CD-EVILSPEAK-Q-21
R2588 (col. 1p3): –
“ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு.” மற்றும் “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்துப் புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” (தீத்து 3:2, எபே 4:29) என்ற கட்டளைகளின் ஆழத்தையும், அகலத்தையும், உயரத்தையும் பற்றி எப்போது கிறிஸ்தவர்கள் கற்றுக் கொள்வார்கள்? தேவனுடைய உண்மையான ஜனங்கள் இந்தக் கற்பனையை கற்றுக்கொள்ள எத்தனை நாள் செல்லும்? உண்மையாக இருக்கும் பட்சத்திலும் அதைப் பற்றி பேசுவது தவறு என்றும் எப்போது அறிந்துகொள்வார்கள்? மற்றவர்களுக்கு பயனற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கும் பட்சத்தில் உண்மையோடு சில காரியங்களை சேர்த்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்று எப்போது கற்றுக் கொள்வார்கள்? மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடக் கூடாது என்றும், தேவையற்ற வெட்டிப் பேச்சுகளை பேசக்கூடாதென்றும் மற்றவர்களை கேலி செய்யக்கூடாது என்றும், பிறரிடம் குற்றம் காணக்கூடாதென்றும் எத்தனை பாடங்களை வரிவரியாக கற்பிக்கப்பட வேண்டும்? இவை அனைத்தும் அன்பின் குறைபாடுகளையும், கிறிஸ்துவின் சாயலை தரித்திராத ஒரு நிலையை நிரூபிக்கிறது. கடும் முயற்சியினால், இந்த குறைகள் நிறைவாக்கினால் மட்டுமே நம்முடைய பரம அழைப்பையும், தெரிந்துக் கொள்ளுதலையும் நாம் உறுதிப்படுத்திக் கொண்டு, பரலோக இராஜ்யத்தில் நல்லதோர் பங்கை பெறமுடியும்.