Q-2
1 கொரிந்தியர் 8:13 “ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறுலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.”
R3145 [col. 1 P2 to end]. பாடத்தின் இறுதியில் காணலாம்.
R2199 [col1 P1]: –
இந்த அன்பையும், ஒரு பலவீனமான சகோதரனின் மனசாட்சிக்காகவும் நலனுக்காகவும் சுயத்தை பலிசெலுத்தக்கூடிய செயல்பாடுகளில் தவறினால், அது சகோதரர்களுக்கு எதிரான பாவம் மட்டும் அல்லாமல், அவர்களின் மனசாட்சியை காயப்படுத்துவதோடு, கிறிஸ்துவுக்கும் அதாவது ஒருவருக்கொருவர் அன்பு செய்வதற்கான அவரது பிரமாணத்தின் ஆவிக்கு எதிரான பாவம் என்று அப்போஸ்தலர் அறிவிக்கிறார். அப்போஸ்தலர் தன்னைப் பற்றி அறிவிக்கும் போது இந்த விஷயத்தை எவ்வளவு உன்னதமாக தொகுக்கிறார், சகோதரர்களுக்கு உதவியாக இருப்பதற்கும், எவருக்கும் தடையில்லாமல் இருப்பதற்கும், இப்படிப்பட்ட தியாகம் தேவைப்பட்டால், விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட மாம்சத்தை மட்டும் அல்ல, எல்லா வகையான மாம்சத்தையும் அவர் வாழ்நாள் முழுவதும் புசியாமல் இருப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறாக, சகோதரர் அன்பின் உண்மையான உணர்வை பவுல் வெளிப்படுத்தினார், மேலும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் ஒவ்வொரு சீஷர்களும், ஒருவரோடு ஒருவருக்கு இருக்கும் உறவிலும், அதே ஆவியையும் உணர்வையும் முழு செயல்பாட்டில் இருப்பதற்கு முயல வேண்டும்.