Q-16
“1 பேது 5:10 – “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன் தாமே கொஞ்சகாலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்டுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலை நிறுத்துவாராக.
R1860 (col.2 P1)
ஆண்டவருக்குள் இருக்கும் சகல நண்பர்கள் மேல் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பும் பரிவும் இருப்பதினால் அப்போஸ்தலன் மிகுந்த அக்கறையுடன் நல்வாழ்த்துக்களோடு இந்த அறிவுரையைக் கூறுகிறார் – (1 பேதுரு 5:10) நாம் கிறிஸ்துவுக்குள் நல்ல போர் சேவர்களாக தீங்கநுபவித்தால் மட்டுமே தேவன் விரும்பும் நிலையை நாம் அடையமுடியும். அதாவது, பூரணமான தன்னடக்கம், தீமையைத் தடுத்து நிற்கும் ஆற்றல், விசுவாசத்தை ஸ்தாபிப்பது, பொறுமை, சிறந்த நல்லொழுக்கத்தோடு கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து, அவருடைய வாக்குத்தத்தமான வார்த்தைகளில் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி ஆண்டவருடைய ஊழியத்தைத் தொடர்ந்து நடப்பிக்கையில் பேதுருவின் வாழ்க்கையில் நடந்த சொந்த அனுபவங்களாக இருந்தது. அதேபோல் காலப்போக்கில் நாமும் இப்படியாகப் பெற்றுக் கொள்வோம். ஆகவே நாம் ஒவ்வொருவரும் எல்லா குணங்களிலும் பூரணமான சிகரத்தை அடைய முயற்சிப்போம்.