“விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-FAITH-Q-16

“விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?

What does it mean to “walk by faith”?

2கொரி 5:7 “நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.”

F631(P2,3)

உண்மையில், புது சிருஷ்டிகளின் நிலைமையும், ஆர்வங்களும், நோக்கங்களும், மாம்சமான அனைத்து காரியங்களுக்கும் எதிரிடையாகவே உள்ளது. இதை குறித்து தீர்க்கதரிசியான தாவீது அறிக்கையிடுகையில் – “நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன்.” மரிக்கக்கூடிய சரீரம் அல்ல, புது சிருஷ்டிகள் உண்மையில் தேவனுடைய புத்திரர், ஏனெனில், மாம்ச சரீரம் பலிசெலுத்தப்படவேண்டும். (நீதிமானாக்கப்பட்ட பின்பு) இது நம்மை ஏற்றுக்கொள்வதற்காகவும், ஜெநிப்பிப்பதற்காகவும் தேவன் வைத்திருக்கும் கட்டளையாகும். மாம்சத்திற்கு தேவைப்பட்ட கிருபைகளும், தற்காலிகமான ஆசீர்வாதங்களையும் பெற்ற மாம்ச இஸ்ரயேலர்களுக்கு இப்படிப்பட்ட கட்டளைகள் ஏதுமில்லை. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கற்பனைகளும், பிரமாணங்களும் வரவிருக்கும் உண்மையான இராஜா, உண்மையான அவருடைய இராஜ்யத்தின் மேல் அதிகாரம் செலுத்தும் நாட்களில் சம்பவிக்கப் போகிற காரியங்களுக்கு, நிழலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. யாத் 15:26, லேவி 26:3-15, உபா 28:1-14

இதற்கு எதிரிடையாக, பூமிக்குரிய காரியங்களைப் பொறுத்தவரையில் புது சிருஷ்டிகளுக்குண்டான சோதனைகளில் ஒரு முக்கியமான பங்கு என்னவெனில் – அவர்கள் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கவேண்டும். இதற்கு மேலாக – உபத்திரவங்களைச் சகிக்கவும், சுய கட்டுப்பாட்டை பழக்கப்படுத்திகொள்ளவும் வேண்டும். மேலும் உண்மையில், நமக்கு ஒன்றுமில்லாமல் இருந்தாலும், விசுவாசத்தினால் நாம் அனைத்தையும் பெற்றிருக்கிறோம். ஞானமற்றவர்களாக இருந்தோம், இப்பொழுது தேவனுக்குள் ஞானத்தைப் பெற்றிருக்கிறோம். அவருடைய அடிச்சுவடுகளை நெருங்கி பின்பற்றும் ஒவ்வொருவரும் இந்தக் காரிங்களை அதிக அளவில் உணரமுடியும். “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்தார், நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.” நம்முடைய காயங்கள் குணமாக்கப்பட்டதையும், நீதிமானாக்கப்பட்டதையும், கிறிஸ்துவின் சரீர அங்கமாக நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும், நாம் மறந்துவிடக்கூடாது – நாம் புது சிருஷ்டிகளாக, அவருடைய பிள்ளைகளாகும் தகுதி பெற்று, விசேஷமாக, கிறிஸ்துவின் பாடுகளில் பங்கெடுப்பதினால் அவருக்கு உடன்பங்காளிகளாகும் வாய்ப்புகளைப் பெற்று “கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, நம்முடைய மாம்சத்திலே நிறைவேற்ற” வாய்ப்புகளைப் பெற்றதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். – ஏசா 53:4,5, ரோமர் 8:17, கொலோ 1:24

R2581 (col. P3 – col 2P3)

எப்படியிருந்தாலும், பொதுவான மனுக்குலத்திற்கு வரவிருக்கும் சகல ஆசீர்வாதங்களும் “சுவிசேஷத்திற்குள்” அடங்கியிருக்கிறது. ஆனால், இந்த ஆசீர்வாதங்களை உலகம் பெறுவதற்குமுன், “சிறு மந்தை” வகுப்பினர் அதாவது ஆசீர்வதிக்கப்பட்ட கேட்கிற காதுகளும், காண்கிற கண்களும் உடையவர்கள் இன்னும் மேன்மையான ஆசீர்வாதங்களோடு, வெகு சீக்கிரத்தில் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். வரக்கூடிய அனைத்து ஆசீர்வாதங்களும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக அல்ல, நாம் இவைகளை விசுவாசத்தின் மூலம் அறியவேண்டியவர்களாக இருக்கிறோம், ஏனெனில் – நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். முன்னதாகவே உண்மை சபையானது, (பரலோகத்தில் பெயர் எழுதப்பட்டிருப்போர் – எபிரே 12:23) விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்படாமல், நீதிமானாகக் கருதப்பட்டு, பாவம் மற்றும் மரணத்திலிருந்து விடுதலைப் பெற்றவர்களாகக் கருதப்பட்டு, கிறிஸ்துவோடு கூட எழுப்பப்பட்டவர்களாகக் கருதப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக இருக்கிறார்கள் என்று கருதப்பட்டு, புதிய உடன்படிக்கைக்குக் கீழ் இருப்பதினால், இனி ஒருபோதும் மாம்சத்தில் இல்லாமல், ஆவிக்குரியவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, புது சிருஷ்டிகளாக இருப்போர் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியாமல், ஆவிக்கேற்றபடி அறிந்துகொள்கிறோம்.

இயற்கையான கண்கள் காணமுடியாத காரியங்களை விசுவாச கண்களின் மூலமாக காணக்கூடிய புதிய பார்வையைப் பெறுகிறோம். சகல சத்தியங்களுக்குள்ளும் வழிநடத்தப்படுகிறோம். தேவன் அவருடைய ஆழமான காரியங்களை தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார். (1கொரி 2:9,10) இயற்கையான கண்கள் காணாத காரியங்களை விசுவாச கண்களின் மூலமாகக் காணவும், இயற்கையான காதுகள் கேட்டிராத செய்திகளை விசுவாச காதுகள் கேட்கவும், அல்லது சராசரி மனிதர்களுடைய சிந்தையில் ஒருபோதும் தோன்றாததுமான காரியங்களை தேவனிடத்தில் அன்பு செலுத்தி, அதை கிரியைகளில் வெளிப்படுத்துபவர்களுக்கு தேவன் முன்னதாகவே சேமித்து வைத்திருக்கிறார். இவர்களின் விசுவாசத்தின் கண்கள் திறக்கப்பட்டு சராசரி மனிதர்களுக்கு அப்பாற்பட்டு, மற்ற பரிசுத்தவான்களோடு, கிறிஸ்துவின் அன்பின் அகலத்தையும், நீளத்தையும், ஆழத்தையும் உயரத்தையும் இன்னதென்று உணர்ந்து கொள்கிறார்கள் – எபே 3:18.

ஆயினும், இக்காலத்தில், இந்த விசேஷித்த வகுப்பார் அழியக்கூடிய இந்த சரீரத்தின் அபூரணத்திலிருந்தும், அதன் பலவீனங்களிலிருந்தும் முழுமையாக விடுதலைப் பெறவில்லை. ஆனால், இவர்கள் காணாமல் விசுவாசிக்கவேண்டிய நிலையில் பெற்றிருக்கிறார்கள். இந்த புதிய உடன்படிக்கையின் கீழ் அவர்களின் மாம்சீக பலவீனங்கள் தேவனால் பொருள் படுத்தப்படுவதில்லை ஏனெனில் அவர்கள் புதுசிருஷ்டிகளாகக் கருதப்படுகிறார்கள். ஆகவே அவர்களின் மாம்சத்தை மரித்ததாகக் கருதி, அதனுடைய பலவீனங்களையும் அவர் பொருள்படுத்தாமல், அவர்களுடைய உள்ளான நோக்கத்தின்படியே நியாயத்தீர்ப்படைகிறார்கள். ஆகவே “பலியினால் உடன்படிக்கை” செய்து, மீட்கப்பட்ட அனைவரும், தாங்கள் ஞானஸ்நானம் பெற்று, அபிஷேகம் பண்ணப்பட்டவரின் சரீரத்தின் அங்கமாகக் கருதப்பட்டிருக்கும் காரணம் என்ன என்பதை நாம் நிச்சயமாக நினைவில் கொண்டவர்களாக இருக்கவேண்டும். தெளிவாக நாம் அனைவரும் ஒரே தலையின் கீழ் அவருடைய சுவிசேஷத்தை அறிவிக்கக்கூடிய போதகர்களாக இருக்கிறோம். அவருடைய மகிமையான ராஜ்யத்தில் “ராஜரீகமான ஆசாரியர்களாக” நம்முடைய பிரதான ஆசாரியர் நம்மை தகுதிபடுத்தும் வரைக்கும் நாம் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு விசுவாசமுள்ளவர்களாகக் காத்திருக்க வேண்டும். அதற்குபின் சுவிசேஷத்தில் முன் அறிவிக்கப்பட்டபடி, இந்த முழு உலகத்தையும், அற்புதமான ஆசீர்வாதங்களுக்குள் நடத்த சிறப்புரிமைப் பெற்றவர்களாக, சத்தியத்தின் வெளிச்சத்தை முழுமையாக பிரகாசிக்கவும், தேவனுடைய புத்திரர்களாக சுதந்திரத்தையும் பெறுவோம்.

R1798 – “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.”

F142 (P2)

“நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம் என்ற அப்போஸ்தலனுடைய குறிப்பை சுவிசேஷ யுகத்தில் உள்ள முழு சபைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. நம்முடைய விசுவாசத்தை வளரச்செய்வதே நம்முடைய ஆண்டவரின் நோக்கமாக இருக்கிறது – அவரை காணமுடியாத பட்சத்திலும், அவரை விசுவாசிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அநேகக் காரியங்களை மறைவாக விட்டுச் சென்றார். மனித பார்வை அல்லது நியாயத்தீர்ப்பைப் பொறுத்த வரையில் அவருடைய விசுவாசம் வளர்ச்சியடையும் விதத்தில் சிலவற்றை விட்டுச் சென்றார். ஏனெனில், பூமிக்குரிய காரியங்களில் அற்புதங்களும் அடையாளங்களும் அனுமதிக்கப்பட்டால், இந்த விசுவாசம் வளருவதற்கு நிச்சயமாக ஒரு தடையாக அமைந்துவிடும். ஆகவே நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கான கண்கள் தேவனுடைய வார்த்தைகளின் மூலமாகப் பெற்ற வாக்குறுதிகளுக்கு எப்பொழுதும் திறந்திருக்க வேண்டும். இந்தச் சத்தியத்தைப் புரிந்துகொள்ளுவதின் மூலமாக – காணமுடியாதக் காரியங்களை (இயற்கையாக அறிந்துகொள்ள முடியாத) விசுவாசிப்பதின் மூலம் வரும் மகிழ்ச்சியை நாம் பெறுகிறோம்.