CD-KNOWLEDGE-Q-24
ஏசா 53:11 “அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின் மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்”
E91(P1,2): –
சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறோருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்” (மத் 11:27) இந்நாட்களிலும், நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகள் பொருந்தக்கூடியதாக இருக்கிறது. உலகம் அவரை அறியவில்லை. அவருடைய மேன்மையாக துவக்கத்தை அறியாமல் இருக்கிறார்கள். அவருடைய தாழ்மையை அறியாதிருக்கிறார்கள். மாம்சத்தில் வெளிப்பட்ட நாள் வரைக்கும் நித்தமும் பிதாவின் சமூகத்தில் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்த காலத்தை நாம் நினைவுக்கு கொண்டுவரலாம். குமாரன் பிதாவை அறிந்திருந்தார் என்பதில் ஆச்சரியம் இல்லை. துவக்கத்தில் அவருடைய சீஷர்களும், உலகமும் பிதாவை அறியாதிருந்தாலும், அவருடைய வார்த்தைகளின் வெளிப்பாட்டின் வழியாகவும் நாம் அவரை அறிந்துகொள்ள கற்றுக்கொண்டிருக்கிறோம். “நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்” (யோவ 17:25)
“உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்வதில்லை” (யோவ 3:31,32) இந்த அற்புதமான பரலோக அறிவின் திறவுகோலான காரியம் இந்த வசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது, ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. “தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? (மத் 13:54) என்று அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கேட்டார்கள். அது அவருடைய பரலோகத்திற்குரிய அறிவும், அவருக்கு நெருங்கியவரும், நீண்ட காலமாக தொடர்புள்ளவருமான பிதாவிடமிருந்து பெற்ற ஞானமே. ஆதலால் பிதாவின் வாக்குறுதிகளின் மேல் முழு விசுவாசம் வைத்து, பூரண மனுஷனாக இந்த உலகத்தையும், மாம்சத்தையும், சாத்தானையும் ஜெயித்து, நம்முடைய பாவங்களுக்காக ஏற்றுக்கொள்ளக் கூடிய பலியை செலுத்தினார். இப்படியாக, தீர்க்கதரிசியின் மூலமாக முன்னதாகவே “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினாலே அநேகரை நீதிமானாக்குவார்; அவர்களுடைய அக்கிரமத்தை தாமே சுமந்துகொள்வார்” (ஏசா 53:11) என்று எழுதப்பட்டுள்ளது.
R1835 (col.1 P1): –
“நீதியுள்ள பிதாவே உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.” என்பதே நம்முடைய ஆண்டவரின் விசுவாசமாக இருந்தது. அவர் தம்முடைய பிதாவோடு கூட இருந்தார், பிதாவின் அன்பையும் அவருடைய நன்மைகளையும் உணர்ந்தவர், பிதாவின் வல்லமையைக்கணடவர். அவருடைய எல்லா கிரியைகளிலும், பிதாவின் நீதியையும், அன்பையும் முழுமையாக அறிந்தவர். ஆகவே “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக்கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்” (ஏசா 53:11) என்று எழுதியிருக்கிறது. வருங்காலத்தில் தேவனுடைய நோக்கத்தை பூர்த்தி செய்வதற்காக பிதாவாகிய தேவன் விசுவாசத்தில் உறுதியாக நிலைநிற்பதற்கு கொடுத்த விசுவாசத்தில் அறிவை இயேசு பிதாவினிடத்திலிருந்து பெற்றிருந்தார். ஆகவே அவர் விசுவாசத்தில் நடக்கமுடிந்தது. மேலும் சகல விதமான தடைகளை மேற்கொள்ளவும் மரணத்தை ஜெயிக்ககூடிய பலத்தையும் இந்த விசுவாசத்தினாலே பெறமுடிந்தது.