“உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்” என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-LOVE-Q-45

"உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?

What is the significance of the warning, “Love not the world”?

1 யோவான் 2:15.16 “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ள வைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்”

R1955 – “உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்”

மனதில் மற்றொரு வசனத்தையும் சிந்தியாமல். அப்போஸ்தலனாகிய யோவானின் இந்த அறிவுரையை வாசிப்பது அரிது. முதல் காட்சியில் அதாவது, “தேவன் தம்முடைய ஒரு பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகமாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” இது முரண்பாடாக தோன்றலாம். இருப்பினும், சரியான புரிந்துக் கொண்டால், இந்த இரண்டுமே எதிர்மறையான வைகளாக இராமல், முழு இணக்கத்தோடு இருப்பவைகள். பாவிகளாக இருக்கையில், தேவன் இந்த உலகத்தை நேசித்ததினால், (ரோமர் 5:8) அவர்களை இரட்சிக்கவும், மீட்கவும். அவருடைய இருதயத்தில் உள்ள பொக்கிஷத்தை பலி செலுத்தினார். நமக்கு இந்த உலகின் மீது, அத்தகைய அன்பும், இரக்கக் குணமும், தேவனுடைய சித்தத்திற்கு இசைவில்லாததாக இருக்க முடியாது. உண்மையில், வார்த்தையின் நேரடியான போதனை இது. “வாய்ப்புகள் கிடைக்கும் போது. எல்லா மனுஷருக்கும் நன்மை செய்யுங்கள்”, “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” (மத்தேயு 5:44-48) சூழல் தெளிவாக காட்டுகிறபடி, தேவன் இந்த உலகத்தை நேசிப்பது போல நாம் இந்த உலகத்தை நேசிப்பதை பற்றி அப்போஸ்தலர் சபைக்கு எச்சரிப்பை கொடுக்கவில்லை. இது ஒரு மிக சிறந்த உயர்த்தர அன்பாகும் – தூய்மையின் உயர்ந்த நிலையில் நிற்கும் அன்பு, தூய்மையற்றவர்களுடன் குறைந்தபட்சம் கூட கூட்டுறவு வைக்காததும். எனினும், விழுந்து போனவர்களுக்கு இறங்கி, அவர்களின் சீரழிவிலிருந்து அவர்களை காப்பாற்றுவதில் தீவிரமாக செயல்படும். இந்த தெய்வீக அன்பு, நாம் பிரதிபலிப்பதற்கு மிகவும் தகுதியானது. இது தனிப்பட்ட விரோதங்கள் மற்றும் பகைமைகளை வெறுமனே புறக்கணிக்கிறது. சுயநல கருத்துக்கள் மற்றும் பழிவாங்கும் உணர்வுகளை தாண்டி, சமாதானத்திற்கும். சீர்திருத்தத்திற்கும் இரட்சிப்புக்கும் வழிமுறைகளை சிந்திக்கிறது. ஆனால் யோவான் இங்கு குறிப்பிடுகிற உலகத்தின் அன்பு. சூழ்நிலை காட்டுகிறபடி இது கூட்டுறவான அன்பு. அதாவது அதன் ஆவியில் பங்கேற்பதை குறுப்பிடுகிறது அதன் நோக்கங்கள். குறிக்கோள்கள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் அவற்றைத் தொடரும் வழிமுறைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒருவர் இந்த உலகத்தில் அன்புகூருகிறவரானால், பிதாவின் அன்பு அவரிடம் இல்லை என்பது நிச்சயம். ஏனெனில், “உலகத்திலும் உலகத்திலுள்ள வைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் (அதாவது இக்காலத்து தீமையான உலகத்தின் ஆவியின்படி பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்” (1 யோவ 2:15,16) உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம். தேவனுடைய சித்ததின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். கடவுளின் பிள்ளைகள் என நாம் பெரிய தயவுக்காகவும் நன்மைக்காகவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய பரலோக தந்தை தன் உயர் நிலை துறந்து கீழ் நிலைக்கு விருப்பத்துடன் வந்து, அவருடைய திட்டங்களையும், நோக்கங்களையும் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.அவரது கூட்டுறவிற்கும். செயலுக்குமான ஒத்துழைப்புக்கும் நம்மை அழைத்திருக்கிறார். மேலும், இக்கால வாழ்க்கையில், நாம் எதிர்காலத்தை காணக்கூடிய பார்வை, இந்த உலகம் பார்க்கிறபடி இல்லாமல், ஒரு வித்தியாசமான ஒளியில் நாம் காணக்கூடியது மிக பெரியதும் விரிவானதுமாகும். இந்த உலகம் ஜீவனுக்குரிய ஒளியின்றி, இருளில் நடக்கிறது. இதன் விளைவாக இந்த பூமிக்குரிய பொருட்கள், அவர்களுக்கு அதிக மதிப்புள்ளதாக காணப்படுகிறது. ஆனால் நாமோ அவைகளை கசடாக கணக்கிட கற்றுக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஓடி முயற்சித்து. விரையில் அவைகள் கடந்து செல்லும், தவறான பரிசுகளுக்காக போராடுகிறார்கள். இது துக்கத்தையும், உழைப்பையும் மட்டுமே அவர்களுக்கு கொண்டு வருகிறது. அப்போஸ்தலர் இந்த உலகின் பொக்கிஷங்களை மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை என்று மிக சுருக்கமாக கூறுகிறார். மாம்சத்தின் இச்சை, அனைத்து ஆசைகளையும், பசியையும். உணர்ச்சிகளையும் உள்ளடக்குகிறது. இது வெறும் மிருகங்களுக்குள்ள உணர்வுகளே. ஆயிரத்திற்கும் அதிகமான இந்த உயர் நலன்களை பலி செலுத்த வேண்டும். முதல் தரமான உணவையும். பானங்களையும் விரும்பி, புசித்து குடிப்பதும், சந்தோஷமாக இருப்பதும் அவர்களின் மகிழ்ச்சி. கண்களின் இச்சையானது, ஆடைகள் மற்றும் வீட்டு காரியங்களில் ஆடம்பரத்தைக் கோருகிறது மேலும், பாராட்டப்படும் மற்றும் விரும்பப்படும் அனைத்திலும், சுய திருப்தியை சேகரிக்கிறது. அந்த ஜீவனத்தின் பெருமை. தன்னுடைய சுயநலமான அவமானத்தில் மகிமைப்படுகிறது. அதாவது. எளிமையானோர் மற்றும் உபத்திரவப்படுபவர்களின் தேவைகள், மற்றும் துக்கங்களை புறக்கணித்து, “ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக் கொண்டான்.” (லூக்கா 12:19) இது மேலும் தொடருகிறது. அது ஏழைகளையும், எளியோர்களையும் வெறுத்து ஒடுக்குகிறது. இதுதான் உலகத்தின் ஆவி. இது தேவனின் மற்றும் கிறிஸ்துவின் ஆவிக்கு எதிரானது. தேவனுடைய ஆவியினால் வழிநடத்தப்படுபவர்கள் முடிந்த அளவு அதை விட்டு விலகி இருக்கவேண்டும். அவர்களின் நடத்தை, அவர்களின் உடை, வீட்டு வாழ்க்கை மற்றும் வீட்டு நியமனங்கள் எல்லாம் வேறு விதங்களில் பேசப்பட வேண்டும். நாம் மேட்டிமையானவைகளை சிந்தியாமல், தாழ்மையுள்ளவர்களுக்கு இணங்குங்கள். சிறந்த ஆடை அல்லது தங்க மோதிரம் அணிந்த மனுஷனுக்கு எந்த முன்னுரிமையும் கொடுக்காமல், நம்முடைய ஆண்டவரை போல, நம் பரலோக பிதாவின் சித்தத்தைச் செய்வோரை உயர்வாக மதிக்க வேண்டும். – ரோமர் 12:16, யாக்கோபு 2:1-5. “தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல” 1 யோவான் 4:16-18 இவ்வுலகத்தின் கருத்துக்களுக்கு இசைவாக நடப்பதுடன், அதன் வழிகளுக்கு இசைவாகவும் நடப்பதே, இந்த உலத்தோடு கூட்டுறவில் இருப்பதாகும். இந்த அர்த்தத்தில் நாம் அதை நேசிக்கமாட்டோம். ஆனால் அதிலிருந்து விலகி. அதை எதிர்த்து நிற்கவேண்டும். இவ்வாறு. நமக்கு சுட்டிக்காட்டப்படும் வழி, குறைந்தபட்சம் சில விதங்களில், ஒரு கடினமான வழியாகவும், ஒரு தனிமையான வழியாகவும் இருக்கிறது. ஆனால் அதுவே, அமைதியானதும், நீடிய மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய ஒரே வழியாகும். இச்சையினால் உண்டான இந்த உலகம் விரைவாக கடந்து செல்கிறது. அது வெறுமையானதும், திருப்தியற்றதும் இறுதியில் பேரழிவையும், பேராபத்துக்கும் வழிவகுக்கும். ஆனால், ஆண்டவரின் வழியில் பிரியமாக இருப்போர், அவரோடு ஆசீர்வதிக்கப்பட்ட ஐக்கியத்தையும் கூட்டுறவையும் பெறுவார்கள் உலகம் புரிந்துக் கொள்ள முடியாத ஒரு மூலத்திலிருந்து அவர்களுடைய மகிழ்ச்சி வருகிறது. அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் வாழ்கிறவர்கள், ஒரு தூய்மையான வளிமண்டலத்தை சுவாசிக்கிறவர்கள் உலகம் என்றுமே தரமுடியாத இனிமையான. பரிசுத்தமான நட்பை அனுபவிப்பவர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் எந்த மனுஷனாவது, இந்த உயர்ந்த சலுகைகளுக்கு பதிலாக, உலகம் வழங்கக்கூடிய சாதாரணமான காரியங்களைப் பெற்றுக்கொள்ள இறங்கினால். அவர் தன்னுடைய புரிந்துக்கொள்ளாத தன்மையை நிரூ பிப்பவராக இருப்பார். இவ்வாறு, பரலோக காரியங்களில் அவருடைய தகுதியற்ற தன்மையைக் காட்டுகிறது. பிதாவின் அன்பு அவரிடத்தில் இல்லை, மேலும் முடிவெடுக்கப்படும் தீர்ப்பு நாளைக் கண்டு அவர் அஞ்சலாம்.

F604 [P2] through F606 [P2] – புதிய சிருஷ்டியின் எதிரியாகிய உலகம்

இந்த பொல்லாத உலகத்துக்குரியவைகள் எல்லாம். கிட்டத்தட்ட நீதிக்கு உடன்படாததாக இருக்கின்றன. ஆகவே அவைகள் எல்லாம் ஏறத்தாழ புது சிருஷ்டிக்கும் அதன் நீதி நியமத்திற்கும் எதிர்மாறாக உள்ளன. பொதுவாக உலகின் நீதியைச் சுருக்கமாக கூறினால் – சுய நல நெறியாகும். உலகம் நீதியை அறிந்திருக்கிறது என்று உயர்வாக குறிப்பிட்ட அளவு உரிமை கொண்டாடினாலும் சுயநலம்தான் அங்கு காணப்படுகிறது. நாகரீகம் அடைந்துள்ள உலகத்தின் எல்லா சட்டங்களும் எல்லா கட்டுபாடுகளும் பொல்லாதது என்று நம்புகிறவர்கள் நாங்கள் அல்ல. அதற்கு மாறாக கிறிஸ்தவ உலகின் சட்டங்கள் எவ்வளவு உயர்வானதாக இருக்கிறது என்பதை பார்ப்பதில் நாம் அநேக வேளைகளில் ஆச்சரியப்பட்டுள்ளோம். எவ்வளவு சிறப்பானதாக உள்ளன. அவைகளில் பொரும்பாலானவைகள் பலவான்களிடத்திலிருந்து பெலவீனர்களின் நலன்களை காப்பதற்கும் எல்லாருக்கும் நீதியை செலுத்தவும் உண்டாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முழு உலகத்தின் ஒவ்வொரு சிந்தனையோடும். வார்த்தையோடும், செயலோடும், சுயநலம் பின்னியிருக்கும் போது, அதன் நீதியின் மிக உயர்வான கருத்துக்கள் சில வேளைகளில் வளைக்கப்பட்டு, முறுக்கப்பட்டு பறிக்கப்பட்டுள்ளது. என்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல.

இதற்கு மாறாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள சட்டப் புத்தகங்களில் காணப்படுகிற உயர்வான சட்ட திட்டங்களுக்கு விழுந்து போன மனுக்குலம் எட்டும்படியான இடத்திற்கு வந்திருப்பது நமக்கு ஆச்சரியமாக உள்ளது. மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம், நம்முடைய ஆண்டவராலும், அப்போஸ்தலர்களாலும் உதாரணமாகக் காட்டப்பட்டது, விருத்திப்பண்ணப்பட்டது, கனப்படுத்தப்பட்டது, விளக்கப்பட்டது. உண்மையில் இதுவே, மனித சட்டங்களுக்கு ஆதாரமாக அமைந்திருக்கிறது. இருந்தாலும் மனிதனுடைய சுயநலம் மனிதனுடைய நீதியின் வரையறையோடு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது என்பதை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள். மேலும் அவைகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒதுக்கி வைக்கப்பார்க்கிறது. இது உலகில் அதிகமாக முன்னேறிக் கொண்டே வருகிறது. இது புது சிருஷ்டியின் முக்கியமான கஷ்டங்களிலும், யுத்தங்களிலும் ஒன்றாக இருக்கிறது. உலகமும் அதன் பெருமையின் ஆவி, சுயநலம் போன்றவைகளும் புதுசிருஷ்டியின் முக்கியமான சத்துருக்களில் ஒன்று என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மனுக்குலம் முழுவதும், “இந்த உலகத்தின் ஆவியின்” கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இது ஒரு பெரிய நதியைப் போல ஒரு பொதுவான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. சில பகுதிகளில் வேகம் இருக்கிறது. மற்ற பகுதிகளில் அதிக மந்தமாக இருக்கிறது. ஆனாலும் எல்லாம் சுயநலம் என்கிற ஒரே திசையை பின்பற்றுகின்றன. புது சிருஷ்டி தன்னுடைய அர்ப்பணிப்பினால், அவனுடைய புதிய மனதின் ஆவியினால் ஒரு விரோதமான பாதையில் செல்ல கடமைப்பட்டுள்ளான். ஆகவே, தற்போதுள்ள பிரபலமான மனோபாவம், தத்துவங்கள், பரம்பரை பழக்க வழக்கங்கள் முதலானவைகளால் எதிர்க்கப்படுகிறான். விசித்திரமானவன் என்று குறிப்பிடப்படுகிறான். அவன் சந்திக்க வேண்டிய எதிர்ப்பு உண்டு, எதிர் திசையில் செல்படுபவர்களோடும், தன்னோடு தொடர்பு கொள்பவர்களோடும் விரோதம் காட்டவும் அவனுக்கு அவசியமாகிறது. மோதல் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அது வெளிப்படையான சமாதானத்தையல்ல வெளிப்படையான முரண்பாட்டை அர்த்தப்படுத்துகிறது. ஆனாலும் இந்த வெளிப்படையான முரண்பாடு உள்ளான சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் குறிக்கிறது. ஏனெனில் திவ்விய ஆமோதிப்பு உணரப்படுகிறது. உலகத்தின் நோக்கங்களும், இலக்குகளும், முறைகளும் எப்பொழுதுமே இழிவானதும் அநீதியானதுமாக இருப்பதில்லை. ஆனால் அதன் உயர்வான குறிக்கோள்களும் நோக்கங்களும் பொதுவாக புது சிருஷ்டியின் குறிக்கோள்களுக்கும் நோக்கங்களும் எதிராக உள்ளன. ஏனெனில் உலகம் மனுஷீக ஞானத்தின் துடிப்பின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் புது சிருஷ்டியோ பரத்திலிருந்து வருகிற ஞானத்தினால் இயக்கப்படுகிறான். உலக ஞானம் மதத்தின் மூலம் கெட்டவர்களை பயமுறுத்தி அடக்க உதவுகிறது. அது ஒழுக்கம் தயாளம், விசுவாசம், நம்பிக்கை. அன்பு என்பவைகளைக் குறித்து தன்னுடைய சொந்த கருத்துக்களை கொண்டுள்ளது. புது சிருஷ்டியின் வித்தியாசமான அணுகுமுறைகளை அது புரிந்து கொள்ள முடியாது. மேலும் புது சிருஷ்டியின் கருத்துக்களை, கடுமையானது. நியாயமற்றது போன்று எண்ணுவது பொருத்தமானது என்று நினைக்கிறது. காரணம் என்னவெனில் அது திவ்விய திட்டத்தைப் புரிந்துகொள்ளுகிறதில்லை. தற்கால வாழ்க்கை திவ்விய கருத்தின்படி எதிர்கால வாழ்க்கையோடு ஒப்பிடும்போது, முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்பதை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. உண்மையாகவே மனுக்குலம் உயர்த்தப்படுவதில் மனுஷீக முயற்சிகள் இயலாததை உலக ஞானம் ஏற்றுக் கொள்ளுவதுமில்லை. ஆண்டவர் தன்னகத்தில் வைத்திருக்கிற மாபெரும் உன்னதமான ஒழுங்குகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இவ்விதமாக இருக்கிறது. அவருடைய தற்போதைய கிரியை முடிந்தவுடன், தெரிந்து கொள்ளப்பட்ட சபை, ஏற்றுக்கொள்ளப்பட்டு, மெருகூட்டப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்படும். அதன் பிறகு தேவன் தன்னிடத்தில் வைத்திருக்கிற மாபெரும் உன்னதமான ஒழுங்கு, வெளிச்சத்திற்குள் முழுமையாக கொண்டு வரப்பட்டு, இராஜ்யத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். ஆகவே உலகமும் அதன் ஒழுக்கமும். மற்றும் மதத்தில் பற்றுடையவர்களும் வெறுத்தாலும்கூட புது சிருஷ்டி ஆச்சரியப்படக்கூடாது. உலகத்தின் இந்த வெறுப்பும், எதிர்ப்பும், சில சமயங்களில் கோபமூட்டுவதாக இருந்தாலும் கூட. விசுவாசத்தையும் பொறுமையையும் சோதிப்பதாக இருந்தாலும் கூட சாந்தத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் உலகமானது இன்னும் நூறு சதவீதம் இந்த உலகத்தின் அதிபதியால்” குருடாக்கப்பட்டுள்ளது. என்பதை ஞாபக்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

உலகமானது “மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களையும். ஆவியின் ஆழமான காரியங்களையும். பார்க்கிறதில்லை. இந்த ஆவியின் வெளிச்சத்தில் தேவனுடைய கிருபையால் நாம் எல்லாவற்றையும் இழப்புகள், பரீட்சைகள் போன்றவைகளை குப்பையும் தூசியுமாக எண்ண முடிந்தவர்களாக இருக்கிறோம். அதனிமித்தம் வேதத்தில் நமக்கு வாக்குத்தத்தம்பண்ணப்பட்டுள்ள அற்புதமான காரியங்களை நாம் பெறமுடிந்தவர்களாக இருக்கிறோம். உலகத்தின் ஆவிக்கு விட்டுக் கொடுப்பது என்பது, சமாதானத்திற்காக அதன் உணர்வுகளை நம்மை ஆதிக்கம் பண்ண அனுமதிப்பதும், ஆண்டவரைப் பற்றியும். சத்தியத்தைப் பற்றியும் அவருக்கு ஊழியம் செய்யும்படியான சிலாக்கியத்தைக் குறித்தும் தாழ்வாக எண்ணுவதற்கு இடம் கொடுப்பதாகும். இதனால் வரும் விளைவு என்னவெனில், உலகத்தனத்திற்கு முழுமையாக சென்ற தினிமித்தம் எல்லாவற்றையும் இழக்காவிட்டாலும் குறைந்தபட்சமாக, பந்தயப்பொருளை இழந்து, “திரள்கூட்டத்தில்” பங்கு பெற்று வரப்போகிற மகிமைக்கு சம்பந்தப்பட்ட ஒரு தாழ்வான இடத்திற்கு மாபெறும் உபத்திரவத்தின் மூலம் வருவோம். அப்போஸ்தலருடைய உறுதியான கட்டளை என்னவெனில், “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூறாதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை” (1 யோவான் 2:15) என்பதாகும். ஆகவே உலகத்தின் ஆவிக்கு இரக்கப்படுவதற்கு அல்லது விருப்பம் காட்டுவதற்கு ஏதுவான ஒவ்வொரு அறிகுறிக்கும் எதிராக நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும். இதனால் உலகத்தாராயிருக்கிற நம்முடைய நண்பர்களிடத்தில், அனுதாபம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதல்ல, அவர்கள் நலன்கள் போன்றவற்றில் அஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் உலகத்தாரிடத்தில் நம்முடைய கடமைகளைச் செய்ய ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்க வேண்டும். மரியாதை செலுத்தவேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்தவும், புகழ வேண்டியவர்களை புகழவும் வேண்டும். உதவி தேவைப்படுவர்களுக்கு உதவியையும், அன்பு தேவையுள்ளவர்களிடத்தில் அன்பையும், இரக்கம் தேவையுள்ளவர்களுக்கு இரக்கத்தையும் காட்ட வேண்டும். இருந்தாலும், இன்னும் சத்துருவின் செல்வாக்கின் கீழ் இருக்கிற நம்முடைய நண்பர்களுக்கும், அயலகத்தாருக்கும் வித்தியாசத்தை காட்ட வேண்டும். இந்த சத்துருவின் செல்வாக்கு, ஆவி மற்றும் அவனுடைய குணாதிசயம் அவர்களை நடத்துகிறது. அவர்களை வஞ்சிக்கிறது.

தற்போதுள்ள எந்த ஸ்தாபனத்தோடும் நாம் அனுதாபம் உள்ளவர்களாக இருக்கக் கூடாது. அவைகள் சுயநலத்தை சார்ந்தவைகளாகும். அவைகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ திவ்விய கட்டளையாகிய பொன்னான கற்பனைக்கு எதிரானவைகளாக உள்ளன. உலகத்தில் காணப்படுகிற சுய நலம் என்கிற வழியில் நம்முடைய அலுவல்களை அதிகமாக நடத்துவது அவசியமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து கேள்வி கேட்பதை நிறுத்தாமல் செய்யவேண்டும். நம்முடைய இருதயங்கள் சுயநலக்கொள்கைகளுக்கு அனுதாபம் காட்டாத நிலையில் வைக்கப்பட வேண்டும். அப்படி செய்யும்போது நம்முடைய வாழ்க்கையின் எல்லா அலுவல்களிலும், கூடுமானவரை நாம் உலகத்தோடு கொண்டுள்ள காரியங்களிலும் பொன்னான கற்பனை முழுமையாக ஆளுகை செய்யும்படி விரும்புவோம்.