Q-13
கொலோசேயர் 3:21 பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.
F526 [P1]
அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கோபமான அல்லது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று புது சிருஷ்டிகளுக்கு அறிவுறுத்துவது அரிதாகவே உள்ளது. அத்தகைய பேச்சு எந்தச் சூழ்நிலையிலும் எவருக்கும் பொருதி தமற்றது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக கண்டிக்கும் போதும் கூட, அவர்களின் பேச்சு “கருணையுடன்” இருக்க வேண்டும். மேலும், வேகமாக அடிப்பதற்கு, இந்த வகுப்பாருக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. இது குழந்தைக்கு உடல் ரீதியான காயத்தை ஏற்படுத்தும் – ஒருவேளை நிரந்தரமாக அதன் செவிப்புலன்களை காயப்படுத்தி, கீழ்ப்படிதல் மற்றும் வீட்டின் ஒழுங்கு, கட்டப்படுவதற்கான காரணமாக இருக்கவேண்டிய, பெற்றோரின் பாசத்திற்கு பதிலாக பயத்தை உருவாக்கி, அவர்களின் பாசத்தையும் காயப்படுத்தும். மேலும் வேகமாக அடிப்பது, காயப்படுத்துவது தவறாகும். இது பெற்றோரின் தவறான மனநிலையைக் குறிக்கும் – இது அன்பின் பிரமாணத்தின் நீதியான முடிவுக்கு சாதகமற்ற நிலையாகும். தான் போதுமான அளவு கருத்தில் கொள்ளாததும், அஜாக்கிரதையாக உணர்ச்சியற்ற வகையில், நீதியானது சரியாகக் கோருவதைக்காட்டிலும் அதிகமாக இல்லாமல், மாறாக குறைவாக உள்ளதுமான ஒரு தண்டனையை, தான் ஒருபோதும் வழங்கக்கூடாது என்பதில் பெற்றோர் தன்னிடத்திலும், தனது பிள்ளையினிடத்திலும் கூட கடமைப்பட்டிருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் அந்த வீட்டின் மகிழ்ச்சி தொடரும் வகையில், வீட்டில் ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் சூழ்நிலையையும் குழந்தைகள் முழுமையாக புரிந்துகொள்வதற்கும், மேலும் பெற்றோருக்கு தன் மீது கோபம், பொறாமை, வெறுப்பு முற்றிலுமாக இல்லை என்றும், முழுமையான அன்பும் அனுதாபமும், பிள்ளைகளுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற விருப்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை பிள்ளைகள் நன்கு புரிந்துகொள்வதற்கும் அவர் கடமைப்பட்டிருக்கிறார்.
F527 [P1] through F528 [P2]
பல பெற்றோர்கள் தங்களுடைய சிறு வயதில், நீதியின் கொள்கைகளை புரிந்து கற்றுக்கொள்வதில், தங்களுடைய பெற்றோரின் கவனிப்பையும், கண்டிப்பையும், திருத்தக்கூடிய முயற்சிகளையும், தேவைப்படும் போது திருத்தும் நோக்கத்துடன் அவர்கள் கொடுத்த தண்டனைகளையும் திரும்பிப் பார்க்க மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளாக இருந்தபோது நமது நீதியின் மேலுள்ள உணர்வு எவ்வளவு முனைப்புடன் இருந்தது என்பதை நினைவு கூருவோம். பெற்றோர் கற்பித்த ஒழுக்கங்கள், நம்முடைய குணாதிசய வளர்ச்சிக்காக தான் என்பதை நாம் புரிந்துகொண்டபோது, நம்முடைய மனதளவில் அதை நாம் எப்படி அங்கீகரித்தோம். ஆனால் நீதியின் கொள்கைளை நாம் புரிந்துகொள்ளாத பட்சத்திலும், நாம் குற்றம் செய்யாத விஷயங்களுக்காக கண்டிக்கப்படும் போதும் அல்லது குற்றத்திற்கு ஏற்ப நியாயமான தண்டனைக்கு அப்பால் வேறுவிதமாக தண்டிக்கப்படும்போதும் நாம் அவைகளை எப்படி வெறுத்தோம் என்பதையயும் நினைவில் கொள்ளவேண்டும். சரி மற்றும் தவறு, உண்மை மற்றம் பொய், நீதி மற்றும் அநீதி ஆகியவற்றின் வழியில் ஒரு பிள்ளையின் மனதை நடத்துவதே சிறந்த மற்றும் உறுதியான வழியாக இருந்தாலும் – பெற்றோரின் செல்வாக்கின் கீழ் மிகவம் எளிதில் தாக்கத்திற்குள்ளாக்குகையில், இது குழந்தையின் குணாதிசய வளர்ச்சியின் ஒரு பயிற்சியாகவும் அமைகிறது. ஆனால் பெற்றோரின் செல்வாக்கின்கீழ் மிகவும் எளிதில் தாக்கத்திற்குள்ளாக்குகையில், இது குழந்தையின் குணாதிசய வளர்ச் சியின் ஒரு பயிற்சியாகவும் அமைகிறது. குழந்தையின் மனசாட்சி மற்றும் தீர்ப்பு அவர்களை உருவாக்கும் நிலையில், பெற்றோர் மட்டுமே அதன் சட்டத்தை வழங்குபவராக பிள்ளைகள் சரியாக அங்கீகரிக்கும் நேரத்தில், இந்த குணாதிசயம் உருவாகிறது. குழந்தைப் பருவத்திலேயே இந்தப் பாத்திரத்தை உருவாக்கும் பணி புறக்கணிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இந்த பணி பல மடங்கு கடினமானதாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், இடைக்காலத்தில் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மற்றும் அயலவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தீமைகளை ஏற்படுத்தும். அப்படியானால், ஒரு பிள்ளையின் பயிற்சியானது, கண்ணியம், தூய்மை, கீழ்ப்படிதல் போன்றவற்றில் அதன் வெளிப்புறமானவைகளை குறித்து மட்டும் கற்பிக்காமல், உண்மையில் முதனிமையாக இருதயத்தில் நீதியான கொள்கைளை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்துவது மிக அவசியமானது. கர்த்தருடைய சிந்தையே வயதானவர்கள் மற்றும் வாலிபர்கள் இருவருக்குமான ஒரே வாழ்க்கைத் தரமாக இருப்பதைப் பற்றிய சாயலான அடையாளங்காணுதல். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடனான பிள்ளையின் உறவைப் பொறுத்தவரையில், பொன்னான பிரமாணம், அன்பின் பிரமாணம், தாராள மனப்பான்மை, சாந்தம், பொறுமை, மென்மை, சகிப்புத்தன்மை, ஆகியவற்றை கற்பிக்க வேண்டும். (உட்புகுத்தவேண்டும்) சுயநலமாக இருக்கக் கற்பிக்கப்படும் பிள்ளையோ, அல்லது அதனுடைய இயற்கையான சுயநலத்தை அதன் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை என்றாலோ, (மற்றவர்கள் முன்னிலையில் இல்லாவிட்டாலும்) அன்புடன் கணிடித்துத் திருத்தப்படும் காரியங்களி தவிர்க்கப்பட்டாலோ, மிகவும் பொருத்தமான தருணத்தில் மிகமுக்கியமான பாடத்தை இழக்கும்.
அறிவுரைகளை வழங்குவதற்கும், மனதையும், அதன் நியாயங்களையும் திருத்துவதற்கும், அதே போல் வெளிப்புற நடத்தைகளை திருத்தும் இதுபோன்ற வாய்ப்பைப் புறக்கணிக்கும் பெற்றோர், தனது குழந்தைக்கு மிகவும் சாதமான வாய்ப்பை இழப்பது மட்டுமல்லாமல், இதயத் தோட்டத்தில் ஆவியின் கனிகள் வளர்வதற்கு பதிலாக களைகளை வளர அனுமதிக்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் முழுவதும் அந்த பிள்ளையை கையாள்வதில் பெற்றோருக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்தில் அந்த பிள்ளைகளுக்கு தங்கள் கடமையைச் செய்திருந்தால், தங்கள் பிள்ளைகளின் கவனக்குறைவு, ஆசைகள், சுயநலம் மற்றும் வழிதவறுதல்களில் இருந்து அவர்களை தப்புவித்திருக்கலாமே என்ற நல்ல எண்ணம் கொண்ட பெற்றோளில் இருதயம் வலிக்கிறது, கண்ணீர் விடுகிறது. மேலும் அத்தகைய பெற்றோர்கள் தங்கள் சொந்த அனுபவங்களில் ஒரு பெரிய ஆசீர்வாதத்தை இழக்கிறார்கள், தன்னலமற்ற தன்மை, அன்பு, கீழ்ப்படிதல், தேவ பக்தி, சக மனிதர்களுக்கு உதவி செய்தல் போன்றவற்றில் தன் பிள்ளைக்குச் சரியான முறையில் பயிற்சி அளிக்கும் பெற்றோர், உண்மையில், அவர்கள் தானாக மதிப்புமிக்க அனுபவங்களைக் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை இந்த கொள்கைகளை தனது பிள்ளைகளுக்கு கற்பிக்க முயற்சிக்கும் போது, கருணை, அறிவு, அன்பு, போன்றவற்றில் நிச்சயமாக வளர்ச்சி அடையவார்கள். தன்னுடைய அன்றாட நடத்தைமிலும், தேவனோடும், தனது குடும்பத்தோடு மற்ற சக மனிதர்களுடனான தனது உறவிலும், தான் புகுத்த விரும்பும் கொள்கைகளை தன்னிடத்திலும், அந்த பிள்ளை எதிர்பார்க்கும் என்பதையும் அவர் அறிந்துகொள்வார். இது அவருடைய சொந்த வார்த்தைகளிலும், சொந்த நடத்தையிலும் அவரை மிகவும் கவனமாக இருக்கச் செய்யும். மேலும் அத்தகைய பெற்றோரின் பொதுவான வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைத்து சிறிய விஷயங்களிலும் இத்தகைய கவனமான தன்மை நிச்சயமாக ஆண்டவரின் ஆவியின் கிருபைகளை மேலும் மேலும் அதிகரித்து, தேவனால் அங்கீகரிப்பதற்கு வாய்ப்பளித்து, இராஜ்யத்திற்கு பரிபூரணராக ஆயத்தப்படுத்தும்.
F530 [P1,2]
அன்பு, இரக்கம், பொறுமை, மென்மை ஆகியவற்றின் இனிமையான வாசனையுடன் இல்லாததும், ஆண்டவரின் ஆவி வெளிப்படாததுமான இல்லத்தில் – சுயநலத்தை சட்டமாக கொண்ட வீட்டில் பிள்ளைகள் பெற்றோருக்கு இடையேயான சண்டைகளைக் கவனிக்கிறது. எப்படி ஒவ்வொருவரும் மற்றவரின் செலவில் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள் என்பதை சிறதளவே பிள்ளைகள் கேட்டாலும், ஏளனம் செய்வது, புகாரளிப்பது, தவறு கண்டறிதல், கோபமான வார்த்தைகள், கடுமையான ஒலிகள் போன்றவற்றைக் அதிகமாக கேட்கிறது. இது பிள்ளைகளுக்கும் தொற்றிக் கொள்கிறது. அவர்களும் சிறிய விஷயங்களுக்காக சண்டையிடுகிறார்கள், ஒருவருக்கொருவர் கோபமாகப் பேசுகிறார்கள். வீட்டை எப்போதும் கொந்தளிப்பில் வைத்திருக்கிறார்கள். இப்படியாக வீட்டில் சுயநலத்தினால் தொடரும் பழக்கம், பிள்ளையின் மனதிலும், நடத்தையிலும் வளர்கிறது. கோபமான குரலில் பெற்றோர் பிள்ளையை “அயோக்கியன்” (a little rascal) என்று அழைத்தால், முதல் அந்த பிவளையின் தன்மைக்கு எதிரான இத்தகைய பிரதிபலிப்புகளால் அது புண்பட்டு, பிற்பாடு கடினமாகிவிட்டால், அது படிப்படியாக ஒரு அயோக்கியனாக இருப்பதில் பெருமை கொள்ள கற்றுக்கொள்கிறது. பொறுமையை இழந்து கோபம் கொண்ட ஒரு தாய், “உன்னை அடித்து நொறுக்கி விடுவேன்” அல்லது “நான் உன் முதுகை உடைப்பேன்” என்று சத்தமிடும்போது, சந்தேகத்திற்கு இடமின்றி, அந்த பிள்ளையின் இருதயத்தில் ஒரு பயமுறுத்தலை ஏற்படுத்துகிறது ஆனால் இவை செயலற்ற அச்சுறுத்தல்கள் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு நீண்ட காலம் செல்வதில்லை. அதற்கு ஒப்பீட்டளவில் இனி பயமும் இருப்பதில்லை. காலப்போக்கில், நாட்டின் சட்டங்கள் பெற்றோரை கடுமையான வண்முறையைச் செய்ய அனுமதிக்காது என்பதை படிப்படியாக அறியும் போது, பெற்றோர் தீமை செய்ய விருப்பம் உள்ளவர்கள் என்றும், அதை செய்வதற்கு அவர்களுக்கு கதந்திரம் இல்லை என்றும் முடிவு செய்கிறது. அத்தகைய ஒரு சிறிய மனதில் இருந்து உண்மையான அன்பின் பெரும்பகுதி வெளியேற்றப்படுகிறது. வாக்குறுதிகளைப் பொறுத்தமட்டில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரையும் உண்மையற்றவர்களாக காண்கிறார்கள். பெரும்பாலும் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான சிறிதளவு நோக்கமின்றி கொடுக்கப்படுவதாக எண்ணுகிறார்கள். இவ்வாறாக, பிள்ளைகள் உண்மையான நோக்கங்களை பொறுத்தவரையில், பொய் சொல்லவும், அச்சுறுத்தவும், வாக்களிக்கவும், மற்றவர்களை ஏமாற்றவும் கற்பிக்கிறது. அத்தகைய குழந்தை கடினமான தன்மையுடன் வளர்வதில் ஏதேனும் ஆச்சரியம் இருக்கிறதா? மாறாக, மோசமான பயிற்சிக்கும், அலட்சியமான பயிற்சிக்கும், எந்தப் பயிற்சியுமே இல்லை என்பதற்கும் இடையிலும் நாகரீக உலகமானது அதைவிட மிகப்பெரிய அளவில் மோசமானது அல்ல என்பதுதான் ஆச்சரியம்.