமதிக்கிற காரியங்கள் சகலத்திலும் நேர்த்தியானதாக இருக்கிறது.

அப்போஸ்தலர் சொல்லும்பொழுது – “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே” என்கிறார். தேவனுடைய தாழ்மையான ஜனங்களின் நுண்ணறிவுள்ள தைரியத்தைக் குறித்து, இந்த முழு உலகம் அநேக முறை ஆச்சரியப்பட்டிருக்கிறது. இவர்களின் தைரியத்திற்கும், பலத்திற்கும் காரணமாக இருப்பது – “தேவனே எங்கள் சகாயர்” என்றும், அவருடைய அனந்த ஞானத்தினாலும், அன்பினாலும், சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறார் என்றும், இவர்கள் தேவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையே காரணமாக இருக்கிறது.

இந்தக் காரியங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்படுகிறது? என்று சிலர் நினைக்கலாம். இதற்குப் பதிலாக ஆவியின் கனிகளாகிய அன்பு, மற்றும் இன்னும் பல காரியங்களைக் குறித்து ஆராய்ச்சி செய்திருக்கலாமே என்றும் நினைக்கலாம். ஆனால் இந்த பாடங்கள் இந்த காலத்திற்கு மிகப் பிரயோஜனமுள்ளதாக இருக்கும் என்று எண்ணி இதற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று பதில் அளிக்கலாம். நம்முடைய தேவன், நம்மேல் வைத்த கிருபையினால், அநேகக் குருட்டாட்டமான தவறுகளை நம்மை விட்டு அகற்றிவிட்டு அவருடைய மகிமையான திட்டங்களின் தெளிவான விவரங்களை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நாம் அறிவோம். இவர்கள் தேவனுடைய திட்டங்களை அறிந்துகொள்வதற்கு மட்டும் அல்லாமல், இந்தத் தெய்வீக சத்தியத்தினால், இவர்கள் மேலும் பரிசுத்தப்படுவதற்கு அவர் இவைகளை வெளிப்படுத்தி, “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களின் சுதந்தரத்தில் பங்கடைய.” நம்மைத் தகுதிப்படுத்துகிறார். ஆகவே தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு வெறும் உபதேசங்களின் சோதனைகளை மட்டும் அனுமதிக்காமல், இந்த அறுவடையின் காலத்தில், சகோதரர்களின் ஆவியின் கனிகளின் அடிப்படையில் இவர்கள் மத்தியில் பிரிவுகள் ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.

நீங்கள் என்னுடைய சில காரியங்களை அறிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் ஒருபோதும் என்னுடையவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும், என்னைப் பற்றிய அறிவு உங்களிடம் போதிய அளவு இல்லாததினால், நீங்கள் என்னுடையவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும் தேவன் அவருடைய முடிவை எங்குமே எப்பொழுதும் சொன்னதில்லை. ஆனால், “கிறிஸ்துவின் சிந்தை (ஆவி) இல்லாத எவனும் தேவனை உடையவன் அல்ல” நாம் இதில் தெளிவாக இருந்தால், சிலுவையின் போர்வீரர்களாக, இரட்சணியம் என்னும் தலைச்சீராவை அணிந்து, விசுவாசம் என்னும் மார்க்கவசத்தை தரித்து, அன்பு மற்றும் சத்தியத்தின் நீதியைத் தரித்து, அவர் காட்டியப் பாதையில் நடப்போம், அப்பொழுது இடது புறமாக ஆயிரம்பேரும், வலதுபுறமாக பத்தாயிரம்பேர்கள் விழுந்தாலும் தீங்கு நம்மை அணுகாது – சங் 91:7, மத் 24:24, 2தெச 2:11

காலங்கள் சமீபித்திருப்பதால், இந்தப் பாடம் நமக்கு மிக முக்கியமானது என்று நம்பி, இதுவரைக்கும் இந்த ஆவியின் கனியை வளர்க்காமல் இருக்கும் தேவப் பிள்ளைகள், இந்தப் பாடத்திற்காக தேவனுக்கு நன்றிகளை ஏறெடுத்து, தங்களுக்குள் விசுவாசத்தை வளர்த்து, தேவ இராஜ்யத்தில் நல்லதொரு பங்கைப் பெற “போதும் என்ற மனதுடனேகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்ற வார்த்தைகளைப் பற்றிக்கொண்டு நடப்போம். ஒருவேளை நாம் இந்த உலகத்தின் ஆவியைப் பெற்றவர்களாக இருந்தால், வெகு சீக்கிரத்தில் மகா உபத்திரவத்தின் காலத்தைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும். போதும் என்ற மனமும், விசுவாசமும் தெய்வீகத்திற்கு மிக முக்கியமானது. இந்தக் குணங்கள் இல்லாமல் மற்ற ஆவியின் கனிகளை வளரச் செய்வது கூடாதக் காரியம். நம்முடைய இருதயத்தில் உலகத்தின் ஆவியினால் வளர்ந்திருக்கும் அதிருப்தி என்னும் களைகளும் நமக்குள் இருக்கும் பெலத்தையும், பக்தியையும் உறிஞ்சி விட்டு, அன்பு, சமாதானம், பொறுமை, சாந்தம், நீடிய பொறுமை, சகோதர அன்பு போன்ற குணங்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

E229 – E230

ஒரு மனுஷனின் சிந்தை அல்லது ஆவி அவனுடைய வார்த்தைகளினாலும், நடத்தைகளினாலும் அறியப்படும், அதை போல தேவனுடைய சிந்தையை அவருடைய வார்த்தைகளின் மூலம் அறிந்துகொள்ளலாம். இயேசுவின் மூலமாக தேவனிடத்தில் வரும் அனைவரையும் (தங்களுடைய துர்க்கிரியைகளிலிருந்தும், செத்தக்கிரியைகளை விட்டு மனந்திரும்பி, விசுவாசத்தின் மூலம் சீர்ப்பொருந்துபவர்களை) அவர் ஏற்றுக்கொள்வதாக அவர் வாக்குறுதிக்கொடுக்கிறார். (எபி 7:25) ஆகவே நமக்குள் எழவேண்டிய கேள்விகள் என்னவெனில் – நான் எப்பொழுதுதாவது கிறிஸ்துவினிடமாய் இழுக்கப்பட்டேனா? – அவரை நான் என்னுடைய இரட்சகராக அடையாளம் கண்டுக்கொண்டு, அவருடைய நீதியின் வழியாக பிதாவாகிய தேவனை சேர்ந்து, அவருக்கு ஏற்றவனாக இருக்கிறேனா?

இதற்கான பதில் – ஆம் என்று இருக்கும் பட்சத்தில், நமக்குள் எழும் அடுத்தக்கேள்வி என்னவெனில் – நான் என்னை முழுமையாக ஒப்புகொடுத்திருக்கிறேனா? – என்னுடைய ஜீவன், நேரம், செல்வாக்கு மற்றும் அனைத்தும் தேவனுக்கு முழுமையாகக் கொடுக்கிறேனா?

இந்தக் கேள்விக்கும் ஆம், என்ற பதிலைச் சொல்லுவோமானால், நிச்சயமாகத் தேவன் அவருடைய ஒரே பேறானவருக்குள் நம்மை ஏற்றுக்கொண்டு, நம்மை அவருடைய குமாரர்களாகப் பாவிக்கிறார். மேலும், நாம் அவருடைய இருதயத்தின் சிந்தையை கூர்ந்து கவனித்தால், அவர் இன்னும் தேவனுடைய சித்தத்தைச் செய்வதில் கவனமாக இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட, கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபை நம்மை தாங்கும் பொழுது, நாம் பெறும் அனுபவங்களினால், தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் நமக்குள் கட்டப்படக்கூடிய குணங்கள், ஒருபோதும் மாறாது. ஒருவேளை நம்முடைய இருண்ட காலங்களில், பயமும், சந்தேகமும் எதிர்ப்படும்பொழுது, நாம் தேவனுடைய வார்த்தையாகிய விளக்கை மட்டும் கையில் எடுத்து நம்முடைய இருதயம் தேவன் மேல் முழு விசுவாசத்தோடு இருக்கிறதா என்ற உண்மையை ஆராய்ந்து அறிந்துகொண்டால் போதும், நம்முடைய சந்தோஷமும், சமாதானமும் நம்மிடத்தில் வந்து சேரும். ஒரு வேளை “விலையேறப்பெற்ற இரத்தத்தின்” மேல் உள்ள விசுவாசம் தடுமாறுகையில், நாம் இதை உணர்ந்துக்கொண்டு, உடனடியாக அதை செப்பனிட்டு, மறுபடியுமாக நம்முடைய விசுவாசத்தை முழுமையாக ஸ்தாபிக்கக்கூடியவர்களாக இருக்கிறோம் (எபி 10:22) ஆனால் ஒவ்வொருவரும் – “தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைப்போட்டு நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும்” (யோவ 3:33) ஏனெனில் நம்முடைய தேவன் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர். தேவனுடைய ஜனங்கள் இந்த தெய்வீக கிருபையின் கீழ் வந்தபின் சமாதானமாக இளைப்பாறலாம். தேவனிடம் முழு மனதோடு உண்மையாக இருந்து, அவர்களுடைய சித்தம் தேவனுடைய சித்தத்தோடு இசைந்து இருந்து, அவருடைய தெய்வீக கற்பனைகளைக் கைக்கொண்டு, கீழப்படிதலோடிருக்கும் வரை நாம் சுகமாக இந்த விசுவாசத்திற்குள் இளைப்பாறலாம் – மொத்தத்தில் தேவனிடத்திலும், ஜனங்களிடத்திலும், அன்பாக இருக்கவேண்டும்.

இந்த சுவிசேஷ யுகத்தில் எவர் ஒருவர் தன்னை தேவனுடைய பிள்ளை என்று உணர்ந்து, தேவனுடைய வார்த்தைகளுக்கு உண்மையான சாட்சி அளிக்கிறார்களோ, அவர்கள் மெய்யான திராட்சச்செடியில் கொடிகளாக இருக்கிறார்கள், அதாவது உண்மையான சபை வகுப்பாராக இருக்கிறார்கள். (யோவ 15:1) இப்படிப்பட்டவர்கள் உண்மையான சபையின் அங்கத்தினர்கள் என்று தேவனுடைய வார்த்தைகள் சாட்சியிடுகிறது. இந்தச்சாட்சி அவர்களின் ஆவிக்கும், சிந்தைக்கும் தேவன் அவருடைய ஆவியினால் அவரின் வார்த்தைகளின் மூலம் சாட்சி கொடுக்கிறார். தேவன் பேரில் தொடர்ந்து விசுவாசம் வைத்து இயேசுவின் பாதையில் சந்தோஷத்தோடு அவரவருடைய சிலுவையை சுமக்க மனப்பூர்வமாக முன் வருபவர்கள் வெகு சீக்கிரத்தில், உண்மையாக சபை அங்கத்தினராக மாற்றப்படுவார்கள் என்று அதே சத்தியத்தின் ஆவி சாட்சிகொடுக்கிறது – அவர்களின் ஓட்டத்தை முடித்தபின், முதலாம் உயிர்த்தெழுதலாகிய, அவருடைய உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவார்கள். பிலிப்பியர் 3:10