CD-FAITH-Q-6
எபே 2:8 “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள், இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.”
R2286 (col 2 P2)
வேதப்பகுதியில் கிருபை என்று இங்கு சொல்லப்பட்ட காரியம், அநேகரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதாவது நம்முடைய விசுவாசம் நம்முடையது அல்ல என்றும், அதாவது நம்முடைய சுய விருப்பத்தின்படியல்ல, அது தேவனுடைய விருப்பத்தின்படி அவர் நமக்கு கொடுப்பது என்றும் தவறான கருத்துக்கள் அநேகரால் போதிக்கப்படுகிறது. உண்மையாக, ஒரு வகையில், நாம் சுதந்தரிக்கக்கூடிய அனைத்து ஆசீர்வாதங்களும், பரிசுகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தேவனிடத்திலிருந்தே பெறுகிறோம். “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது.” (யாக்1:17) அப்போஸ்தலரின் வார்த்தைகளை நாம் சரியாகப் புரிந்துகொண்டோம் என்றால் – “எவ்விதத்திலும் எந்த விதமான நன்மையும் செய்யாத நம்மேல் தேவன் கிருபையாக இரங்கி நமக்கு இரட்சிப்பை அளிக்கிறார். இதை நாம் கொண்ட விசுவாசத்திற்கு (கீழ்படிதலுள்ள விசுவாசம்) பரிசளிக்கிறார்.” என்று பொருள் தருகிறது என்று நம்பலாம். ஆகவே நாம் கொண்ட விசுவாசத்திற்காக நாம் மேட்டிமை சிந்தையாகவும் இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் இது தேவனிடத்திலிருந்து நமக்கு மறைமுகமாக வந்த தெய்வீக ஈவாகும். தேவன் நமக்கு அளித்த கிருபையைப்போல் மற்ற ஜனங்களுக்கு அளித்திருந்தால், இந்த உலகத்தில் அநேக மில்லியன் கணக்கான ஜனங்கள், நம்மைக் காட்டிலும், அதிகமாக நீதியை நடைமுறைப்படுத்துவதில், விசுவாசத்தில் வளர்ந்து தேவன் கிருபையாகக் கொடுத்த வெளிச்சத்திலும், ஞானத்திலும், அறிவிலும் வளர்ச்சியடைந்திருப்பார்கள். ஆகவே நாம் கொண்ட விசுவாசத்தினால் எந்தச் சூழ்நிலையிலும் மேட்டிமையான சிந்தையை உருவாக்கிவிடக்கூடாது. மாறாக, தேவனிடத்திலிருந்து நாம் பெற்ற கிருபையினால், அவருக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்ந்து, எல்லா சந்தர்ப்பங்களிலும், நாம் கொண்ட விசுவாசத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவேண்டும்.
R2811 (col. 1 P2-4)
கேள்வி – ஒவ்வொருவருக்குள்ளும் தனிப்பட்டவகையில், பயிற்சி செய்து, வளர்ச்சியடைவதே விசுவாசம் என்று நான் கருதினாலும் ரோமர் 12:3ம் வசனத்தின்படி – “அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது, உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.” என்று வாசிக்கிறோம். விசுவாசம் என்பது தேவனிடத்திலிருந்து நமக்கு அளந்து அல்லது பகிர்ந்து கொடுக்கப்படக்கூடிய ஒன்றாக தோன்றுகிறது. தேவன் தன்னிடம் இல்லாத ஒன்றை கொடுக்கமுடியுமா? அல்லது எந்த வழியில் தேவன் நமக்கு விசுவாசத்தை அளந்து கொடுக்கிறார்? தேவன், அவருடைய வார்த்தைகளில் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நாம் இந்தக் காரியங்களை முழுவதுமாக, நம்பிக்கொண்டிருக்கிறோமா, இல்லையா என்பது கேள்வி அல்ல. மாறாக அவைகளின் மேல் விசுவாசம் வைத்திருக்கிறோமா? இல்லையா என்பதே காரியம். ஏனெனில், “விசுவாசம் கேட்கக்கூடிய வார்த்தையினாலே வரும்.”
பதில் – (ரோமர் 12:3)ம் வசனத்தில் “விசுவாசம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தை “பிஸ்ட்டிஸ்” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதை மெய்ப்பற்று அல்லது உறுதிப்படுத்து என்றும் மொழிபெயர்க்கலாம். நாம் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படும் முன், நமக்குள் இருக்கும் விசுவாசத்தையும், உறுதியையும், அன்றாடம் பயிற்சி செய்யவேண்டும், அப்பொழுது நாம் விசுவாசத்தினால் நீதிமானின் நிலையை அடையமுடியும். அதற்குபின் மனப்பூர்வமாக விரும்பி நம்மையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்கும்பொழுது, நாம் பரிசுத்த ஆவியால் ஜெநிப்பிக்கப்படுவதற்கு தகுதிபெறுவோம். இதுவரைக்கும் நமக்குள் இருக்கும் விசுவாசம் போதும், ஆனால் மேற்கொண்டு அதில் வளர நாம் தேவனிடத்திலிருந்து ஆவியைப் பெறவேண்டும். அந்த ஆவியைப் பெற்றபின் தடுமாறாமல் விசுவாசப் பாதையில் நடக்கமுடியும். அப்பொழுது நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய காரியங்களைத் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடப்போம். – காணக்கூடிய காரியங்களுக்காக பலிசெலுத்துவது தற்காலிகமானது. தேவனுடைய கிருபையான செய்திகளைக் கேட்டு நீதிமானாக்கப்படுவது தேவன் நமக்கு அனுமதித்ததொன்றாகும். சொல்வதென்னவென்றால், சகல ஆசீர்வாதங்களும் தேவனிடத்திலிருந்தே வருகிறது. ஆனால், விசேஷமாக ஆவிக்குரிய காரியங்களின் மேலுள்ள விசுவாசம் தேவனிடத்திலிருந்து பெற்ற ஆவியினால் நமக்கு கிடைக்கும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதினால் வளர்ச்சியடையும். ஏனெனில், “அவர்கள் தேவனால் போதிக்கப்படுவார்கள் என்று எழுதியிருக்கிறது. நாம் கொண்ட அடிப்படையான விசுவாசத்தினால் மட்டும் அல்ல, உடன்படிக்கை செய்தபின் தேவனுடைய ஆவியினால் வளர்ச்சியடையும் விசுவாசத்தினால், நீதிமானாக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தைகளினாலும், பராமரிப்பினாலும், ஆழமான விசுவாசத்தில் உறுதிப்படுகிறோம்.
அடுத்து, தேவனுடைய போதனைகளுக்கு எவ்வளவு காலம் கீழ்ப்படியவேண்டும் என்பதையும், நம்முடைய விசுவாசம் அதிகமாக வளர்ச்சியடைய அவருடைய கற்பனைகளுக்கு எவ்விதத்தில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் பார்க்கலாம். இப்படிப்பட்ட வளர்ச்சியை “பரிசு” அல்லது நமக்குள் இருக்கும் தேவ ஆவியின் “நற்கனி” என்றும் குறிப்பிடுகிறது. இதற்கு தேவனே சிற்பாசிரியராக இருக்கிறார். ஏனெனில், சகல கிருபையினாலும் அவருடைய சத்தியங்களைக் கொண்டு அவருடைய பிள்ளைகளுக்குள் – விசுவாசம், நம்பிக்கை, மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் அன்பை வளரச் செய்கிறார். நாம் அவருடைய கற்பனைகளுக்கும், உபதேசங்களுக்கும் கீழ்ப்படிந்தோமானால் காலப்போக்கில் அவர் சித்தம் கொண்ட கிரியைகளை முற்றிலுமாக நம்மில் நிறைவேற்றுவார் அதற்குப் பின் நாம் அனைவரும் அவருடைய குமாரனின் தற்சொரூபங்களாக மாறி, கிறிஸ்துவுக்கு உடன் சுதந்திரருமாக இருப்போம்.