அன்பானது எவ்வாறு “புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்” – ஆக இருக்கும்?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-LOVE-Q-21

அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?

How is love the “law of the New Creation”?

F364 P1 through F367 P2

இந்தப் புது சிருஷ்டி தேவனுடனும், மற்றும் அவரது பிரமாணங்களுடனும் கொண்டுள்ள தொடர்பு மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறானதும் தனிப்பட்டது மாகும். அவர்கள் விசுவாசத்தினால் தேவனோடு ஒரு புதிதானதும் நல்ல நிலையையும் உடையவர்களாக எண்ணப்படுகிறார்கள். அது நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறபடி நீதிமானாக்கப்பட்ட நிலை அல்ல அப்படி எண்ணப்பட்ட நிலையாகும். இந்த நீதிமானாக்கப்பட்ட நிலை அவர்களுக்குக் கிறிஸ்துவின் பலியினால் உண்டான புண்ணியத்தினிமித்தம் கொடுக்கப்பட்டது. அது கடந்த காலத்தின் பரிபூரணமற்ற தன்மைகளை மூடுவது மாத்திரமன்றி, அவர்களோடே இருந்து ஒரு மூடுகிற, நீதிமானாக்குகிற, நீதியின் வஸ்திரமாக உள்ளது. இந்த புண்ணியத்தினால் மனப்பூர்வமாக செய்யப்படாத ஒவ்வொரு குறையையும், வார்த்தையில், சிந்தனையில் அல்லது செயலில் உள்ள கறையையும் மூடிவிடுகிறது. புது சிருஷ்டிகளாக அவர்கள் எல்லோரும் வெண் வஸ்திரத்தினால் உடுத்திவிக்கப்படுவதாக கற்பனை செய்து பார்க்கப்படுகிறார்கள். அந்த வஸ்திரம் பரிசுத்தவான்களின் நீதியும், அவர்கள் தலையாயிருக்கின்ற மீட்பரால் அளிக்கப்பட்ட நீதியுமாகும். இந்தப் புதுசிருஷ்டிகள் அவர்களுடைய அன்பை வெளிக்காட்டும் போது அவர்களுடைய நிலைக்கும் கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கங்கள் என்ற உறவு முறைக்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். தேவனுடைய குமாரனின் மரணத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனின் இரக்கத்தையும், கிருபையையும் அவர்கள் அவ்வளவாய் உணர்ந்திருக்கிறார்கள். அவர் மூலமாக நீதிமானாக்கப்பட்டதையும், அவர்கள் அதன்மூலம் அவர்களுக்கு எல்லா ஈவுகளையும் கொடுக்கிறவரை நேசிப்பதாலும், திவ்விய அழைப்புக்கு ஏற்ப தங்கள் சரீரங்களை ஜீவ பலியாய் ஒப்புக்கொடுப்பதில் அவர்களுக்குச் சந்தோஷம் உண்டு என்பதை வெளிப்படுத்துவதின் மூலமாய் அவர்களுடைய அர்ப்பணிப்பைத் தெரிவிக்கிறார்கள்.

பூலோகத்தின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும், குறிக்கோள்களையும், எதிர்காலத்திட்டங்களையும் அர்ப்பணிப்பது, அல்லது பலியாக செலுத்துவது என்பது பயத்தினாலோ அல்லது வெகுமதி கிடைக்கும் என்று சுயநல ஆசையினாலோ வருவது அல்ல, ஆனால், சுத்தமான அன்பினாலும், திவ்விய அன்பை உணர்ந்துகொள்வதாலும், தேவனுக்கு நேராகத் தன்னுடைய அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற வாஞ்சையாலும், அவருடைய எல்லாவிதமான அற்புதமான திட்டங்களோடும் ஒத்துப் போவதாலும் வருவதாகும். இப்படியாக அன்பையும், வாஞ்சையையும் வெளிப்படுத்தும்போது, அது ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது, அவருடைய ஆவி கொடுக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தேவ புத்திரர் என்றும், பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்கள் என்றும் எண்ணப்படுகிறார்கள். “பிரியமானவர்களே. இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போம் (ஆண்டவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற புதிய மறுரூபமாக்கப்பட்ட சரீரங்களை நாம் பெறும்போது, எப்படிப்பட்ட மாற்றத்தை நாம் அனுபவிப்போம்) என்று இன்னும் வெளிப்படவில்லை ஆகிலும் அவர் வெளிப்படும் போது, அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். (இந்தச் சிந்தனை நமக்கு திருப்தியாயிருக்கிறது.) 1 யோவா 3:2.

பரலோகப் பிதா தன்னுடைய தேவபுத்திரரை (தேவதூதர்களை) சீனாய் மலையின் நியாப்பிரமாணத்திற்குக் கீழாக்கியிருக்கிறாரா? அவர்களுக்கு வேறு தேவர்கள் இருக்கக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கிறாரா? அவர்கள் யாதொரு சொரூபத்தையும் உண்டாக்கக்கூடாது. அவர்களை நமஸ்கரிக்கவும் கூடாது, அவர்கள் இச்சியாமலும், திருடாமலும், பொய் சொல்லாமலும், கொலை செய்யாமலும் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறாரா? நாம் இல்லை என்று சொல்லுகிறோம். நிச்சயமாகவே அவர் தன்னுடைய தேவ தூதர்கள் மேல் இப்படியான ஒரு பிரமாணத்தை வைக்கவில்லை. அப்படியானால் ஏன் இப்படியான ஒரு பிரமாணம் புது சிருஷ்டிக்குக் கொடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும்? பரலோக தகப்பன் இந்தப் புது சிருஷ்டிப்புகளைத் (தேவ தூதர்) தன்னுடைய குமாரராக ஏற்றுக் கொள்ளவில்லையா? மேலும் அவர் தன்னுடைய ஆவியை அவர்களுக்குக் கொடுக்க வில்லையா? மேலும் தங்களுடைய சுபாவத்தின் படியான சுய நல நோக்கங்கள் அல்லது சித்தத்திற்குப் பதிலாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இப்படிப்பட்ட பிரமாணங்களைக் கொடுபபது அவசியமாயிருக்குமா? பணிவிடைக்காரரை பிரமாணங்களுக்குக் கீழாகப் போடுவது சரியானதென்று நாம் பார்க்கக்கூடும், ஏனெனில் அவர்கள் முக்கியமாக பொதுவான நலத்தில் நாட்டமுள்ளவர்கள் அல்ல, மேலும் தங்களுடைய எஜமானருடைய ஆவியையோ அல்லது நோக்கத்தையோ முழுமையாகப் பெற்றிராமல் இருக்கலாம். ஆனால் பரிபூரணமான ஒர் எஜமான் பரிபூரணமான குமாரர்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் அவருடைய ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள். அவருடைய சித்தத்தைச் செய்ய வாஞ்சை உள்ளவர்களாய் இருக்கிறார்கள். அவருடைய மகிமையான திட்டம் எல்லாவற்றிலும் அவரோடு சக வேலையாட்களாக இருக்க விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது இப்படிப்ட்ட ஒரு தகப்பனுக்கு இப்படிப்பட்ட குமாரர்களை இப்படிப்பட்ட பிரமாணங்களுக்குக் கீழாக வைப்பது எப்படி அவசியமாகும்?

“மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கு உண்மையுள்ளவனாய் இருந்தான்.” அவர் வீட்டிலுள்ள பணிவிடைக்காரர்கள் அனைவரும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு கீழாக இருந்தார்கள். “வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாக கூட்டப்பட்டது. “மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசு, பிரமாணமானது நீதியானது என்பதைக் காட்டுவதற்காக மாத்திரம் அல்லாமல், மாம்சத்தில் தன்னுடைய பரிபூரணத்தை வெளிப்படுத்தும்படியாகவும் அவர் உலகத்தை மீட்கக்கூடும் என்பதற்காகவும் அவர் மரணத்தின் கீழாகத் தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்தார். மரித்தோரிலிருந்து அவர் எழும்பி “மரித்தோரிலிருந்து முதற்பலனான போது” அவர் புது சிருஷ்டியின் தலையாக அநேக சகோதரருக்குள் முதற்பலனானார். மாம்சத்தின்படி அவர் பிரமாணத்திற்குக் கீழாக இருந்தார், ஆனால் புது சிருஷ்டியாகிய உயிர்த்தெழுந்த ஆண்டவர் பிரமாணத்திற்குக் கீழாக இல்லை, மேலும் அவர்தாமே குமாரர்களின் புதிய வீட்டிற்குத் தலைவரானார். “கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார். அவரை பற்றிக்கொண்டிருப்போமாகில் நாமே அவருடைய வீடாயிருப்போம்” நாம் இன்னும் மாம்சத்தில் இருந்தாலும், புதிய சிருஷ்டிகளாகிய நாம் மாம்சத்திற்குரியவர்கள் அல்ல, மேலும் நாம் மாம்சத்திற்குரியவர்களாக எண்ணப்படுவதில்லை. உலகத்தில் உள்ள மற்றவர்களை எண்ணுவதுபோல, நாம் தேவனால் எண்ணப்படுவதில்லை. ஆனால் புது சிருஷ்டிகளாக ஒரு கூடாரத்தில் அல்லது தற்காலிக வாசஸ்தலத்தில் சுவிகாரத்திற்காகக் காத்திருந்துகொண்டு சொல்லப்போனால் நம்முடைய முழு சரீரமும் விடுதலை அடையும்படி, ஏற்கெனவே மகிமை அடைந்த நம்முடைய தலையாக இருக்கிறவரோடு அவரைப் போல இருக்கும்படி, சொற்பகாலத்திற்குப் பரதேசிளாக இருக்கிறோம். “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்திற்குட்பட்டவர்களாயிராமல் (தேவனால் அப்படி எண்ணப்படுகிறோம்) ஆவிக்குட்பட்ட வர்களாயிருப்பீர்கள்.” (ரோமர் 8:8-9)

இந்த திவ்விய நோக்கோடு இதைப் பார்க்காவிடில், யாரும் இந்த விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியினால் பிறந்த இந்தப் புது சிருஷ்டிகள் எல்லாம், அவர்கள் ஒரு தேவனைத் தவிரவேறு தேவனை உடையவர்களாய் இருக்கும்படியாக நினைக்கவும் முடியாது. அவர்களால் சொரூபங்களை உண்டாக்கவோ அவைகளைத் தொழுது கொள்ளவோ நினைக்க முடியாது. அவர்களால் தேவனுடைய நாமத்தை தூஷிக்கும்படியாகவும் நினைக்க முடியாது. அவர்களால் மற்றவர்களிடமிருந்து திருடவும் நினைக்க முடியாது. கொடுக்கத்தான் விரும்புவார்கள், அவர்களால் மற்றவர்களுக்கெதிராக பொய் சாட்சி சொல்லவும் நினைக்க முடியாது அதற்குப்பதிலாக அவர்களுக்குள் இருக்கின்ற அன்பு, கறைகளை மூடவும் மறைக்கவும் முயற்சிக்கும், அதுவும் சகோதரருக்குள் உள்ளவைகளை மாத்திரம் அல்ல பொதுவாக உலகத்தாருடையதையும் கூட, அவர்களால் சக சிருஷ்டியைக் கொல்ல நினைக்கமுடியாது அதைக்காட்டிலும், அவர்கள் தங்களுடைய ஜீவனை மற்றவர்களுக்குக் கொடுப்பார்கள், அதுவும் பரிபூரணமாக, ஆம் அவர்களுடைய பரிசுத்த ஆவி அவர்களுடைய சகோதரருக்கென அவர்களுடைய ஜீவனையே கொடுக்கும்படியாக தூண்டும். அதே பரிசுத்த ஆவி நம்முடைய இரட்சிப்பின் தலையானவரை தன்னையே மீட்கும் பொருளாகக் கொடுக்கத் தூண்டியது போன்று தேவன் புது சிருஷ்டிக்கென ஒரு பிரமாணத்தை குமாரர்களின் வீட்டாருக்கும், பணிவிடைக்காரர்களின் வீட்டாருக்கும் கொடுத்தது போன்று கொடுத்திருப்பாரென்றால், அது முற்றிலுமாகப் பொருத்தமற்றதாக முழுவதுமாக தகுதியற்றதாக இருந்திருக்கும் என்று நாம் பார்க்கவில்லையா? இந்த “குமாரர்களின் வீட்டின் அங்கத்தினர்கள்,” பரிசுத்த ஆவியை இழந்து போகாமல், புது சிருஷ்டியாக இருப்பது நின்று விடாமல் இப்படியான ஒரு பிரமாணத்திற்கு ஒத்துப்போக முடியாது. “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் (மனம், சிந்தை) அவருடையவன் அல்ல” (ரோம 8-9)

ஆனால் எப்படி இந்தப் புது சிருஷ்டிகள் ஒரு பிரமாணமோ, சில ஒழுங்குகளோ இல்லாமல் இருக்கமுடியும்? திவ்விய பிரமாணத்தின் உன்னத செய்தி அன்பு என்று நாம் பதில் கூறுகிறோம். தேவனுடைய கட்டளைகள் அவ்வளவு விரிவாக, ஆழமானதாக, கணுக்களையும் ஊணையும் பிரிக்கத்தக்கதாயும் உள்ளது, ஆகவே அவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டுமென்றால் அன்பினாலேயேயன்றி முடியாது. பிரமாணத்தின் ஒவ்வொரு பகுதியும் கண்டிப்புடன் நிறைவேற்றப்பட்டாலும், தேவனுக்கென்று பயபக்தியுடன் கூடிய அன்பின் உணர்வு இல்லா விட்டால், திவ்விய பிரமாணம் திருப்தி அடையாது. அதற்கு மாறாக, அன்புதான் பிரமாணத்தின் நிறைவாகும். மேலும் எங்கு அன்பு ஆட்சி செய்கின்றதோ, அங்கெல்லாமல் திவ்விய ஒழுங்கின் ஒவ்வொரு பகுதியும். ஒவ்வொரு அம்சமும், சிருஷ்டியினால் முடிந்த அளவுக்கு தேடிப்பிடிக்கப்பட்டு, மனப்பூர்வமாகக் கீழ்ப்படிதலினால் நிறைவேற்றப்படும். அதுவும் பலவந்தத்தினால் அல்ல. ஆனால் மகிழச்சியினாலும், அன்பினாலும் அப்படி ஆகும்.

இப்படியான தேவனுக்கான அன்பையும், அவருடைய நீதியையும் புது சிருஷ்டியானது அர்ப்பணிப்பின் போது பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது. மேலும் அன்பே அதன் பிரமாணமாயிற்று, அது மரணபரியந்தம் கூட அன்பினால் உறுதியாகக் கட்டப்பட்டுள்ளது. உடன்படிக்கையிலான உறவின்படி பிரமாணத்திற்கு எவ்விதத்திலும் கீழ்ப்படியாமல் இருப்பது ஒரு மீறுதலாகும். அறிவின்படி இயன்ற அளவுக்கு அந்த அன்பின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவது என்பது சுய தியாகமும், உலகத்தின் ஆவியின் மேல் வெற்றியும், மாம்ச பெலவீனங்களின் மேல் வெற்றியும் சத்துருவின் மேல் வெற்றியும் ஆகும். மனப்புர்வமாகச் செய்யப்படாத கறைகளை ஆண்டவருடைய கிருபை ஈடு செய்கிறது. மேலும் இப்படிப்பட்ட வெற்றி பெற்றவர்களை அவருடைய சொந்த நாமத்தினாலும் புண்ணியத்தினாலும் கொண்டு வருவதும் ஆகும். ஆகவே, இன்னொரு பக்கம் மனப்பூர்வமாக அதற்குக் கீழ்ப்படியாமல் இருப்பது, இந்த அன்பின் பிரமாணத்தை வேண்டுமென்றே, அடிக்கடி மீறுவது என்பது சுவிகாரத்தின் ஆவியை இழந்துபோதல் என்றும், பரிசுத்த ஆவியை அவித்துப் போடுதல் என்றும், புது சிருஷ்டி இறந்துவிட்டது அல்லது இல்லாமல் போய்விட்டது என்று பொருள்படும்.