பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-13

பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?

Why is it important that parents exercise self-control?

கொலோசேயர் 3:21 பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.

F526 [P1]

அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கோபமான அல்லது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று புது சிருஷ்டிகளுக்கு அறிவுறுத்துவது அரிதாகவே உள்ளது. அத்தகைய பேச்சு எந்தச் சூழ்நிலையிலும் எவருக்கும் பொருதி தமற்றது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக கண்டிக்கும் போதும் கூட, அவர்களின் பேச்சு “கருணையுடன்” இருக்க வேண்டும். மேலும், வேகமாக அடிப்பதற்கு, இந்த வகுப்பாருக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. இது குழந்தைக்கு உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்தும் – ஒருவேளை நிரந்தரமாக அதன் செவிப்புலன்களை காயப்படுத்தி, கீழ்ப்படிதல் மற்றும் வீட்டின் ஒழுங்கு, கட்டப்படுவதற்கான காரணமாக இருக்கவேண்டிய, பெற்றோரின் பாசத்திற்கு பதிலாக பயத்தை உருவாக்கி, அவர்களின் பாசத்தையும் காயப்படுத்தும். மேலும் வேகமாக அடிப்பது, காயப்படுத்துவது தவறாகும். இது பெற்றோரின் தவறான மனநிலையைக் குறிக்கும் – இது அன்பின் பிரமாணத்தின் நீதியான முடிவுக்கு சாதகமற்ற நிலையாகும். தான் போதுமான அளவு கருத்தில் கொள்ளாததும், அஜாக்கிரதையாக உணர்ச்சியற்ற வகையில், நீதியானது சரியாகக் கோருவதைக்காட்டிலும் அதிகமாக இல்லாமல், மாறாக குறைவாக உள்ளதுமான ஒரு தண்டனையை, தான் ஒருபோதும் வழங்கக்கூடாது என்பதில் பெற்றோர் தன்னிடத்திலும், தனது பிள்ளையினிடத்திலும் கூட கடமைப்பட்டிருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் அந்த வீட்டின் மகிழ்ச்சி தொடரும் வகையில், வீட்டில் ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் சூழ்நிலையையும் குழந்தைகள் முழுமையாக புரிந்துகொள்வதற்கும், மேலும் பெற்றோருக்கு தன் மீது கோபம், பொறாமை, வெறுப்பு முற்றிலுமாக இல்லை என்றும், முழுமையான அன்பும் அனுதாபமும், பிள்ளைகளுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை பிள்ளைகள் நன்கு புரிந்துகொள்வதற்கும் அவர் கடமைப்பட்டிருக்கிறார்.

F527 [P1] through F528 [P2]

பல பெற்றோர்கள் தங்களுடைய சிறு வயதில், நீதியின் கொள்கைகளை புரிந்து கற்றுக்கொள்வதில், தங்களுடைய பெற்றோரின் கவனிப்பையும், கண்டிப்பையும், திருத்தக்கூடிய முயற்சிகளையும், தேவைப்படும் போது திருத்தும் நோக்கத்துடன் அவர்கள் கொடுத்த தண்டனைகளையும் திரும்பிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளாக இருந்தபோது நமது நீதியின் மேலுள்ள உணர்வு எவ்வளவு முனைப்புடன் இருந்தது என்பதை நினைவு கூருவோம். பெற்றோர் கற்பித்த ஒழுக்கங்கள், நம்முடைய குணாதிசய வளர்ச்சிக்காக தான் என்பதை நாம் புரிந்துகொண்டபோது, நம்முடைய மனதளவில் அதை நாம் எப்படி அங்கீகரித்தோம். ஆனால் நீதியின் கொள்கைளை நாம் புரிந்துகொள்ளாத பட்சத்திலும், நாம் குற்றம் செய்யாத விஷயங்களுக்காக கண்டிக்கப்படும் போதும் அல்லது குற்றத்திற்கு ஏற்ப நியாயமான தண்டனைக்கு அப்பால் வேறுவிதமாக தண்டிக்கப்படும்போதும் நாம் அவைகளை எப்படி வெறுத்தோம் என்பதையயும் நினைவில் கொள்ளவேண்டும். சரி மற்றும் தவறு, உண்மை மற்றம் பொய், நீதி மற்றும் அநீதி ஆகியவற்றின் வழியில் ஒரு பிள்ளையின் மனதை நடத்துவதே சிறந்த மற்றும் உறுதியான வழியாக இருந்தாலும் – பெற்றோரின் செல்வாக்கின் கீழ் மிகவம் எளிதில் தாக்கத்திற்குள்ளாக்குகையில், இது குழந்தையின் குணாதிசய வளர்ச்சியின் ஒரு பயிற்சியாகவும் அமைகிறது. ஆனால் பெற்றோரின் செல்வாக்கின்கீழ் மிகவும் எளிதில் தாக்கத்திற்குள்ளாக்குகையில், இது குழந்தையின் குணாதிசய வளர்ச் சியின் ஒரு பயிற்சியாகவும் அமைகிறது. குழந்தையின் மனசாட்சி மற்றும் தீர்ப்பு அவர்களை உருவாக்கும் நிலையில், பெற்றோர் மட்டுமே அதன் சட்டத்தை வழங்குபவராக பிள்ளைகள் சரியாக அங்கீகரிக்கும் நேரத்தில், இந்த குணாதிசயம் உருவாகிறது. குழந்தைப் பருவத்திலேயே இந்தப் பாத்திரத்தை உருவாக்கும் பணி புறக்கணிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இந்த பணி பல மடங்கு கடினமானதாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், இடைக்காலத்தில் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மற்றும் அயலவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தீமைகளை ஏற்படுத்தும். அப்படியானால், ஒரு பிள்ளையின் பயிற்சியானது, கண்ணியம், தூய்மை, கீழ்ப்படிதல் போன்றவற்றில் அதன் வெளிப்புறமானவைகளை குறித்து மட்டும் கற்பிக்காமல், உண்மையில் முதனிமையாக இருதயத்தில் நீதியான கொள்கைளை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்துவது மிக அவசியமானது. கர்த்தருடைய சிந்தையே வயதானவர்கள் மற்றும் வாலிபர்கள் இருவருக்குமான ஒரே வாழ்க்கைத் தரமாக இருப்பதைப் பற்றிய சாயலான அடையாளங்காணுதல். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடனான பிள்ளையின் உறவைப் பொறுத்தவரையில், பொன்னான பிரமாணம், அன்பின் பிரமாணம், தாராள மனப்பான்மை, சாந்தம், பொறுமை, மென்மை, சகிப்புத்தன்மை, ஆகியவற்றை கற்பிக்க வேண்டும். (உட்புகுத்தவேண்டும்) சுயநலமாக இருக்கக் கற்பிக்கப்படும் பிள்ளையோ, அல்லது அதனுடைய இயற்கையான சுயநலத்தை அதன் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்றாலோ, (மற்றவர்கள் முன்னிலையில் இல்லாவிட்டாலும்) அன்புடன் கணிடித்துத் திருத்தப்படும் காரியங்களி தவிர்க்கப்பட்டாலோ, மிகவும் பொருத்தமான தருணத்தில் மிகமுக்கியமான பாடத்தை இழக்கும்.

அறிவுரைகளை வழங்குவதற்கும், மனதையும், அதன் நியாயங்களையும் திருத்துவதற்கும், அதே போல் வெளிப்புற நடத்தைகளை திருத்தும் இதுபோன்ற வாய்ப்பைப் புறக்கணிக்கும் பெற்றோர், தனது குழந்தைக்கு மிகவும் சாதமான வாய்ப்பை இழப்பது மட்டுமல்லாமல், இதயத் தோட்டத்தில் ஆவியின் கனிகள் வளர்வதற்கு பதிலாக களைகளை வளர அனுமதிக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் முழுவதும் அந்த பிள்ளையை கையாள்வதில் பெற்றோருக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்தில் அந்த பிள்ளைகளுக்கு தங்கள் கடமையைச் செய்திருந்தால், தங்கள் பிள்ளைகளின் கவனக்குறைவு, ஆசைகள், சுயநலம் மற்றும் வழிதவறுதல்களில் இருந்து அவர்களை தப்புவித்திருக்கலாமே என்ற நல்ல எண்ணம் கொண்ட பெற்றோளில் இருதயம் வலிக்கிறது, கண்ணீர் விடுகிறது. மேலும் அத்தகைய பெற்றோர்கள் தங்கள் சொந்த அனுபவங்களில் ஒரு பெரிய ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள், தன்னலமற்ற தன்மை, அன்பு, கீழ்ப்படிதல், தேவ பக்தி, சக மனிதர்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றில் தன் பிள்ளைக்குச் சரியான முறையில் பயிற்சி அளிக்கும் பெற்றோர், உண்மையில், அவர்கள் தானாக மதிப்புமிக்க அனுபவங்களைக் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை இந்த கொள்கைகளை தனது பிள்ளைகளுக்கு கற்பிக்க முயற்சிக்கும் போது, கருணை, அறிவு, அன்பு, போன்றவற்றில் நிச்சயமாக வளர்ச்சி அடையவார்கள். தன்னுடைய அன்றாட நடத்தைமிலும், தேவனோடும், தனது குடும்பத்தோடு மற்ற சக மனிதர்களுடனான தனது உறவிலும், தான் புகுத்த விரும்பும் கொள்கைகளை தன்னிடத்திலும், அந்த பிள்ளை எதிர்பார்க்கும் என்பதையும் அவர் அறிந்துகொள்வார். இது அவருடைய சொந்த வார்த்தைகளிலும், சொந்த நடத்தையிலும் அவரை மிகவும் கவனமாக இருக்கச் செய்யும். மேலும் அத்தகைய பெற்றோரின் பொதுவான வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைத்து சிறிய விஷயங்களிலும் இத்தகைய கவனமான தன்மை நிச்சயமாக ஆண்டவரின் ஆவியின் கிருபைகளை மேலும் மேலும் அதிகரித்து, தேவனால் அங்கீகரிப்பதற்கு வாய்ப்பளித்து, இராஜ்யத்திற்கு பரிபூரணராக ஆயத்தப்படுத்தும்.

F530 [P1,2]

அன்பு, இரக்கம், பொறுமை, மென்மை ஆகியவற்றின் இனிமையான வாசனையுடன் இல்லாததும், ஆண்டவரின் ஆவி வெளிப்படாததுமான இல்லத்தில் – சுயநலத்தை சட்டமாக கொண்ட வீட்டில் பிள்ளைகள் பெற்றோருக்கு இடையேயான சண்டைகளைக் கவனிக்கிறது. எப்படி ஒவ்வொருவரும் மற்றவரின் செலவில் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள் என்பதை சிறதளவே பிள்ளைகள் கேட்டாலும், ஏளனம் செய்வது, புகாரளிப்பது, தவறு கண்டறிதல், கோபமான வார்த்தைகள், கடுமையான ஒலிகள் போன்றவற்றைக் அதிகமாக கேட்கிறது. இது பிள்ளைகளுக்கும் தொற்றிக் கொள்கிறது. அவர்களும் சிறிய விஷயங்களுக்காக சண்டையிடுகிறார்கள், ஒருவருக்கொருவர் கோபமாகப் பேசுகிறார்கள். வீட்டை எப்போதும் கொந்தளிப்பில் வைத்திருக்கிறார்கள். இப்படியாக வீட்டில் சுயநலத்தினால் தொடரும் பழக்கம், பிள்ளையின் மனதிலும், நடத்தையிலும் வளர்கிறது. கோபமான குரலில் பெற்றோர் பிள்ளையை “அயோக்கியன்” (a little rascal) என்று அழைத்தால், முதல் அந்த பிவளையின் தன்மைக்கு எதிரான இத்தகைய பிரதிபலிப்புகளால் அது புண்பட்டு, பிற்பாடு கடினமாகிவிட்டால், அது படிப்படியாக ஒரு அயோக்கியனாக இருப்பதில் பெருமை கொள்ள கற்றுக்கொள்கிறது. பொறுமையை இழந்து கோபம் கொண்ட ஒரு தாய், “உன்னை அடித்து நொறுக்கி விடுவேன்” அல்லது “நான் உன் முதுகை உடைப்பேன்” என்று சத்தமிடும்போது, சந்தேகத்திற்கு இடமின்றி, அந்த பிள்ளையின் இருதயத்தில் ஒரு பயமுறுத்தலை ஏற்படுத்துகிறது ஆனால் இவை செயலற்ற அச்சுறுத்தல்கள் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் செல்வதில்லை. அதற்கு ஒப்பீட்டளவில் இனி பயமும் இருப்பதில்லை. காலப்போக்கில், நாட்டின் சட்டங்கள் பெற்றோரை கடுமையான வண்முறையைச் செய்ய அனுமதிக்காது என்பதை படிப்படியாக அறியும் போது, பெற்றோர் தீமை செய்ய விருப்பம் உள்ளவர்கள் என்றும், அதை செய்வதற்கு அவர்களுக்கு கதந்திரம் இல்லை என்றும் முடிவு செய்கிறது. அத்தகைய ஒரு சிறிய மனதில் இருந்து உண்மையான அன்பின் பெரும்பகுதி வெளியேற்றப்படுகிறது. வாக்குறுதிகளைப் பொறுத்தமட்டில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரையும் உண்மையற்றவர்களாக காண்கிறார்கள். பெரும்பாலும் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான சிறிதளவு நோக்கமின்றி கொடுக்கப்படுவதாக எண்ணுகிறார்கள். இவ்வாறாக, பிள்ளைகள் உண்மையான நோக்கங்களை பொறுத்தவரையில், பொய் சொல்லவும், அச்சுறுத்தவும், வாக்களிக்கவும், மற்றவர்களை ஏமாற்றவும் கற்பிக்கிறது. அத்தகைய குழந்தை கடினமான தன்மையுடன் வளர்வதில் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா? மாறாக, மோசமான பயிற்சிக்கும், அலட்சியமான பயிற்சிக்கும், எந்தப் பயிற்சியுமே இல்லை என்பதற்கும் இடையிலும் நாகரீக உலகமானது அதைவிட மிகப்பெரிய அளவில் மோசமானது அல்ல என்பதுதான் ஆச்சரியம்.