Q-10
“1 தீமோ 3:6 – “அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது”
F246 [P2]
வேலை செய்ய தகுதிப் பெறாதவர், தேவனுடைய வேலையை செய்ய இயலாதவர்கள் அல்லது தகுதி பெறாதவர்கள் என்று வசனங்கள் ஏதும் கூறுவதில்லை. அதே நேரத்தில் கிறிஸ்துவின் ஒவ்வொரு சரீர அங்கத்தினர்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு தங்களை தான் மேன்மையாக எண்ணாமல், சோம்பேறியாகவும் இராமல், தேவன் கொடுத்த தாலந்துகளின்படி செயல்படவேண்டும். சபைகளில் இப்படிப்பட்டவர்கள் மனத்தாழ்மையோடு மூப்பர்களாகவோ அல்லது முக்கிய பொறுப்புகளையோ செயலாற்றவேண்டும். இரண்டு சகோதரர்கள் சமமான தாலந்துகளை பெற்றிருந்தால், அதில் ஒருவர் ஆர்வத்தோடு முன்னிலை விரும்புவோரும், மற்றவர் தாழ்மையோடு பின்தங்குபவராக இருந்தால், நல்ல சிந்தையில் உள்ள ஞானத்தின் ஆவி, மனத்தாழ்மையுள்ளவரை பாராட்டும். ஆகையால் இப்படிப்பட்டவர் தேவனால் விசேஷித்த விதமாக அவருடைய பணிக்கு அனுமதிக்கப்படவேண்டும்.
F251 [P2]
“நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே” (1தீமோ 5:17,18) என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தின் அடிப்படையில் பெயர் சபைகள் – மற்றவர்களை கட்டுக்குள் வைத்து அதிகாரம் செலுத்தக்கூடிய மூப்பர்களை உருவாக்கி விட்டார்கள். சகோதரர்களுக்கு மத்தியில் ஓர் உயர்வான நிலையை பெறுகிறார்கள். இப்படிப்பட்ட “அதிகாரத்திற்கு உட்படும் காரியங்கள்” வசனங்களுக்கு என்றும் முரண்பாடாக உள்ளது. மூப்பராக நியமிக்கப்பட்ட தீமோத்தேயு அப்போஸ்தலனால் அறிவுறுத்தப்பட்டார் – “முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், நடத்தவேண்டும் மேலும் கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.” இங்கு சொல்லப்பட்ட காரியங்களில் சர்வாதிகாரமானவைகள் ஏதும் சொல்லப்படவில்லை. மூப்பர்கள் என்று சொல்லப்படுபவர்களிடம் ஆவியின் கனிகள் வெளிப்படவேண்டும். எல்லா விதத்திலும் மந்தைக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும். மூப்பர் அதிகார தோரனையில் இருந்தால் மந்தையும் அப்படியே வளர்ச்சி அடையும். அதே நேரத்தில் மூப்பர் மனத்தாழ்மையுள்ளவராக இருந்தால், மந்தையும் அதே குணத்தில் வளர்ச்சி அடையும். மூப்பர்கள் எந்த ஆவியை பெற்றிருக்கிறார்களோ, மந்தையும் அந்த ஆவியை பெறுவார்கள். ஆகவே போதிப்பதிலும், கற்பிப்பதிலும் முதலில் தங்களை மிகவும், தாழ்த்தக்கூடிய மூப்பர்கள் இரட்டிப்பான கனத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள்.
F278 [P4]
பொய் மத குருக்களின் போதனையானது, கிறிஸ்தவர்களை இரண்டாக பிரித்தது. குருக்கள் மற்றும் பாமர ஜனங்கள். அறியாமையில் செயல்படும் அமைப்புகளில் தேவனுடைய சத்தியமாகிய பொக்கிஷங்களின் மேல் இப்படிப்பட்டவர்களின் ஆவியும், அந்திக்கிறிஸ்துவின் ஆவியும், அதிகாரம் செலுத்துவதற்கு சகல விதங்களிலும் முயற்சிக்கும். நம்முடைய தேவன் தனிப்பட்ட முறையில் மூப்பர்களை கவனியாமல், கிறிஸ்துவின் சரீரத்தின் மேல் நோக்கமாக இருக்கிறார். கனத்திற்குரிய விசுவாசமுள்ள மூப்பர்கள் ஆண்டவருக்கும் சபைக்கும் நல்ல ஊழிக்காரர்களாக இருக்க வேண்டும். அவர்களை தேர்வு செய்யும் சபையோர் அவர்களை பற்றி நன்கு அறிந்திருக்கவேண்டும். தேவனுடைய வார்த்தைகளின் வெளிச்சத்தில் இவர்களின் திறமைகளைப் பற்றியும், கனிகளைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கவேண்டும். இல்லாவிடில் ஒருவரும் இப்படிப்பட்ட ஸ்தானத்திற்கு நியமிக்கப்படக் கூடாது. எந்த மூப்பருக்கும் தன்னை தான் நியமித்து கொள்ள அதிகாரம் கொடுக்கப்படுவதில்லை. உண்மையில் ஒருவர் சபையையும் கிறிஸ்துவின் சரீரத்தையும் புறக்கணித்து, தன்னையே எல்லா வற்றிக்கும் மேலாக உயர்த்தி, அனைவரையும் நியாயந்தீர்க்கும் அளவுக்கு தன்னை நினைத்து கொள்பவரை ஒருகாலமும் மூப்பராக நியமிக்கக்கூடாது. மனத்தாழ்மையும், நம்முடைய ஆண்டவரின் சரீரமாகிய சபையின் ஒற்றுமையுமே, ஆராதனைக்கு தேவைப்படும் அடிப்படையான காரியமாகும்.
F296 [P1,2]
“தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றார். (லூக்கா 14:11) என்ற வசனம் தேவனுடைய பிரமாணத்தை மிக தெளிவாக காட்டுகிறது. இந்தக் கற்பனையை சபைகள் கட்டாயமாக கடைப்பிடிக்கவேண்டும். இவர்கள் ஒரே சிந்தையாக இருந்து, தேவனுக்கேற்ற கீழ்ப்படிதலை நாடவேண்டும். தேவன் மேல் வைராக்கியம் கொண்டு, விசுவாசமுள்ளவர்களை மட்டுமே தேவன் ஊக்குவிப்பவராக இருக்கிறார். “அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன்கையை நீட்டு என்றார், அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று” (லூக்கா 6:10) “அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.” (மத் 25:21,23) கனம் என்ற ஏணியின் கீழ், பல வழிகள் உண்டு. யார் விரும்பினாலும், தேவனுக்கும், சகோதரர்களுக்கும், சத்தியத்திற்கும் மனமேட்டிமையோடு அல்ல, மனத்தாழ்மையோடு, ஊழியம் செய்யலாம். எந்தவிதமான ஊழியத்திலும், விசுவாசமுள்ளவர்கள் மகிழுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தேவன் அதிகதிகமான வாய்ப்புகளைத் திறப்பார். இப்படியாக, அவருடைய ஞானத்தை எடுத்துக்காட்டும். அவருடைய சித்தத்தை மிக கவனத்தோடு, ஒவ்வொரு புது சிருஷ்டியும் நிறைவேற்ற வேண்டும். விசேஷமாக மூப்பர்களை தேர்வு செய்யும் விஷயத்தில், கிறிஸ்துவின் சரீர அங்கமாக இருக்கக்கூடியவர் தலையாகிய கிறிஸ்துவின் சித்தத்திற்கேற்ப தன் கைகளை உயர்த்தவேண்டும்.
எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருந்தாலும் சரி சுயத்தை தேடுபவரை விட்டுவிட்டு, மனத்தாழ்மையுள்ளவரை மட்டுமே நாம் தேர்வு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். அனைவரின் நலனுக்காக கொடுக்கப்படும் கடிந்துக்கொள்ளுதல், மற்றவர்களை அடக்கும் நோக்கத்துடன் இராமல், மிக மிருதுவாக இருக்கவேண்டும். தகுதிப் பெற்ற ஒரு மூப்பர் சபையின் தலைமையாக தன்னை உயர்த்திக்கொள்பவர் – போதிப்பதற்கு தெய்வீக உரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என்று நாம் அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்டவர்கள் சாத்தானின் கண்ணியிலிருந்து தப்பித்து, சீர்ப்பொருந்தும் வரைக்கும் அந்த நிலையிலிருந்து நிராகரிப்பதே, அன்பின் வெளிப்பாடாகும்.
R3278 [col. P3]
இராஜா தன்னுடைய மனத்தாழ்மையை மிக நேர்த்தியாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடுகிறார்.” நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுப்பிள்ளையாயிருக்கிறேன். நீர் தெரிந்துக்கொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.” அவர் தேவனுடைய ஜனங்களுக்கு இராஜாவாக இருந்தபோதிலும், அந்நிலைக்கு தன்னை தகுதியற்றவராக கருதினார். இவ்வளவு பெரிய பொறுப்புகளையும், நிர்வாகத்தையும் நிறைவேற்றுவதற்கு தன்னுடைய திறமை போதாது என்று எண்ணினார். தான் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பின்னும், தன்னுடைய பிரஜைகளை “உமது ஜனங்கள்” என்று குறிப்பிடுகிறார். சபையின் மூப்பர்களுக்கு நாம் இங்கு ஒரு சிறிய பாடத்தைச் சொல்ல ஆசிக்கிறோம். பாபிலோன் அமைப்பின் பழக்கத்தின்படி “என் ஜனங்கள்,” “என் சபை” என்று அழைப்போர், உண்மையான மேய்ப்பர்களாக இருக்க வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட வார்த்தைகள் தேவனுக்கு எவ்வளவு எதிரானது என்பதை அவர்கள் உணராதிருக்கிறார்கள். தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட மாம்சீக இஸ்ரயேலர்கள் இவ்வளவாக தங்களை தாழ்த்தும்போது, ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் எவ்வளவு தாழ்மையில் இருக்கவேண்டும். தேவனுடைய சபை ஜனங்களை என்னுடையவர்கள் என்று கூறுபவர்கள், உண்மையில் மிக ஆபத்தான நிலையில் உள்ளார்கள் என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம். மேலும் தலைமையாக இருக்கவிரும்புவர்கள், தங்களை தாங்களே மேன்மையாக எண்ணிக்கொள்பவர்கள் மிகுந்த ஆபத்திற்குள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. இப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபித்து, திருத்திக்கொள்ளவேண்டும். இதனிமித்தம் தேவன் அவர்களுடைய தவறுகளை மன்னித்து, மேலும் வரக்கூடிய இடறுதல்களிலிருந்து விடுவிப்பார். மேலும் எந்த விதமான சூழ்நிலைகளிலும் தேவனுடைய மந்தையில் தலைமை வகிக்கக்கூடிய பொறுப்புகளுக்கு எளிதில் இணங்கிவிடக்கூடாது. இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை செலுத்தக்கூடிய மூப்பர்கள் தங்களை கெடுத்துக் கொள்வதோடு மட்டும் அல்ல, தேவன் மந்தைக்கு கொடுத்த சுயாதீனத்தை அனுபவிக்காதபடி, தடுப்பவர்களாக இருப்பார்கள்.