ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-10

ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?

Why is humility a chief essential in an Elder?

“1 தீமோ 3:6 – “அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது”

F246 [P2]

வேலை செய்ய தகுதிப் பெறாதவர், தேவனுடைய வேலையை செய்ய இயலாதவர்கள் அல்லது தகுதி பெறாதவர்கள் என்று வசனங்கள் ஏதும் கூறுவதில்லை. அதே நேரத்தில் கிறிஸ்துவின் ஒவ்வொரு சரீர அங்கத்தினர்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு தங்களை தான் மேன்மையாக எண்ணாமல், சோம்பேறியாகவும் இராமல், தேவன் கொடுத்த தாலந்துகளின்படி செயல்படவேண்டும். சபைகளில் இப்படிப்பட்டவர்கள் மனத்தாழ்மையோடு மூப்பர்களாகவோ அல்லது முக்கிய பொறுப்புகளையோ செயலாற்றவேண்டும். இரண்டு சகோதரர்கள் சமமான தாலந்துகளை பெற்றிருந்தால், அதில் ஒருவர் ஆர்வத்தோடு முன்னிலை விரும்புவோரும், மற்றவர் தாழ்மையோடு பின்தங்குபவராக இருந்தால், நல்ல சிந்தையில் உள்ள ஞானத்தின் ஆவி, மனத்தாழ்மையுள்ளவரை பாராட்டும். ஆகையால் இப்படிப்பட்டவர் தேவனால் விசேஷித்த விதமாக அவருடைய பணிக்கு அனுமதிக்கப்படவேண்டும்.

F251 [P2]

“நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே” (1தீமோ 5:17,18) என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தின் அடிப்படையில் பெயர் சபைகள் – மற்றவர்களை கட்டுக்குள் வைத்து அதிகாரம் செலுத்தக்கூடிய மூப்பர்களை உருவாக்கி விட்டார்கள். சகோதரர்களுக்கு மத்தியில் ஓர் உயர்வான நிலையை பெறுகிறார்கள். இப்படிப்பட்ட “அதிகாரத்திற்கு உட்படும் காரியங்கள்” வசனங்களுக்கு என்றும் முரண்பாடாக உள்ளது. மூப்பராக நியமிக்கப்பட்ட தீமோத்தேயு அப்போஸ்தலனால் அறிவுறுத்தப்பட்டார் – “முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், நடத்தவேண்டும் மேலும் கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.” இங்கு சொல்லப்பட்ட காரியங்களில் சர்வாதிகாரமானவைகள் ஏதும் சொல்லப்படவில்லை. மூப்பர்கள் என்று சொல்லப்படுபவர்களிடம் ஆவியின் கனிகள் வெளிப்படவேண்டும். எல்லா விதத்திலும் மந்தைக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும். மூப்பர் அதிகார தோரனையில் இருந்தால் மந்தையும் அப்படியே வளர்ச்சி அடையும். அதே நேரத்தில் மூப்பர் மனத்தாழ்மையுள்ளவராக இருந்தால், மந்தையும் அதே குணத்தில் வளர்ச்சி அடையும். மூப்பர்கள் எந்த ஆவியை பெற்றிருக்கிறார்களோ, மந்தையும் அந்த ஆவியை பெறுவார்கள். ஆகவே போதிப்பதிலும், கற்பிப்பதிலும் முதலில் தங்களை மிகவும், தாழ்த்தக்கூடிய மூப்பர்கள் இரட்டிப்பான கனத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள்.

F278 [P4]

பொய் மத குருக்களின் போதனையானது, கிறிஸ்தவர்களை இரண்டாக பிரித்தது. குருக்கள் மற்றும் பாமர ஜனங்கள். அறியாமையில் செயல்படும் அமைப்புகளில் தேவனுடைய சத்தியமாகிய பொக்கிஷங்களின் மேல் இப்படிப்பட்டவர்களின் ஆவியும், அந்திக்கிறிஸ்துவின் ஆவியும், அதிகாரம் செலுத்துவதற்கு சகல விதங்களிலும் முயற்சிக்கும். நம்முடைய தேவன் தனிப்பட்ட முறையில் மூப்பர்களை கவனியாமல், கிறிஸ்துவின் சரீரத்தின் மேல் நோக்கமாக இருக்கிறார். கனத்திற்குரிய விசுவாசமுள்ள மூப்பர்கள் ஆண்டவருக்கும் சபைக்கும் நல்ல ஊழிக்காரர்களாக இருக்க வேண்டும். அவர்களை தேர்வு செய்யும் சபையோர் அவர்களை பற்றி நன்கு அறிந்திருக்கவேண்டும். தேவனுடைய வார்த்தைகளின் வெளிச்சத்தில் இவர்களின் திறமைகளைப் பற்றியும், கனிகளைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கவேண்டும். இல்லாவிடில் ஒருவரும் இப்படிப்பட்ட ஸ்தானத்திற்கு நியமிக்கப்படக் கூடாது. எந்த மூப்பருக்கும் தன்னை தான் நியமித்து கொள்ள அதிகாரம் கொடுக்கப்படுவதில்லை. உண்மையில் ஒருவர் சபையையும் கிறிஸ்துவின் சரீரத்தையும் புறக்கணித்து, தன்னையே எல்லா வற்றிக்கும் மேலாக உயர்த்தி, அனைவரையும் நியாயந்தீர்க்கும் அளவுக்கு தன்னை நினைத்து கொள்பவரை ஒருகாலமும் மூப்பராக நியமிக்கக்கூடாது. மனத்தாழ்மையும், நம்முடைய ஆண்டவரின் சரீரமாகிய சபையின் ஒற்றுமையுமே, ஆராதனைக்கு தேவைப்படும் அடிப்படையான காரியமாகும்.

F296 [P1,2]

“தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றார். (லூக்கா 14:11) என்ற வசனம் தேவனுடைய பிரமாணத்தை மிக தெளிவாக காட்டுகிறது. இந்தக் கற்பனையை சபைகள் கட்டாயமாக கடைப்பிடிக்கவேண்டும். இவர்கள் ஒரே சிந்தையாக இருந்து, தேவனுக்கேற்ற கீழ்ப்படிதலை நாடவேண்டும். தேவன் மேல் வைராக்கியம் கொண்டு, விசுவாசமுள்ளவர்களை மட்டுமே தேவன் ஊக்குவிப்பவராக இருக்கிறார். “அவர்களெல்லாரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன்கையை நீட்டு என்றார், அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று” (லூக்கா 6:10) “அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.” (மத் 25:21,23) கனம் என்ற ஏணியின் கீழ், பல வழிகள் உண்டு. யார் விரும்பினாலும், தேவனுக்கும், சகோதரர்களுக்கும், சத்தியத்திற்கும் மனமேட்டிமையோடு அல்ல, மனத்தாழ்மையோடு, ஊழியம் செய்யலாம். எந்தவிதமான ஊழியத்திலும், விசுவாசமுள்ளவர்கள் மகிழுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு தேவன் அதிகதிகமான வாய்ப்புகளைத் திறப்பார். இப்படியாக, அவருடைய ஞானத்தை எடுத்துக்காட்டும். அவருடைய சித்தத்தை மிக கவனத்தோடு, ஒவ்வொரு புது சிருஷ்டியும் நிறைவேற்ற வேண்டும். விசேஷமாக மூப்பர்களை தேர்வு செய்யும் விஷயத்தில், கிறிஸ்துவின் சரீர அங்கமாக இருக்கக்கூடியவர் தலையாகிய கிறிஸ்துவின் சித்தத்திற்கேற்ப தன் கைகளை உயர்த்தவேண்டும்.

எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருந்தாலும் சரி சுயத்தை தேடுபவரை விட்டுவிட்டு, மனத்தாழ்மையுள்ளவரை மட்டுமே நாம் தேர்வு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். அனைவரின் நலனுக்காக கொடுக்கப்படும் கடிந்துக்கொள்ளுதல், மற்றவர்களை அடக்கும் நோக்கத்துடன் இராமல், மிக மிருதுவாக இருக்கவேண்டும். தகுதிப் பெற்ற ஒரு மூப்பர் சபையின் தலைமையாக தன்னை உயர்த்திக்கொள்பவர் – போதிப்பதற்கு தெய்வீக உரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என்று நாம் அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்டவர்கள் சாத்தானின் கண்ணியிலிருந்து தப்பித்து, சீர்ப்பொருந்தும் வரைக்கும் அந்த நிலையிலிருந்து நிராகரிப்பதே, அன்பின் வெளிப்பாடாகும்.

R3278 [col. P3]

இராஜா தன்னுடைய மனத்தாழ்மையை மிக நேர்த்தியாக தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடுகிறார்.” நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுப்பிள்ளையாயிருக்கிறேன். நீர் தெரிந்துக்கொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன்.” அவர் தேவனுடைய ஜனங்களுக்கு இராஜாவாக இருந்தபோதிலும், அந்நிலைக்கு தன்னை தகுதியற்றவராக கருதினார். இவ்வளவு பெரிய பொறுப்புகளையும், நிர்வாகத்தையும் நிறைவேற்றுவதற்கு தன்னுடைய திறமை போதாது என்று எண்ணினார். தான் இராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட பின்னும், தன்னுடைய பிரஜைகளை “உமது ஜனங்கள்” என்று குறிப்பிடுகிறார். சபையின் மூப்பர்களுக்கு நாம் இங்கு ஒரு சிறிய பாடத்தைச் சொல்ல ஆசிக்கிறோம். பாபிலோன் அமைப்பின் பழக்கத்தின்படி “என் ஜனங்கள்,” “என் சபை” என்று அழைப்போர், உண்மையான மேய்ப்பர்களாக இருக்க வாய்ப்பில்லை. இப்படிப்பட்ட வார்த்தைகள் தேவனுக்கு எவ்வளவு எதிரானது என்பதை அவர்கள் உணராதிருக்கிறார்கள். தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட மாம்சீக இஸ்ரயேலர்கள் இவ்வளவாக தங்களை தாழ்த்தும்போது, ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் எவ்வளவு தாழ்மையில் இருக்கவேண்டும். தேவனுடைய சபை ஜனங்களை என்னுடையவர்கள் என்று கூறுபவர்கள், உண்மையில் மிக ஆபத்தான நிலையில் உள்ளார்கள் என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம். மேலும் தலைமையாக இருக்கவிரும்புவர்கள், தங்களை தாங்களே மேன்மையாக எண்ணிக்கொள்பவர்கள் மிகுந்த ஆபத்திற்குள் இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. இப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபித்து, திருத்திக்கொள்ளவேண்டும். இதனிமித்தம் தேவன் அவர்களுடைய தவறுகளை மன்னித்து, மேலும் வரக்கூடிய இடறுதல்களிலிருந்து விடுவிப்பார். மேலும் எந்த விதமான சூழ்நிலைகளிலும் தேவனுடைய மந்தையில் தலைமை வகிக்கக்கூடிய பொறுப்புகளுக்கு எளிதில் இணங்கிவிடக்கூடாது. இப்படிப்பட்ட கட்டுப்பாட்டை செலுத்தக்கூடிய மூப்பர்கள் தங்களை கெடுத்துக் கொள்வதோடு மட்டும் அல்ல, தேவன் மந்தைக்கு கொடுத்த சுயாதீனத்தை அனுபவிக்காதபடி, தடுப்பவர்களாக இருப்பார்கள்.