சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-13

சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?

Why is there special need of patience in the Harvest of the Gospel age?

R2155 (col. 2P1)

இந்த சுவிசேஷ யுகத்தின் முடிவில் நம்முடைய ஆண்டவர் மிகுந்த பொறுமையோடு இருக்க வேண்டும் என்பதை முன்னதாகவே எச்சரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் சகோதரர்களிடமும், தீமையோடு போராடும்போது ஆண்டவருடைய காலத்திற்காக காத்திருக்கும் போதும், “இந்தத் தீமையான உலகத்தை சீர்பொருத்துவதற்காகவும் நாம் நீடிய பொறுமையோடு காத்திருக்கவேண்டும். விசுவாசத்திலும், தேவனுடைய திட்டத்தின் அறிவிலும், தைரியமாகத் தேவனுக்கென்று செயல்படுவதிலும் குறைவுள்ள இந்த எளிய உலகம் வருங்காலத்தில் நடப்பவைகளை அறியாமல், பொறுமையை முற்றிலுமாக இழந்துவிடுகிறார்கள். ஆனால் “உங்களுக்கு பொறுமை மிக அவசியம்” என்று தேவனுடைய ஜனங்களுக்குச் சொல்லப்படுகிறது.

R2792 (col.2P5) – R2793 (col.1P4)

நாம் இப்பொழுது நுழைந்திருக்கும் சோதனைக் காலத்திற்கேற்ற ஆலோசனையை நம்முடைய அப்போஸ்தலர்கள் கொடுக்கிறார்கள். சோதனைகளும், உபத்திரவங்களும் அநேக விதமாக இருக்கும். சில மிகத் தந்திரமாக இருக்கும். கிறிஸ்துவுக்குள் வேரூன்றாதவர்களும், சத்தியத்தில் நிலையில்லாதவர்களும் நிச்சயிக்கப்பட்ட அடிப்படை சத்தியத்திலிருந்து (ஈடுபலி) விலகிப்போவார்கள். தவறான வாக்குவாதங்கள் செய்வோர்களை சாத்தான் தன்னுடைய கருவியாகப் பயன்படுத்தி இந்த முழு உலகத்திலுள்ள அனைவரையும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறான். இக்காலத்தில் சாத்தானின் வல்லமையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்களின் விஞ்ஞானத்தைத் தவிர வேறு எதுவும் சோதனையாக வைக்கப்படுவதில்லை. அவனுடைய தவறானக் காரியங்களுக்கும் அசத்தியங்களுக்கும் அநேக நம்ப தகுந்த ஆதாரங்களை முன்வைக்கிறான். அதை நம்பினவர்கள், சத்தியத்தினிமித்தம் வரும் துன்பங்களிலிருந்து நிச்சயமாக ஒரு விடுதலையைப் பெறுவார்கள். ஏதோ ஒரு வழியில் விடுதலை வந்தால் சரி என்றிருப்போருக்கு இந்தக் காரியங்கள் மிகவும் சாதகமாக இருக்கும். சத்தியத்தினிமித்தம் வரும் வேதனைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக தங்களைத் தாங்களே வஞ்சிக்கக் கற்றுக் கொண்டபின் சத்தியத்தின் உண்மையாக அர்த்தங்கள் அவர்களுக்குத் தவறாகத் தோன்றும். அதற்கு பின் சில குழப்பங்கள் உண்டாகி, இறுதியில் அனைத்து சத்தியங்களும் தவறாகத் தோன்றும். தவறாகத் தோன்றும் சத்தியத்தின் வெளிச்சம் நாளுக்கு நாள் அவர்களுக்கு அதிகரித்து, முற்றிலுமாக இருளில் தள்ளப்படுவார்கள்.

மிகுதியான ஆர்வ கோளாறு இப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்குக் கொண்டுசெல்லும். “மரணம் இல்லை, ஜீவன் உண்டு, வேதனை இல்லை, சுகமுண்டு, தீமையில்லை நன்மையுண்டு” என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்கிறார்கள். இவை அனைத்தும் முரண்பாடான வாக்கியங்களாக இருந்தாலும், அவைகளை உண்மை என்று எவ்வாறு நிரூபிக்கிறார்கள்? அவர்களின் தத்துவ ஞானத்தின் கோட்பாடுகள் என்ன? – இதையே சாத்தான் விரும்புகிறான். ஜனங்களின் கவனத்தை ஈர்த்து, படிப்படியாக அவர்களை தவறான வழியில் நடத்தி அவர்களின் முழு சிந்தையையும் அவனுக்குள் கொண்டுவந்து தற்காலிகமான விடுதலைகளையும், அதற்கேற்ற கைமாறும், மகிழ்ச்சிகளையும் தடுக்கிறான். இவர்கள் இருளை வெளிச்சம் என்று ஏற்றுக்கொண்டவர்கள். அவர்களுக்கு வெளிச்சம் இருளாகத் தோன்றும். இவர்கள் இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டதின் காரணம் என்ன? இவர்கள் பொறுமையோடு காத்திருக்க சம்மதியாததினாலும், உறுதியான மனநிலையில் இந்த சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளாததே இதற்குக் காரணமாக இருக்கிறது. சத்தியத்தை அடிப்படையான அன்பில் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அவர்களுடைய வாழ்க்கைக்கு சாதகமான, இலேசான காரியங்களை தெரிந்துக் கொள்கிறார்கள். இவர்கள் ஆர்வமூட்டக்கூடிய செய்திகளை அதிகமதிகமாக விரும்புகிறார்கள், அல்லது உடல் ரீதியான நலத்திற்கும், அவர்கள் பிரயாசப்படுகிறார்கள். இவர்கள் இதை நீடிய பொறுமையோடு தாங்கிக் கொண்டிருந்தார்களானால், சகலமும் நித்திய ஆசீர்வாதங்களுக்கு வழி நடத்தியிருக்கும்.

சோதனையின் காலம் அனைவர் மேலும் ஒரேவிதமாக வருவதில்லை. ஏனெனில், முழு கிறிஸ்தவ மண்டலமும், சிந்தையில், குணங்களில், ஆவியில் ஒரு நிலையில் இருப்பதில்லை. கிறிஸ்தவ மண்டலத்தின் மேல் வரும் உபத்திரவம் பொதுவானது என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின நிரூபத்தில் குறிப்பிடுகிறார். (2 தீமோ 3:1-5) இங்கு இந்தக் காலத்திற்குரிய சில சோதனைகளை அவர் சித்தரிக்கிறார். “மகா உபத்திரவத்தின்” காலம் இந்த உலகத்தின் மேல் வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு அடிப்படையாக இருக்கும் குணம் – சுய நலமும், அதற்கு கருவியாகப் பயன்படுகிறது. பொறுமையற்ற குணமே என்று தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கப்படுகிறது. “மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும் சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்…” என்று பவுல் குறிப்பிடுகிறார்.

தெசலோனிக்கேயருக்கு எழுதின நிரூபத்தில் (2 தெச 2:9-12) இந்த உபத்திரவக் காலத்தில் முழு உலகத்திம் மேல் வந்தும், அதன் முழுமையான உச்சக்கட்டத்தை இன்னும் சில வருடங்கள் நீடித்தாலும், அவைகள் கிரியயைச் செய்துகொண்டிருக்கிறது. ஏனெனில் நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்கும் காலமாக இருக்கிறதே. இக்காலத்தின் தீமைகளுக்குப் பிரதானமாகச் செயல்படுகிறவன் சாத்தான் என்பதை அவர் கூறுகிறார். விசேஷமாக இந்த யுகத்தின் முடிவில் சோதனையின் காலத்தில் அவன் முழுபலத்தோடு கிரியை செய்கிறான். “அவனுடைய சகல வல்லமையினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடு இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும்.” என்ற காரணத்தையும் அவர் குறிப்பிடுகிறார். “ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு அவர்கள் பொய்யை விசுவாசிக்கத் தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.”

நாம் நம்பக்கூடிய காரியங்கள், குணலட்சணங்கள் அல்லது வரவிருக்கும் மகிமை அனைத்தும் தேவனுடைய வாக்குத்தத்தங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆகவே நாம் இந்தச் சத்தியத்தை எந்தவிதத்திலும் அல்லது எதனுடனும் விட்டுக் கொடுத்து விடக்கூடாது. நாம் வார்த்தைகளை வசனங்களினால் மட்டும் அல்ல ஆவியினாலும் அவைகளின் மேல் அன்போடு பிடித்திருப்பவர்களாக இருக்க வேண்டும். இதுவே உண்மையானதும், அழகானதும், சிறப்பானதுமாக இருக்கும். சத்தியத்தைப் பற்றிக் கொண்டிருக்கும் நம்மை யாரும் திசை திருப்பி விடாதபடிக்கு கவனமாக இருக்க வேண்டும். மேலும் இந்த வசனங்களைத் தவறாகப் பயன்படுத்தி நம்மை நாம் வஞ்சித்து, நம்முடைய கண்களை நாமே குருடாக்கிக் கொண்டு, நம்மையே தடை செய்யாதபடிக்கு எச்சரிப்போடிருக்க வேண்டும். ஆகவே நாம் இந்த நீடிய பொறுமையை நமக்குள் வளர்த்து அதை செயல்படுத்துவதின் மூலம் தேவனால் நமக்கு அனுமதிக்கப்படும் சோதனைகள், உபத்திரவங்கள் மற்றும் அனைத்தையும் சந்தோஷமாகச் சகித்து மற்ற குணங்களையும் (மலைப்பிரசங்கத்தில் சொல்லப்பட்டவைகள்) நமக்குள் பரிபூரண அன்பை முழுமையாக வளர்க்கக் கடவோம். ஏனெனில் பரிபூரண அன்பில்லாமல் இந்தக் குணங்களைப் பெறவோ, தக்கவைக்கவோ முடியாது.”