Q-9
“ரோமர் 12:12 – “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள். உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்.”
R2213 (col.2 P3): – “உபத்திரவத்தில் பொறுமையாயிருப்பது”
உபத்திரவம் என்ற வார்த்தை ‘ட்டிரிபுலம்” (tribulam) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கோதுமையைச் சுத்தப்படுத்தவும், அதில் உள்ள உமி போன்ற தேவையில்லாத காரியங்களையும் பிரிக்கும் போரடிக்கு இயந்திரத்தை லத்தினில் “ட்டிரிபுலம்” என்று அழைத்தார்கள். இப்படிப்பட்ட ஒரு சொல்லே கோதுமை என்று அழைக்கப்படும் தேவனுடைய ஜனங்களுக்கு (தத்தம் செய்தவர்கள்) எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது. அந்த கோதுமை மணிகளே நமக்குள் வளரும் புது சிருஷ்டி, ஆனால் தேவையற்ற உலகக் காரியங்களை உமி நம்மை மூடிக்கொண்டிருக்கிறது. ஆம், மிக விலையுயர்ந்த பொக்கிஷம் பூமியில் அழியக்கூடிய காரியங்களால் மூடப்பட்டிருக்கிறது. சிறந்த முறையில் கோதுமை மணி பயன்படுத்துவதற்காகக் களஞ்சியத்தில் சேர்க்கப்பட வேண்டும், ஆகவே ஒவ்வொரு மணிகளும் இந்த உமியை விட்டு வெளியே வருவதற்கு உபத்திரவப்படுவது மிக அவசியமாக இருக்கிறது. இந்தக் கோதுமை உமியை விட்டு பிரியும் வரைக்கும் இனி வரக்கூடிய தேவ ஊழியங்களுக்கும் தேவனால் அழைக்கப்பட்ட அழைப்பிற்கும் தகுதிப்பெற முடியாது. தேவனுடைய பரிபூரண சித்தத்தைப் பொருத்தவரையில், நம்முடைய அபூரணமான நிலை, என்னவென்பதை நன்கு அறிந்திருக்கிறோம். ஆகவே தேவன் எவ்வளவு உபத்திரவங்களை அனுமதித்தாலும், அனைத்தையும் நீடிய பொறுமையோடு சகித்து, அதில் மகிழ்வதற்கு ஆயத்தமாக இருக்கக்கடவோம். “நம்முடைய உபத்திரவத்திலும் மேன்மை பாராட்டுவோம்”. – ரோமர் 5:3
R2258 (col.1 P4 -col.2 P1)
உண்மையில் தேவனோடு உடன்படிக்கை செய்தவர்களுக்கு வரும் ஒவ்வொரு சோதனைகளும், எல்லா உபத்திரவங்களும், வாழ்க்கையின் பிரச்சனைகளும் அவர்களின் குணங்கள் நீதியின் அடிப்படையில் அன்பினால் கட்டப்பட்டிருக்கிறதா என்று சோதித்து, நிரூபிப்பதற்காகவே தேவனால் அனுமதிக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் எதிர் நோக்கும் சோதனைகள், பிரச்சனைகள் மற்றும் உபத்திரவங்கள் நமக்கு முன் ஒரு புதிய வெளிச்சத்தையே கொண்டு வந்து, நாம் மேற்கொள்ள வேண்டிய நல்ல போராட்டத்திற்குத் துணை புரியும். இப்படிப்பட்ட சின்ன சின்ன சோதனைகள் மூலமாக நாம் தேவன் மேல் வைத்திருக்கும் அன்பையும், பக்தியையும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று நாம் உணரும்போது, நமக்கு வரும் அனைத்தும் எவ்வளவு முக்கியமான வாய்ப்புகள் கிடைக்கும்போது, நாம் தேவனிடத்தில் வைத்திருக்கும் அன்பையும், பக்தியையும் செயல்முறைப்படுத்தி நிரூபிக்கவேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ஒவ்வொரு சோதனையும் நாம் பெறும் ஒவ்வொரு ஆசீர்வாதமாகும். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்”. “அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும், அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமை உண்டாகக் காணப்படும்.” “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்”. இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் இலேசான உபத்திரவம், வரக்கூடிய கனம் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல”.
இப்படியாக, தேவனிடத்தில் அன்புக்கூறுகிறவர்கள், அநேக உபத்திரவங்களின் வழியாக அவர்கள் தேவன் மேல் வைத்த அன்பு சோதிக்கப்பட்டு, அவருடைய இராஜ்யத்தில் இடம் பெறுவார்கள் என்பதை மறுபடியும் வலியுறுத்துகிறோம். தங்களுடைய முழு இருதயத்தோடு தேவனிடத்தில் அன்புக்கூறுகிறவர்களை, இந்த உலகம், மாம்சம் அல்லது பிசாசால் ஏதோ ஒரு வழியில் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாகத் தூண்டப்படுவார்கள். இவர்கள் தேவனுடைய திட்டத்தைக் காட்டிலும், தங்களுடைய சொந்த கருத்துக்களையும், கூற்றுக்களையும், விரும்புவார்கள். இப்படிப்பட்டக் காரியங்கள் சுயநலம் அல்லது குறிக்கோள் அல்லது பகை, பொறாமை, கோபத்தின் அடிப்படையைக் கொண்டதாக இருக்கிறது என்று நாம் ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
F 632(P2) – F634 (P2)
வெகு சீக்கிரத்தில் இந்த உலகத்தின் இராஜாக்களும், ஆசாரியர்களும், நியாயதிபதிகளுமாக இருக்கக்கூடிய ஆசாரியகளாகிய நாம் இந்த உலகத்தைக் கண்டு மனதுருக வேண்டும். ஆனால் இக்காலத்தில் நம்முடைய உடல் பலத்தை அதிகமாக செலவழிக்கவோ, பலவீனமானவர்களை சுகப்படுத்தவோ அவசியம் இல்லை. நாம் ஒவ்வொரு விழுந்துபோன மனுக்குலத்தின் பங்காளிகளாக இருப்பதினால், இப்படிப்பட்ட அனுபவங்களை பெற்றுக்கொண்டிருக்கிறோம். ஏனெனில், முற்காலத்தில், “நாமும் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தோம்”. இயேசு தன்னுடைய ஜீவனை பலியாகக் கொடுக்கும்வரையில் சபையும் அவருடைய காரியங்களைப் புரிந்துக் கொள்ளமுடியவில்லை. பெந்தெகோஸ்தே நாளின் போது, பரிசுத்த ஆவி கொடுக்கப்படும் வரைக்கும் சீஷர்களுக்கு பரலோகக் காரியங்களைப் பற்றி சொல்வது வீணாக இருந்தது. (யோவா 3:12,16-13, கொரி 2:10-12) ஆகவே நம்முடைய ஆண்டவர் தம்முடைய முழு ஆற்றலையும் உவமைகள் மற்றும் புரியாத புதிர்களைச் சொல்லவும் செலவழித்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றபின் சீஷர்களுக்கு அனைத்தும் புரிந்தது. ஆனால் தேவனுடைய இராஜ்யத்தில் இன்னும் மேன்மையானக் காரியங்கள் நடக்கும் என்பதை அவர் காட்டுவதற்காக அநேக உடல் ஊனமுற்றோர்களையும், பலவீனப்பட்டிருந்த மனிதர்களையும் சொஸ்தமாக்கினார். இந்த வேலைகளை இயேசுவோடு செய்வதற்கு சபையாரருடைய புரிந்து கொள்ளுதலின் கண்களைத் திறந்து, மரித்த நிலையில் இருப்போரை அவருடைய சத்தத்தைக் கேட்கச்செய்து, ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்க அழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஆகவே “நாமும் சகோதருக்காக ஜீவனைக் கொடுப்பதற்கு” மிகப்பெரிதான சிறப்புரிமையைப் பெற்றிருக்கிறோம் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். “இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அனுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்.” – 1 யோவான் 3:16, கொலோ 1:24
இந்த வார்த்தைகளின்படி சொல்லர்த்தமாக நம்முடைய ஜீவனை இழக்கவேண்டிய அவசியமில்லை. நம்முடைய சரீரத்தில் உள்ள ஜீவனை இழப்பதினால் நமக்கு எந்த விதமான பலியின் பலனும் கிடைக்காது. மேலும் “கிறிஸ்துவின் பாடுகள்” எந்த விதத்திலும் நம்முடைய சரீரத்திற்கு வேதனைத் தருவதில்லை. நம்முடைய ஆண்டவர் நமக்காக இழந்த அவருடைய ஆற்றலையும், ஜீவனையும், அவர் நம்முடைய பலவீனங்களுக்காக உணர்ச்சிவசமாக மனதுருகின காரியங்களையும் நம்முடைய பலிகளுக்கு என்றுமே ஒப்பிட முடியாது. ஆகவே நம்முடைய எதிர்ப்பார்ப்புகள் இந்த உலகத்தைக் காட்டிலும் மேலானதாகவும், கிறிஸ்து அநேகக் காரியங்களை இழந்தது போல, நாமும் நம்முடைய சகலவிதமான பூமிக்குரியவைகளை இழந்து, “அவரோடுகூட பாடுபட வேண்டியவர்களாக” இருக்கிறோம். கனம் பொருந்திய மனிதர்கள் மத்தியிலும், செல்வாக்கு நிறைந்தவர்கள் மத்தியிலும், இழப்புகள் இலகுவாக அனுமதிக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய ஆண்டவர் முழு விருப்பத்தோடு மற்றவர்களை ஐசுவர்யவான்களாக்கும்படி தன்னை தரித்திரராக்கினார். நமக்கு மாதிரியை விட்டுச் செல்லும்படி, இதே அனுபவத்தை அப்போஸ்தலர்களும் பெற்றிருந்தார்கள். இப்படியிருக்க, தேவனால் அனுமதிக்கப்பட்ட “தீமோத்தேயு பட்ட பாடுகளையும்”, “அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய சரீரத்தில் பெற்றிருந்த முள்ளையும்” ஏன் அனைவராலும் காணமுடியவில்லை? உண்மையில் இவையனைத்தும் சாத்தானால் வந்தது. ஏனெனில், பாவம் சாத்தானால் நுழைந்தது. அனைத்து பலவீனங்களும் பாவத்தின் பின்விளைவாக இருக்கிறது. ஆனால் சிறையிருப்பு, அடிகள், கப்பல் சேதம் மற்றும் மரணம் இதை தவிர அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
இந்த இயற்கை சீற்றத்திற்கு, நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக தூண்டிவிடக்காரணமானான். ஆனாலும் அப்போஸ்தலன் தன்னை உயர்த்தாமல், தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, இப்படிப்பட்ட அனுபவங்களை, தான் தேவனுக்காக செலுத்த வேண்டிய பலியின் ஒரு பகுதியாக எண்ணி, சத்தியத்தின் நிமித்தம் மகிழ்ச்சியடைந்து உபத்திரவத்தில் தேவனை மகிமைப்படுத்தினார்கள். மற்றவர்களைக் காட்டிலும் இவருக்கு அதிகமாக துன்பங்கள் வந்தபோதும் வரக்கூடிய மகிமை அதிகரிக்கும் என்பதை அறிந்து இவர் மகிழ்ந்தார்.
இருப்பினும், நீதியின் நிமித்தம் வரக்கூடிய துன்பங்களிலும், தவறான செயலின் நிமித்தம் வரும் துன்பங்களிலும் இருக்கும் வித்தியாசத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சுயக்கட்டுபாடில்லாதவர்கள் மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடுகிறதினாலும், மற்ற தீய செயலினாலும், பெருந்தீனியராக இருப்பதினால் (பிலி 3:19) அநேக உபத்திரவங்களுக்குள் அகப்படுகிறார்கள். இப்படிப்பட்ட உபத்திரவங்களில் நாம் என்றுமே சந்தோஷப்படுபவர்களாக இராமல் ஜெபத்தில் தரித்திருந்து – பொறுமையோடும், சுயக்கட்டுப்பாடோடும் இருக்கவேண்டும். புது சிருஷ்டிகளின் நியாயத்தீர்ப்பின் போது, முன்னதாகவே அறிவிக்கப்பட்டபடி சகல வாய்ப்புகளும் அவர்களுக்கு திறக்கப்படும். அதில் அவர்கள் பக்திவைராக்கியத்தோடும், சுயபலி செலுத்தும்போது, மாம்சீக ரீதியாக அநேக துன்பங்களை அடைவார்கள். இந்தக் காரியம் உலகத்தாரின் பார்வைக்கு விவேகமற்ற செயலாகத் தோன்றும். அப்பொழுது நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டப் பாடுகள் மத்தியில் அவர்கள் தேவனை மகிமைபடுத்த வேண்டும் – கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகளை அனுபவிப்பதற்காக நாம் சந்தோஷப்பட்டு களிக்கூற வேண்டும்.
ஒருவேளை நம்முடைய பாவத்தினால் அல்லது சுய நலத்தினால் வராத எந்த உபத்திரவத்தையும் நாம் பொறுமையோடு சகித்து, தேவனுக்கு நன்றிசெலுத்த வேண்டும். ஆயிர வருட ஆட்சியில் வேதனையால் புலம்பிக்கொண்டிருக்கும் முழு மனுக்குலத்தை இரக்கத்தோடும், பரிவோடும் தேவனிடத்தில் சேர்க்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு தேவன் இக்காலத்தில் அனுமதிக்கும் அனுபவங்களின் மூலமாகப் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். இப்படியாக இருதயத்தில் வரும் கிருபையும், இரக்கமும் வாழ்க்கையில் எல்லா கட்டங்களிலும் சாதகமானக் காரியங்களைக் கொண்டு வராது. மேலும், நம்முடைய அழியக்கூடிய இந்தச் சரீரங்களைப் புதிதாகவும் மாற்றாது. ஏனெனில், “காணாமல் விசுவாசிக்ககூடிய நம்மை” கண்டு விசுவாசிப்பதற்குரிய நிலைக்குத் தள்ளக்கூடிய அபாயநிலை நேர்ந்திடுமே. ஆகவே சபைக்கு இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் அனுமதிப்பதில்லை. ஏனெனில், நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். இருதயத்தில் உள்ள கிருபையானது, உஷ்ணம், குளிர், தாகம், பசி போன்ற காரியங்களுக்கு நம்மை உணர்வற்றவர்களாக மாற்றுவதில்லை. இவைகளில் நமக்கு தேவைப்பட்டவைகள் கிடைக்க தாமதிப்பதன் மூலம் நாம் பொறுமையைக் கற்றுக்கொண்டாலும், நம்முடைய பரலோகப் பிதாவின் பராமரிப்பும், அவருடைய வாக்குத்தத்தங்களும் நம்பி, சகலமும் காலப்போக்கில் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று பொறுமையோடும் விசுவாசத்தோடும் காத்திருக்கிறோம்.
இந்த உலகம் தங்களுடைய வியாதிகளுக்காக வேர்களையும், மூலிகைச் செடிகளையும் தேடுகிறபோது, புது சிருஷ்டிகள் எதையும் பயன்படுத்தாமல் இருப்பார்கள் என்று பொருள்படுமா? கண்டுபிடிக்கப்பட்ட எதையும் பயன்படுத்தாமல் அந்த வேதனைகளிலும், வலியிலும், துன்பப்பட்டு, அவர்களின் பொறுமையை நிரூபிக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. சுவிசேஷ யுகத்தில் தேவன் விழுந்துபோன மாம்சத்தோடு அல்ல, ஆனால் அவர்களுக்குள் இருக்கும் புது சிருஷ்டியோடு மட்டுமே தொடர்பு கொள்கிறார் என்பதை நம்முடைய சிந்தையில் பதித்துக் கொள்ளவேண்டும். “மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது” – நாம் அதை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறோம். எப்படியாகிலும் அது அழியக்கூடியது. நமக்குள் இருக்கும் புது சிருஷ்டியே முக்கியமானது. நம்முடைய உடன்படிக்கையை நிறைவேற்ற தடையில்லாதபடிக்கு, வியாதிகளிலிருந்தும் நம்முடைய சரீரத்தைப் பாதுகாத்துக்கொள்ள நாம் நியாயமானக் காரியங்களைச் செய்யவேண்டும். உங்கள் சரீரம் பசியோடும் தாகத்தோடும் இருக்கும்போது, தேவனுடைய வேலைகளை முழு பலத்தோடு செய்ய, தேவையான ஆகாரத்தை அளவோடு கொடுக்க வேண்டும். நம்முடைய சரீரம் குளிரில் நடுங்கும்போது அதற்குத் தேவையான வஸ்திரத்தைக் கொடுக்க வேண்டும். இவையனைத்தும் தேவன் நமக்கு அனுமதிக்கிறார். நாம் ஜூரத்தில் இருக்கும்போதும், அதை குறைப்பதற்குத் தேவையான முயற்சிகள் எடுக்கவேண்டும். அதற்காக நாம் ஞானதிருஷ்டிக்காரர்களுக்கும், அறிந்த நிலையை உண்டாக்குபவர்களிடமும், சாத்தானின் உதவியோடு வேதனைகளைப் போக்க குறி சொல்பவர்களுக்கும் நாம் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அழிந்துபோகும் சரீரத்தைக் காத்துக் கொள்ள ஒரு சராசரி மனுஷன் எவ்வாறு செயல்படுகிறானோ, அவையனைத்தையும் செய்ய புது சிருஷ்டியும் உரிமைப் பெற்றிருக்கிறது. தங்களுடைய சரீரத்தை நியாயமாகப் பராமரித்துக் கொள்வது அவரவரின் கடமையாக இருக்கிறது. நம்முடைய ஆண்டவருக்காக இந்தச் சரீரங்களை மரணபரியந்தம், ஒப்புகொடுத்து, தேவனுக்கேற்ற பணிகளை தன்னால் முடிந்த வரையிலும் செய்யவேண்டும் என்ற காரணத்தினால், புது சிருஷ்டிகளின் இந்தக் கடமையைப் பற்றி புது சிருஷ்டி தொகுப்பில் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. “