CD-FAITH-Q-22
R2353 -போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்
நம்முடைய காரியம் எதுவானாலும் சரி, மேலே சொல்லப்பட்டக் கோட்பாடுகள், சகலத்திற்கும் நேர்த்தியாகப் பொருந்துகிறது. தேவனுடன் உடன்படிக்கை செய்த ஜனங்களைப் பொறுத்த வரையில், விசுவாசத்தின் பாடமானது, சத்தியம், போதனைகள் மற்றும் உபதேசங்களின் மேல் விசுவாசமாக இருந்தால் மட்டும் போதாது, தேவன் மேலும், அவர் சொல்லிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்றும், முழு நம்பிக்கையோடிருக்க வேண்டும். இந்த விசுவாசம் வருங்காலத்திற்கு மட்டும் அல்லாமல் நிகழ்காலத்திற்கும் பொருந்துவதாக இருக்கிறது. இப்படிப்பட்ட விசுவாசம் வரக்கூடிய மகிமையான காரியங்களைக் குறித்து மட்டும் சந்தோஷப்படாமல், தேவனுடைய கண்ணோட்டத்தில் மிகச்சரியாக தோன்றினதும், இப்பொழுது நமக்கு அனுமதிக்கப்பட்ட சகல பாடுகளிலும், சோதனைகளிலும், கஷ்டங்களிலும் களிக்கூருவதாக இருக்கும். ஆகவே அப்போஸ்தலர்கள் சொன்னபடி எல்லாவற்றிலும் மகிழ்ச்சியாக இருப்போம். “சகலத்திற்காகவும் தேவனை ஸ்தோத்தரியுங்கள்” – 1தெச 5:18, எபே 5:20
இந்த உண்மையான விசுவாசத்திற்கு, தொடர்ந்து தேவன் மேல் நம்பிக்கையாயிருப்பதே தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. நம்முடைய ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசுவின் அனுபவங்களில் இதை நாம் காணலாம். இந்த உலகத்தில் அவர் தெய்வீகத் திட்டத்தை நிறைவேற்றினார் என்பதை உணர்ந்தவராய், அவருடைய சகல காரியங்களிலும், தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்பட்டார் என்பதை அவர் உணர்ந்திருந்தார். அவர் தன்னுடைய பிதாவினிடத்தில் ஜெபிக்கும்பொழுதும், அவர் பெற்ற ஒவ்வொரு அனுபவத்தின் போதும், அநேக எதிர்ப்புகளை அவர் சந்தித்தப் போதும், அவர் தெய்வீக வழிநடத்துதலின் கீழ் இருந்ததை உணர்ந்தார். அவர் தன்னை முழுமையாக பிதாவினிடம் ஒப்புக்கொடுத்ததை அறிந்து, தன்னுடைய சித்தத்தை அல்ல, அவருடைய சித்தத்தை செய்யவே காத்திருந்தார். ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும், பிதாவாகிய தேவனின் வழிநடத்துதலை அவர் உணர்ந்திருந்தார்.
பிலாத்து நம்முடைய ஆண்டவருக்குப் பதில் அளிக்கையில் இந்த ஒரு காரியம் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது –“…பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது…” மேலும், அவருடைய பாடுகளை மற்றும் உபத்திரவங்களைக் குறித்து அவர் பேசுகையில் – “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்”. உண்மையில், எல்லா காரியங்களிலும் பிதா தன்னை வழிநடத்துகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார் – அவர் சகலவிதமான துன்பங்களையும், பாடுகளையும் சகிக்க இந்த உணர்வே அவருக்குத் தைரியம் கொடுத்தது.
நம்மை நேசித்து, நமக்காக மரித்த அவருக்குள் ஜெயிக்க விருப்பமுள்ள ஒவ்வொருவரும் அவரைப்போலவே, தெய்வீக வழிநடத்துதலின் மேல் நம்பிக்கையாய் இருப்பது மிக அவசியம். தேவனுடைய அழைப்பின்படி நாம் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டோம் என்பதில் நாம் உறுதியாக இருந்தால், நமக்கு சகலமும் நன்மைக்காக நேரிடுகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைகளையும், தேவன் நமக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதையும், அதில் நாம் பிரவேசித்து ஜெயிக்கும்பொழுது, நமக்காக ஆசீர்வாதங்களையும் வைத்திருக்கிறார் என்பதையும் நாம் உணரவேண்டும். – பிதாவின் பிரதிநிதியாகிய, நம்முடைய ஆண்டவராம் இயேசு, நாம் அனுபவிக்கும் சோதனைகளையும், பாடுகளையும் கண்காணித்து, இவ்வுலகத்தின் சாத்தானின் ஊழியக்காரர்கள் மூலம் நமக்கு அனைத்தையும் அனுமதிக்கிறார் என்பதையும் நாம் உணரவேண்டும். ஆகவே நம்முடைய எந்தவிதமான உலகக் காரியங்கள் நஷ்டமடைந்தாலும், அதை மகிழ்ச்சியோடே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவை இதன் மூலம் பெறுகிறோம். ஆகவே நமக்கு இப்படிப்பட்ட சோதனைகளை ஏற்படுத்துபவர்களிடத்தில், அன்போடும், கனிவோடும், அவர்களை மன்னிக்கும் மனப்பக்குவத்தோடும் நடந்துக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கும் இப்படிப்பட்ட விசுவாசம் இருப்பதற்கு வாய்ப்பில்லை – இந்த உலகத்தைப் பொறுத்தவரையில் – ஒரு விசேஷித்த வகுப்பார் – சிறு மந்தைக்கு – மட்டுமே இந்த விசுவாசம் இருக்கவேண்டும். இவர்கள் விலையேறப்பெற்ற இரத்தத்தின் மேல் விசுவாசம் வைத்து, நீதிமான்களாகி, கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக தங்களைப் பொருத்திக்கொண்டு, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவரோடு பாடுகளைச் சகித்து, அவரோடுகூட மகிமையடையக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
“நான் உங்களை கைவிடுவதே இல்லை” என்று தேவன் சொல்லிய வாக்கின் அடிப்படையில், “போதும் என்ற மனதோடுக்கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்” என்று அப்போஸ்தலன் வலியுறுத்திச் சொல்லிய காரியத்தை நம்முடைய பாடத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஆம், உண்மையில் தேவனுடைய பராமரிப்பையும், அவருடைய ஞானமும், கிருபையும் நம்மிடம் செயல்படுகிறதை உணரவேண்டும் என்பதே இதன் முக்கிய கருத்தாக இருக்கிறது – மேலும், நாம் நமக்காக தேர்வு செய்யும் காரியங்களைவிட தேவன் நமக்கு அனுமதிக்கிற காரியங்கள் சகலத்திலும் நேர்த்தியானதாக இருக்கிறது.
அப்போஸ்தலர் சொல்லும்பொழுது – “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே” என்கிறார். தேவனுடைய தாழ்மையான ஜனங்களின் நுண்ணறிவுள்ள தைரியத்தைக் குறித்து, இந்த முழு உலகம் அநேக முறை ஆச்சரியப்பட்டிருக்கிறது. இவர்களின் தைரியத்திற்கும், பலத்திற்கும் காரணமாக இருப்பது – “தேவனே எங்கள் சகாயர்” என்றும், அவருடைய அனந்த ஞானத்தினாலும், அன்பினாலும், சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக நடத்துகிறார் என்றும், இவர்கள் தேவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையே காரணமாக இருக்கிறது.
இந்தக் காரியங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்படுகிறது? என்று சிலர் நினைக்கலாம். இதற்குப் பதிலாக ஆவியின் கனிகளாகிய அன்பு, மற்றும் இன்னும் பல காரியங்களைக் குறித்து ஆராய்ச்சி செய்திருக்கலாமே என்றும் நினைக்கலாம். ஆனால் இந்த பாடங்கள் இந்த காலத்திற்கு மிகப் பிரயோஜனமுள்ளதாக இருக்கும் என்று எண்ணி இதற்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று பதில் அளிக்கலாம். நம்முடைய தேவன், நம்மேல் வைத்த கிருபையினால், அநேகக் குருட்டாட்டமான தவறுகளை நம்மை விட்டு அகற்றிவிட்டு அவருடைய மகிமையான திட்டங்களின் தெளிவான விவரங்களை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நாம் அறிவோம். இவர்கள் தேவனுடைய திட்டங்களை அறிந்துகொள்வதற்கு மட்டும் அல்லாமல், இந்தத் தெய்வீக சத்தியத்தினால், இவர்கள் மேலும் பரிசுத்தப்படுவதற்கு அவர் இவைகளை வெளிப்படுத்தி, “ஒளியிலுள்ள பரிசுத்தவான்களின் சுதந்தரத்தில் பங்கடைய.” நம்மைத் தகுதிப்படுத்துகிறார். ஆகவே தேவன் அவருடைய பிள்ளைகளுக்கு வெறும் உபதேசங்களின் சோதனைகளை மட்டும் அனுமதிக்காமல், இந்த அறுவடையின் காலத்தில், சகோதரர்களின் ஆவியின் கனிகளின் அடிப்படையில் இவர்கள் மத்தியில் பிரிவுகள் ஏற்பட்டுள்ளதைக் காணலாம்.
நீங்கள் என்னுடைய சில காரியங்களை அறிந்துகொள்ளவில்லை என்றால், நீங்கள் ஒருபோதும் என்னுடையவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும், என்னைப் பற்றிய அறிவு உங்களிடம் போதிய அளவு இல்லாததினால், நீங்கள் என்னுடையவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்றும் தேவன் அவருடைய முடிவை எங்குமே எப்பொழுதும் சொன்னதில்லை. ஆனால், “கிறிஸ்துவின் சிந்தை (ஆவி) இல்லாத எவனும் தேவனை உடையவன் அல்ல” நாம் இதில் தெளிவாக இருந்தால், சிலுவையின் போர்வீரர்களாக, இரட்சணியம் என்னும் தலைச்சீராவை அணிந்து, விசுவாசம் என்னும் மார்க்கவசத்தை தரித்து, அன்பு மற்றும் சத்தியத்தின் நீதியைத் தரித்து, அவர் காட்டியப் பாதையில் நடப்போம், அப்பொழுது இடது புறமாக ஆயிரம்பேரும், வலதுபுறமாக பத்தாயிரம்பேர்கள் விழுந்தாலும் தீங்கு நம்மை அணுகாது – சங் 91:7, மத் 24:24, 2தெச 2:11
காலங்கள் சமீபித்திருப்பதால், இந்தப் பாடம் நமக்கு மிக முக்கியமானது என்று நம்பி, இதுவரைக்கும் இந்த ஆவியின் கனியை வளர்க்காமல் இருக்கும் தேவப் பிள்ளைகள், இந்தப் பாடத்திற்காக தேவனுக்கு நன்றிகளை ஏறெடுத்து, தங்களுக்குள் விசுவாசத்தை வளர்த்து, தேவ இராஜ்யத்தில் நல்லதொரு பங்கைப் பெற “போதும் என்ற மனதுடனேகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்ற வார்த்தைகளைப் பற்றிக்கொண்டு நடப்போம். ஒருவேளை நாம் இந்த உலகத்தின் ஆவியைப் பெற்றவர்களாக இருந்தால், வெகு சீக்கிரத்தில் மகா உபத்திரவத்தின் காலத்தைச் சந்திக்க வேண்டியதாக இருக்கும். போதும் என்ற மனமும், விசுவாசமும் தெய்வீகத்திற்கு மிக முக்கியமானது. இந்தக் குணங்கள் இல்லாமல் மற்ற ஆவியின் கனிகளை வளரச் செய்வது கூடாதக் காரியம். நம்முடைய இருதயத்தில் உலகத்தின் ஆவியினால் வளர்ந்திருக்கும் அதிருப்தி என்னும் களைகளும் நமக்குள் இருக்கும் பெலத்தையும், பக்தியையும் உறிஞ்சி விட்டு, அன்பு, சமாதானம், பொறுமை, சாந்தம், நீடிய பொறுமை, சகோதர அன்பு போன்ற குணங்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.
E229 – E230 :-
ஒரு மனுஷனின் சிந்தை அல்லது ஆவி அவனுடைய வார்த்தைகளினாலும், நடத்தைகளினாலும் அறியப்படும், அதை போல தேவனுடைய சிந்தையை அவருடைய வார்த்தைகளின் மூலம் அறிந்துகொள்ளலாம். இயேசுவின் மூலமாக தேவனிடத்தில் வரும் அனைவரையும் (தங்களுடைய துர்க்கிரியைகளிலிருந்தும், செத்தக்கிரியைகளை விட்டு மனந்திரும்பி, விசுவாசத்தின் மூலம் சீர்ப்பொருந்துபவர்களை) அவர் ஏற்றுக்கொள்வதாக அவர் வாக்குறுதிக்கொடுக்கிறார். (எபி 7:25) ஆகவே நமக்குள் எழவேண்டிய கேள்விகள் என்னவெனில் – நான் எப்பொழுதுதாவது கிறிஸ்துவினிடமாய் இழுக்கப்பட்டேனா? – அவரை நான் என்னுடைய இரட்சகராக அடையாளம் கண்டுக்கொண்டு, அவருடைய நீதியின் வழியாக பிதாவாகிய தேவனை சேர்ந்து, அவருக்கு ஏற்றவனாக இருக்கிறேனா?
இதற்கான பதில் – ஆம் என்று இருக்கும் பட்சத்தில், நமக்குள் எழும் அடுத்தக்கேள்வி என்னவெனில் – நான் என்னை முழுமையாக ஒப்புகொடுத்திருக்கிறேனா? – என்னுடைய ஜீவன், நேரம், செல்வாக்கு மற்றும் அனைத்தும் தேவனுக்கு முழுமையாகக் கொடுக்கிறேனா?
இந்தக் கேள்விக்கும் ஆம், என்ற பதிலைச் சொல்லுவோமானால், நிச்சயமாகத் தேவன் அவருடைய ஒரே பேறானவருக்குள் நம்மை ஏற்றுக்கொண்டு, நம்மை அவருடைய குமாரர்களாகப் பாவிக்கிறார். மேலும், நாம் அவருடைய இருதயத்தின் சிந்தையை கூர்ந்து கவனித்தால், அவர் இன்னும் தேவனுடைய சித்தத்தைச் செய்வதில் கவனமாக இருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட, கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபை நம்மை தாங்கும் பொழுது, நாம் பெறும் அனுபவங்களினால், தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் நமக்குள் கட்டப்படக்கூடிய குணங்கள், ஒருபோதும் மாறாது. ஒருவேளை நம்முடைய இருண்ட காலங்களில், பயமும், சந்தேகமும் எதிர்ப்படும்பொழுது, நாம் தேவனுடைய வார்த்தையாகிய விளக்கை மட்டும் கையில் எடுத்து நம்முடைய இருதயம் தேவன் மேல் முழு விசுவாசத்தோடு இருக்கிறதா என்ற உண்மையை ஆராய்ந்து அறிந்துகொண்டால் போதும், நம்முடைய சந்தோஷமும், சமாதானமும் நம்மிடத்தில் வந்து சேரும். ஒரு வேளை “விலையேறப்பெற்ற இரத்தத்தின்” மேல் உள்ள விசுவாசம் தடுமாறுகையில், நாம் இதை உணர்ந்துக்கொண்டு, உடனடியாக அதை செப்பனிட்டு, மறுபடியுமாக நம்முடைய விசுவாசத்தை முழுமையாக ஸ்தாபிக்கக்கூடியவர்களாக இருக்கிறோம் (எபி 10:22) ஆனால் ஒவ்வொருவரும் – “தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைப்போட்டு நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும்” (யோவ 3:33) ஏனெனில் நம்முடைய தேவன் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர். தேவனுடைய ஜனங்கள் இந்த தெய்வீக கிருபையின் கீழ் வந்தபின் சமாதானமாக இளைப்பாறலாம். தேவனிடம் முழு மனதோடு உண்மையாக இருந்து, அவர்களுடைய சித்தம் தேவனுடைய சித்தத்தோடு இசைந்து இருந்து, அவருடைய தெய்வீக கற்பனைகளைக் கைக்கொண்டு, கீழப்படிதலோடிருக்கும் வரை நாம் சுகமாக இந்த விசுவாசத்திற்குள் இளைப்பாறலாம் – மொத்தத்தில் தேவனிடத்திலும், ஜனங்களிடத்திலும், அன்பாக இருக்கவேண்டும்.
இந்த சுவிசேஷ யுகத்தில் எவர் ஒருவர் தன்னை தேவனுடைய பிள்ளை என்று உணர்ந்து, தேவனுடைய வார்த்தைகளுக்கு உண்மையான சாட்சி அளிக்கிறார்களோ, அவர்கள் மெய்யான திராட்சச்செடியில் கொடிகளாக இருக்கிறார்கள், அதாவது உண்மையான சபை வகுப்பாராக இருக்கிறார்கள். (யோவ 15:1) இப்படிப்பட்டவர்கள் உண்மையான சபையின் அங்கத்தினர்கள் என்று தேவனுடைய வார்த்தைகள் சாட்சியிடுகிறது. இந்தச்சாட்சி அவர்களின் ஆவிக்கும், சிந்தைக்கும் தேவன் அவருடைய ஆவியினால் அவரின் வார்த்தைகளின் மூலம் சாட்சி கொடுக்கிறார். தேவன் பேரில் தொடர்ந்து விசுவாசம் வைத்து இயேசுவின் பாதையில் சந்தோஷத்தோடு அவரவருடைய சிலுவையை சுமக்க மனப்பூர்வமாக முன் வருபவர்கள் வெகு சீக்கிரத்தில், உண்மையாக சபை அங்கத்தினராக மாற்றப்படுவார்கள் என்று அதே சத்தியத்தின் ஆவி சாட்சிகொடுக்கிறது – அவர்களின் ஓட்டத்தை முடித்தபின், முதலாம் உயிர்த்தெழுதலாகிய, அவருடைய உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவார்கள். பிலிப்பியர் 3:10