தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-PRAYER-Q-45

தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?

What is the import of “the model prayer” our Lord taught his disciples?

மத்தேயு 6:9-13 “நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும் எங்ககளை சசோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.”

R2004 [col. 2:9] through R2005 [col. 1] – மாதிரி ஜெபம்

பதிவு செய்யப்பட்ட நம்முடைய ஆண்டவரின் ஜெபங்கள் அனைத்தும் எளிமையாகவும் நம்பகத்தன்மை கொண்டதும், தன்னலமற்ற தன்மையோடு அழகாக காணப்படுகிறது. ஆனால் வழக்கமாக அழைக்கப்படும் “கர்த்தருடைய ஜெபம் “, ஒரு சரியான ஜெபத்திற்கு எடுத்துக்காட்டாகவும், நிச்சயமாக எல்லா வகையிலும் ஒரு மாதிரியாகவும் நம்முடைய எல்லா விண்ணப்பங்களிலும் பின்பற்றக் கூடியதாகவும் இருக்கிறது. லூக்கா 11:2-4. மத்தேயு 6:9-13. (1) அதன் தொடக்க முகவரி முழு மரியாதையும் நம்பிக்கையுள்ளதாக காணப்படுகிறது – “பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” இதைவிட இனிமையாகவும் இது குழந்தையை போன்று என்ன இருக்கமுடியும்! நேரடியாக பரலோக கிருபாசனத்தண்டைக்கு பக்தியோடு செல்ல இந்த தைரியமான அணுகுமுறையை விட வேறு எது இருக்கமுடியும்! (2) இது ஒரு தனிப்பட்ட குணாதிசயத்தின் குறைவான விஷயங்களுக்கு பதறி உடனே கடந்துச் செல்லாமல், பூமியின் அனைத்து விவகாரங்களையும் தேவனானவர் அறிந்திருக்கிறார் என்பதை முதலில் அங்கீகரிக்கிறது. பூமியின் அனைத்து விவகாரங்களைப் பற்றிய அறிவை தேவன் பெற்றிருக்கிறார் என்பதையும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு கிருபையான மற்றும் போதுமான தீர்வையும் கொண்டிருப்பதை உணர்ந் திருப்பதை இந்த மாதிரி ஜெபம் ஒப்புக்கொள்கிறது. இதனால், “உம்முடைய இராஜ்யம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக” என்ற தேவனுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட அவருடைய திட்டத்தின் மேலுள்ள நம்பிக்கையும் ஆர்வத்தையும் காட்டுகிறது. ஆம், உண்மையில், ஜெபத்தில் தேவனை அணுகும் அனைவருமே அவருடைய சித்தத்தையும். திட்டத்தையும் பற்றி அவர் வெளிப்படுத்தியவைகளில் சிலவற்றை அறிய முன்னமே தேடியிருக்கவேண்டும் என்பதோடு, அதைக் குறித்து கற்றுக்கொண்ட பின், அவரது திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்போது, நம்முடைய அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என்று அவர்கள் தேவன் மீதுள்ள விசுவாசத்தை அறிக்கையிட வேண்டும். இது தேவன் தம்முடைய இராஜ்யத்தை நியமிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே கொண்டுவருவதற்கான ஒரு வேண்டுகோளும் அல்ல, அதற்காக பொறுமையற்ற ஏக்கத்தின் வெளிப்பாடும் அல்ல, ஆனால் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் தேவனுடைய வார்த்தையின் வாக்குத்தத்தங்கள் அனைத்தும் நிறைவேறவும். நம்முடைய சரியான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என்பதற்கான வெளிப்பாடாகும். இது இராஜ்யத்துடனான நம்முடைய விசுவாசத்தையும் அதன் சட்டங்கள் மற்றும் ஆவியையும் குறிக்கிறது. ஆகவே நம்மைப் பொருத்தவரை, நம்முடைய முழு வல்லமையினால், இப்போதும் கூட நம் வாழ்க்கையை அதன் கட்டளைகளுக்கு இணங்க செய்வோம். (3) பின்னர் தனிப்பட்ட ஆசைகளுக்கு வரும்போது- “அப்பம் மற்றும் தண்ணீர்” பற்றிய தேவைகளை மட்டுமே கோருகிறது. தேவனிடம் உண்மையாக இருக்கும் அனைவருக்கும் நிச்சயம் என்று உறுதியளிக்கப்படுகிறது. இது செல்வத்துக்காகவோ, ஆடம்பரங்களுக்காகவோ மிதமிஞ்சியதற்காகவோ, ருசிகரமான உணவுக்காகவோ அல்ல மாறாக, “எங்கள் அனுதின ஆகாரத்தை எங்களுக்கு தாரும்” என்று கேட்கிறது. இது நம்முடைய தேவன் மகா பெரிய வள்ளல் என்றும் நம்முடைய உயர்ந்த நன்மைக்காக எந்த அளவையும் தரத்தையும் மற்றும் எல்லாவற்றையும் தெய்வீக ஞானத்திற்கும் அன்பிற்கும் விட்டுவிட்டு, அவர் மீதும் அவர் அளித்த வாக்குறுதிகள் மீதும் நாம் நம்பிக்கை வைத்திருப்பதை ஒப்புக்கொள்வதாகும். (4) நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருந்தாலும், “எங்கள் பிதாவே” என்று ஜெபிப்பதற்கான உரிமை கிடைப்பதற்கு முன் தேவனுடைய குடும்பத்தில் அவருடைய புத்திரர்களாக நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம். ஆனால் இது நம்முடைய சொந்த தகுதியினால் அல்ல. கிறிஸ்துவின் கிருபையினால், தேவனுடைய “புத்திரர்களாக” மிக தாழ்மையான உணர்வோடு நிற்கிறோம். ஆகவே நாம் தினமும் பாவம் செய்பவர்கள் என்பதை நாம் சரியான முறையில் ஒப்புக்கொள்கிறோம். நாம் தேவனுடைய சித்தத்தை பூரணமாக செய்ய முடியாதவர்களாக, “எங்களுடைய கடன்களை மன்னியும்.” என்று ஜெபிக்கிறோம். (5) அடுத்து தேவனுடைய நீதியின் ஒரு கொள்கையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதாவது தெய்வீக இரக்கத்தின் உணர்வை நாம் உணர்ந்துகொண்டு, அதேபோல மற்றவர்கள் நம்முடைய பழகும் விவகாரங்களில் குறைவுள்ளவர்களாக இருக்கும் போது அவர்களுக்கும் அதே இரக்கத்தைப் பயன்படுத்தத் தயாராக இருக்கிறோமென்றால், அந்த இரக்கம் கிறிஸ்துவின் மூலமாக சம விகிதத்தில் நமக்கும் நீட்டிக்கப்படும் எனவேதான், “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல” என்று நாம் சேர்க்கிறோம். இது தேவனோடு பேரம் பேசுவதற்கு சமம். அதாவது அவருடைய கிருபையின் விதிகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இதை தவிர நாம் வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை. மற்றவர்களிடம் நாம் அதைப் பயன்படுத்தினால் மட்டுமே நாம் எதிர்பார்க்கமுடியும். என்ன ஒரு சிந்தனை! முழுமையாகப் புரிந்துக்கொள்ளப்பட்டால், தேவனுடைய ஜனங்கள் அனைவருமே ஒருவருக்கொருவர். மற்றும் எல்லா மனிதர்களிடமும் சிந்தனையிலும். வார்த்தையிலும் செயலிலும் அன்பாகவும். தாராளமாகவும் இருக்க ஏவும். – மத்தேயு 5:24; 6:15 காண்க, (6) “மேலும் எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்”, அல்லது நம்முடைய ஒழுக்கத்திற்கும், இராஜ்யத்திற்கான தயாரிப்புக்கும் சிட்சைகள் மற்றும் சோதனைகள் அவசியம் என்பதால் (யாக்கோபு 1:2-12) இதை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும். நம்முடைய விசுவாசத்தின் சோதனை, பொறுமை, அனுபவம் மற்றும் நம்பிக்கையை செயல்படுத்துவதாலும் (1 பேதுரு 4:12, ரோமர் 5:3-5) மேலும் பரிசுத்தத்தில் நாம் பூரணப்படுவது அவசியமானதாலும், (1 பேதுரு 1:6,7) தேவன் எந்த மனிதனையும் சோதிக்காவிட்டாலும், நமக்கு வரும் சோதனைகளை அவர் தடுக்கவும் மாட்டார். (யாக்கோபு 1:13) ஒரு மனிதன் தப்பான வழியில் நடந்து, தன்னுடைய சுயநலத்தினால், விழுந்து போன ஆசை இச்சைகளுக்கு இணங்கும்போது பாவம் செய்கிறார். (யாக்கோபு 1:14) ஆனால் சோதனையின் நேரத்தில் “தேவைப்படும் எல்லா நேரங்களிலும் உம்முடைய கிருபை போதும்” என்ற வாக்குத்தத்தம் இன்றி எவ்வாறு ஜெயிக்கமுடியும். மேலும் இது நமக்கு உதவுவதோடு, நாம் தாங்கக்கூடியதை விட அதிகமாக சோதிக்கப்படுவதை அனுமதிக்காது. ஆனால் சோதனையுடன் தப்பிப்பதற்கான போக்கை அளிக்குமா? கொரி 10:13. (7) “தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்” அல்லது சிலர் விரும்புவதைப் போல, “தீயவனிடமிருந்து எங்களை விடுவியும்.” மகா பெரிய எதிராளி, மாம்சத்தின் பலவீனங்களால் நம்மைப் பிடிக்க எச்சரிப்புடன் இருந்தாலும், நம்முடைய ஆண்டவர் நம்மை விடுவித்து வெற்றியைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். இருளின் வல்லமைகளுக்கு எதிரான அத்தகைய போட்டிக்கு நம்முடைய சொந்த பலன் போதுமானதாக இல்லை. ஆகவே. “எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது” (2 கொரிந்தியர் 3:5) என்று அப்போஸ்தலர் கூறுகிறபடி இதற்காக நாம் அடிக்கடி கிருபாசனத்தண்டைக்கு செல்லவேண்டும். {அடிக்குறிப்பு இந்த ஜெபத்தில் மீதமுள்ள வாக்கியம் பண்டைய கிரேக்க பதிப்புகளில் காணப்படுவதில்லை. சபையின் பூமிக்குரிய உயர்வில், போப்பாண்டவரின் மகிமையே, தேவனுடைய இராஜ்யத்தின் மகிமை என்று சிலர் நம்புவதற்கு வழிவகுத்த நேரத்தில் இது சேர்க்கப்பட்டதாகத் தேரிகிறது.}

R3351 [ R2252 col. 2:4] through R3353 [col. 2:3]:

R2252- “நீங்கள் ஜெபிக்கவேண்டிய விதமாவது” #45கேள்வி காண்க)

“பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. “நாம்பார்த்தபடி. தேவனுடைய முகவரியை நம்முடைய பிதாவாக நாம் அழைத்தாலும், முழு மனுக்குலத்திற்கும் அவர் பிதா என்று குறிக்கவில்லை. இதற்கு மாறாக, நம்முடைய மாபெரும் ஆசிரியர், சிலரை நோக்கி “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்” என்று அறிவித்ததை நினைவில் கொள்கிறோம். மேலும். நாம் அனைவரும் “கோபாக்கினையின் பிள்ளைகள்” என்று அப்போஸ்தலர் அறிவுறுத்துகிறார். நாம் இந்த உலகின் மேலுள்ள தண்டனைக்கு தப்பித்திருக்கிறோம். மேலும் இருளின் இராஜ்யத்திலிருந்து தேவனுடைய நேசிக்கப்பட்ட குமாரர்களாக வெளியேறியுள்ளோம். அதாவது கோபாக்கினையின் பிள்ளைகளிடமிருந்து தேவனுடைய குடும்பமாக வந்திருக்கிறோம். ஆகவே, இப்போது தேவனுடைய பிள்ளைகளாக, இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்ட அனைவரும். “பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே.” என்று ஜெபிக்கலாம். விண்ணப்பத்தின் இந்த பகுதி. தேவனுடைய மகத்துவத்தையும் அவருக்குரிய பயபக்தியையும். நம்முடைய பணிவையும் சிறிய தன்மையையும் முகவரியாக கொண்டுள்ளது. வழிபடுபவர் ஒரு லேசான அல்லது பயபக்தியற்றவர்களாக அல்ல. தேவனை பயபக்தியோடு தொழுது கொள்வார் என்பதை இது குறிக்கிறது. உண்மையாக வழிபடுபவர்கள் அவருடைய நாமத்தை கூட பரிசுத்தப்படுத்துவார்கள்.

“உம்முடைய இராஜ்யம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக.” இந்த விண்ணப்பம் ஒரு கோரிக்கையின் தன்மையிலோ. பொறுமையின் வெளிப்பாடாகவோ இல்லை. மாறாக இந்த பூமியில் தேவன் குறித்த காலத்தில் பரலோக இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும் என்ற தெய்விக வாக்குத்தத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களின் ஒப்புதலாகும். வழிபடுபவர் தேவனுடைய வாக்குத்தத்தை நம்புவதோடு. அவர் அதற்கு ஏற்றபடி வாழ்ந்து, விரும்பக் கூடிய தேவனுடைய இராஜ்யத்தை வாஞ்சிப்பதை ஒப்புக்கொள்கிறார். அவர் பாவத்தோடு இசைந்து இல்லை என்பதையும். அதோடு இந்த உலகின் இராஜ்யங்கள் மற்றும் தற்போதைய ஒழுங்கு மற்றும் அதன் அபூரணமான சமூகம், நிதி, அரசியல் மற்றும் பெயர் சபைகளின் ஏற்பாடுகள் இவ்வனைத்திலும் எந்த விதமான இணக்கம் இல்லாதவர் என்று குறிப்பிடுகிறது. தேவனை தொழுது கொள்பவர் மேலும் பாவம் சாத்தியமில்லாத நிலைக்காக ஏங்குகிறார் என்பதற்காக ஒப்புதலாகவும் இருக்கிறது. அதில் தேவனுடைய சித்தமே இந்த பூமியின் மேலும். பரலோகத்திலும் மேலோங்கும். அவர் பாவத்துடன் இணக்கமற்றவராகவும், நீதியுடனும் உண்மையுடனும் நன்மையுடனும் இணக்கமாக இருக்கிறார் என்பதை இது குறிக்கிறது. தேவனுடைய சித்தம் பூமியில் செய்யப்படவில்லை. அவருடைய இராஜ்யம் இதுவரை பூமிக்கு வரவில்லை. ஆயினும் அவருடைய இராஜ்யம் வரும்போது, நியமிக்கப்பட்ட இராஜாவாக கிறிஸ்து தம்முடைய மாபெரும் வல்லமையையும் ஆட்சியையும் பொறுப் பெடுக்கும் போது. வசனங்களில் காண்பிக்கப்பட்டபடி அதன் விளைவுகள் விரைவாக இருக்கும். சாத்தான் கட்டப்பட்டு, தீமை குறைக்கப்படும். அப்போது அதற்கு எதிராக அறிவும். சமாதானமும் ஆசீர்வாதமும் இந்த பூமி முழுவதையும் நிரப்பும். (வெளிப்படுத்தல் 20:1-3; 21:1-5; 22:1-6) என்ன செய்யவேண்டும் என்றும், இராஜ்யம் எவ்வாறு. எப்போது ஸ்தாபிக்கப்படவேண்டும் என்றும். ஆண்டவரிடம் சொல்வதற்கான முயற்சிகள் தேவை இல்லை. எல்லாவற்றையும் உருவாக்கியவர் ஆளுவதற்கும் நிர்வகிக்கவும், வழிநடத்தவும். சகலத்தை மேற்கொள்ளவும் முற்றிலும் திறமையானவர் என்றும் மேலும் அவர் தன் சித்தபடியான ஆலோசனைக்கு ஏற்ப எல்லாவற்றையும் செய்கிறார் என்றும் எல்லாவற்றிலும் சரியாக அறிவுத்தப்பட்ட வழிபாடுசெய்கிறவர். (தேவனை உண்மையோடு தொழுது கொள்பவர்) அறிந்திருக்கவேண்டும். தேவனை வழிபடுபவர். தெய்வீக வார்த்தையில் இருக்கும் அறிவுறுத்தல்களை பெறுவார். மேலும் தெய்விக நோக்கங்களை பொருத்தவரையில் தொடர்ந்து அவருடைய அறிவுறுத்தல்களை பெறுவார். இந்த விண்ணப்பத்தில் அவர் தெய்விக ஏற்பாட்டிற்கு தனது முழு ஒப்புதலையும் வெளிப்படுத்தி அதில் மகிழ்ச்சியடைகிறார்.

“எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். இங்கு மத்தேயுவின் வார்த்தைகள் லூக்காவின் வார்த்தைகளிலிருந்து சற்று வேறுபடுகின்றன. லூக்காவின் கூற்று சொல்லர்த்தமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்.” என்று லூக்கா கூறுகிறார். “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” என்று மத்தேயு கூறுகிறார். இருப்பினும். நடைமுறையில் சிந்தனை ஒன்றே. எனினும். இது மிகுதியாகவும். பல நாட்களுக்காக ஏராளமான பொருட்களுக்காக தேவனிடம் வேண்டி கொள்வது அல்ல. அல்லது ஆடம்பரங்களுக்கான வேண்டுகோளும் அல்ல. மாறாக தினமும் எங்களுக்கு தேவையானவற்றை எங்களுக்கு தாரும் என்று வேண்டுவதாகும் மனநிறைவே இந்த விண்ணப்பத்தின் ஆவி. இந்த முறையில், இருதயத்திலிருந்து தேவனிடம் ஜெபிப்பவர். நிச்சயமாக மிகவும் நன்றியுணர்வையும், மனநிறைவையும் உடையவராக இருப்பார். இந்த விண்ணப்பமானது உத்தரவாதமளிக்கும் பூமிக்குரிய விஷயங்களைக் குறித்தான தெய்வீக வாக்குத்தத்ததைப் போலவே விஸ்தாரமாக உள்ளது. உங்களுடைய அப்பமும் உங்களுடைய தண்ணீரும் நிச்சயமாக கொடுக்கப்படும். இதில் சொகுசான கோரிக்கைகளுக்கு இடமில்லை. மேலும், இந்த ஒரு கோரிக்கை மட்டுமே பூமிக்குரிய காரியங்களுக்கும் நலன்களுக்கும் கேட்கப்படுகிறது. இது ஆவிக்குரிய விஷயங்களுடனும் தொடர்புடைது என்றும் புரிந்துகொள்ளப்படலாம். உண்மையில், இரக்கம், அறிவு மற்றும் ஆவிக்குரிய காரியங்களில் அதற்கு ஏற்றவாறு வளர்ச்சி அடைவதில், அனைத்து தேவனுடைய பிள்ளைகளுக்கும் இது பொருந்தும் என்று நாம் நம்புகிறோம். ஆவிக்குரிய சிந்தனை உள்ளவர்கள் ஆவிக்குரிய உணவையயும். ஆவிக்குரிய தேவைகளையும். நாளுக்கு நாள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். மேலும் காட்டு புஷ்பங்களை உடுத்துவித்து. ஆகாயத்து பறவைகளை போஷிக்கும் பரலோக தந்தை. தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுபவர்களுக்கு தற்காலிகமான நலன்களையும் கொடுப்பார் என்பதை அதிகதிகமாக உணர்ந்து கொள்வார்கள்.

“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” இது நடைமுறைப்படுத்தும் நீதி, என்ன ஒரு சிந்தனை! கோபம், பொறாமை, வெறுப்பு. சச்சரவு. மன்னிக்கா தன்மை, நன்றியறியாத, மனக்கசப்புள்ள. அவதூறு செய்து, புறம் கூறி ஆகிய குணங்கள் நிரம்பிய தீய ஆவியின் கட்டுபாட்டில் இருப்பவர் “இந்த விதத்தில்” எப்படி ஜெபிக்க முடியும்? மாம்சத்தின் இந்த அனைத்து கிரியைகளை. பிசாசு தீய நிலைகளிலிருந்து தொடர்கிறது. இவைகளில் ஒன்றும் உண்மையான அன்பினால் தூண்டப்பட்டது அல்ல. கிறிஸ்தவ கொள்கையின் சாராம்சம் அன்பு. அனுதாபம். நாமும் தவறு செய்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக. அவைகளை தேவன் கிருபையாக கிறிஸ்துவினால் நமக்கு மன்னித்தது போல மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பதாகும். ” ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். (மத்தேயு 7:2) என்று கூறி. பரலோகத்தில் இருக்கும் நம்முடைய பிதாவின் பிள்ளைகளாக இருப்பதற்கு முன் கொடுக்கக்கூடிய ஆவியின் முக்கியத்துவத்தைக் குறித்து நம்முடைய ஆண்டவர் வலியுறுத்துகிறார். மேலும் இந்த விஷயத்தை விளக்கும் ஒரு உவமையை கொடுத்தார் என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்கிறோம். அதில் பத்தாயிரம் தாலந்துகள் கடன்பட்ட ஒரு வேலைக்காரனை கட்டாயப்படுத்தாமல். இலவசமாக மன்னித்தார். ஆனால் மன்னிப்பை பெற்றவர், தன்னிடம் வெறும் சில நாணயங்களை கடன் வாங்கினவரை கண்டவுடன். அவரை இரக்கமின்றி நடத்தி, மிகவும் வித்தியாசமான ஆவியை வெளிப்படுத்தினார். ஆகையால் இரக்கமும், தாராள மனப்பான்மையும் அவரிடமிருந்திருந்து தேவன் திரும்ப எடுத்துவிட்டார்.- மத்தேயு18:23-35காண்க.

பரலோக கிருபாசனத்திற்கு செல்லும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவின் நிமித்தம் தேவன் அவரை மன்னிக்க வேண்டும் என்று அவர் விரும்புவது போல. அவருக்கு கடன்பட்டுள்ளவர்களை அவர் மன்னித்தாரா இல்லை என்று தினமும் தனது சொந்த இருதயத்தை விசாரிக்கட்டும். இது நிதிக் கடனை மன்னிப்பதைப் பற்றியோ அல்லது நம்முடைய கணக்கு புத்தகங்களை அழிப்பதையோ அர்த்தப்படுத்துவதில்லை. கடனாளி கடனை திருப்பி கொடுக்க விரும்பினாலும், அதை கொடுக்க. இயலாதபோது. நாம் ஆண்டவரிடம் தயவை எதிர்பார்ப்பது போல, நாமும் தயவையும். பொறுமையையும் காண்பிக்கவேண்டும். இது தார்மீக கடமைகள். மீறல்கள் மற்றும் கடன்படுதலின் சிறப்பு பயன்பாடாகும். நமக்கு எதிராக மற்றவர்களின் அத்துமீறல்களுக்கு நாம் கவனம் செலுத்தக்கூடாது என்பதையும் இது குறிக்கவில்லை – குற்றங்களை நாம் அங்கீகரிக்கக்கூடாது. உண்மையில், குற்றம் செய்வதற்கு நாம் விரைவாக இருக்கக்கூடாது. கோபத்திற்கு பொறுமையாக இருக்கவேண்டும். குற்றத்தின் நோக்கம் மிகவும் வெளிப்படையாக இல்லாவிட்டால் நாம் ஒருபோதும் குற்றம் சாட்டக்கூடாது. பின்னர். இந்த விஷயத்தில் தெய்விக வடிவமைப்பின்படி, நம்மிடம் மன்னிப்பு கேட்கப்படும் வரை நாம் முழுமையான அர்த்தத்தில் மன்னிக்க முடியாது என்றாலும், நாம் எப்போதும் மன்னிக்கும் மனப்பான்மையில் இருக்கவேண்டும். அதாவது நாம் எந்தவிதமான பழிவாங்கும் அல்லது தீங்கிழைக்கும் உணர்வைக் கொண்டிருக்கக்கூடாது. அன்ப, மற்றும் அனுதாபத்தைத் தவிர வேறு எந்த உணர்வுகளும் நமக்கு இருக்கக்கூடாது. நமக்குச் செய்யப்பட்ட தவறுகளை விரைவாக மன்னிக்கும் விருப்பம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். முடிந்தவரை தவறு செய்தவர்களை நல்வழிப்படுத்துவதற்கு சீக்கிரமாக மென்மையும். எளிதான வழியை அமைத்து கொடுக்க அக்கறை உள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய பங்கில் ஏதேனும் தவறான செயல்கள் அல்லது தவறான நடைகளை சரிசெய்வதில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும்,

“எங்களை சோதனையினின்று இரட்சித்து. தீமையிலிருந்து எங்களை விடுவியும்.” இதில் உள்ள சிந்தனை சற்று தெளிவற்றதாக உள்ளது. “தேவன் எந்த மனிதனையும் சோதிப்பதில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். வாக்கியத்தின் நேரடியான மொழிபெயர்ப்பை நாம் நம்பும்படியாகவும், நம்முடைய ஆண்டவரின் முழு சிந்தனையைப் பற்றிய நமது கருத்தை இங்கே தெளிவுபடுத்துவதற்கும் இந்த வாக்கியத்தை பெரிதாக்கி, சில அறிவுறுத்தும் சொற்களை அடைப்புகளில் சேர்த்து. அவரைக் கேட்டவர்கள் புரிந்துகொண்டது போல. இந்த பகுதியை இவ்வாறாக வாசிக்கப்படுகிறது. “எங்களை சோதனையில் விட வேண்டாமல் (வெறுமனே). ஆனால் தியவரிடமிருந்து எங்களை விடுவியும்.” சோதனைகள் அல்லது சோதனை நிலைகளில் நம்மை கொண்டவரும் அல்லது அனுமதிப்பது தெய்விக ஏற்பாட்டின் ஒரு பகுதியாகும். இந்த விஷயத்தில் நாம் தெய்வீக ஞானத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்யக்கூடாது. மாறாக சோதனைகளை ஏற்றுக்கொள்வது. நம்முடைய வளர்ச்சிக்கு அவசியம் என்பதை உணரவேண்டும். ஆகவே, சோதனைகளுக்குள் உட்படுத்தவேண்டாம் என்று ஜெபிப்பதற்கு பதிலாக, தேவனுடைய முன்னேற்பாட்டின் படி சோதனைக்குரிய இடங்களுக்கு நம்மை அவர் கொண்டுவரும்போது, அந்நேரம் அவரும் நம்மோடு இருந்து, அவருடைய கிருபையும், இரக்கமும் நமக்கு போதுமானதாக இருப்பதற்கும். நாம் தாங்கக்கூடிய அளவுக்கு மேல் சோதிக்கப்படாதபடிக்கு, சோதனையிலிருந்து தப்பித்து கொள்ளும் போக்கையும் அவர் உண்டுபன்னி. சாத்தானிடமிருந்து நம்மை இரட்சிக்கவேண்டும் என்று நாம் ஜெபிக்கவேண்டும்.

“இராஜ்யமும். வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென். என்பதே.” இந்த சொற்கள். பொதுவான பதிப்பிலும் சில கிரேக்க கையெழுத்துப் பிரதிகளிலும் காணப்பட்டாலும், பழமையான கிரேக்க எம்.எஸ்.எஸ். சைனிடிக் மற்றும் வத்திக்கன் ஆகியவற்றில் காணப்படவில்லை. ஆகவே இவை நம்முடைய தேவனுடைய வார்த்தைகளோடு சேர்க்கப்பட்ட மனித சொற்கள் என்று தோன்றுகிறது. இந்த பூமியைப் பொருத்தவரை. இந்த வார்த்தைகள் சுவிசேஷ யுகத்தில் உண்மையானதல்ல. பூமியின் ஆதிக்கம் மற்றும் அதன் வல்லமை மற்றும் அதன் மகிமை தேவனுடையது அல்ல. மாறாக, சாத்தானே இந்த உலகத்திற்கு அதிபதியாக இருந்து. கீழ்ப்படியாமையின் பிள்ளைகளின் இருதயங்களில் செயல் புரிந்து, அவர்கள் சுவிசேஷத்தை விசுவாசிக்காதபடிக்கு அவர்களின் மனதை குருடாக்கினான். இந்த உலக இராஜ்யங்களும், வல்லமைகளும் சாத்தானுடையதாக இருந்தது. தேவனுடைய பிள்ளைகள் தேவனுடைய இராஜ்யம் வருவதற்காக காத்திருக்கிறார்கள். பத்தாம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த உலக இராஜ்யங்களை தூக்கி எறிந்து, நீதியின் இராஜாவை நிலைநிறுத்தி, சாத்தானை கட்டி, மாம்சத்தின் கிரியைகளையும் சாத்தானையும் அழித்து போடும்.