வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-29

வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?

In order to avoid gossip, slander and evil speaking, what is the only proper and Scriptural way of redress for grievances, actual or imaginary?

மத் 18:15-17 “உன் சகோதரன் உனக்கு, விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய் நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக் கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவி கொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவி கொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பானாக.”

F474 through F417- “உன் சகோதரன் உனக்கு எதிராக குற்றம் செய்தால்?”

“நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு, மற்றவர்களை நியாயந்தீர்க்காதிருங்கள்” என்ற நம்முடைய ஆண்டவரின் கட்டளைகளுக்கு இது முரண்பாடாக இல்லையா? முதலில் நாம் பொல்லாங்கு செய்கின்றவனை தனிப்பட்ட விதத்தில் நியாயம் தீர்க்காதிருந்து விட்டு, அதன் பின்பு அவனது பொல்லாப்பைப் பற்றிப் பேசி அல்லது வீண் பேச்சு பேசி, அதன்படி அவனுடைய காரியங்கள் முழுவதும் சபைக்கு தெரியவரும்போது, அதன்பிறகு பொல்லாப்பு செய்தவனை விலக்கி வைக்கலாமா?

அப்படி இல்லவே இல்லை. திவ்விய கட்டளையை, ஒழுங்கை சரியாகப் புரிந்து கொள்ளும்போது அதில் முரண்பாடு இல்லவே இல்லை. உதாரணமாக A என்பவருக்கும் B என்பவருக்கும் இடையில் ஒரு கருத்து வேற்றுமை இருக்கும் பட்சத்தில், B தனக்கு ஒரு தவறு செய்துவிட்டார் என்று A எண்ணுகிறார். அப்படியிருக்கும்போது, அவர் B குற்றவாளியாக நியாயந்தீர்க்கக்கூடாது. அவர் “நமக்கு இடையில் கருத்து வேறுபாடு உள்ளது, நான் செய்தது சரியானதுதான்” என்று மாத்திரம் சொல்லவேண்டும். அதே வேளையில் தன் பக்கத்தில் நியாயம் உள்ளதென்று B எண்ணலாம். இதன் காரணமாக A, B உடன் ஐக்கியம் கொள்வதை விட்டு விடாதிருக்க வேண்டும். அப்படி ஐக்கியத்தை விட்டுவிடுவது, அவனை நியாயந்தீர்ப்பது அல்லது குற்றப்படுத்துவதாகும். ஆனால், “விஷயம் மிகச் சாதாரணமானது, இது சகோதரருக்கிடையில் இருக்கிறபடியினால் நான் அதை விட்டு விடுவேன். ஏனெனில் B ஆண்டவருக்குள் இருக்கிற ஒரு சகோதரனாக இருக்கிறார், ஆனபடியால் வேண்டுமென்று அவன் எனக்கு தவறு செய்யமாட்டான், தவறு என்னுடையதாக இருக்கக்கூடும் அவனுடையதல்ல” என்று அவன் தனக்குள் சொல்லிக் கொண்டு அந்த பிரச்சனையை விட்டுவிடலாம்.

இந்த முடிவை எடுக்க முடியாத பட்சத்தில் A,B க்கு எதிராக தீர்ப்பிடக்கூடாது. அதற்குப் பதிலாக A,B யினிடத்தில் சென்று விஷயமானது தனக்கு எப்படி தோன்றுகிறது என்று விளக்கமாகக் கூறி முடிந்தால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சகோதரத்துவத்துடன் ஒரு தீர்மானத்திற்கு வர வேண்டும். ஆனால் அவர்கள் ஒத்துவராவிட்டால் சபையில் உள்ள ஞானமான, சகோதரர்கள் C, D சகோதரர்களிடத்தில் (இவர்கள் A மற்றும் B க்கும் நம்பிக்கைக்கு பாத்திரவான்களாக இருக்க வேண்டும்) சென்று, பிரச்சனைக் கூற வேண்டும். இவர்கள் B யை குற்றவாளி என்று தீர்ப்பிடாமல், முதலில் அவரின் காரியத்தையும் தெளிவாக கவனிக்க வேண்டும். இப்படியாக A மற்றும் B இருவர் முன்னிலையில் பிரச்சனைகளை தீர விசாரித்து, ஆலோசனை சொல்லவேண்டும். இது எல்லோருக்கும் திருப்தி அளிக்கக்கூடியதாக இருக்கும் – விசேஷமாக எல்லோரும் அன்பின் ஆவியை உடையவர்களாகவும், அபிஷேகம் பண்ணப்பட்ட சரீரத்தின் அங்கங்களாகவும் இருந்து ஒருவருக்கொருவர் நன்மை செய்ய வேண்டும் என்ற வாஞ்சையுடன் காணப்படும்போது அப்படியிருக்கும், இன்னமும் அவர்கள் மத்தியில் சமாதானம் ஏற்படவில்லை என்றால், அப்பொழுதும் கூட தீர்ப்பு சொல்லாமல், அந்தப் பிரச்சனையை சபைக்கு முன் கொண்டு வரவேண்டும்.

ஆனால் C,D யினிடத்தில் A சென்ற போது அவர்கள் தங்களுடைய கருத்தை A க்கு எதிராகவும் B க்கு சாதகமாகவும் தெரிவித்தார்களானால் அந்த விஷயம் அங்கேயே முடிவு பெறும். இப்படிப்பட்ட ஒரு சூழ் நிலையில் A இந்த விஷயத்தை சபைக்கு எடுத்துச் சொல்ல முடியாது. இந்த விஷயத்தை இன்னும் தொடர வேண்டும் என்று எண்ணுவாரானால், அவர் மூர்க்க குணமுள்ளவராக இருக்க வேண்டும். அவருக்கு ஆண்டவருடைய போதனைகள் இதற்கு மேல் அதிகமாக சிலாக்கியங்களை கட்டளையிடவில்லை. (மத் 18:15) இன்னமும் அவன் திருப்தி அடையாவிட்டால், இன்னும் இரண்டு அல்லது மூன்று திறமையுள்ள எந்தப் பக்கமும் சாயாமல், நடு நிலை வகிக்கும் மனதுடைய சகோதரர்களான E,F,G இன்னொரு முறை விஷயத்தைக் கூறி அவர்களுடைய கருத்தைப் பெறலாம்.

ஆனால் A,C யையும் D யையும் B யினிடத்தில் கொண்டு சென்று, அவர்கள் எல்லோருமே A சொல்லுகிறபடி B அவருக்கு தவறு இழைத்து விட்டார் என்று ஒருமுகமாக ஒத்துக் கொண்டாலும் தன்னுடைய நிலையை விட்டுக் கொடுக்க மறுத்தாலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மறுத்தாலோ அல்லது தவற்றை சரி செய்யாமல் விட்டு விட்டாலோ, A,C மற்றும் D உடனும் இணைந்து சபையின் ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும். A மற்றும் B முழு பிரச்சனையயும் சபைக்கு முன் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் B இன்னமும் சபையில் இருக்கவும், சபையில் ஆலோசனையையும், அதிகாரத்தையும் ஏற்றுக் கொள்ளுபவராகவும், அதோடு கூட மனசாட்சி உள்ளவராகவும் இருப்பது அவசியம். சபை அந்த விஷயத்தை கேட்கும் போது, நீதிமான்களாக்கப்பட்டு, அர்ப்பணித்தவர்கள் மட்டுமே அங்கு சபையாக கூடி வர வேண்டும். ஏனெனில், அவர்கள், தீர்ப்பு அளிக்கும்படி அவர்களுடைய தலைவரும் ஆண்டவரின் நாமத்தில் அவருடைய நியாயத்தை வழங்க இருக்கிறார்கள். இது சபையில் பாகுபாடு உண்டாவதற்கான ஒரு விஷயமாக அல்ல, மாறாக சபையின் ஒற்றுமையையும் சமாதான கூட்டையும் காத்துக் கொள்ளுவதற்காகும். A மற்றும் B வழக்கு பதிவு செய்யக்கூடாது. மேலும், இந்தக் காரியத்தில் ஆண்டவருடைய தீர்ப்பை மட்டுமே வழங்க வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள் வழக்கு பதிவு செய்யக்கூடாது. எடுக்கப்படுகிற தீர்மானம் ஒருமனப்பட்ட அனைவரின் தீர்மானமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்கவேண்டும், அதிகமான உணர்ச்சிவயப்படுதல் கட்டுப்படுத்தப்பட வேண்டியதாக இருந்தாலும் கூட, தீர்மானம் ஒரே மனதாக இருக்க வேண்டும், “நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு” (கலா 6:1) என்பதின்படியாக நியாயம் எப்பொழுதும் இரக்கத்துடன் கலந்து இருக்கவேண்டும்.

சபையின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி ஒழுக்கத்தைக் குறித்தான ஒரு விஷயத்தில் (மனசாட்சியைப் பற்றியதல்ல) யாராவது ஒருவர் அதன்படி கீழ்ப்படியாவிட்டால் அல்லது அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவன் சபைக்கு எதிர்த்து நிற்பதை விடும் வரை மற்றவர்களுக்கு (அவன் அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப் போலவும் இருப்பான்.” அவன் கீழ்ப்படியும் பட்சத்தில், மன்னிக்கப்பட்டு முன்பு இருந்த மாதிரியே ஐக்கியத்திற்குள்ளாக சேர்த்துக் கொள்ளப்படுவான். இதன் நோக்கம் என்னவெனில், சகோதரனை முற்றிலுமாக ஒதுக்கிவைத்து விடவேண்டும் என்பதல்ல, ஆனால் அவருடைய தவறான வழியை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று காட்டுவதன் மூலம் அவன் திருந்துவதற்காக உதவி செய்வதாகும். இப்படியான ஒருவனை அஞ்ஞானியைப் போலவும் ஆயக்காரனைப்போலவும் நடத்துவது, அவன் ஒதுக்கி வைக்கப்பட்ட பின்னரும் அவனைப் பற்றி அவதூறாக பேசுவதற்கோ அல்லது அவமரியாதை செய்வதற்கோ அல்ல. ஆண்டவருடைய ஜனங்கள் எந்த வேளையிலும் அவதூறு பேசுகிறவர்களாகவோ அல்லது முதுகுக்குப்பின் பேசுகிறவர்களாகவோ இருக்கக்கூடாது. “பிறனைப் பற்றி பொல்லாப்பு பேசாதே” என்பதை இதற்கு மிக பொருத்தமாய் இருக்கிறது. நாம் பொல்லாங்கும் பேசக்கூடாது, அல்லது அஞ்ஞானிகளையும் பாவிகளையும் கடுப்பாக பார்க்கக்கூடாது. மேலும் அவர்களோடு தொடர்பு வைத்துகொள்ளாமலும் இருக்ககூடாது, ஆனால் பரிசுத்த ஆவியினாலும், அதன் அன்பினாலும் சமாதனத்தினாலும் நிறைந்து இருக்கின்ற புது சிருஷ்டியின் சகோதருக்கு உரியதான மரியாதையும், விசேஷமான ஐக்கியத்தையும் அவர்களுக்கு கொடாதிருக்கவேண்டும்.

R3594 [col.2p4] through R3595 [col.1p6]: –

புறங்கூறுதல், பின்னாக பேசுவது, வெட்டிப் பேச்சு போன்ற அனைத்து காரியங்களும் தேவனின் பிள்ளைகளுக்குக் கண்டிப்பாக தடை செய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில் இந்தக் காரியங்கள் முழுமையாக தேவனின் அன்பின் ஆவிக்கு விரோதமானது. இவையனைத்தும் உண்மையாக இருந்தாலும் இந்தக் காரியங்களை தேவனுடைய பிள்ளைகள் தவிர்க்க வேண்டும். இவைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள மேல் கூறப்பட்ட வசனமே சிறந்த வழியாக நமக்கு காட்டப்படுகிறது. (மத் 18:15-17)

வளர்ச்சி அடைந்த கிறிஸ்தவர்களும் இந்தத் தெய்வீக சட்டத்தை உணராமல் தவறுகள் செய்யலாம். ஆகவே குறிப்பாக நம்முடைய ஆண்டவரின் பிரமாணங்களில் இந்தக் கட்டளை விசேஷித்ததாக கொடுக்கப்பட்டுள்ளது. “என்னுடைய கட்டளைகளை நீங்கள் கைக்கொள்வீர்களானால், நீங்கள் எனக்கு சீஷர்களாக இருப்பீர்கள்” ஆகவே இந்த வசனத்தை பார்க்கும் போது இன்னும் அநேகர் கிறிஸ்துவின் சீஷர்களாக வளர்ச்சி அடையவில்லை என்பது தெளிவாகிறது.

புறங்கூறுதல், ஒருவர் பின்னாக பேசுவது, தவறான வதந்திகள் போன்ற காரியங்களை தடுக்கக் கூடிய இந்தச் சட்டத்தை சற்று கவனமாகப் பார்ப்போம்.

முதல் பாதிக்கப்பட்ட இருவர் மட்டுமே ஒன்று கூடி பேச வேண்டும். குற்றம் சாட்டுபவர் மற்ற நபரால் பட்டபாடுகளை அறிவிக்கும் போது, தான் நீதியுள்ளவர் என்பதை வெளிப்படுத்துகிறார். குற்றம் சாட்டின இவரை நாம் “A” என்று அழைக்கலாம். மேலும் குற்றம் சாட்டப்பட்டவரை நாம் “B” என்று அழைக்கலாம். தங்களுடைய நோக்கங்கள், தங்களை பொறுத்தவரைக்கும் சரி என்ற சிந்தையோடு இவர்கள் இருவரும் “சகோதரர்களாக” சந்தித்து, பேச்சு வார்த்தைகளை நடத்தி, இருவரும் ஒரே முடிவுக்கு வந்தால், பிரச்சனைகள் தீர்ந்துவிடும். சமாதானம் நிலவும்.

இவர்கள் ஒத்துப் போகவில்லை என்றால், “A” தன்னுடைய சம்பாஷனைகளை அடிப்படையாகக் கொண்டு அவதூறான காரியங்களை மற்றவர்களிடம் பேசாமலும், தன்னுடைய உற்ற நண்பரிடம் கூட “இதை ஒருவரிடம் சொல்லிவிடாதே, நான் சொன்னேன் என்று சொல்லாதே” போன்ற காரியங்களை சொல்லாமல் இருக்கலாம். இந்தக் காரியத்தை “A” மிக முக்கியமானதாக கருதினால், இந்தப் பிரச்சனையை தொடர்ந்து பேச வேண்டும் என்று விரும்பினால், அவருக்கு முன் ஒரு வழி திறக்கப்படுகிறது. இரண்டு பேர் அல்லது மூன்று பேரை “B”யினிடம் அழைத்துச் சென்று அவர்களோடு இந்தப் பிரச்சனைகளை கலந்தாலோசித்து, அவர்களின் பார்வையில் சரியான முடிவை அல்லது தீர்வைக் காணவேண்டும். அழைத்து செல்லக்கூடிய நபர்கள், கிறிஸ்துவ குணலட்சணங்களில் வளர்ச்சி அடைந்தவர்களாயும், நல்ல எண்ணங்கள் உள்ளவர்களும், நல்ல ஆவியை பெற்றவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் இருத்திரத்தாரினுடைய நியாயங்களை சீர்தூக்கி பார்க்கக் கூடியவர்களாக இருக்கவேண்டும். மேலும் சமாதானம் செய்ய “A” க்கு சாதகமாக தீர்ப்பு சொன்னாலும், அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தில் “B” இருக்கவேண்டும். அனைவரையும் மேற்கொண்டு பேசுவதும், தனக்கு சாதகமாக இரண்டு மூன்று பேர்களை திரட்டிகொண்டு இவர் சார்பாக மட்டுமே பேசக்கூடியவர்களாயும், “B”க்கு விரோதமாக தீர்ப்பு சொல்லவேண்டும் என்று முன் கூட்டியே தீர்மானித்து, அங்கு கூறும் காரியங்களை நம்முடைய ஆண்டவரின் சட்டத்திற்கும் அவருடைய ஆவிக்கும் முற்றிலும் விரோதமாக இருக்கும்.

“B”க்கு விரோதமாக தீர்ப்புச் சொல்லப்பட்டால் அவர் அதை கேட்டுக் கொள்ள வேண்டும். அவர் அவர்களுக்கு செவி கொடுக்கவேண்டும். அவர்களுடைய தீர்ப்பு நீதியுள்ளதாக இருந்தால், “B”யினிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி நடந்தால், இருதரப்பினரும், மற்றவர்களிடம் இந்தக் காரியத்தை குறித்து பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

தீர்ப்புகள் “A”வுக்கு பாதகமாயிருந்தால், அதை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டு, தன்னுடைய குற்றத்தை ஒத்துக் கொள்ளாவிட்டால், நம்முடைய ஆண்டவரின் பிரமாணங்களை மீறுபவராக இருப்பார். மற்றவர்களின் தீர்ப்பு தனக்கு விரோதமாக இருப்பதை அறிந்து, அவர்களில் ஒருவரையும் நம்பமுடியாத சூழ்நிலை வரும்போது, தனக்குள்ளிருக்கும் தற்பெருமையான எண்ணங்களை உணர்ந்து அதை அகற்ற தேவனுடைய கோட்பாடுகளையும், நீதியையும் கவனத்தோடு வாசித்து அறிய வேண்டும். ஆனால் “A” இதை விட்டுவிட்டு, சபையாரிடத்திலோ, பொதுவாக இந்தக் காரியத்தைக் குறித்து எதையும் பேசக் கூடாது. ஒரு வேளை “A” அப்படிச் செய்தால், தீய ஆவியினால் ஏவப்பட்டு சத்தியத்திற்கும், அன்பின் ஆவிக்கும் விரோதமாக செயல்பட்டு தேவனுடைய ஆவிக்கு கீழ்ப்படியாமல் இருப்பவராக காணப்படுவார்.

வந்தவர்கள் “B” க்கு எதிராக தீர்ப்பளித்து “A” க்கு சுமாரான தீர்ப்பளித்தால், பாதிக்கப்பட்ட இருவரும் சமாதானத்தோடு பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். அதற்குப் பின் மற்றவர்கள் யாரும் இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை.

ஒருவேளை “B” க்கு எதிராகவும், “A” க்கு சாதகமாகவும் அனைவரும் ஏக மனதோடு தீர்ப்பு கூறும் பட்சத்தில், “B” அவர்களின் தீர்ப்புக்கு கவனம் செலுத்தாமல் தன்னை திருத்திக் கொள்ள முயற்சிகாமல், “A” வை மீண்டும் துன்புறுத்தினால், அதற்குப் பதிலாக “A” அல்லது அங்கு வந்த நபர்களும் “B” ன் மேல் பழிச்சொல்லக்கூடாது. அதற்குப் பின் “A” இந்தக் காரியத்திற்குத் தீர்வு காணவேண்டும் என்று எண்ணினால் பிரச்சனையை சபைக்கு முன் கொண்டு வரவேண்டும். சபையின் முடிவுக்கு இருவரில் ஒருவர் கட்டுப்படாத பட்சத்தில் அவர்கள் மனந்திருந்தி சபையின் ஐக்கியத்தில் இணையும் வரையில் இவர்கள் ஆயக்காரனைப் போல பாவிக்கப்பட வேண்டும்.

ஒருவருடைய கடமையை மற்றொருவர் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் ஆண்டவருடைய கட்டளைக்குத் தனிப்பட்ட முறையில் கீழ்ப்படிய வேண்டும். ஒரு வேளை தேவனுடைய பிரமாணங்களை மீறி சபைக்குள் பிரச்சனைகள் எழும்போது, தேர்வு செய்யப்பட்ட சபை முக்கியஸ்தர்கள் அந்தப் பிரச்சனையை கையாள வேண்டும். இவர்கள் பிரச்சனையை தீர விசாரித்து குற்றம் செய்தவர்களை எச்சரித்து, திருத்த வேண்டும்.

ஆனால் அனைத்து விதமான கடிந்து கொள்ளுதல்களும் அன்பின் அடிப்படையில் நடப்பிக்கப்பட வேண்டும். ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் பலவீனராகவும், அபூரணராகவும் இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு விஷயத்திலும் தண்டிப்பதற்கு அல்ல, திருத்துவதற்கே முயற்சிக்க வேண்டும். நம்முடைய ஆண்டவர் மட்டுமே தண்டிப்பதற்கு அதிகாரம் பெற்றவர். மனம் வருந்தாமல், குற்றம் உணராமல் சபையின் ஐக்கியத்திலிருந்து விலகினால், பகிரங்கமாக மனம் வருந்துதலை வெளிப்படுத்தி ஐக்கியத்தில் ஒன்று சேர வேண்டும். நம்முடைய அன்பு, சமாதானம் சந்தோஷம் அனைத்தும் நம்முடைய ஆண்டவர் தந்ததே. ஆகையால் சீஷர்களாக இயேசுவை பின்பற்றக் கூடிய நாம் இவைகளை (அன்பு, சந்தோஷம் சமாதானம்) தவிர வேறு எந்த முறைகளை நாம் பயன்படுத்தினாலும் மற்றவர்களை காயப்படுத்திவிடும்.

இப்படியாக நம்முடைய உண்மையான சீஷர்களை இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து காத்துக் கொண்டார். இல்லாவிட்டால் மாம்சத்தின் கிரியைகளும், சாத்தானின் வஞ்சகங்களும் சத்தியத்தையும், அன்பின் ஆவியின் வளர்ச்சியையும் தடுத்திருக்குமே. வதந்திகளையும், தீய பேச்சுக்களையும், அவதூறுகளையும் கேட்கச் கூடியவர்கள், அந்தத் தீமையான கிரியைகளின் பங்காளிகளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இவர்கள் ஆண்டவரின் கட்டளைகளை மீறுகிறவர்கள். எனவே இப்படிப்பட்டக் காரியங்களை தேவனுடைய உண்மையான ஜனங்கள் கேட்பதற்கு மறுக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஆண்டவரின் அதிகாரப் பூர்வமான தேவனை விட ஞானவான்களா?” என்ற வார்த்தைகளை எடுத்துரைக்க வேண்டும்.