CD-FAITH-Q-11
விசுவாசத்திற்குப் பதிலாக உணர்வுகளை தவறாக எடுத்துகொள்ளக்கூடாது. ஆனாலும் ஒரு செடியின் வேருக்கும், மலருக்கும் தொடர்புள்ளது போல, விசுவாசத்திற்கும் பரிசுத்தமான உணர்வுகளுக்கும் தொடர்பு இருக்கிறது. வேர் நிலத்தில் என்றுமே நிலைத்திருப்பதுப்போல, விசுவாசமும் நிலைத்திருக்கக்கூடியது. ஆனால் உணர்வுகள் திட்டமிடப்படாத ஒன்றாகும். வேர்கள் எப்பொழுதும், பசுமையான இலைகளையும், மலர்களையும் தராததுப்போல, விசுவாசமும் ஓயாமல் உணர்வுகளை வெளிப்படுத்தாது. நாம் சந்தோஷத்தின் எல்லையில் இருக்கும் பொழுதும், நாம் கொண்ட விசுவாசம் உறுதியாக இருக்கும். அதுபோல, வேதனைகள், வியாதிகள், வறுமை மற்றும் பல இக்கட்டுகளில் நம்முடைய உணர்வுகள் தொய்ந்துப் போனாலும், நம்முடைய விசுவாசம் மேகங்களுக்குக் கீழ் இருக்கும் கிரானைட் மலைகளைப்போல் உறுதியாக இருக்கும். உங்களுடைய சொந்த உணர்வுகளோடு தேவனுடைய அன்பையும், வல்லமையும் ஒப்பிடாதீர்கள். சூரியனானது, அடர்த்தியுள்ள இருளான பகலிலும், மிகப் பிரகாசமாக வீசுகிறது. ஆனால் மேகங்கள் இடையில் இருப்பதினால் அந்த வெளிச்சத்தை நம்மால் உணர முடியவில்லை. அது போல நாம் செய்யக்கூடிய காரியங்களினால் தேவனுடைய அன்பை உணராதிருக்கலாம். ஏனெனில் தேவன் அன்பாகவே இருக்கிறார்.
மகிழ்ச்சி நிறைந்த இயல்பான வாழ்க்கையைவிட, குறைவான உணர்வுகளோடு இருப்பதே நலம் என்று கிறிஸ்துவ அனுபவங்கள் மூலமாக நாம் கற்றுக்கொள்கிறோம். தேவன் அவருடைய மழைத்துளிகளை நமக்கு அனுப்புகிறார், இல்லையென்றால், பூக்களும், செடிகளும் நாசமடைந்துவிடும். அதுபோல, மாறாத தேவன் மேல் நாம் விசுவாசம் வைக்கும் பட்சத்தில் ஆழமான நதியைப்போல, நம்முடைய கிறிஸ்துவ வாழ்க்கையும், அன்பும் மிக ஒழுங்காக வளர்ச்சியடையும். இதில் எந்தவிதமான தடைகளும், கட்டுமானங்களும் தடுக்கமுடியாது. மோசே சிவந்த சமுத்திரத்தின் விளிம்பில் நின்ற பொழுது விசுவாசமுள்ள உணர்ச்சியால் அவர் ஆட்கொள்ளப்பட்டார் – “பயப்படாதிருங்கள்…. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள் ….”. ஆபிரகாம் ஈசாக்கை பலியிடும்பொழுது அவர் கொண்ட விசுவாசத்தையோ, அல்லது எரிகோ மதில்களைச் சுற்றி வந்த இஸ்ரயேல் மக்களின் விசுவாசத்தையோ இதற்கு ஒப்பிடமுடியாது. ஆகவே தேவனுக்குள் விசுவாசமாயிருங்கள், அவர் காட்டிய வழிகளில் தொடர்ந்து நடவுங்கள், நிச்சயமாக வெற்றியடைவோம்.