சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-3

சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?

What is the relation between humility and knowledge?

“சங் 25:9 – “சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.”

F97[P2]

பரத்திலிருந்து வரும் ஞானத்தை பெற்றுக்கொள்வதற்கு, கேட்கிற காதுகள் மிக அவசியம், ஆனால் அப்படிப்பட்ட காதுகளை பெறுவதற்கு, இருதயத்தில் தகுதி பெற வேண்டும். தேவையான சாந்த குணம் மிக அவசியம். ஒருவேளை நாம் மிகவும் மேன்மையுள்ளவர்கள் என்று எண்ணினால், தெய்வீக பார்வையிலிருந்து நம்முடைய பலவீனங்களையும் அபாத்திரமான நிலையையும் உணருவதற்கு தவறிவிடுவோம். நாம் உண்மையில் யார் – என்பதை மனத்தாழ்மையோடு ஒப்புக்கொள்ள, நேர்மையான இருதயம் தேவைப்படுகிறது. இந்தக் கோணத்திலிருந்து நாம் பார்க்கும்போது நீதியின் மேல் வாஞ்சையுள்ளவர்களாக தேவனோடு ஐக்கியப்பட விரும்புவோருக்கு, ஆண்டவராம் இயேசு இரட்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆயினும், துவக்கத்தில் இதை அநேகர் புரிந்துக்கொள்வதில்லை. முதலில் நாம் அனைவரும் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தோம் என்பதை அறிந்துக்கொள்ளவேண்டும். கிறிஸ்துவின் நீதியான பலியை தேவன் நமக்காக ஏற்றுக்கொண்டார். இப்படியாக, அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம், அவருடைய கீழ்படிதலினால் பிதாவாகிய தேவன் நம்மை ஏற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்களை அவர் சுமந்ததினால், நாம் நீதியின் வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டோம். இவ்வாறாக, இயேசு நமக்காக ஞானமும், நீதியும் மீட்புமானார். நாம் இந்த அறிவை பயன்படுத்துவதற்குமுன், தேவனுக்கு முன்பாக மனதார கிறிஸ்துவின் ஈடுபலியினால் நாம் நீதிமானாக்கப்பட்டு, அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சுத்திகரிக்கப்படவேண்டும். தொடர்ந்து நாம் வளர்ச்சியடையும்போது, நாம் முழுமையாக மீட்கப்பட்டு மகிமையடைவோம். இப்படியாக, நாம் வளர்ச்சியடையும் பட்சத்தில் எந்த நிலையிலும் இயேசுவின் ஞானம் நம்மைவிட்டு விலக முடியாது. நம்முடைய ஓட்டத்தின் இறுதி வரைக்கும் அவர் நம்முடைய ஆலோசனை கர்த்தராக இருக்கவேண்டும். அவருடைய வழிநடத்துதலின் கீழ் நாம் நம்மை முழுமையாக தத்தம் செய்வதற்கும், அதற்குப்பின் அந்த ஞானத்தின் மூலம் நாம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு தேவனுடைய சித்தத்தைச் செய்யவேண்டும். பரலோக பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முக்கியமாக பரத்திலிருந்து வரும் ஞானத்தை நாம் பயன்படுத்துகிறோம். “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும் மாயமற்றதாயுமிருக்கிறது” என்று யாக்கோபு அந்த ஞானத்தை குறித்து விவரிக்கிறார். (யாக் 3:17) உலக ஞானம் சுயநலத்திற்காகவும், சுயசித்தத்திற்காகவும், சுயநீதிக்காகவும், சுயமேன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இவைகள் கசப்பான பொறாமையையும், பகையையும் வருவிக்கும் என்று அப்போஸ்தலன் குறிப்பிடுகிறார். ஏனெனில் இது உலகத்திலிருக்கும் சாத்தானால் உண்டானவைகள். ஆனால் பரத்திலிருந்து வரும் ஞானமோ இதற்கு எதிரிடையானது. தெய்வீக அன்பை கொண்டதும், சுயநலமற்றதும், பெருமைக்கொள்ளாததும், அநீதியில் மகிழாமல், சத்தியத்தில் மகிழக்கூடியதாகவும் இருக்கிறது.

R2250 [col. 2 P 2]

“நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் திருப்தியடைவார்கள்” ஆசீர்வதிக்கப்பட்ட இந்த வசனம் யாருக்கு பொருந்தக்கூடியதாக இருக்கிறது? நிச்சயமாக தெரிந்துக்கொள்ளப்பட்ட சபை வகுப்பாரை தவிர வேறு யாருக்கும் இது குறிப்பிடப்படவில்லை. சபை மட்டுமே இக்காலத்தில் “ஆவியில் எளிமையுள்ளவர்களாகவும்”, “சாந்த குணமுடையவர்களாகவும்” இருக்கிறார்கள். இக்காலத்தில் இவர்கள் மட்டுமே நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களும், ஒவ்வொரு பாடத்திலும் உள்ள தெய்வீக வெளிப்படுத்துதலை ஆர்வத்துடன் தேடுபவர்களாகவும் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு ஏதோ நீதியின் மேல் கொஞ்சம் தாகம் இருக்கலாம். ஆனால் இவர்கள் வெகு சீக்கிரத்தில் திருப்தியடைகிறார்கள். விசேஷமாக, பிரபலமில்லாத சத்தியங்கள் மிகவும் சுவையுள்ளதாக இருந்தாலும், அதற்குப் பின் வரும் உபத்திரவங்களும், சாதகமற்ற உலக நிலைகளும் அவர்களால் மேற்கொள்ள முடிவதில்லை. துவக்கத்தில் இவைகளை பெற்றுக்கொள்ள போதுமான அளவு நேர்மையும் உண்மையும் இருந்தால் போதும். அதே சமயத்தில் இதனிமித்தமாக வரும் உபத்திரவங்களையும் துன்பங்களையும் இவர்களால் சகிக்கமுடியாத பட்சத்தில் அவர்கள் இருக்கும் நிலையில் இருந்துவிடுவார்கள். ஆனால் சிறு மந்தை மட்டுமே இவைகளை ஜெயித்து, முடிவு பரியந்தமும் நிலைத்து நிற்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மட்டுமே முழுமையாக திருப்தியடைவார்கள். வெகு சீக்கிரத்தில் முதலாம் உயிர்த்தெழுதலில் அழிவுள்ள மனுஷன் அழியாமையை தரித்துக்கொள்ளும் போது அதாவது மாம்ச சரீரம் ஆவிக்குரிய சரீரமாக மாற்றப்படும் போது இவர்கள் முழுமையாக திருப்தியடைவார்கள். அதுவரையில் குறைவாக பெற்றிருந்த ஞானமும், நீதியும், பரிபூரணப்படும். ஆனால் இக்காலத்திலும் இந்த வகுப்பார் அபரிவிதமான சத்திய ஞானத்திலும், அதிகபட்சமான ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ்கிறார்கள். மற்ற எந்த வகுப்பாருக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை.

R2860 [col. 2 P 1]

சாந்தத்தை பொறுத்தவரையில், ஆண்டவரோடு உடன்படிக்கை செய்த ஜனங்களுக்கு ஒரு பாடம் அமைந்துள்ளது. நாம் சாந்தமான மனநிலையில் இருந்தால் மட்டுமே தெய்வீகத் திட்டத்தின் ஆழத்தையும், அகலத்தையும், நீளத்தையும் உயரத்தையும் அறிந்துக்கொள்ளமுடியும். ஆகவே பெருமையுள்ளவர்களை தேவன் எதிர்க்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார். எனவே, நாம் தராசில் ஒட்டியிருக்கும் தூசி என்பதை மறந்துவிடக்கூடாது. “என்னுடைய மேன்மையான இடம், என்னுடைய இரட்சகரின் பாதமே, அவருடைய பணியை தவிர வேறு எந்தக் காரியமும் என் வாழ்க்கையில் சந்தோஷத்தை தருவதில்லை.” என்ற சிந்தை நமக்குள் இருக்கவேண்டும்.

R3511[col.1P6]

மனத்தாழ்மையுள்ளவர்களும், சாந்தகுணமுடையவர்களும், தன்னடக்கமுள்ளவர்களும் பாக்கியவான்கள். இவர்கள் இராஜ்யத்தைக் குறித்த நன்மையான காரியங்களை பெறுவதற்கு மட்டும் தகுதி பெறாமல், ஆண்டவரின் அடிச்சுவடுகளை பின்பற்றி இராஜ்யத்தில் நல்ல பங்கை பெறுவதற்கும் ஆயத்தப்படுகிறார்கள். பொதுவாக பெருமை தவறானதாக இருந்துகொண்டு, சத்தியத்தோடு அடிக்கடி மோதுகிறது. “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற ஆண்டவரின் வார்த்தைகளில் எந்தக் குற்றமும் இல்லை. இந்த வார்த்தைகளில் உள்ள சத்தியத்தின் வல்லமையே விடுதலையை அளிக்கும் மாறாக, கடுமையான வார்த்தைகளோ, கேட்ப்போரை நடுங்க வைக்கும் பிரசங்கங்களோ என்றுமே விடுதலை கொடுக்காது.