CD-EVILSPEAK-Q-28
T62 [p3]: –
இவைகள் நம்முடைய இருதயத்தில் என்னென்ன பாடங்களை புகட்டுகிறது? பரிசுத்த ஸ்தலத்தில் நம்முடைய பலிகள் உண்மையாக செலுத்தப்படும் வரை அல்லது பிரகாரத்தில் விசுவாச வீட்டாரின் ஐக்கியத்தில் விசுவாசத்தை காத்துக் கொள்ளும் வரை, இக்காலத்து உண்மையான பலிகளை நாம் மாசுபடுத்துவதில்லை. மேலும் நாம் இந்நிலையில் இருக்கும்பட்சத்தில் பகை, குரோதம், பொறாமை போன்ற துர்க்குணங்களினால் நாம் குருடாக்கப்படுவதில்லை. ஆகவே, அங்கீகரிக்கப்படும் பலிகளை நம் மனக் கண்களினால் உணர முடிகிறது. இப்படியிருக்க, ஒரே பலியை ஒரே தூபபீடத்தில் பங்காளிகளாக சகோதரர்களாக ஒருமித்து செலுத்தின பின் ஒருவர் மற்றொருவரைக் குறித்து குறை பேசும் அளவுக்கு வெவ்வேறு ஆவிகளை பெற்றுவிட்டார்கள். இவர்கள் எதிராளிகள் அல்லவே. இப்படியிருக்க காரியங்களுக்கு உண்மையில் நாம் அஞ்ச வேண்டும். (எபி 4:1) ஏனெனில், இப்படி பேசுபவர்கள் பரிசுத்த ஸ்தலத்தை விட்டும் வெளியே சென்று “காரிருளுக்குள் பிரவேசித்து விடுகிறார்கள். (உலகம்) நம்மால் முடிந்த வரைக்கும் அவர்களை மீண்டும் வெளிச்சத்திற்கு அழைத்து வர முயற்சிக்க வேண்டும். (யாக் 5:20) இந்தக் காரியங்களை செய்யும் போது தீமைக்கு பதில் தீமை செய்யாமல், பழிக்கு பழி வாங்காமல், எந்தச் சூழ்நிலையிலும் நாம் பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியேறாதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். விசுவாசத்தில் வளரக்கூடிய ஆசாரியர்கள் மகா பிரதான ஆசாரியனின் அடிச்சுவட்டை அவசியமாக பின்பற்ற வேண்டும். சத்துருக்களை நேசித்து தங்களை உபத்திரவப்படுத்துபவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். “பாடுபடும் போது பயமுறுத்தாமலும் வையப்படும்போது திரும்பி வையாமலும் நியாயமாய் தீர்ப்பு செய்யக்கூடிய தேவனிடத்தில் தன்னை ஒப்புக் கொடுத்த நம் ஆண்டவரை போல நாம் இருக்க வேண்டும். (1 பேதுரு 2:23)
R3275 [col.p4,5]: –
“ஒருவரையும் அவதூறாக பேச வேண்டாம்.” என்று வசனங்கள் அறிவிக்கிறது. இந்தக் காரியத்தை உண்மையான் வெளிச்சத்தில் காணக்கூடிய “ஒவ்வொருவரும் தேவன் பேரிலும், அவருடைய நீதிக்காகவும், பற்றி எரிகிற வைராக்கியத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வைராக்கியத்தில் சகல விதமான பலவீனங்களும், பாவங்களும் விசேஷமாக நம்முடைய சொந்த மாம்சத்தில் இருக்கும் குறைகளையும் சுட்டெரித்துவிடும். ஆனால் ஒருவேளை மற்றவர்களை குறித்து குறை பேசுகையில் தேவனுக்கு, அவருடைய அன்பின் ஆவிக்கும் எதிரிடையாக செயல்படுகிறவர்களாய் இருப்போம். ஆண்டவரின் சரீர அங்கங்களைக் குறித்து நாம் குறைபேசுவது அவருடைய பார்வையில் மிகப் பெரிய தீமையாய் இருக்கும். இந்தத் தீமையை செய்பவர்கள் முதலில் தேவனுடைய இரக்கத்தை இழக்க வேண்டியதாய் இருக்கும். அதற்குப் பின் அவரை விட்டும் அவருடைய சரீரத்தை விட்டும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடும்.”
உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு (சாராளின் உடன்படிக்கையின் கீழ் விசுவாச வீட்டார், கிறிஸ்துவின் சகோதரர்கள்) அவதூறு உண்டாக்குகிறாய். இவைகளை நீ செய்யும்போது – நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.” (சங் 50:19-22)