மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-7

மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?

What elements of character are in direct opposition to humility?

“1 பேதுரு 5:5 – “அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”

நீதி 3:34 – “இகழ்வோரை அவர் இகழுகிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.”

நீதி 6:16-19 – “ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன- மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.”

R2204 [col.1,P5,6]

பரீபூரணமான அன்பு சாந்தமுள்ளது – “அது தன்னை புகழாது.” தனக்குமுன் எக்காளம் ஊதுவியாது. எந்த நற்கிரியைகளையும் மனுஷரின் பார்வையில் நடத்தப்படாமல் தேவனுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படும். மேலும் தான் பெற்ற ஞானத்தைக் குறித்து பெருமை பாராட்டாது. ஆனால் மனத்தாழ்மையில் பெற்ற ஒவ்வொரு நல்ல குணங்களும், பூரணமான ஈவுகளும் பரலோக பிதாவினிடத்தில் வருகிறதாக இருக்கிறது.

பூரண அன்பு அடக்கமுள்ள நற்பண்புள்ளது – பெருமை என்னும் வேரிலிருந்து வளர்ச்சி அடையும் அநேக முரட்டு குணங்களை உடையவர்கள், தங்களை அதிக ஞானமுள்ளர்கள் என்றும், அல்லது மிகுந்த ஐசுவரியவான்கள் என்றும் எண்ணுகிறார்கள். அதேநேரத்தில் அன்பு அடக்கமான பண்போடு, சாந்தத்தையும் சேர்த்து வளர்த்துக்கொள்கிறது. சின்ன சின்ன காரியங்களை அன்போடு செயல்படுத்துவதே சாந்தம் என்று ஒருவர் கூறுகிறார். அதேபோல சின்ன சின்ன காரியங்களில் அன்பாக இருப்பதே பணிவு என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே பண்புள்ள ஒருவர் சகல காரியங்களையும் அன்போடு நடப்பிப்பார்.

R2060 [col. 2, point # 7]

இறுமாப்புள்ளவர்கள், தேவனுடைய பிள்ளையாக ஜீவிப்பது என்பது மிக கடினம். தங்களுடைய இருதயத்தின் எண்ணங்களின் சுத்திகரிப்பை தடுத்துவிடும். மேலும், தேவனுடைய காரியங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்வதையும் தடைசெய்யும். ஏனெனில் – “பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறார்.” என்று தேவன் தம்முடைய வார்த்தைகளை எச்சரிப்பாக கொடுத்திருக்கிறார்.

தன்னம்பிக்கைக்குப் பதிலாக, தன்னம்பிக்கையற்ற நிலையை ஞானம் நமக்குள் வளர்த்துவிடுகிறது. அது நமக்குள் இருக்கும் பலவீனத்தையும், அபூரணத்தையும் சீர்த்தூக்கி காண்பித்து, ஒவ்வொரு முறையும் தேவனுடைய கிருபை, செயலாற்றும் விதத்தையும் நமக்கு சுட்டிக்காட்டி, நாம் அவர் மேல் வைக்கவேண்டிய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் அளவிட்டு காண்பிக்கிறது. ஏனெனில் விழுந்துபோன நிலையில் நம்முடைய தீய வழியிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இதை தவிர வேறு வழியில்லை.

R2450 [col. 2P3]

அநேக தாலந்துப் பெற்ற தேவனுடைய ஜனங்களுக்கு, விசேஷமாக சபைகளில் முக்கிய பொறுப்பில் இருக்கக்கூடியவர்களுக்கு – நிறைவை அடைந்து விட்டோம் என்ற உணர்வுகள், தேவையற்ற மனப்போராட்டம் மற்றும் வீணான மகிமை, அனைத்தும் அவர்களை சூழ்ந்து நெருக்கக்கூடிய தீய குணங்களாக இருக்கிறது. ஆகவே மாம்சமான இக்குணங்களுக்கு நாம் மிகவும் எச்சரிப்போடிருக்க வேண்டும். “ஒரு பெருமையுண்டு, அது மற்றவர்களுடைய வெற்றியை மிக எரிச்சலோடு பார்க்கும். தன்னைவிட தாழ்ந்தோரை மிக ஏளனமாகவும் இகழும். “என்ற சொற்களை நாம் என்றுமே மறந்துவிடக்கூடாது. எந்த விதத்திலும், வகையிலும், அல்லது கோணத்திலும் தேவனுடைய ஜனங்களுக்குள் இருக்கும் பெருமை தேவனுடைய பார்வையில் வெறுப்பும் கோபமும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆகவே தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் பெறவிரும்புவோர், இதைகுறித்து மிக எச்சரிப்பாக இருக்கவேண்டும். அவரை பிரியப்படுத்தும்படி தாழ்மையையும், எளிமையான சிந்தையையும், நமக்குள் எப்போதும் காத்துக்கொள்ளவேண்டும் -யாக் 4:6, 1பேது 5:5.

R3114 [col.2P2]

“தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும்…” (சங் 24:4) நம்முடைய ஆண்டவருக்கும், அவருடைய ஆவியைப் பெற்ற அனைவருக்கும் பெருமை அருவருக்கக்கூடியதாக இருக்கிறது. இது ஒரு பொல்லாத களையாக இருக்கிறது. இந்தக் களையை நம்முடைய இருதயத்தில் வேரூன்ற விட்டால், நாம் பெற்றுள்ள அனைத்து கிருபைகளையும், வெகு சீக்கிரத்தில் இழந்துவிடுவோம். “நான் மாயையான சிந்தையை வெறுக்கிறேன்” என்று சங்கீதக்காரன் சொன்னதுபோல நம்முடைய மனநிலையும் அப்படியே இருக்கவேண்டும். மனத்தாழ்மை, தன்னடக்கம் மற்றும் சாந்தமுள்ள குணமே நமக்கு அலங்காரமாக காணப்படவேண்டும். ஒருவருடைய தனிப்பட்ட தகுதியை நிதானமாக சீர்த்தூக்கி பார்த்து, பெருமைக்கொள்ளாமல், தன்னுடைய தாலந்துகளை வீண் பெருமைக்காகவும் மகிமைக்காகவும் பயன்படுத்தாமல், நன்மைகளை நடப்பிக்கும் போது கிடைக்கும் சந்தோஷங்களுக்காகவே பயன்படுத்தவேண்டும். தங்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சி மற்றும் மற்றவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியிணைப் பொறுத்தவரையில், அடக்கம், நேர்மை மற்றும் உண்மையுமாக இருப்பார்கள். இந்தச் சமுதாயத்தில், இப்படிப்பட்ட ஆவியைப் பெற்றவர்கள் எவ்வளவு ஆறுதலோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்!

R3231 [col. 1P1]

உலகத்தை முழுமையாக சார்ந்து வாழ்ந்த கோலியாத், பெருமைக்கு மிக சரியான மாதிரியாக இருக்கிறான். பெருமையின் தலைமையில் செயல்படும் உலகத்தின் ஆவியின் மேல், வைத்திருக்கும் அன்பை ஜெயிப்பதே புது சிருஷ்டிக்கு உண்டான கடுமையான சோதனையாகும். உலக பெருமை தேவனுடைய விசுவாசத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் சவாலாக நிற்கிறது. மிக தைரியத்தோடு, ஆண்டவர் மேல் முழு நம்பிக்கை கொண்டவர்கள் இந்த இராட்சதனை ஜெயிக்கலாம். மேலும், இந்த வெற்றி முழுமைப் பெறவேண்டும் என்பது ஒரு முக்கியமான காரியம். அது மீண்டும் எழும்பிவந்து நம்மை கொன்றுப்போடாதபடிக்கு அந்தப் பெருமையை முற்றிலுமாக அழிக்க வேண்டும். ஆற்றின் அண்டையிலிருந்து எடுக்கப்பட்ட கல்லை சரியாக குறிப்பார்த்து அடித்தால் மட்டுமே அந்த இராட்சதன் மரிப்பான். அதாவது தேவனுடைய பார்வையில் பிரியமானதும், ஏற்றுக்கொள்ளப்படும் சத்தியங்களையும், “தேவனிடத்தில் தாழ்மைப்படுகிறவன் உயர்த்தப்படுவான், தன்னை உயர்த்திக்கொள்கிறவன் தாழ்த்தப்படுவான்” என்ற வாக்குறுதிகளும் மிக சரியாக நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்தவேண்டும். “தற்புகழ்ச்சி முடிவடையும் இடத்தில், உண்மையான மனத்தாழ்மைத் துவங்கும்” என்று ஒரு பாடகரிகூறியுள்ளார்.