CD-FAITH-Q-10
ரோமர் 10:10 – “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.”
R2632 (col. 2 P 2,3)
கிறிஸ்துவுக்கு குழந்தைகளாக இருப்பவர்கள், இந்த “உலகத்தின் பிள்ளைகளிடமிருந்து” தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ள விசுவாசத்தை வெளியரங்கமாக, அறிக்கையிடுவது சற்று அவசியமாகவே இருக்கிறது. ஆனால், இந்த அறிக்கை மிக எளிமையாக இருக்கவேண்டும். ஏனெனில், கிறிஸ்துவுக்கு மிகச்சிறிய குழந்தைகள் கூட அங்கு சொல்லப்படும் விளக்கங்களை மிகத்தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
(1) பிதாவினால் அனுப்பப்பட்ட கிறிஸ்து, அனைத்து மனுக்குலத்திற்கும் தன்னையே ஈடுபலியாகக் கொடுத்தார் என்றும் அவர் தங்களுடைய சொந்த இரட்சகர் என்றும், அறிக்கையிடவேண்டும்.
(2) கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவங்களை விட்டுவிட தீர்மானிக்க வேண்டும்.
(3) இயேசுவை எல்லா விதத்திலும், முழு அர்ப்பணிப்போடு பின்பற்றி, அவருடைய பணியில் தன்னுடைய ஜீவனையே ஒப்புக்கொடுக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். இவைகளை அறிக்கையிட முடியாதவர்கள் கிறிஸ்துவுக்கு “குழந்தைகளாக” ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். அல்லது இவர்களை கிறிஸ்துவுக்குள் சகல விதத்திலும் வளர்ச்சியடையவும் எதிர்பார்க்கவும் முடியாது.
இங்குச் சொல்லப்பட்டக் காரியங்களைப் பெயர் சபைகளில் நாம் எதிர்பார்க்கமுடியுமா? எந்த விதத்திலும் இது சாத்தியமல்ல. பெயர் சபைகளில் அதிகமான களைகளும், குறைவான கோதுமை மணிகளும் இருக்கிறது. இவை அனைத்தும் மகா உபத்திரவத்தின் காலத்தில் சோதனைக்குள்ளாக்கப்படும். இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் வரைக்கும் இவர்களின் நிலை மாறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெரிந்துகொள்ளப்பட்ட சபை முழுமைப்பெற்று மகிமையடைந்த பின் மற்ற அனைவரும் சீர்ப்பொருத்தப்படுவார்கள். (அப் 3:19-21)
R2647 (col. 1 P 5)
நம்முடைய பொதுவான நம்பிக்கைகள், மதப்பற்றை அதிகரிப்பதற்கான நோக்கத்துடன் அல்ல, மாறாக, கீழ்க்காணும் குறிப்புகளைச் சரியாகவும், தெளிவாகவும் தனிப்பட்ட வகையில் புரிந்துகொள்வதற்காகவே இருக்கிறது.
(1) இயல்பாகவே, நாம் விழுந்துபோன அங்கத்தினர்களாக, தண்டனை தீர்ப்படைந்த ஜாதியாக, கோபாக்கினையின் பிள்ளைகளாக, தண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம்.
(2) கிறிஸ்து, ஆதாம் மற்றும் அவருடைய முழு சந்ததிக்காக மரித்தார். ஆகவே இப்பொழுது, இயேசுவின் மேல் விசுவாசமுள்ளவர்களைத் தேவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளுகிறார்.
(3) தன்னைதான் ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, அனைத்தையும் ஆண்டவருக்கே அர்ப்பணித்து, ஆயிரவருட ஆட்சியில் “ஜெயிப்பவர்களுக்காக” வாக்களிக்கப்பட்ட பங்கைப்பெற, தேவன் அழைத்த ஒவ்வொருவரையும் நீதிமானாக்கியுமிருக்கிறார் – வெளி 2:26, 3:12,21.
R3071(col.2P 3,4)- R3072 (col.1P1)
எப்படிப்பட்ட செய்திகள் விசுவாசத்தின் செவிகளால் கேட்கப்படும்? மற்றும் விசுவாசத்தின் கண்களினால் காணப்படும்? என்றுமே நமக்குள் நாம் பெற்றிருக்கும் வல்லமையினால், நம்முடைய இருதயத்திலும், வாயிலும், இந்த இரட்சிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்று தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களும் அறிவிக்கிறார்கள். மோசே இவைகளையே பிரசங்கித்து, தீர்க்கதரிசனமாகச் சொன்ன சுவிசேஷம் என்றும், அதை நாம் இன்று பெற்றுக்கொண்டோம் என்றும் அப்போஸ்தலர் நடபடிகைகள் அறிவிக்கிறது. அதாவது, ஆண்டவரை நம்முடைய வாயினால் அறிக்கையிட்டு, இருதயத்தினால் விசுவாசிக்கவேண்டும்.
தீர்க்கதரிசியாகிய மோசேயும், அப்போஸ்தலனாகிய பவுலும் இந்த காரியத்தை ஒரே விதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். முதலில் தங்களுடைய வாயினாலும், இரண்டாவது தங்களுடைய இருதயத்தினாலும் அறிக்கையிடவேண்டும். இந்த வாக்கியங்கள் தற்செயலாக சொல்லப்பட்டவைகள் அல்ல. இருதயத்தில் உள்ள விசுவாசத்தை (சத்தியம்), வாயினால் அறிக்கையிடுவது முதல் சாட்சியாக இருக்கிறது. மேலும், இப்படியாக சத்தியத்தை அறிக்கையிட்டு, அவைகளை முழுமையாக புரிந்து கொள்வது, தெய்வீக ஒழுக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. உண்மையில், நாம் சரியாகப் புரிந்து கொள்ளாத காரியங்களை அறிக்கையிட முடியாது. ஆகவே, நாம் அறிக்கையிடுவதற்கு முன்பு அதை நாம் முழுமையாக நம்ப வேண்டும். அதற்குபின் விசுவாசத்தில் நாம் முழுமையான வளர்ச்சி அடைய சத்தியத்தை அறிக்கை செய்யவேண்டும். ஒருவர் தான் பெற்ற சத்தியத்தின் வெளிச்சத்தை வெளியரங்கமாக அறிக்கையிடாமல், அதை காத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினால், அவர் தன்னைத்தான் வஞ்சிக்கிறவராக இருப்பார். ஆகவே “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைப்பண்ணப்படும்.” (ரோமர் 10:10) என்று வசனங்கள் தெளிவாகக்குறிப்பிடுகிறது. விசுவாசத்தினால் துவங்கிய நீதியானது, கிரியையினாலும், உதடுகளினால் அறிக்கையிடாமலும், நித்தியமான இரட்சிப்பை முழுமையாக அடைய முடியாது.
தெய்வீக சத்தியத்தின் இந்த ஒரு சிறப்பு பகுதியை எங்குமுள்ள தேவ ஜனங்கள் தங்களுடைய இருதயத்தில் ஆழமாக பதித்து வைக்க வேண்டும். ஏனெனில் அநேகர் தங்களுடைய பலவீனத்திலும், வியாதியிலும், தேவன் காட்டிய வழிகளில் நடக்க முடியாதபடிக்கு தங்களுக்குள்ளான ஆவிக்குரிய குறைபாடுகளிலும் தேவன் அவர்களுக்கென்று செய்த எண்ணிக்கையற்ற கிருபைகள் எத்தனையோ உண்டு. அவைகளை கட்டாயமாக அறிக்கை செய்து அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். ஆகவே நாம் தேவனிடமிருந்து இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள, நாம் முன்பு பெற்ற காரியங்களை அறிக்கையிட வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் பெறும் ஒவ்வொரு ஆசீர்வாதங்களும் அறிக்கையிடப்பட்டு, இருளிலிருந்து, ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆவிக்குரிய வளர்ச்சியடைய இதுவே சட்டமாக இருக்கிறது. இது ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்குண்டான கற்பனையாகவும் இருக்கிறது. இந்தக்கற்பனைக்குக் கீழ்ப்படியாத பட்சத்தில், இருதயத்திற்குள் இருக்கும் சத்தியம் காலப்போக்கில் காணாமல் போய்விடும். புரிந்துகொள்ளுதலின் கண்கள் மங்கிவிடும். விசுவாசத்தின் செவிகள் மந்தமாகிவிடும். புதிய உடன்படிக்கையின் கீழ் புது சிருஷ்டிகளாக அழைக்கப்பட்ட நாம், வருங்காலத்தில் நமக்காக வைக்கப்பட்டிருக்கும் மகிமையான வாய்ப்புகள், கை நழுவி போய்விடும்.