Q-22
“1 தீமோ 3:3 – “அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசையில்லாதவனுமாயிருந்து…”
F251 (P2)
“நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான் என்றும் வேதவாக்கியம் சொல்லுகிறதே.” (1 தீமோ 5:17,18) என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தில் அடிப்படையில் பேர் சபைகள் தங்களை ஆட்சி செய்யும் மூப்பர் வகுப்பினரைத் தெரிந்தெடுக்கிறார்கள். இவர்கள் மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த, அதிகாரம் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட ஓர் “ஆளுகை முறை” வேதவசனங்களுக்கு முரண்பாடாக இருக்கிறது. “முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப் போல நடத்து” என்றும் “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தகுணமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும்” என்று மூப்பராக இருந்த தீமோத்தேயுவுக்கு அறிவுரை சொல்லப்பட்டது. இவைகளை நாம் பார்க்கும்போது, சாந்த குணமுடையவராகவும், நற்பண்புகள் உள்ளவராகவும், நீடிய பொறுமையுள்ளவராகவும், சகோதர சிநேகம் உள்ளவராகவும், அன்புள்ளவராகவும் இருந்தால் மட்டுமே அதிகாரம் பெற்ற ஒரு மூப்பராக இருக்கமுடியும். இவர்கள் நிச்சயமாக மந்தைக்கு ஒரு நல்ல மாதிரியாக இருக்கவேண்டும். ஒருவேளை அந்த மூப்பர் அதிகாரம் செலுத்துபவராக இருந்தால், மந்தையும் அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக மாறுவார்கள். அதே மூப்பர் சாந்த குணமுள்ளவராகவும், நீடிய பொறுமையுள்ளவராகவும், அன்புள்ளவராகவும் இருந்தால் மந்தையும் அதே குணத்தில் வளர்ச்சியடைவார்கள். சொல்லப்போனால், மூப்பர்கள் தங்களுடைய பொறுப்புகளை எவ்வளவு விசுவாசத்தோடு செயலாற்றுகிறார்களோ அவ்வளவு கனத்தை நாம் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். ஆகவே நாம் மீண்டுமாக மேற்சொல்லப்பட்ட வசனங்களை நினைவுக்கூறுவோம் – “நன்றாய் விசாரணை செய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும், உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திராக எண்ணவேண்டும்.”
F298 (P 1,2)
இங்கு சொல்லப்படும் அறிவுரைகள் மூப்பர்களுக்கு மட்டும் அல்ல, முழு சபைக்கும் இது பொருந்தும், முழு சபையும் தேவனுடைய புது சிருஷ்டிகளாக இருந்தாலும், மாம்சத்தில் அபூரணமாக இருக்கும் நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மட்டுமே தேவனுக்கு முன்பாக பூரணராக நிற்கமுடியும். மேலும், நாம் அனைவரும் நம்முடைய அபூரண நிலையில் அவரவர் பலவீனங்களின் அடிப்படையில் நாம் வித்தியாசப்படுகிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பூமிக்குரிய பிள்ளைகள் திருந்துவதற்கு வித்தியாசமான முறைகள் கையாளப்படுகிறது. அதேபோல் நம்முடைய பரலோகப் பிதாவும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வழி நடத்துதலைத் தருகிறார். மற்றவர்களுடைய அபூரணத்தை நாம் கவனித்து, அதை விமர்சிக்கும்போது, நமக்கு நாமே அதிகமான கேடு வருவிப்பவர்களாக மாறிவிடுவோம். நம்முடைய பலவீனங்களைக் காண நம்முடைய கண்கள் குருடாக்கப்பட்டுவிடும். அப்போஸ்தலரின் அறிவுரைகளின் உள் நோக்கத்திற்கு இப்படிப்பட்ட ஆவி எதிரிடையாகவே இருக்கிறது.
சத்திய ஆவியினாலும், பரிசுத்த ஆவியினாலும், சாந்தத்தின் ஆவியினாலும், அன்பின் ஆவியினாலும் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள், கிருபையின் ஆவியில் வளர்ச்சியடைவார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய குற்றங்களை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பார்களே தவிர மற்றவர்களைக் குறைகூறுவதற்குக் கூட அஞ்சுவார்கள். மேலும், அவர்கள் மற்றவர்கள் மேல் வைக்கும் அன்பினால் அனைவரையும் மன்னிக்கக்கூடிய சுபாவத்தைப் பெற்றிருப்பார்கள். இதினிமித்தம் இவர்களின் குறைகள் இயல்பாகவே மன்னிக்கப்படும். ஆனால் அன்பின் ஆவி சகோதரர்களின் குற்றங்களையும், குறைகளையும் மன்னிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நன்மை உண்டாக நாம் மிகுந்த சண்டையோடும் அல்லது போராடியும் அல்ல மாறாக, பொன்னான (தெய்வீக) சட்டத்திட்டத்தோடு நாம் செயல்படவேண்டும், தயவோடும், சாந்தத்தோடும், நீடிய பொறுமையோடும், நாம் ஒருவருடைய குற்றத்தை ஒருவர் மன்னிக்கவேண்டும். அதேசமயம் அதே பலவீனத்தில் இருப்போரை நாம் வெளியே வந்ததுபோல, அவர்களையும் அதிலிருந்து வெளிவர உதவி செய்ய வேண்டும்.