CD-LOVE-Q-37
R3594 [col. 1 PIII to IV ]
மற்றவர்களின் வார்தைகளின் மூலம் நாம் எளிதில் சினம் கொள்ளக்கூடாது. மற்றவர்களுடைய கிரியைகளிலும் வார்த்தைகளிலும் அன்பான காரியங்களை மட்டுமே கண்ணோக்க வேண்டும். வெறுப்பூட்டும் அற்பமான காரியங்களை அன்பு மற்றும் தாராள மனதோடு கவனியாமல் விட்டுவிடவேண்டும். பெரிதான குற்றங்களை பார்க்கும் போது அவைகளுக்கான விசாரணையில் மிக அன்பான வார்த்தைகளை கொண்டு நடத்த வேண்டும். குற்றவாளிகளின் கோபத்தை கிளறி விடாதபடிக்கு நம்முடைய பேச்சு, கிருபை பொருந்தினதாக இருக்கவேண்டும். எந்த குற்றங்களும் திட்டமிட்டு செய்யக்கூடியதாக நாம் எண்ணக்கூடாது. இவ்வாறு நாம் நடந்து கொண்டால் அநேக குற்றங்கள் குற்றங்களாக பொருள்படாது.
புறங்கூறக்கூடாது என்று நம்முடைய வசனங்களில் கற்பனையாக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவருடைய கிரியைகளையும் வார்த்தைகளையும் வைத்து தீமையான எண்ணங்களையும் நோக்கங்களையும் நாம் கற்பனை செய்யக்கூடாது. தெய்வீகமான இயேசுவின் வார்த்தைகளுக்கு இவைகள் எதிரிடையானது என்று அப்போஸ்தலர் கூறுகிறார். ஏனெனில் இது மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியையாகும். (1 தீமோத்தேயு 6:3,5, கலாத்தியர் 5:19-21)
தேவனுடைய ஜனங்களாக ஜெநிப்பிக்கப்படுவதற்கு காரணமாய் இருக்கும் அன்பின் ஆவியை நாம் நித்தமும் நமக்குள் பெருக்கிக்கொள்வதற்கு அப்போஸ்தலர் நமக்கு அறிவுரை கூறுகிறார். இதில் நாம் அடையும் வளர்ச்சியே “ஜெயிப்பவர்களுக்கான ஆதாரம் ஏனெனில் – “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது… சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” (1 கொரிந்தியர் 13) என்று கூறுகிறார்.
இப்படிப்பட்ட குணங்களை வளர்ப்பதற்கு தடையாக தீமையான குணங்கள் அடிக்கடி வருவதுண்டு. அன்பின் ஆவி உடையவர்கள் மிகவும் மிருதுவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்பின் ஆவியில் வளர்ச்சி அடையக் கூடியவர்கள் கர்த்தருக்கு பயப்படக்கூடிய பயம் இன்னதென்று எளிதில் உணர்ந்து கொண்டு அவர்களுடைய அந்தரங்கமான இருதயத்தில் வெளிப்படுத்துவார்கள். தீமையை காணும்போதே இவர்கள் எச்சரிப்போடு நடந்து கொள்வார்கள். தீமையான எண்ணங்களை வலுகட்டாயமாக விரட்டும் வரைக்கும் அவர்கள் கண்ணுரங்க மாட்டார்கள். இதனிமித்தம் சில நேரங்களில் சில நஷ்டங்களை சந்திக்க வேண்டியதாயிருக்கும். நமக்கு எந்தளவுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அதை நிறைவாக்குவதற்கு தேவன் வல்லமையுள்ள வராயிருக்கிறார். ஏனெனில் தம்மில் அன்பு கூர்கிறவர்களுக்கு சகலமும் நன்மைக் கேதுவாய் நடத்துகிறார். தம்முடைய ஒழுங்ககளுக்கு கீழ்டிப்படியகூடியவர்களுக்கு தேவன் முதலிடத்தை கொடுக்கிறார். (பலி செலுத்துவதற்கு முன்) “என்னுடைய கற்பனைகளை கைக்கொள்ளுவீர்களானால் எனக்கு சீஷராயிருப்பீர்கள்.”
தீமையான புறங்கூறுதலை நடப்பித்து தேவனுடைய கற்பனைகளை புறக்கணிக்கிறவர்கள் தாங்களே சிக்கிக்கொள்ள வலையை பின்னுகிறார்கள். ஏனெனில், சந்தேகம் நிறைந்த இருதயமுள்ளவர்கள் சகோதரர்களை மட்டுமல்ல தேவனுடைய காரியங்களையும் சந்தேகப்படுவார்கள். இந்த சந்தேகமானது கசப்பு மற்றும் பாவமான வைராக்கியங்களை பிறப்பிக்கும். இவைகள் அனைத்துமே தேவனுடைய ஆவிக்கும் அன்பின் ஆவிக்கும் விரோதமாக யுத்தம் செய்யக்கூடியது. இதில் ஏதோ ஒன்று ஜெயிக்க வேண்டும். தவறான ஆவி விரட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் கொடுக்கப்பட்ட புதுசிருஷ்டி அழிக்கப்படும் அதற்குபதிலாக புது சிருஷ்டி ஜெயித்து விட்டால் நாம் ஜெயிப்பவர்களாக காணப்படுவோம். இவை அனைத்தும் நம்முடைய இருதயத்திலிருந்து தோன்றக்கூடியவைகள். நம்முடைய வார்த்தைகள் கிரியைகள் நன்மையாக இருந்தாலும் தீமையாயிருந்தாலும் இவை களுக்ககு இருதயத்தின் எண்ணமே காரணமாக இருக்கிறது.
உங்களை பற்றி ஒருவர் புறங்கூறுவதாக நீங்கள் கேள்விபட்டால் முதலில் நீங்கள் உங்களை திருத்தி கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக நாம் புறங்கூறி இரட்டிப்பான தவறுகளை செய்யவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் தீமைக்கு பதில் தீமை செய்ய வேண்டாம் என்ற கற்பனையை நாம் பெற்றிருக்கிறோம். உங்களுக்கு எதிராக தவறான காரியங்கள் சொல்லப்பட்டாலும் அதற்கு பதிலாக உண்மையான காரியங்களையும் சொல்லவேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்களும் புறங்கூறுபவர்களாக மாறிவிடாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவைகளே நமக்கு முன் வைக்கப்பட்ட சோதனைகள் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.
இது வசனங்களின் அடிப்படையிலான ஒரு பிரமாணமாகும். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமா அவைகளை நாமே முதலில் செய்ய வேண்டும் என்று ஆவிக்குரிய கற்பனையை பெற்றுள்ளோம். நமக்கு ஒருவர் தீங்கு செய்தால் அதற்கு பதிலாக நாம் தீமை செய்வது எந்த விதத்திலும் நீதியாகாது. “நன்மையான பலன் கிடைப்பதற்கு தீமையான காரியங்களை செய்யலாம்” என்ற சாத்தானுடைய கருத்துக்கு உண்மையான தேவ ஜனங்கள் என்றும் இணங்கக்கூடாது. புறங்கூறுகிறவர்களின் தவறான காரியங்கள் சாத்தானை பின்பற்றி அநீதியான ஊழியக்காரர்களாய் மாறி தீமையான அறிக்கைகளை சோர்வில்லாமல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்று அனுபவங்கள் நிரூபிக்கிறது. நாம் இவைகளை மனப்பூர்வமாய் செய்வதற்கு துணிந்தால் சந்தேகத்திற்கு இடமின்று சாத்தான் நம்மை சிறப்பாக வழிநடத்தி சுவிசேஷத்தின் நற்செய்தியை பரப்புவதை தவிர நம்மேல் அவன் ஜெயம் கொள்ளுவான் நாமோ நஷ்டமடைவோம்.
நம்முடைய பந்தய பொருளை பெற்றுக் கொள்வதற்காக அழைக்கப்பட்ட அழைப்புக்கு கீழ்படிந்து நம்மை நாம் அவருடைய பாதத்தில் ஒப்புக்கொடுத்து பலி செலுத்தி நம்முடைய தெரிந்து கொள்ளுதலை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனிமித்தமாக நாம் நஷ்டமடைந்தால் நிச்சயமாக நம்முடைய பலன் பரலோகத்தில் மிகுதியாயிருக்கும். இறுதியில் வெற்றிபெற்றவர்களாக முடிசூட்டப்படுவோம்.