நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-LOVE-Q-41

நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?

How should we apply the Golden Rule?

“இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத்தேயு 22:39)

R2445[col.1 P2]: –

ஆனால் சிலர் இந்த சுதந்திரத்தை நேர்மறையான அறிவொளிகளுக்காக கட்டுப்படுத்துவதை புறக்கணிப்பாார்கள், மேலும் முழுமையான அறிவு பொதுவாக சிறியதாக இருப்பதாகக் கூறலாம். நாம் இதற்கு தெய்வீக பிரமாணத்தின்படி பதில் கூறுகிறோம் – “உன்னிடத்தில் நீ அன்புகூறுவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக”. உங்கள் அயலான் மூளையையும் நாவையும் உங்களுக்கு விரோதமாக தீய சூழ்ச்சிகளிலும், அவதூறுகளிலும் பயன்படுத்த தாங்கள் விரும்பாததுபோல, நீங்களும் அவரிடம் அவ்வாறு செய்யக்கூடாது கர்த்தரின் பிரமாணமானது உங்கள் அயலார் மீது உங்களுக்குத் தெரிந்த விஷயத்தை (தனிப்பட்ட அறிவை) விட நீங்கள் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று கேட்கவில்லை, அது உங்கள் சந்தேகங்களையும் தீய ஊகங்களையும் கேட்கவில்லை. மாறாக, புதிய உடன்படிக்கையின் கீழுள்ள அனைவரும் அயலானுக்கு எதிராக ஒரு தனித்த சந்தேகத்தை வெளிப்படுத்தக்கூடாது என்று கர்த்தர் கட்டளையிடுகிறார். சூழ்ந்து இருக்கும் சூழ்நிலைகளினால் அறிவுக்கு அப்பாற்பட்ட சந்தேகமானது சிந்தையில் திணிக்கப்படும் போது, புதிய சிந்தையானது, அதின் இயற்கையான இரக்கத்தோடும், அவ்வாறாக இருக்க வாய்ப்பில்லை, தவறான தகவல் அல்லது தவறான புரிதல் ஆக இருக்க கூடும் என்னும் சந்தேகத்தின் வாய்ப்பை குற்றம் செய்தவருக்கு தர வேண்டும்.

F375 through F376 வரை: பொன்னான பிரமாணம்

பொன் என்பது நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறபடி தெய்வீகத்துக்கு அடையாளமாக இருக்கிறது. ஆகவே பொன்னான கற்பனை என்பது திவ்விய கற்பனையாகும். இது உண்மையில் அன்பின் கற்பனை என்பதைவிட நீதியின் கற்பனை என்பதே சரியானதாகும். இப்பொழுது ஜென்ம சுபாவமுள்ள மனுஷன் இந்த நீதியின் பிரமாணத்திற்கு அருகில் வந்து, அதை உணர்ந்து கொள்ள, அவனுக்கு அறியப்பட்டிருக்கும் உன்னதமான முறை எதுவென்றால், “உன் அயலான் உனக்கு எதைச் செய்யக்கூடாது என்று நீ நினைப்பாயோ, அதை உன் அயலானுக்கு நீ செய்யாதிருப்பாயாக” அதிகபட்சமாக இது எதிர்மறையான நன்மையானதாக இருக்கிறது. ஆனால் பொன்னான கற்பனையானது. தற்போதைய நிலையில் புது சிருஷ்டியயைத் தவிர வேறு எவரும் உணர முடியாததாக அல்லது புரிந்து கொள்ள முடியாததாக, உள்ளது. அதாவது “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்”. இது நேர்மறையான நன்மை, ஆனால் இது நீதியானது. புது சிருஷ்டியின் அங்கங்கள் சில வேளைகளில் இந்த நீதியின் பிரமாணமான பொன்னான கற்பனையின் ஒவ்வொரு அம்சத்தோடும் இணங்கிப் போக தவறுவார்களெனில், அவர்கள் புது வழியில் குழந்தைகளாக இல்லாவிட்டால், அது அவர்களுக்கு விசனமும் பெரிய ஏமாற்றத்திற்குரியதாகும். இந்தக் கற்பனை எவ்விதத்தினாலாவது மீறப்படும்போது வேதனையையும் மன வருத்தத்தையும் கொண்டு வருமானால், அந்த மீறுதல் மனப்பூர்வமானதல்ல, இருதயத்திலிருந்து வந்ததல்ல, புது சிருஷ்டியின் அடிப்படைக் கருத்து மீறப்படவில்லை என்பதற்கு திட்டவட்டமான அடையாளமாகும். அது கூடிய வரை ஆவியின் விருப்பத்திற்கு அல்லது நோக்கத்திற்கு மாறாக மாம்ச பலவீனத்தால் அல்லது தடுமாற்றத்தால் ஏற்பட்டதாகும். இருந்தபோதிலும் புதிய மனமானது எந்த அளவுக்கு தேவனை நோக்கி ஜீவனுள்ளதாகவும், அவருடைய சித்தத்தை நிறைவேற்ற வைராக்கியம் உள்ளதாகவும் காணப்படுகிறதோ, அதே அளவுக்கு அது வாசம் செய்கிற “மண்பாண்டத்தைப் பாதுகாப்பதில் துரிதமாகவும், ஜாக்கிரதையாகவும் சுறுசுறுப்போடும் இருக்கும். மாம்ச பெலவீனங்களுக்கு எதிராக நல்ல போராட்டத்தைப் போராடும்படியாக அது தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளும். வார்த்தையினாலோ, செயலினாலோ ஒரு தவறு செய்யப்பட்டிருந்தால், நல்ல நோக்கத்துடன் மறுபடியும் பழைய நிலைக்கு வருவதற்கு வாய்ப்பு, முடிந்தால், துரிதமாகக் கொடுக்கப்படும். இப்படியாக “மண்பாண்டம்” அதை எதிர்க்கப்படுவதையும், வெட்கப்படுத்தப்பட்டதையும் கண்டு, புதிய மனதிற்கு எதிர்ப்புக்காட்டுவதில் குறைவாகச் செயல்படலாம். புது சிருஷ்டியின் இந்த திவ்விய பிரமாணம் தேவனோடு உள்ள அவனது உறவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும், உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூறுவாயாக” என்பதின் அர்த்தத்தை அவன் புரிந்து கொள்கிறான். இங்கே அவன் தேவனோடு முற்றிலுமாக ஒத்துப்போவதினால், சுயத்திற்கு இடம் காணப்படுவதில்லை. இது சகோதரரோடு உள்ள உறவைப் பாதிக்கிறது, எப்படியெனில் தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் (விசுவாசக் கண்களினால் தவிர) காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான். (1 யோவான் 4:20, 21) அவர்களோடு தான் பழகும் விதத்தில் அவன் ஜாக்கிரதையாக கவனிக்கக் கற்றுக் கொள்ளும்போது, அதாவது அவர்கள் தனக்கென்று செயல்படவும், தன்னோடு நடந்துகொள்ளவும் தான் விரும்புகிற மாதிரி, தானும் அவர்களுக்கென்று செயல்படவும், அவர்களோடு நடந்துகொள்ளும் விதத்தைக் கற்றுக் கொள்ளும்பொழுது, அது வாழ்க்கையில் ஒரு பெரிய மாறுதலை உண்டு பண்ணுவதைக் காண்கிறான். மேலும் அவனும், மற்றவர்களும் வாழ்வதற்கும், சிந்திப்பதற்கும், நடப்பதற்கும், பேசுவதற்கும் ஏற்கனவே பழக்கப்பட்டுள்ளபடியால், இது ஒரு கற்பனை அல்லது பிரமாணத்தின் கீழ் இல்லை. தன்னோடு சகோதரர்கள் அன்பாக நடக்க வேண்டும் என்றும், சாந்தமாக பேச வேண்டும் என்றும் விருப்பப்படுவது போன்று, அவனும் அவர்களோடு அன்பாக நடக்க வேண்டும், சாந்தமாகப் பேச வேண்டும் என்பதைக் அறிந்துகொள்கிறான். தன்னுடைய குறைகளில், பலகீனங்களில் அவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், இந்த மனித குறைபாடுகள் மேல் இரக்கம் என்ற திரையை விரிக்க வேண்டும் என்று அவன் விரும்புவது போன்று, அவர்களுக்கும் அது போன்றே செய்ய வேண்டும் என்பதையும் காண்கிறான். அவர்களோடு அவன் பாசமுள்ளவனாக இருப்பதற்காக, சகோதரர்கள் தன்னைக்குறித்து பொல்லாப்பு எதுவும், அது உண்மையாக இருந்தால் கூட, பேசக்கூடாது என்று தான் விரும்புகிறான் மற்றும் “ஒருவனையும் தூஷியாதே,” யாவருக்கும். விசேஷமாக விசுவாசக் குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக்கடவோம்” என்பதையும் அவன் காண்கிறான், தன்னால் நியாயமாகச் செய்யக் கூடியதற்கு மேல் அதிகமாகச் செய்யவேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று அவன் விரும்புவது போன்று, மற்றவர்களுக்கும் தங்களால் நியாயமாக செய்யக்கூடியதற்கு மேல் அதிகமாகச் செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கக்கூடாது என்பதையும் அறிந்துக் கொள்கிறார். உலகம் மற்றும் அதன் காரியங்களைப் பொருத்தமட்டிலும் கூட இதே கருத்து செயல்பட வேண்டும். இப்படியாக வாழ்க்கையின் முழு வழியும் படிப்படியாக மாற்றப்படுகிறது. மேலும் அப்போஸ்தலர் கூறுகிறபடி “நாம் தேவனுடைய மகிமையைக்காண்கிற” அளவுக்கு ஏற்றபடி இந்த மாறுதல் வருகின்றது. அதற்கேற்றபடி, பரிபூரண நீதியின் பொன்னா பிரமாணம், ஏராளமாக அன்போடு இணைந்து, ஆளுகை செய்யக்கூடிய தெய்வீக குணாதிசயத்தின் மேன்மையான மாதிரியை புரிந்துக்கொண்டு செயல்படுத்த கற்றுக்கொள்ளும், அளவின்படி வருகின்றது என்று அப்போஸ்தலர் கூறுகிறார். (2 கொரிந்தியர் 3:18) பரிசுத்த ஆவியினால் பிறந்த நம்முடைய புதிய சிந்தைகள், புதிய சித்தங்கள் வளர்ச்சியுறும்போது அந்த வளர்ச்சி இருதயத்தின் தன்மையை “மகிமையிலிருந்து மகிமைக்கு “படிப்படியாக மாற்றுகிறது. இப்படியாக நாம் நம்முடைய இருதயங்களிலும் சிந்தைகளிலும், நோக்கங்களிலும் (இயன்ற வரை வெளித் தோற்றத்திலும்) மாற்றப்பட்டு நாம் திவ்விய வாக்குத்தத்தின்படி, பெலகீனத்திலும், அழிவிலும், விதைக்கப்பட்டதானது வல்லமையிலும் மகிமையிலும் உயிரோடு எழுப்பப்படும்போது ஒரு புது சிருஷ்டியாக, தேவனுடைய கிறிஸ்துவாக மாபெரும், இறுதி உயிர்த்தெழுதலின் மாற்றத்திற்குத் தகுதியுள்ளவர்களாகிறோம். பலவிதமான நல்லதும். உதவியானதுமான புத்திமதிகளும், கண்டிப்புகளும், யோசனைகளும் அப்போஸ்தலர்களால் கொடுக்கப்பட்டுள்ளன, அவைகள் பல்வேறு சகோதரர்களால் மறுபடியும் சொல்லப்பட்டு ஊர்ஜீதம் செய்யப்பட்டுள்ளன. அவைகள் கடிந்து கொள்ளுதல், சீர்த்திருத்தல் முதலானவைகளுக்குப் பிரயோஜன முள்ளவைகளாயிருக்கின்றன. எதற்குக் கீழாக புது சிருஷ்டி வைக்கப்பட்டுள்ளதோ, அந்த முழு கற்பனையும் பொன்னான கற்பனையாக, அன்பின் பிரமாணமாக இருக்கிறது. இது சரியானபடி அறியப்பட்டால், இப்பொழுது புது சிருஷ்டியினால் செய்யப்படும் அநேக காரியங்கள், இனிமேல் செய்யப்படமாட்டாது. மேலும் இப்போது அவர்களால் அசட்டை பண்ணப்பட்ட அநேக காரியங்கள் வைராக்கியத்துடனும், கவனத்துடனும் இனி செய்யப்படும்.

R2329 [col. 1P3-5]: –

புதிய உடன்படிக்கையின் ஐக்கியத்தில், ஆண்டவரோடு தொடர்புகொண்டிருக்கிறோம் என்று எண்ணும் பலர் வெளிப்படையாக தவறு செய்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இயேசுவையும், பாவங்களுக்காக அவருடைய பலியையும், விசுவாசித்து, இவருடைய ஆசீர்வாதங்களையும், மரணத்தின் சாபத்திலிருந்து விடுதலைப் பெறுவதை விரும்புவார்கள். ஆனால், அவர்கள் தங்களுடைய சார்பில், அதற்கு தொடர்புடைய கடமைகளை அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை. அவர்கள் தங்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தவும். அவருடைய உடன்படிக்கையின் பிரமாணம் மற்றும் அந்த பிரமாணத்தை முத்தரிக்கும் இரத்தத்தினால் முத்திரிக்கப்படவும். ஆண்டவருக்கு முன் அவர்கள் நிற்கவில்லை. அவர்கள் புதிய உடன்படிக்கையின் விதிமுறைகளின்படி இருப்பதாக நினைத்துக் கொண்டு தங்களையே வஞ்சித்துக் கொள்கிறார்கள். அந்த ஏற்பாட்டின் கீழ் பயன் பெறக்கூடிய தேவையான அடுத்தபடிகளை அவர்கள் எடுக்கவில்லை. அன்பின் “இராஜ்ரீக பிரமாணத்தை” அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள், அதை புதிய உடன் படிக்கையின் பொன்னான பிரமாணம் என்று அறிந்திருக்கிறார்கள். ஆயினும், அவர்கள் ஒருபோதும், அர்ப்பணிப்பினால், அந்த பிரமாணத்தின் கீழ் தங்களை உட்படுத்திக்கொள்வதே இல்லை. அவர்கள் அந்த பிரமாணத்திற்கு கீழ் உள்ளவர்கள் என்றும், அதுவே அவர்களை கட்டுப்படுத்தும் பிரமாணம் என்றும், இறுதியாக அந்த பிரமாணத்தை கொண்டு அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்றும் அவர்கள் உணராதிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களை தாங்களே வஞ்சிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று தெளிவாகவும், முற்றிலுமாக சுட்டிக்காட்டுவது இரக்கத்தின் ஒரு வேலையாகும். அதை ஏற்றுக்கொள்ளாமல், புதிய உடன்படிக்கையின் இராஜரீக பிரமாணத்தின் கீழ்வராதவர்கள், அந்த உடன்படிக்கையிலிருந்து வரும் ஆசீர்வதங்களில் பங்கு பெறமுடியாது. ஆண்டவரிடமும், புதிய உடன்படிக்கையினிடமும், விசுவாசமும். உண்மையுமாக இருப்பது போல பாசாங்கு செய்பவர்கள், தாங்கள் ஒரு உடன்படிக்கைக்கு உட்பட்டவர்கள் என்று தங்களை அங்கீகரித்துக் கொள்ள வேண்டிய நேரமாக உள்ளது. இவர்கள் ஆண்டவரோடு, கிறிஸ்து இயேசுவினால் உண்டான ஒரு நெருக்கமான உடன்படிக்கையை ஏற்படுத்தியிருப்பவர்கள், அந்த உடன்படிக்கையின் பிரமாணத்தால் பிணைக்கப்பட்டும் இருக்கிறார்கள். இதை அவர்கள் அறிவாற்றலோடு செய்தார்களானால், ஒவ்வொரு செயலையும், வார்த்தையையும், வாழ்க்கையின் எண்ணத்தையும், இந்த உடன்படிக்கையின் பொன்னான பிரமாணத்தோடு அளவிட்டு பார்ப்பதற்கு இது சரியான நேரமாக உள்ளது. இதை நம்முடைய ஆண்டவராம் இயேசு, “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்ற விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (லூக்கா 6:31) என்று வெளிப்படுத்துகிறார். நம்முடைய கர்த்தரும், அப்போஸ்தலரும், அவர்களுடைய போதனையிலும், எழுத்துக்களிலும், புதிய உடன்படிக்கையின் இந்த இராஜரீக பிரமாணத்தை கற்பித்தார்கள். இந்த வரிசையில், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, சீஷர்களை நோக்கி, “நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவரையும் நியாயந்தீர்க்காதீர்கள். (கடுமையாக, இரக்கமற்ற, மிக குறுகிய) “ஏனெனில், எந்த அளவுக்கு மற்றவர்களை இரக்கமற்று, நீதி குறைவாக நியாயம் தீர்க்கிறோமோ, அதே அளவின்படி தீர்க்கப்படுவீர்கள். அப்போஸ்தலனாகிய யாக்கோபு இதே கருத்தை மறுபடியும் கூறுகிறார் – “இரக்கம் இல்லாதவர்களுக்கு இரக்கமில்லாத நியாயத் தீர்ப்பு.” அதாவது, புதிய உடன்படிக்கையின் ஆசீர்வாதமான ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்பட்டிருந்தால், நம்முடைய பாவங்களை மன்னிக்க கிறிஸ்துவின் மூலமாக தேவனுடைய இரக்கத்தை பெற்றுக் கொண்டது மட்டுமல்ல, இந்த தெய்வீக இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள ஒரு நிபந்தனையும் கூட முன் வைக்கப்படுகிறது. அதாவது நம்முடைய சக – மனிதர்களிடமும், நாம் பெற்ற அதே அன்பு மற்றும் இரக்கத்தின் பிரமாணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆகையால், நாம் பொன்னான பிரமாணத்தை பின்பற்றுவதில் தோல்வி அடைந்தால், கிருபையின் உடன்படிக்கைக்கு நிராகரிக்கப்பட்டவர்கள் என்று நம்மை குறித்து நாமே தீர்மானிக்கலாம். மேலும் தெய்வீக தயவை அசட்டை பண்ணுகிறவர்களாகவும், இந்த புதிய உடன்படிக்கையின் வழியாக நமக்கு கிடைக்கூடிய மகத்தான பலியை இலகுவாக எண்ணி மிதிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

R2330 [col. 1 P1 through col. 2 P1]: –

மேலும், மிருகத்திற்கும், வீட்டு வட்டாரத்திற்கும், குடும்பத்திற்கும் பொருந்தும் இந்த அனைத்தும், தேவனுடைய குடும்பமான சபைக்கு அதே அளவில் அல்லது இன்னும் அதி வலுவுடன் பொருந்தும். எனவே, தீய சொற்கள், கசப்பு, கோபம், மூர்க்கம், வைராக்கியம், பகை, வெறுப்பு, பொறாமை,, பழைய சுபாவத்தின் எல்லா பகுதிகளும், உலகம் மற்றும் பிசாசின் இயல்பு, அனைத்தையும் புறம்பாக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் பரிந்துரைக்கிறார். இவைகள் அனைத்தும் கிறிஸ்துவின் புதிய ஆவியினால் அக்கற்றப்படவேண்டும். இது புதிய உடன் படிக்கையின் பிரமாணமாகிய அன்போடே – சாந்தம், பொறுமை, நீடிய பொறுமை, சகோதர அன்புள்ள தயவினால் – இசைந்திருக்கவேண்டும். “இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.” 2 பேதுரு 1:8-11.

இந்த புதிய உடன்படிக்கையின் பிரமாணமாகிய அன்பு – இரக்கம், கனிவு, மென்மை, நற்குணம் – ஆகியவற்றோடு தன்னுடைய இருதயம் இசைந்திராவிட்டால் அவர் தேவனுடைய புத்திரனாகவும், கிறிஸ்துவின் உடன் பங்காளியாகவும், ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கு எவ்விதமான அத்தாட்சியும் இல்லை. இந்த அன்பின் ஆவியை அவர் பெறாவிட்டால், அவர் ஆண்டவரின் அடிச்சுவடுகளில், தொலைவில் செல்வதற்கு முடியாது. ஏனெனில் கிறிஸ்துவின் பலி, வீண் பெருமைக்காகவோ, வெளிப்புறமான கண் காட்சியாகவோ, மனிதரின் நன்மதிப்புக்காவோ ஏறெடுக்கப்படாமல், தேவன் மேலும், மனுஷர் மேலும் உள்ள அன்பினால் ஏவப்பட்டு செலுத்தப்பட்டது. அதுபோல நம்முடைய இருதயங்களிலும், நம்முடைய சகோதரர்களை அன்புகூராமல், எல்லா மனிதர்களிடமும். இன்னும் முரட்டுதனமான சிருஷ்டிப்புகளிடமும் கருணையான அன்பும் இரக்கமும் இராவிட்டால், தற்போதைய நிலைமையின் கீழ், தேவைப்படும் பலிகளை ஏறெடுப்பதற்கு நம்மை வழிநடத்தும் ஆவியை நாம் பெறமாட்டோம். பலியின் வழியை, அத்தகைய பெருமையின் வல்லமை, அல்லது வீன் மகிமை தடைசெய்தால், சுயநலம் பின்தொடர்ந்து முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ளும். மரணபரியந்தம் விசுவாச முள்ளவராக, ஆண்டவரின் அடிச்சவட்டில் நடக்கும் போது, அவரை இப்படியாக பின்பற்றவதற்கு முன், அவர் ஆண்டவரின் அன்பின் ஆவியைப் பெற்றுக்கொள்வார். அப்போஸ்தலர் அறிவிக்கிறபடி, “நான் தேவனிடத்தில் அன்பு கூறுகிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனை பகைக்கிறவன் பொய்யன். காண்கிற சகோதரனை அன்புகூராதவன் காணாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்? எனவே, நாம் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டதற்கும், நம்முடைய எஜமானுடனே சஞ்சரித்து வருகிறோம் என்பதற்கும். நாம் சகோதரர் மேல் வைத்திருக்கும் அன்பே, அத்தாட்சி என்று வேதவாக்கியங்கள் முன் வைக்கிறது. மற்றும் சகோதரர்களுக்கான அன்பு, வெறுமனே பிரிவினையினாலோ, குழுமனப் பான்மையினாலோ அல்லது நாம் விரும்பும் இயற்கை குணங்களை உடைய சகோதரர்கள் மேல் வைக்கும் அன்பை இது பொருள்படுத்தாது. இது புதிய உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட அனைவர் மற்றும் அன்பின் பொன்னான பிரமாணத்தின்படி நடக்க முயல்கிற அனைவர் மேலுள்ள அன்பை இது பொருள்படுத்துகிறது. நம்முடைய சிந்தனைகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் பொருந்தாதபடிக்கு, சிலர் இயற்கையான வளர்ச்சி மற்றும் மனநிலையை தனித்தன்மையாக கொண்டிருந்தார்களானால், நாம் அவர்களை நேசித்து, அவர்களை சந்தோஷப்படுத்தி, மகிழ்ச்சியோடு அவர்களுக்கு ஊழியம் செய்வோம். ஏனென்றால், அவர்கள் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். அவரால் அங்கீகரிப்பை பெற்று, புதிய உடன்படிக்கையின் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டு, இராஜரீகமான சுயாதீன பிரமாணத்தையும் ஜீவனையும் தங்களுடைய நிலைபாடாக ஏற்படுத்திக்கொண்டனர். ஆகவே நாம் அவர்களை இனி மாம்சத்தின் தனித்தன்மைகளாகிய முடிச்சுகள், திருப்பங்களின்படி அறியாமல், புதிய சுபாவத்தில் உள்ள “புது சிருஷ்டிகளாக” அறிந்திருக்கிறோம். அதாவது, நம் ஒவ்வொருவருக்கும் அன்பின் பிரமாணத்திற்கு எதிரான, நம்முடைய சொந்த இயல்பான வஞ்சகங்கள், சாதுரியங்களை கண்டறிந்து, இந்த மாம்சத்தின் அபூரணங்களை கூடுமான அளவுக்கு துரிதமாக புறம்பாக்க நாம் முயலவேண்டும். மற்றும் அவைகள் கூடுமான அளவுக்கு மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாட்டிலிருந்து, கிறிஸ்துவின் சரீரத்தின் பல்வேறு அங்கத்தினர்கள் என்றுமே குறைபாடுகளை குறிப்பிடமாட்டார்கள். அல்லது மற்றவர்களை பழிப்பதற்கும் கேலிக்குரிய காரியங்களுக்கும் அவர்கள் இணங்கமாட்டார்கள். ஆனால் ஒவ்வொருவரும் முடிந்த அளவுக்கு தங்களுடைய சொந்த குறைபாடுகளை மூடி மறைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் போல மற்றவர்களின் குறைபாடுகளை மறைப்பார்கள். மற்றும் தங்களிடம் பரிவுணர்வோடிருப்பதுபோல, மற்றவர்களை சூழும் பிரச்சனைகளில், அவர்களிடம் பரிவுணர்வோடிருந்து, ஆண்டவரும் அவரிடம் பரிவுணர்வோடு நடந்துக்கொள்ள விரும்புவார்கள்.. “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் (கிறிஸ்துவின் சிந்தை, அன்பு) அவருடையவனல்ல” (ரோமர் 8:9)

இந்த புதிய உடன்படிக்கையின் நன்மையிலும் சலுகைகளிலும் பங்கெடுக்க. உலகம் அழைக்கப்படுவதற்கு முன்கூட்டியே திருச்சபையின் தற்போதைய அழைப்பின் பொருள், முன்னதாகவே, தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பூரணமானவர்களை அல்ல. தேவனுடைய நேச குமாரனுடைய சாயலை பெற்றவர்களையும் அல்ல, ஆனால் “குமாரனுடைய சாயலை ஒத்திருப்பதற்கும், விரும்பி, முயற்சிக்கக்கூடியவர்கள் இந்த தெரிந்தெடுப்பில் அழைக்கப்படுகிறார்கள். தேவன் அன்பாகவே இருப்பதினால், அன்பே அந்த சாயல். எனவே கிறிஸ்துவின் சிறப்பியல்பு அன்பு, இதுவே பிதாவாகிய தேவனுடைய சாயலின் பிரதிபலிப்பு. இந்த ஒரு அச்சில் நாம் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால் தேவன் இந்த அச்சுக்குள் நம்மை பதிக்கமாட்டார். இந்த நற்பண்புகளைப் பெறுவதற்கு அவர் நம்மை கட்டாயப்படுத்தமாட்டார். மாறாக, “மிகப் பெரிதும், விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களினால்” ஏற்படும் தாக்கங்களினால் மட்டுமே நாம் தெய்வீக சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகி, தெய்வீக குணமாகிய அன்பை நம்மேல் பதிக்கும்படிக்கு அவர் முயற்சிக்கிறார். இதனால் நாம் இந்த உலகத்தின் சுயநலம் என்ற கேட்டுக்கு தப்பி அல்லது நமக்குள் ஆழமாக நற்குணங்களை உருவாக்குவதற்கு தேவன் அனுமதிக்கும் எல்லாவிதமான அழுத்தங்களிலும், நம்மை நாம் தேவனுடைய அன்பில் காத்துக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம் யூதா 21.