விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-FAITH-Q-10

விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?

Is a simple confession of faith necessary?

ரோமர் 10:10 – “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.”

R2632 (col. 2 P 2,3)

கிறிஸ்துவுக்கு குழந்தைகளாக இருப்பவர்கள், இந்த “உலகத்தின் பிள்ளைகளிடமிருந்து” தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ள விசுவாசத்தை வெளியரங்கமாக, அறிக்கையிடுவது சற்று அவசியமாகவே இருக்கிறது. ஆனால், இந்த அறிக்கை மிக எளிமையாக இருக்கவேண்டும். ஏனெனில், கிறிஸ்துவுக்கு மிகச்சிறிய குழந்தைகள் கூட அங்கு சொல்லப்படும் விளக்கங்களை மிகத்தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.

(1) பிதாவினால் அனுப்பப்பட்ட கிறிஸ்து, அனைத்து மனுக்குலத்திற்கும் தன்னையே ஈடுபலியாகக் கொடுத்தார் என்றும் அவர் தங்களுடைய சொந்த இரட்சகர் என்றும், அறிக்கையிடவேண்டும்.

(2) கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவங்களை விட்டுவிட தீர்மானிக்க வேண்டும்.
(3) இயேசுவை எல்லா விதத்திலும், முழு அர்ப்பணிப்போடு பின்பற்றி, அவருடைய பணியில் தன்னுடைய ஜீவனையே ஒப்புக்கொடுக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். இவைகளை அறிக்கையிட முடியாதவர்கள் கிறிஸ்துவுக்கு “குழந்தைகளாக” ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். அல்லது இவர்களை கிறிஸ்துவுக்குள் சகல விதத்திலும் வளர்ச்சியடையவும் எதிர்பார்க்கவும் முடியாது.

இங்குச் சொல்லப்பட்டக் காரியங்களைப் பெயர் சபைகளில் நாம் எதிர்பார்க்கமுடியுமா? எந்த விதத்திலும் இது சாத்தியமல்ல. பெயர் சபைகளில் அதிகமான களைகளும், குறைவான கோதுமை மணிகளும் இருக்கிறது. இவை அனைத்தும் மகா உபத்திரவத்தின் காலத்தில் சோதனைக்குள்ளாக்கப்படும். இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் வரைக்கும் இவர்களின் நிலை மாறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெரிந்துகொள்ளப்பட்ட சபை முழுமைப்பெற்று மகிமையடைந்த பின் மற்ற அனைவரும் சீர்ப்பொருத்தப்படுவார்கள். (அப் 3:19-21)

R2647 (col. 1 P 5)

நம்முடைய பொதுவான நம்பிக்கைகள், மதப்பற்றை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் அல்ல, மாறாக, கீழ்க்காணும் குறிப்புகளைச் சரியாகவும், தெளிவாகவும் தனிப்பட்ட வகையில் புரிந்துகொள்வதற்காகவே இருக்கிறது.

(1) இயல்பாகவே, நாம் விழுந்துபோன அங்கத்தினர்களாக, தண்டனை தீர்ப்படைந்த ஜாதியாக, கோபாக்கினையின் பிள்ளைகளாக, தண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம்.

(2) கிறிஸ்து, ஆதாம் மற்றும் அவருடைய முழு சந்ததிக்காக மரித்தார். ஆகவே இப்பொழுது, இயேசுவின் மேல் விசுவாசமுள்ளவர்களைத் தேவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளுகிறார்.

(3) தன்னைதான் ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, அனைத்தையும் ஆண்டவருக்கே அர்ப்பணித்து, ஆயிரவருட ஆட்சியில் “ஜெயிப்பவர்களுக்காக” வாக்களிக்கப்பட்ட பங்கைப்பெற, தேவன் அழைத்த ஒவ்வொருவரையும் நீதிமானாக்கியுமிருக்கிறார் – வெளி 2:26, 3:12,21.

R3071(col.2P 3,4)- R3072 (col.1P1)

எப்படிப்பட்ட செய்திகள் விசுவாசத்தின் செவிகளால் கேட்கப்படும்? மற்றும் விசுவாசத்தின் கண்களினால் காணப்படும்? என்றுமே நமக்குள் நாம் பெற்றிருக்கும் வல்லமையினால், நம்முடைய இருதயத்திலும், வாயிலும், இந்த இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்று தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களும் அறிவிக்கிறார்கள். மோசே இவைகளையே பிரசங்கித்து, தீர்க்கதரிசனமாகச் சொன்ன சுவிசேஷம் என்றும், அதை நாம் இன்று பெற்றுக்கொண்டோம் என்றும் அப்போஸ்தலர் நடபடிகைகள் அறிவிக்கிறது. அதாவது, ஆண்டவரை நம்முடைய வாயினால் அறிக்கையிட்டு, இருதயத்தினால் விசுவாசிக்கவேண்டும்.

தீர்க்கதரிசியாகிய மோசேயும், அப்போஸ்தலனாகிய பவுலும் இந்த காரியத்தை ஒரே விதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். முதலில் தங்களுடைய வாயினாலும், இரண்டாவது தங்களுடைய இருதயத்தினாலும் அறிக்கையிடவேண்டும். இந்த வாக்கியங்கள் தற்செயலாக சொல்லப்பட்டவைகள் அல்ல. இருதயத்தில் உள்ள விசுவாசத்தை (சத்தியம்), வாயினால் அறிக்கையிடுவது முதல் சாட்சியாக இருக்கிறது. மேலும், இப்படியாக சத்தியத்தை அறிக்கையிட்டு, அவைகளை முழுமையாக புரிந்து கொள்வது, தெய்வீக ஒழுக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. உண்மையில், நாம் சரியாகப் புரிந்து கொள்ளாத காரியங்களை அறிக்கையிட முடியாது. ஆகவே, நாம் அறிக்கையிடுவதற்கு முன்பு அதை நாம் முழுமையாக நம்ப வேண்டும். அதற்குபின் விசுவாசத்தில் நாம் முழுமையான வளர்ச்சி அடைய சத்தியத்தை அறிக்கை செய்யவேண்டும். ஒருவர் தான் பெற்ற சத்தியத்தின் வெளிச்சத்தை வெளியரங்கமாக அறிக்கையிடாமல், அதை காத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினால், அவர் தன்னைத்தான் வஞ்சிக்கிறவராக இருப்பார். ஆகவே “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப்பண்ணப்படும்.” (ரோமர் 10:10) என்று வசனங்கள் தெளிவாகக்குறிப்பிடுகிறது. விசுவாசத்தினால் துவங்கிய நீதியானது, கிரியையினாலும், உதடுகளினால் அறிக்கையிடாமலும், நித்தியமான இரட்சிப்பை முழுமையாக அடைய முடியாது.

தெய்வீக சத்தியத்தின் இந்த ஒரு சிறப்பு பகுதியை எங்குமுள்ள தேவ ஜனங்கள் தங்களுடைய இருதயத்தில் ஆழமாக பதித்து வைக்க வேண்டும். ஏனெனில் அநேகர் தங்களுடைய பலவீனத்திலும், வியாதியிலும், தேவன் காட்டிய வழிகளில் நடக்க முடியாதபடிக்கு தங்களுக்குள்ளான ஆவிக்குரிய குறைபாடுகளிலும் தேவன் அவர்களுக்கென்று செய்த எண்ணிக்கையற்ற கிருபைகள் எத்தனையோ உண்டு. அவைகளை கட்டாயமாக அறிக்கை செய்து அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நாம் தேவனிடமிருந்து இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள, நாம் முன்பு பெற்ற காரியங்களை அறிக்கையிட வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் பெறும் ஒவ்வொரு ஆசீர்வாதங்களும் அறிக்கையிடப்பட்டு, இருளிலிருந்து, ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆவிக்குரிய வளர்ச்சியடைய இதுவே சட்டமாக இருக்கிறது. இது ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்குண்டான கற்பனையாகவும் இருக்கிறது. இந்தக்கற்பனைக்குக் கீழ்ப்படியாத பட்சத்தில், இருதயத்திற்குள் இருக்கும் சத்தியம் காலப்போக்கில் காணாமல் போய்விடும். புரிந்துகொள்ளுதலின் கண்கள் மங்கிவிடும். விசுவாசத்தின் செவிகள் மந்தமாகிவிடும். புதிய உடன்படிக்கையின் கீழ் புது சிருஷ்டிகளாக அழைக்கப்பட்ட நாம், வருங்காலத்தில் நமக்காக வைக்கப்பட்டிருக்கும் மகிமையான வாய்ப்புகள், கை நழுவி போய்விடும்.