CD-PRAYER-Q-40
சங்கீதம் 103:2-5 “என் ஆத்துமாவே. கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து. உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.”
புது சிருஷ்டிகளுக்கு வரக்கூடிய குறிப்பிட்ட நோய்களை தேவனால் அனுமதிக்கப்படும் போது. அவர்கள் இருதயத்தின் சரியான நோக்கத்துடன் அவரிடம் வரும்போது தேவன் அவர்களை குணப்படுத்த ஆயத்தமாக இருக்கிறார். இப்படிப்பட்ட ஆவிக்குரிய நோயகளுக காக நாம் பரலோக கிருபாசனத்தண்டைக்கு செல்லவேண்டும். இதனால் புது சிருஷ்டியின் மெலிந்த தன்மை நீக்கப்பட்ட ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கையும் உயிர்ச் சக்தியும் தெய்வீக தயவின் வெளிச்சத்தினால் மீண்டும் பெறப்படும். “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” (எபிரெயர் 4:16) என்று அப்போஸ்தலர் அறிவுரை கூறுகிறார். அனைத்து புது சிருஷ்டிகளுக்கும் இக்காரியத்தில் அனுபவங்கள் உள்ளன. இவைகளை சரியாக பயன்படுத்துபவர்கள். ஆண்டவரிலும், அவருடைய வலுவான வல்லமையிலும். மேலும் மேலும் உறுதியாக வளருவார்கள். எப்படி என்றால், அவர்களின் தடுமாற்றங்கள் மற்றும் பலவீனங்களிலும் கூட தேவனுடைய கரத்தை விசுவாசத்தோடு பிடித்து கொண்டு, உதவி வேண்டி அழைக்கக்கூடிய தேவை அவர்களுக்கு ஏற்படுகிறது. இவைகள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கான வழிமுறையாகும். இதனால் அவர்கள் சோதனைகளிலிருந்தும். சிரமங்களிலிருந்தும் விடுவிக்கப்பட முயற்சிக்காமலும் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சி அடைகிறார்கள். அவர்கள் குளிர்ச்சியாகவோ அல்லது அவர்களின் ஆவிக்குரிய சிலாக்கியத்தை புறக்கணிக்கும் போதோ, அவர்களின் இருதயத்திலிருந்து, தேவன் அவருடைய பிரகாசமான முகத்தை திருப்பாவிட்டால். ஒவ்வொரு நேரத்திலும் தேவனுடைய தயவையும் உதவியையும் நாடுவது மிக அவசியம் என்று புது சிருஷ்டி காண்கிறது. மீட்பரின் ஒப்புரவாக்குதலின் வேலையின் அவசியத்தைப் பற்றிய புது சிருஷ்டிக்கு புத்துணர்வோடு நினைவூட்டப்படுகிறது. அதாவது கிறிஸ்துவின் பலி கடந்த கால பாவங்களுக்காக மட்டுமல்ல, ஆதாமின் பாவத்திற்காகவும். குமாரனுடைய புண்ணியத்தினால் பிதாவிடம் வந்த காலத்திலிருந்து இன்று வரை நமது தனிப்பட்ட பாவங்களுக்காகவும் போதுமானது என்று நமக்கு நினைவூட்டப்படுகிறது. ஆனால் கூடுதலாக. அனைவருக்கும் அவர் கொடுத்திட்ட ஒரு நீதியான பலியின் மூலம், விருப்பம் உள்ள அனைவரின் பாவங்கள். மனரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும். உடல் ரீதியாகவும் மூடப்படுகிறது. ஆனால், கூடுதலாக, எல்லாருக்குமாக அவர் கொடுத்திட்ட ஒரு பலியின் மூலம் கிடைத்திட்ட அவரது நீதியானது, விருப்பத்துடன். நாம் வேண்டுமென்றே செய்திடாத மனரீதியான, தார்மீக மற்றும் சரீர ரீதியான நம்முடைய கறைகளை மூடுகின்றது. இவ்வாறாக புது சிருஷ்டி தனது குறுகிய பாதையில் பயணிக்கும் போது. தொடர்ச்சியான நினைவூட்டலை பெறுகிறது. கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தம் மற்றும் அவருடைய அனுபவங்களும். கடந்த காலத்தில் ஒரு இரட்சகராகவும், நிகழ்காலத்தில் மீட்பராகவும், உதவியாளராகவும் புது சிருஷ்டி புரிந்து பாராட்டும் போது. அது தோல்வி அடைந்தாலும் அவர்கள் தொடர்ந்து தேவனிடமாக நெருங்கி வர செய்கிறது.
எவ்வாறாயினும். பல புது சிருஷ்டிகள் இந்த ஆவிக்குரிய நோய்களை கையாள கற்றுக் கொள்ளாமல். “நான் மீண்டும் தோல்வி அடைந்தேன். வெற்றிப் பெறுவதன் மூலம் என் நல்ல நோக்கங்களை நான் கர்த்தருக்கு நிரூபிக்கும் வரை நான் பரலோக கிருபாசனத்திற்கு நான் செல்ல முடியாது” என்று தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்ள முனைகின்றன. இவ்வாறாக, அவர்கள் முதன்மையாக எடுக்க வேண்டிய நடவடிக்கையை ஒத்திவைக்கிறார்கள். வெற்றிப் பெற தங்கள் சொந்த பலத்தினால் முயல்கிறார்கள். அவர்களின் முந்தைய பலவீனத்தால் அவர்களின் மனது துன்புறுத்தப்படுவதால், தங்கள் சொந்த மாம்சத்தோடும். எதிராளியோடும் “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை” போராடுவதற்கான சரியான மனநிலை அவர்களிடம் காணப்படுவதில்லை. இதனால் தோல்வி நிச்சயம். அதனுடன் தேவனிடம் முறையிடுவது படிப்படியாக நிறுத்தப்படும். மேலும் தெய்வீக தயவின் சூரிய வெளிச்சத்தை, மறைக்கக்கூடிய, இடைப்பட்ட மேகங்களுக்கு கொடுக்கக்கூடிய அர்ப்பணிப்பு வளர்ச்சி அடையும். இந்த மேகங்கள் தவிர்க்க முடியாதது போல படிப்படியாக மதிக்கப்படுகின்றன.
மிகவும் நேர்மாறான போக்கை உடனே பின்பற்ற வேண்டும் : சொல்லிலோ, செயலிலோ உள்ள பிழை அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, மற்றொருவருக்கு ஏற்பட்ட காயம் முடிந்தவரை சரி செய்யப்பட்ட உடனே, கிருபாசனத்தை தேடவேண்டும். அதாவது எந்த சந்தேகமும் இல்லாமல் விசுவாசத்தோடே வரவேண்டும். நமக்கு கடுமையாக தீர்ப்பளிக்க விரும்பி. நமக்கு எதிரான சந்தர்ப்பத்தை தேவன் விரும்புவதாக நாம் எண்ணிவிடக்கூடாது. ஆனால், மறுபுறம். நாம் பாவிகளாக இருந்தபோதே. மீட்பை வழங்கின அவருடைய நன்மையையும். தயவையும் நினைவில் கொள்ளவேண்டும். நிச்சயமாக நாம் அவருடைய பிள்ளைகளாகி ஆவியினால் பிறந்து பின், அவரை தேடி – மாம்சத்தின் படி அல்ல. ஆவியின்படி அவருடைய பாதையில் நடப்பதற்கு நம்முடைய சிறந்த முயற்சிகள் கூட தடுமாறும் போதும். இத்தகைய சூழ்நிலைகளில். நாம் “மற்றவர்களைப் போலவே கோபத்தின் பிள்ளைகளாக” இருந்த போது அவர் நம்மீது வைத்த அன்பை விட ஏராளமாக அன்பினால் சூழப்படுவோம். ஒரு சரியான பூமிக்குரிய தந்தை தன் பிள்ளைகளுக்கு இறங்குவது போல. தேவன் தம்மிடம் பக்தி வைராக்கியம் கொண்டவர்களுக்கு இறங்குவார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நம்முடைய சிறந்த பூமிக்குரிய நண்பர்களையும். அவர்களின் அனுதாபத்தையும் அன்பையும் இரக்கத்தையும் நாம் கருத்தில் கொண்டு ஒரு ஒப்புமையை வரைய வேண்டும். மேலும் தேவன் தனது சிருஷ்டிப்புகளில் மிகச் சிறந்தவர்களை விட அவருடைய பிள்ளைகள் மேல் கனிவானவரும் உண்மையுள்ளவருமாக இருப்பார் என்று நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அத்தகைய நம்பிக்கையையும். அத்தகைய விசுவாசத்தையும் அவர் அழைத்து, அதற்கு பரிசளிக்கிறார். முதலில் தேவனிடம் வருவதற்கு போதுமான விசுவாசம் இருந்த அனைவரும். அவர்கள் விரும்பினால். தங்கள் சோதனைகள். கஷ்டங்கள் மற்றும் குறைபாடுகளுடன் நாளுக்கு நாள் அவரிடம் வருவதற்கு போதுமான நம்பிக்கை பெற்றிருக்க வேண்டும். இடையில் வரும் மேகங்களினால் அவர்கள் உபத்திரவப்பட்டு, சமாதானத்திற்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் அருளப்பட்ட கிருபாசனத்திற்கு வரக்கூடிய அழைப்பை அவர்கள் நிராகரித்தால். கர்த்தர் தேர்ந்தெடுக்கும் சிறப்பு வகுப்பினரிடையே அவர்கள் தகுதியற்றவர்களாக காணப்படுவார்கள். உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவாகள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.”. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்: ஏனென்றால். தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.”, “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.” (யோவான் 4:23, எபிரெயர் 11:6. 1 யோவான் 5:4)
நிச்சயமாக, வழியில் சிரமங்கள் உள்ளன. ஆனால் ஆண்டவர் தமது வார்த்தையிலும். இதே நோக்கத்திற்காக வந்த அவருடைய சரீர அங்கத்தினராக இருக்கும் சகோதரர்களின் வழியாகவும் தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குகின்றார். (1கொரிந்தியர் 12:18) உதாரணமாக, பாடத்தில் பிழை ஏதோ இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதற்கு உதிவியாக நம்மை நியாயப்படுத்தும் எதையாவது நம் கையில் கொண்டு வர முடியும் வரை தேவ தயவைப் பெறுவதற்காக கிருபாசனத்தண்டைக்கு வருவதை தள்ளி வைப்பது. ஆனால் நாம் அனைவரும் அபூரணர்கள். நாம் விரும்பும் காரியங்களை நம்மால் செய்யமுடியாது. ஆகவே நம்மை உயர்த்துவதற்காகவே மீட்பர் வரவேண்டும் என்று பல நூற்றாண்டுகளாக தேவனால் கற்பிக்கப்படும் இந்த சிறந்த பாடத்தை முழுமையாக புரிந்து கொள்ளாததே இதற்கான காரணமாகும். தன்னை நியாயப்படுத்த விரும்புகிறவன் சாத்தியமற்றதை முயற்சிக்கிறான், விரைவில் அதை கற்றுக்கொண்டால் நலமாக இருக்கும். கர்த்தருடனான நம்முடைய கணக்கீடுகள் நாளுக்கு நாம் அதிகமாக இருக்கவேண்டும். மேலும் சிரமங்கள் கணிசமானதாகவோ அல்லது லேசானதாகவோ இருந்தால். அர்ப்பணிக்கப்பட்டவரின் இருதயம் மிகவும் மென்மையாகவும். கர்த்தருடனான ஐக்கியத்தில் தொடர்ச்சியான நெருக்கமாக இருப்பது பழக்கமாக இருந்தால், எந்தவொரு சிரமமும் ஏற்பட்டவுடன். அந்த நாளின் முடிவு வரையிலும் கூட காத்திருக்காமல், உடனடியாக கிருபாசனத்தண்டையில் ஓய்வு பெறுவதில் அவர் ஒரு ஆசீர்வாதத்தைக் காண்பார். கிருபாசனம் நமக்கு எப்போதும் திறந்திருக்கும் போது நிச்சயமாக இரவு வரையில் எதையும் தள்ளிவைக்கக்கூடாது. இதை புறக்கணிப்பது. தூண்டப்படும் தேவனுடைய வார்த்தைக்கு மாறாக ஒரு மனநிலையைக் காண்பிப்பதாகும்.
சில அனுபவங்களில் உள்ள சிரமம் என்னவென்றால், கிருபாசனத்திற்கு வரும் சிலர். அவர்கள் தேட வேண்டிய ஆசீர்வாதத்தை உணராதிருக்கிறார்கள் பாவங்களுக்கான மன்னிப்பு மற்றும் பிதாவோடு ஒப்புரவாகுதல். அவர்களின் சிரமம் கீழ்காணும் மூன்றில் ஒன்றாக இருக்கலாம். (1) அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதிருக்கலாம். தற்போதைய நேரத்தில் தேவன் விசுவாசத்தின்படி கையாண்டு கொண்டிருப்பதால், விசுவாசம் இன்றி எதையும் பெற முடியாது. “உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது” (2) அவர்களது சிரமம் கடினம் யாதெனில் தாங்கள் செய்த தவறுகளை அவர்கள் திருத்திக்கொள்ளாமல், அறிக்கையிடுவதே, மற்றொருவருக்கு ஏற்படுத்தின காயத்திற்காக அவர்கள் எந்தவித ஈடும் செய்யாதிருப்பதே அல்லது கர்த்தருக்கு விரோதமாக அவர்கள் மீறினால், அதற்காக அவர்கள் மனம் வருந்தாமல், மன்னிப்பை வேண்டாமல், சமாதானத்தை தேடுகிறார்கள். (3) சிலர் சரியாக தங்களை தேவனிடம் அர்ப்பணிக்காமல். தெய்வீக சமாதானத்தையும் மகிழ்ச்சியையும், வெளிச்சத்தையும் தேடுகிறார்கள். இதுவே நாம் பார்த்தபடி சிலருடைய பிரச்சனையாக உள்ளது. உண்மையில் அவர்கள் ஆசரிப்புக் கூடாத்திற்கு வெளியே அமர்ந்தவர்களாக அதாவது அர்ப்பணிப்புக்கு வெளியே அமர்ந்தவர்களாக பொன் குத்துவிளக்கின் வெளிச்சத்தையும், ஆசரிப்புக் கூடாரத்தின் சமுகத்தப்பங்களையம் அடையாளப்படுத்தும் ஆசீர்வாதங்களை தேடுகிறார்கள். ஆகையால். இராஜரீக ஆசாரியத் துவத்தின் வெறும் லேவியர்கள், தற்போதைய காலத்தின் சிறப்பு கிருபை அல்லது சிலாக்கியத்தை இது வரையிலும் வீணாக பெற்றிருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளை படிப்பதன் முலம், கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் அவர் செய்த நன்மைகளை நினைத்து, நாம் கேட்டதற்கும் நினைத்ததற்கும் “ஏராளமான” அவருடைய கிருபைகளை உணர முயற்சிப்பதே. விசுவாசமின்மைக்கு சரியான தீர்வாகும். அடுத்து உடனடியாக. முழு மனதோடு மன்னிப்பு மற்றும் முடிந்தவரை தவறுகளை செய்வதை தவிர்த்து அல்லது சேதங்களுக்கு இழப்பீடு செய்து, விசுவாசத்தின் முழு உறுதியோடு கிருபாசனத்திற்கு செல்வதே இரண்டாவது பிரச்சனைக்கான தீர்வாகும். அடுத்து. இந்த சுவிசேஷ யுகத்தின் சிறப்பு சலுகைகளையும், ஏற்பாடுகளையும் அனுபவிக்கும் அனைவரின் மீதும் தேவன் எதிர்பார்க்கும். முழுமையான அர்ப்பணிப்பே முன்றாவது பிரச்சனைக்கான தீர்வாகும்.
அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு வகுப்பார். ஆவிக்குரியரீதியில் நோயுற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பரிசீலிக்கப்பட வேண்டும். இவர்கள் வெளிப்படையாக விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டு. உண்மையோடு தங்களை அர்ப்பணித்து. மாம்சத்தை கட்டுப்படுத்துவதில் சிறிதளவு அல்லது எந்த முன்னேற்றத்தையும் காட்டுவதில்லை. உண்மையில் சில சந்தர்ப்பங்களில், தேவனுடைய நன்மைகள் மற்றும் கிருபைகளின் மேலுள்ள தங்கள் விசுவாசம். பயங்களுக்கான வேக தடைகளை அகற்றி, அவர்கள் முதலில் இருந்ததை விட அதாவது அவர்கள் கர்த்தரைப் பற்றி குறைந்த அறிவைக் கொண்டிருந்த போது இருந்தது போல மாம்சத்தின் பலவீனங்கள் மூலம் தங்களை அதிகமாக சோதனைக்கு உட்படுத்திகொள்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல. அவர்களை தொடர்பு கொள்ளும் முழு விசுவாச வீட்டாருக்கும் இந்த கடுமையான அனுபவங்களை கொண்டு செல்லுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை தோல்விகளும், மனந்திரும்புதல்களும் தொடர்ந்ததாக தோன்றுகிறது. சிலருடைய வாழ்க்கை நிதி முரண்டாடுகளின் வழிகளிலும், மற்றவை தார்மீக மற்றும் சமூக குற்றங்களின் வழிகளிலும் உள்ளது.
இந்த நிலைமைகளுக்கான தீர்வு என்ன? புது சிருஷ்டிகள், வெறுமனே பூமிக்குரிய விஷயங்களில், கய கட்டுபாடுகளையும், பலிகள் செலுத்துவதற்கு மட்டுமே உடன்படிக்கை செய்யாமலும், அவர்கள் மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின் படி நடக்கவேண்டும் என்பதை தெளிவாக அறிவிப்பதே நம்முடைய பதிலாக உள்ளது. ஆனால் இந்த உடன்படிக்கையை கடைப்பிடிக்க விரும்பும் முயற்சியில் உண்மையுள்ளவர்களாக இருப்பவர்களின் இருதயத்தை வாசிப்பவரால் ஜெயிப்பவர்களாக எண்ணப்படுவார்கள். குமாரனால் விடுவிக்கப்பட்டதால், அவர்கள் தானாக முன்வந்து அடிமையான ஊழியக்காரனாக. அவர்களின் சொற்கள். நடத்தை, எண்ணங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள், வரம்புகள், அடிமைத்தனம் ஆகியவற்றின் கீழ் தங்ளைத் தாங்களே ஈடுபடுத்திக் கொண்டு. தெய்வீக தயவின் அனைத்து ஆசீர்வாதங்களை அடைவதற்கு அவர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கவேண்டும் என்பதே அர்ப்பணிக்கப்பட்ட அனைவருக்கும் முறையான நடைமுறை என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும், “என் கிருபை உனக்கு போதும். பலவீனத்தில் என் பலன் பூரணமாக விளங்கும்” என்று அப்போஸ்தலரின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டது போல. கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்த உதவியை ஜெபத்தில் ஆவலுடன் விரும்ப வேண்டும். ஒவ்வொரு முறையும் அவர்கள் மீறிவிட்டதைக் கண்டறிந்தால், அவர்கள் மூலம் காயமடைந்தவர்களுக்குத் திருத்தங்களைச் செய்வது மட்டுமல்லாமல், தேவனிடம் அறிக்கையிட்டு. விசுவாசத்தின் மூலம் அவருடைய மன்னிப்பைப் பெற வேண்டும். அவர்கள் எதிர்காலத்திற்காக அதிக விடாமுயற்சியுடன் வாக்குறுதி அளிக்க வேண்டும். மேலும் அவர்களின் சமீபத்திய தோல்வியால் கண்டறியப்பட்ட பலவீனத்தின் வழிகளில் தங்கள் சொந்த சுதந்திரங்களின் வரம்புகளை அவர்கள் குறுக்கிக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு விழித்திருந்து, ஜெபித்து. வாழ்க்கையின் செயல்களுக்கும். சொற்களுக்கும் காவலர்களை அமைத்து, “எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய சித்தத்திற்கு சிறைப்படுத்த வேண்டும். (2கொரிந்தியர் 10:5) நிச்சயமாக, அவர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் வரையிலும், சகோதரர்கள் தங்கள் இருதயங்களின் நேர்மையை வளர்த்து கொள்ளும் வரையிலும், அந்த காலம் நீடித்திருக்கும். மேலும். அவர்கள் இயேசுவோடு இருந்தார்கள் என்பது மட்டுமல்லாமல், அவர்கள் அவரைப் பற்றி அறிந்து கொண்டார்கள் என்பதோடு, அவர்களின் பலவீனங்களை வென்றெடுப்பதில் அவருடைய உதவியை நாடினார்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் வாழ்க்கையில் நடந்து கொள்ளவேண்டும். அத்தகைய சகோதரர்கள் அல்லது சகோதரிகளின் விஷயங்கள், “ஒழுங்கற்ற முறையில் நடந்துகொள்வது” என்ற அப்போஸ்தலரின் வார்த்தையின் தலைப்பின் கீழ் வரும். இது ஆண்டவர் மற்றும் அப்போஸ்தலரின் முன்மாதிரி அல்ல. மற்றொரு அத்தியாயத்தில் மாம்சத்தில் பலவீனமானவர்கள் மற்றும் ஆண்டவருடைய நோக்கத்தை அவமதித்து. இழிவுபடுத்துபவர்களை சகோதரர்கள் நடத்த வேண்டிய விதத்தைப் பற்றி தேவனுடைய வழிநடத்துதலைக் காண்போம்.