CD-LOVE-Q-11
F238[P2]: –
நியாயமாக அவர்கள் அப்போஸ்தலரின் நிலையை ஆசைப்படவோ, எதிர்ப்பார்க்கவோ முடியாது. ஏனெனில் அன்று பன்னிரண்டு பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் அவர்கள் தீர்க்க தரிசிகளாகவோ அல்லது போதகர்களாகவோ இருக்க விருப்பம் கொண்டிருக்கலாம். அப்போஸ்தலர் மேலும் “இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்று கூறுகிறார். (வசனம் – 31) “ஆயினும்”, எந்த ஒரு வரங்களுக்கும் அல்லது சபைகளில் எந்த வேலைகளுக்கும் மேலாக ஆண்டவரின் அன்பின் ஆவியை அதிக அளவில் பெறுவதே கனத்திற்குரியது என்று காட்டுகிறார். அவர் சுட்டிக்காட்டுவது என்னவென்றால் சபையில் பரிபூரண அன்பை உடைய தாழ்மையுள்ள அங்கத்தினர், ஆண்டவருடைய பார்வையில் அன்பு என்னும் கிருபையில் குறைவுபட்டுள்ள எந்த ஒரு அப்போஸ்தலர் அல்லது தீர்க்கதரிசி அல்லது போதகரைக் காட்டிலும் மேலான இடத்தை அடைந்து விட்டார் என்பதாகும். ஆகவே ஆவியின் கனிகளாகிய அன்பு, விசுவாசம். நம்பிக்கை – மற்ற வரங்களைக் காட்டிலும் சிறந்தது என்பதை அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார். எப்படிப்பட்ட வரங்களை பெற்றிருந்தாலும் சரி, அன்பிராவிட்டால், தேவனுடைய பார்வையில் அவர்கள் ஒன்று மில்லாதவர்களும், அவருடைய கிரியைகள் அதிருப்தியைத் தரக்கூடியதாகவும் இருக்கும் என்று அவர் கூறுகிறார். எப்படிப்பட்ட வரங்களை பெற்றிருந்தாலும் சரி, அன்பிராவிட்டால், தேவனுடைய பார்வையில் அவர்கள் ஒன்றுமில்லாதவர்களும், அவர்களுடைய கிரியைகள் அதிருப்தியைத் தரக்கூடியதாகவும் இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
R2225[col.2 P2]: –
ஆரம்பக்கால சபையில் மிக முக்கியமான ஆசீர்வாதங்களாகிய, பரிசுத்த ஆவியின் முத்திரை, அன்பின் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் ஆகியவற்றைக் காட்டிலும். பல மொழி பேசுதல், குணமாக்குதல், அற்புதங்கள் நிகழ்த்துவது போன்ற வரங்கள் மிக முக்கியம் என்று விசுவாசிகள் இயற்கையாகவே யோசித்தார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், ஆவியின் கனிகளாகிய, விசுவாசம், நம்பிக்கை, அன்பு முக்கியம் ஆனால், அந்நிய பாஷைகள், அற்புதங்கள் மற்றும் பிற வரங்கள் முக்கியமல்ல என்ற உண்மையை நம்முடைய ஆண்டவர் அப்போஸ் தலரின் வழியாக அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவது மிக அவசியமாக இருந்தது. எனவே, “இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்று அப்போஸ்தலர் கூறுகிறார் அன்பைப் பின் தொடர்ந்து, அதன் வளர்ச்சியும் முதிர்ச்சியும் படிப்படியாக முற்போக்கான வேலையாக இருக்கும். அனேகமானோர், “பலவிதமான” வரங்கள், “குணப்படுத்தும் வல்லமை, அற்புதம் செய்யும் வல்லமை, அந்நிய பாஷை பேசுவதற்கான திறமை ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். ஆனால், இவைகளோடு தேவ ஆவி, கிறிஸ்துவின் ஆவி, சத்திய ஆவி, அன்பின் ஆவியை அவர்கள் பெறாவிட்டால், அவர்கள் ஓசையிடுகிற தாளங்கள் போலவும், சத்தமிடுகிற வெண்கலம் போலவும் இருப்பார்கள். இவர்கள் ஆவிக்குரிய ஜீவன் அல்லது எதிர்கால வாழ்க்கை அல்லது இராஜ்யத்திற்குரிய எந்த விதமான சரியான நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்கள்.