நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-FAITH-Q-24

நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?

How may we increase our faith?

F691 P2

“ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன், சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” (யாக்1:5-8) தேவன் நமக்கு இன்று அளித்த பொக்கிஷங்களையும், வரவிருக்கும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு அவைகளை தக்கவைத்துக்கொள்வதற்கு விசுவாசம் எவ்வளவு முக்கியமானது என்று யாக்கோபு மிகத் தெளிவாகக் காட்டுகிறார். விசுவாசத்தில் உறுதியில்லாமல் நாம் ஒருபோதும் எதையும் ஜெயிக்கமுடியாது என்பதை அவர் வலியுறுத்துகிறார். ஆகவே, அனைத்து வசனங்களும், விசுவாசத்தில் கட்டாயமாக நாம் வளர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆகவே நாம் அப்போஸ்தலர்கள் ஜெபித்ததுப் போல ஜெபிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் – “எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும்”. இந்த ஜெபங்கள் கேட்கப்படுவதற்காக தேவன் அமைத்துள்ள வழிமுறைகளின் வழியாக நாம் ஜெபிக்கவேண்டும். இப்படி ஜெபித்தால், நாம் தேவனைத் தேடி, அவருடைய வார்த்தைகளை அறிந்துகொண்டு, அவைகளை கீழ்ப்படிய முயற்சித்து, அவருடைய ஊழியத்தில் மகிழ்ச்சியடைந்து, அவருடைய கிருபையின் ஆவியை தரித்துக் கொள்ளலாம். இப்படியாக விசுவாசத்தில் உறுதிப்படுவதினால், அவர்கள் என்றுமே தோல்வியைத் தழுவுவதில்லை – “ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள், இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.” – 2பேதுரு 1:10,11

R1967 (col. 2 P5)

தேவனுடைய ஊழியத்தின், விசுவாசத்திற்கான பரிசுகளை எதிர்ப்பார்க்கவேண்டும் என்றும், தெய்வீக இரக்கங்களின் விசேஷித்த வெளிப்பாடுகள் மற்றும் நம்மிடத்திலும், மற்றவர்களிடத்திலும் கிறிஸ்துவ குணலட்சணங்களை வளர்க்க தடையாக இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தடைகளையும் அகற்ற வேண்டும் என்றும் லூக்கா 17:7-10 ம் வசனங்கள் காட்டுகிறது. நாம் இந்த வேலைகளைத் தொடர்ந்து நடத்தும் வரை தெய்வீக இரக்கங்களின் பரிசுகளை எதிர்ப்பார்க்கமாட்டோம். மேலும், அவைகளை நாம் பெற்றபின் நாம் தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்கான ஆதாரங்கள் என்று கருதாமல், இவையனைத்தும் நம்மேல் விழுந்த கடமை என்று நினைத்துக் கொள்ளவேண்டும். தேவனுடைய ஊழியக்காரர்களாக நாம் நம்முடைய முழு திறமைகளையும் செலவளிக்க வேண்டும். இதன் காரணமாக, நாம் பரலோக ஆசீர்வாதத்தையும், கிறிஸ்துவின் பங்காளிகளாக இருக்கும் தகுதியையும், பெற்றுக்கொண்டோம் என்ற உணர்வுகளைப் பெறாமல் இருக்கலாம். நாம் நம்முடைய கடமையை மாத்திரம் செய்திருக்கிறோம். ஆனால், தேவன் நமக்காக ஆயத்தப்படுத்தியிருக்கும் அளவுக்கு அதிகமான ஐசுவரியமுள்ள கிருபைகளையும், அவருடைய ஊழியத்தையும் விரும்பி ஆவலோடு செய்பவர்களுக்காக வைத்திருக்கும் பரிசுகளும், நாம் எதிர்பார்த்திருப்பதை விட மிக அதிகமானது. நாம் எவ்வளவு நேர்த்தியாக வேலைகளை செய்தாலும், அதில் அநேக அபூரணமான காரியங்கள் தென்படும். அவைகள் ஒருபோதும், தேவனுக்கு முழு திருப்தியைக் கொடுக்காது. கிறிஸ்துவினால் முடிக்கப்பட்ட பூரணமான வேலைகள் நம்முடைய வேலைகளின் குறைபாடுகளை நிரப்பாவிட்டால் நம்முடைய கிரியைகள் மதிப்பற்றதாக இருக்கும்.

இப்படியாக, நம்முடைய விசுவாசத்தை அதிகரிப்பது

(a) ஜெபம், (b)வேத வாசிப்பு, (c) தேவனுடைய வாக்குறுதிகளைத் தொடர்ந்து நினைவுக்கூருவது, (d) நம்முடைய அனுபவங்களைக் கவனிப்பது.

(a) ஜெபம் – இந்தப் பாடத்திற்குப் பின் விவரிக்கப்படுகிறது.

(b) வேத வாசிப்பு

F315(1)

கிரியைகள் மற்றும் நல்லொழுக்கமுள்ள குணங்களைக் காட்டிலும் போதனைகள் மற்றும் விசுவாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நாட்களில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். போதனைகளுக்கும், விசுவாசத்திற்கும் எந்தவிதமான மதிப்பில்லாத ஒரு காலமாக இருக்கிறது. நாம் இந்த கருத்தோடு ஒத்துப்போக முடியாது. ஏனெனில், திவ்விய வார்த்தைகளின் அடிப்படையில், விசுவாசம் முதல் இடத்தையும், கிரியைகள் இரண்டாவது இடத்தையும் பெறுகிறது. முதன்முதலில் தேவன் நம்முடைய விசுவாசத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றவாறு பலனளிக்கிறார். ஆகவே நம்முடைய உறுதியான விசுவாசம் நம்முடைய பலவீனமான மாம்சத்தில் நம்மால் முடிந்த காரியங்களைச் செய்ய உதவி செய்யும். எல்லா வசனங்களிலும், இதுவே விசுவாசத்தின் கோட்பாடாகக் கொடுக்கப்பட்டுள்ளது. “விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதக் காரியம்”, “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (எபி 11:6, 1யோவான் 5:4) சரியான விசுவாசமில்லாமல் ஒருவரும் இந்த உலகத்தை ஜெயிக்கமுடியாது. ஆகவே தேவனுக்குள்ளும், அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள்ளும் விசுவாசத்தை நடைமுறைப்படுத்தி, அதை சரியாக புரிந்துகொண்டு, விசுவாசத்தில் வளர்ச்சியடையும் பொழுது, அவருடைய தெய்வீகத் திட்டங்களை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். ஆகவே, போதனைகளும், கற்பனைகளும் மிக முக்கியமானது. இவைகள் தேவனைப் பற்றியும் அவருடைய திட்டங்களைப் பற்றியும் அறிந்துகொள்வதற்கு மாத்திரம் அல்ல, மாறாக அவைகளினால் நம்முடைய கிரியைகள், சிந்தைகள் மற்றும் அனைத்திலும் நாம் முழுமையாக பரிசுத்தப்படவேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருக்கிறது. “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுப்போல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்”. (1யோவான் 3:3) இந்த வசனம் தெளிவாகக் குறிப்பிடுவது போல, ஒருவர் தன்னை சுத்திகரிக்க விரும்பினால், முதலில் தன்னுடைய இருதயத்தில் தேவனுடைய வாக்குத்தத்தங்களினால் தூண்டப்பட்டு, தன்னை சுத்திகரிக்க வேண்டியதாக இருக்கிறது. அதாவது கிறிஸ்துவின் போதனைகளை முதலாவது அறிந்த பின்பு தான் நாம் சுத்திகரிப்பை படிப்படியாக நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவரமுடியும்.

(c) தேவனுடைய வாக்குத்தத்தங்களைத் தொடர்ந்து நினைவில் கொண்டு, அதை நமக்குரியதாக்கிக்கொள்ள ஜெபிக்க வேண்டும்.

R2642 (col 2P7)

விசுவாசக் குறைச்சலை நிறைவு செய்து, அந்த விசுவாசத்தை விருத்தி செய்ய நாம் என்ன செய்யவேண்டும்? “தேவனே எங்களுடைய விசுவாசத்தை விருத்தியாக்கியருளும்” என்று அப்போஸ்தலர்கள் ஜெபித்ததுப் போல நாமும் ஜெபித்து விட்டு, அந்த ஜெபத்திற்கு ஏற்றவாறு நம்முடைய இருதயத்தில் விசுவாசத்தை வளர்க்க வேண்டும் என்று பதில் அளிக்கலாம். இதற்கு தேவனுடைய வார்த்தைகளில் உள்ள வாக்குத்தத்தங்களை நாம் தொடர்ந்து நினைவுக்கூர்ந்து, நாம் தேவனோடு செய்த உடன்படிக்கையை அன்றாடம் புதுப்பித்துக்கொண்டு, நம்முடைய இருதயமும், உதடுகளும் ஒருமித்து காரியங்களைச் சிந்தித்து, செயல்பட்டு, தேவனுக்கு எல்லாவற்றிலேயும் நன்றியோடு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கவேண்டும். அவர் நமக்கு கொடுக்க சித்தமானக் காரியங்களை நாம் விரும்பி வேண்டி பெற்றுக்கொள்ள வேண்டும்.

(d) நம்முடைய அனுபவங்களைக் கவனித்துப் பார்த்து.

R2643 (col 1P2)

சோதனைகளும், பிரச்சனைகளும் எழும்பும்பொழுது, நாம் தேவனுடைய வாக்குறுதிகளை நினைவுக்கூர வேண்டும். இவைகளை தேவனே அனுமதித்திருக்கிறார் என்ற உணர்வும் நமக்குள் இருக்கவேண்டும். ஏனெனில், அவரோடு பலியினால் உடன்படிக்கை செய்தவர்களை அவர் நேசிக்கிறார். ஆகவே நாமும் அவரிடத்தில் முழுமையாக அன்புகூறும்பொழுது, நமக்கு நேரிடும் சகல காரியங்களும் நன்மைக்கு ஏதுவாகவே இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. நமக்கு ஏற்படும் ஒவ்வொரு காரியங்களிலும், தேவன் நமக்குண்டானப் பாடங்களை வைத்திருக்கிறார். அதை பொறுமையோடு கற்றுக்கொள்ளும் பட்சத்தில் நாம் நிச்சயமாகவே நன்மையைப் பெற்றுக்கொள்வோம். இதுவே தேவன் நம்மை ஆசீர்வதிக்கக்கூடிய ஒரே வழியாக இருக்கிறது. அவரிடத்தில் அன்புகூர்ந்து, முழுமையாக அர்ப்பணிக்கக்கூடியவர்களுக்கு இவ்விதமான ஆசீர்வாதங்களை நிச்சயமாக தேவன் வாக்களித்திருக்கிறார். ஆகவே கிறிஸ்துவின் நிமித்தம் நாம் படக்கூடிய பாடுகளின் அடிப்படையில் நம்முடைய ஆசீர்வாதங்களை நாமே உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

எனவே நாம் ஒவ்வொருவரும் அப்போஸ்தலர்களின் வார்த்தையின்படி – நாம் பாவிகளாயிருக்கும் போதே தேவன் நம் மேல் வைத்த அன்பு அளவில்லாததினால், அவருடைய சொந்த குமாரனையே அவர் நமக்கு இரட்சகராகக் கொடுத்து, மேலும் அவர் நம் மேல் வைத்த அன்பை அவர் விளங்கச் செய்தார். மேலும், அவருடைய அன்பின் நிமித்தம் நம்மை நீதிமான்களாக்கியும் இருக்கிறார். நாம் நம்மை முழுமையாக ஒப்புவிக்கும் பட்சத்தில், சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவருடைய குடும்பத்தின் உறுப்பினராகவும் நம்மை ஏற்றுக்கொள்கிறார். ஒருவர் தேவனுடைய சிந்தைனைகளுக்கு இசைவாக இருக்கும் பட்சத்தில் அவருக்குள் இப்படிப்பட்ட நற்கிரியைகளை துவங்கின தேவன், அந்த தனிநபர்களுக்குள், அதை முற்றிலும் முடிக்க வல்லவராகவும் இருக்கிறார். தேவன் என்றும் மாறாதவர். அவர் சொன்ன காரியங்கள் எதுவும் மாற்றப்படுவதில்லை. ஆகவே நம்முடைய அர்ப்பணிப்பு உண்மையாக இருக்கும் பட்சத்திலும், நம்முடைய சித்தத்தை நினைக்காமல், அவருடைய சித்தத்தை நிறைவேற்றும் பட்சத்திலும், அவருடைய வாக்குத்தத்ததை நாம் நினைவுக்கூறும் பொழுது, இன்று நாம் அவருடைய பாதுகாப்பையும், வழிநடத்துதலையும், பெறுவது உறுதியான ஒன்றாகும். தேவன் மேல் நாம் வைக்கும் இந்த நம்பிக்கையே, விசுவாசத்தினால் நமக்கு கிடைக்கும் மாபெரும் வாக்குறுதியாகும்.