Q-10
R3266 (col.2 P5)
தேவன் நம் மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து, நம்முடைய பலியின் வேலைகளைச் செய்து முடிப்பதற்கு தொடர்ந்து வாய்ப்புகளைக் கொடுத்துகொண்டே இருக்கிறார். ஆனால் தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற நம்முடைய சித்தங்களை வெட்டி எறியப்பட வேண்டும். இல்லாவிட்டால் நாம் என்றுமே அவருடைய ராஜ்யத்தில் பங்கு பெறமுடியாது. இராஜரீக ஆசாரியர்களாக இருக்கமுடியாது. ஆகவே தேவன் மிக கிருபையாக பாடத்திற்கு மேல் பாடங்களையும், கொடுத்து நம்மை இவைகளின் முக்கியத்துவங்களை உணரச்செய்கிறார். அவருடைய வார்த்தைகள் அனைத்துமே இந்தக் கண்ணோட்டத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நம்முடைய சரீரங்களுக்கு மரித்து, தேவனுக்கும், ஆண்டவராம் இயேசுவுக்கும் நம்மை ஜீவனுள்ளவர்களாக இருப்பதின் முக்கியத்துவங்களை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். அவருடைய கிரியைகளைச் செய்யும்போது, நமக்குள் ஆவியின் கனிகள் அதிகதிகமாக வளர்ச்சியடைகிறது. பலி செலுத்தக்கூடிய ஒவ்வொருவரும், சாந்தமாகவும், மனத்தாழ்மையுள்ளவராகவும், போதிப்பவர்களாகவும் இருக்கவேண்டும். இல்லையென்றால் வெகு சீக்கிரத்தில் இந்த வழியை விட்டு விலகிவிடுவோம். நமக்குள் பொறுமையை வளர்த்துக் கொள்ளவேண்டியது அவசியமாக இருக்கிறது. ஏனெனில், நம்மை வெறுப்பதற்கும், அநீதியான காரியங்களுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது அதை சகித்துக் கொள்வதற்கும் அதிகமான பொறுமைத் தேவைப்படுகிறது. இவைகள் நமக்கு சகோதர சிநேகத்தைப் பெருகச் செய்கிறது. மேலும், ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் – நம்முடைய இருதயங்களிலும், வாழ்க்கையிலும், தேவனுடைய முழு சித்தம் வளர்ச்சியடைய, முதலாவது நீண்டகாலமாக அன்பு, ததும்பி வழிய வேண்டும். அப்போது நாம் இந்தப் பூமியில், பலியின் வேலைகளை முடிக்கமுடியும்.”