Q-12
“1 தெச 5:14 – மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிற தென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள். திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்”.
R3136 (col.1P5)
“அனைவரிடமும் பொறுமையாயிருங்கள்” – தேவனுடைய ஜனங்களுக்கு மத்தியில் இருக்கும் சரிசம நிலையுள்ளவர்கள் மற்றவர்களிடம் இரக்கத்தையும், பொறுமையும் நடைமுறைப்படுத்த வேண்டும், அதாவது பெலவீனர்களிடமட்டும் அல்ல, அனைவரிடமும் இப்படி நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக தோன்றுகிறது. “பொறுமை உங்களுக்கு மிக அவசியம்” என்று அடிக்கடி வசனங்கள் குறிப்பிடுகிறது. உண்மையான தேவ பிள்ளைகள் இதற்குள் இருக்கும் சத்தியத்தை உணர்ந்துகொண்டு, கிறிஸ்துவ வாழ்க்கையில் பிரதானக் குணங்களில் பொறுமையும் ஒன்று என்பதை ஆழமாகப் புரிந்துகொள்வார்கள்.
(1) அறிவின் வளர்ச்சி, நம்மை பொறுமையில் வளரச்செய்யும். பிதாவாகிய தேவன் நம்மிடத்தில் காட்டின பொறுமையை நாம் உணர்ந்தால், அதே பொறுமையை நிச்சயமாக நாம் மற்றவர்களிடத்திலும் காட்டலாம்.
(2) முழு மனுக்குலத்தின் மேலும் மிகப்பெரிய அழிவு காத்திருப்பதை அறிந்த நாம் நம்முடைய விழுந்துபோன நிலை மற்றும் அந்த வீழ்ச்சி ஏதோ ஒரு வகையில் எவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் – பெரும்பாலும் மனதாலும், உடலாலும் அநேகர் பாதிக்கப்பட்டதைக் காணும்போது, நிச்சயமாக நம்முடைய மனது இரங்கும். நமக்குள் இருக்கும் தயாள குணமும், பரிவும் அதிகரித்து, இவைகளோடு நாம் தொடர்பு கொள்ளும்போது, நமக்குள் நீடிய பொறுமை பெருகும். விசேஷமாக விசுவாச வீட்டார் – தேவனுடைய கிருபையான அழைப்பில், இன்னும் பூரணப்படாதவர்களை உண்மையில் இந்த அனுபவம் பொருந்தும். தேவனுடைய கிருபையான அழைப்பை உணர்ந்தவர்கள், அவர் அழைத்தவர்களிடம் நாம் மிக ஜாக்கிரதையாக அணுகி, அவர் அழைத்த அழைப்பிற்கு இசைந்து கிரியை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். இயேசுவின் அடிச்சுவடுகளில் நடக்க விருப்பப்படும் யாவரையும் இடுக்கமானப் பாதையில் நம்மோடு நடக்க முழுமையாக முயற்சிக்க வேண்டும். இந்த ஒரு வேலைக்கு நமக்கு விசேஷித்தப் பொறுமை தேவைப்படுகிறது. – ரோமர் 14:15, 1 கொரி 8:11
F306 – F307 – “அனைவரிடமும் சமாதானமாக இருங்கள்”
இந்த அறிவுரைக்குக் கீழ்ப்படிந்து, எல்லா சூழ் நிலைகளிலும், அனைவரின் இந்தப் பொறுமையை நடைமுறைப்படுத்தினால், மற்றவர்களோடு நாம் மிகச்சரியாக நடந்துகொள்வது மட்டும் அல்லாமல், நமக்குள் விசேஷித்த ஆவியின் கனியாகிய பொறுமையை முழு உற்சாகத்தோடு வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு புது சிருஷ்டியும் உணர்ந்து கொள்ளமுடியும். பொறுமை என்னும் ஆவியின் கனியை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்த சபையிலும், வெளியிலும் அநேக வாய்ப்புகள் கிடைக்கும். இந்த முழு உலகமும் நம்முடைய பொறுமையை உரிமை கோருகிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். வசனங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அநேக உபத்திரவங்களினால் தவித்துக் கொண்டிருக்கும் இந்த உலகத்தின் நிலைமையை சரியாகப் புரிந்துகொண்டால் மட்டுமே நாம் இவர்களின் காரியங்களை உணரமுடியும். அப்போது மனிதனின் வீழ்ச்சியும் அதனால் வந்த விளைவுகள் தெளிவாகக் காணப்படுகிறது. இந்த பாவிகள் மேல் தேவன் வைத்திருக்கும் நீடிய பொறுமையையும், அவர்களை மீட்கும் விஷயத்தில் அற்புதமான அன்பையும், உளையான சேற்றிலிருந்து (பாவம் மரணம்) சபையை தூக்கி எடுத்து மிகுதியான ஆசீர்வாதங்களைக் கொடுப்பதோடு மட்டுமல்ல, இந்த முழு உலகத்தின் மனுக்குலத்திற்கும் அவர் கொடுக்கப்போகும் ஆசீர்வாதங்களைக் காணலாம். இந்த உலகத்தைப் பொருத்தவரையில் அவர்களின் பிரச்சனை என்னவெனில் – “இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களின் கண்களை குருடாக்கிவிட்டான்” தவறாக வழி நடத்திக்கொண்டிருக்கிறான். 2 கொரி 4:4
நிச்சயமாக இந்த அறிவு நமக்கு அதிகமான பொறுமையை உண்டுபண்ணும். மேலும் இந்த உலகத்தோடும் நாம் பொறுமையாக இருந்தால், தேவனுடைய கிருபையினால் இயேசுகிறிஸ்துவுக்குள் மன்னிப்பைப்பெற்று தேவனுடைய குடும்பத்தில் ஒரு நபராக அங்கீகாரம் பெற்று, அவருடைய பாதையில் நடக்க விரும்பும் நம்முடைய கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக அழைக்கப்பட்டிருக்கும் உடன் சகோதரர்களிடம் எப்படிப்பட்ட அன்பையும், நீடிய பொறுமையையும் நாம் காட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று சற்று யோசித்து பாருங்கள். இவர்களிடம் பொறுமையாக நடந்து கொள்வதைத் தவிர வேறு எதையும் நாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த பொறுமை நம்மிடம் குறைவாகக் காணப்பட்டால் நிச்சயமாக நம்முடைய கர்த்தராகிய இயேசு அதை கடுமையாகக் கண்டித்து உணர்த்தக்கூடியவராக இருக்கிறார். விசேஷமாக மாம்சம், உலகம், சாத்தானோடு நாம் எதிர்த்து நிற்கையில் நம்முடைய பலவீனங்களையும், மன அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ள அதிகமான பொறுமை தேவைப்படுகிறது. அனைவரிடமும் பொறுமையாக நடந்துக் கொள்வதற்கு, இந்த உண்மைகள் நமக்கு உதவியாக இருக்கும்.