நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-9

நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?

What particular thoughts constantly kept in mind will enable us to be “patient in tribulation”?

“ரோமர் 12:12 – “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள். உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்.”

R2213 (col.2 P3): – “உபத்திரவத்தில் பொறுமையாயிருப்பது”

உபத்திரவம் என்ற வார்த்தை ‘ட்டிரிபுலம்” (tribulam) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கோதுமையைச் சுத்தப்படுத்தவும், அதில் உள்ள உமி போன்ற தேவையில்லாத காரியங்களையும் பிரிக்கும் போரடிக்கு இயந்திரத்தை லத்தினில் “ட்டிரிபுலம்” என்று அழைத்தார்கள். இப்படிப்பட்ட ஒரு சொல்லே கோதுமை என்று அழைக்கப்படும் தேவனுடைய ஜனங்களுக்கு (தத்தம் செய்தவர்கள்) எவ்வளவு நேர்த்தியாகப் பொருந்துகிறது. அந்த கோதுமை மணிகளே நமக்குள் வளரும் புது சிருஷ்டி, ஆனால் தேவையற்ற உலகக் காரியங்களை உமி நம்மை மூடிக்கொண்டிருக்கிறது. ஆம், மிக விலையுயர்ந்த பொக்கிஷம் பூமியில் அழியக்கூடிய காரியங்களால் மூடப்பட்டிருக்கிறது. சிறந்த முறையில் கோதுமை மணி பயன்படுத்துவதற்காகக் களஞ்சியத்தில் சேர்க்கப்பட வேண்டும், ஆகவே ஒவ்வொரு மணிகளும் இந்த உமியை விட்டு வெளியே வருவதற்கு உபத்திரவப்படுவது மிக அவசியமாக இருக்கிறது. இந்தக் கோதுமை உமியை விட்டு பிரியும் வரைக்கும் இனி வரக்கூடிய தேவ ஊழியங்களுக்கும் தேவனால் அழைக்கப்பட்ட அழைப்பிற்கும் தகுதிப்பெற முடியாது. தேவனுடைய பரிபூரண சித்தத்தைப் பொருத்தவரையில், நம்முடைய அபூரணமான நிலை, என்னவென்பதை நன்கு அறிந்திருக்கிறோம். ஆகவே தேவன் எவ்வளவு உபத்திரவங்களை அனுமதித்தாலும், அனைத்தையும் நீடிய பொறுமையோடு சகித்து, அதில் மகிழ்வதற்கு ஆயத்தமாக இருக்கக்கடவோம். “நம்முடைய உபத்திரவத்திலும் மேன்மை பாராட்டுவோம்”. – ரோமர் 5:3

R2258 (col.1 P4 -col.2 P1)

உண்மையில் தேவனோடு உடன்படிக்கை செய்தவர்களுக்கு வரும் ஒவ்வொரு சோதனைகளும், எல்லா உபத்திரவங்களும், வாழ்க்கையின் பிரச்சனைகளும் அவர்களின் குணங்கள் நீதியின் அடிப்படையில் அன்பினால் கட்டப்பட்டிருக்கிறதா என்று சோதித்து, நிரூபிப்பதற்காகவே தேவனால் அனுமதிக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் எதிர் நோக்கும் சோதனைகள், பிரச்சனைகள் மற்றும் உபத்திரவங்கள் நமக்கு முன் ஒரு புதிய வெளிச்சத்தையே கொண்டு வந்து, நாம் மேற்கொள்ள வேண்டிய நல்ல போராட்டத்திற்குத் துணை புரியும். இப்படிப்பட்ட சின்ன சின்ன சோதனைகள் மூலமாக நாம் தேவன் மேல் வைத்திருக்கும் அன்பையும், பக்தியையும் அவர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்று நாம் உணரும்போது, நமக்கு வரும் அனைத்தும் எவ்வளவு முக்கியமான வாய்ப்புகள் கிடைக்கும்போது, நாம் தேவனிடத்தில் வைத்திருக்கும் அன்பையும், பக்தியையும் செயல்முறைப்படுத்தி நிரூபிக்கவேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ஒவ்வொரு சோதனையும் நாம் பெறும் ஒவ்வொரு ஆசீர்வாதமாகும். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்”. “அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும், அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமை உண்டாகக் காணப்படும்.” “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்”. இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் இலேசான உபத்திரவம், வரக்கூடிய கனம் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல”.

இப்படியாக, தேவனிடத்தில் அன்புக்கூறுகிறவர்கள், அநேக உபத்திரவங்களின் வழியாக அவர்கள் தேவன் மேல் வைத்த அன்பு சோதிக்கப்பட்டு, அவருடைய இராஜ்யத்தில் இடம் பெறுவார்கள் என்பதை மறுபடியும் வலியுறுத்துகிறோம். தங்களுடைய முழு இருதயத்தோடு தேவனிடத்தில் அன்புக்கூறுகிறவர்களை, இந்த உலகம், மாம்சம் அல்லது பிசாசால் ஏதோ ஒரு வழியில் தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாகத் தூண்டப்படுவார்கள். இவர்கள் தேவனுடைய திட்டத்தைக் காட்டிலும், தங்களுடைய சொந்த கருத்துக்களையும், கூற்றுக்களையும், விரும்புவார்கள். இப்படிப்பட்டக் காரியங்கள் சுயநலம் அல்லது குறிக்கோள் அல்லது பகை, பொறாமை, கோபத்தின் அடிப்படையைக் கொண்டதாக இருக்கிறது என்று நாம் ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

F 632(P2) – F634 (P2)

வெகு சீக்கிரத்தில் இந்த உலகத்தின் இராஜாக்களும், ஆசாரியர்களும், நியாயதிபதிகளுமாக இருக்கக்கூடிய ஆசாரியகளாகிய நாம் இந்த உலகத்தைக் கண்டு மனதுருக வேண்டும். ஆனால் இக்காலத்தில் நம்முடைய உடல் பலத்தை அதிகமாக செலவழிக்கவோ, பலவீனமானவர்களை சுகப்படுத்தவோ அவசியம் இல்லை. நாம் ஒவ்வொரு விழுந்துபோன மனுக்குலத்தின் பங்காளிகளாக இருப்பதினால், இப்படிப்பட்ட அனுபவங்களை பெற்றுக்கொண்டிருக்கிறோம். ஏனெனில், முற்காலத்தில், “நாமும் கோபாக்கினையின் பிள்ளைகளாக இருந்தோம்”. இயேசு தன்னுடைய ஜீவனை பலியாகக் கொடுக்கும்வரையில் சபையும் அவருடைய காரியங்களைப் புரிந்துக் கொள்ளமுடியவில்லை. பெந்தெகோஸ்தே நாளின் போது, பரிசுத்த ஆவி கொடுக்கப்படும் வரைக்கும் சீஷர்களுக்கு பரலோகக் காரியங்களைப் பற்றி சொல்வது வீணாக இருந்தது. (யோவா 3:12,16-13, கொரி 2:10-12) ஆகவே நம்முடைய ஆண்டவர் தம்முடைய முழு ஆற்றலையும் உவமைகள் மற்றும் புரியாத புதிர்களைச் சொல்லவும் செலவழித்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றபின் சீஷர்களுக்கு அனைத்தும் புரிந்தது. ஆனால் தேவனுடைய இராஜ்யத்தில் இன்னும் மேன்மையானக் காரியங்கள் நடக்கும் என்பதை அவர் காட்டுவதற்காக அநேக உடல் ஊனமுற்றோர்களையும், பலவீனப்பட்டிருந்த மனிதர்களையும் சொஸ்தமாக்கினார். இந்த வேலைகளை இயேசுவோடு செய்வதற்கு சபையாரருடைய புரிந்து கொள்ளுதலின் கண்களைத் திறந்து, மரித்த நிலையில் இருப்போரை அவருடைய சத்தத்தைக் கேட்கச்செய்து, ஒரு புதிய வாழ்க்கையைத் துவங்க அழைப்பைக் கொடுத்திருக்கிறார். ஆகவே “நாமும் சகோதருக்காக ஜீவனைக் கொடுப்பதற்கு” மிகப்பெரிதான சிறப்புரிமையைப் பெற்றிருக்கிறோம் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். “இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அனுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்.” – 1 யோவான் 3:16, கொலோ 1:24

இந்த வார்த்தைகளின்படி சொல்லர்த்தமாக நம்முடைய ஜீவனை இழக்கவேண்டிய அவசியமில்லை. நம்முடைய சரீரத்தில் உள்ள ஜீவனை இழப்பதினால் நமக்கு எந்த விதமான பலியின் பலனும் கிடைக்காது. மேலும் “கிறிஸ்துவின் பாடுகள்” எந்த விதத்திலும் நம்முடைய சரீரத்திற்கு வேதனைத் தருவதில்லை. நம்முடைய ஆண்டவர் நமக்காக இழந்த அவருடைய ஆற்றலையும், ஜீவனையும், அவர் நம்முடைய பலவீனங்களுக்காக உணர்ச்சிவசமாக மனதுருகின காரியங்களையும் நம்முடைய பலிகளுக்கு என்றுமே ஒப்பிட முடியாது. ஆகவே நம்முடைய எதிர்ப்பார்ப்புகள் இந்த உலகத்தைக் காட்டிலும் மேலானதாகவும், கிறிஸ்து அநேகக் காரியங்களை இழந்தது போல, நாமும் நம்முடைய சகலவிதமான பூமிக்குரியவைகளை இழந்து, “அவரோடுகூட பாடுபட வேண்டியவர்களாக” இருக்கிறோம். கனம் பொருந்திய மனிதர்கள் மத்தியிலும், செல்வாக்கு நிறைந்தவர்கள் மத்தியிலும், இழப்புகள் இலகுவாக அனுமதிக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய ஆண்டவர் முழு விருப்பத்தோடு மற்றவர்களை ஐசுவர்யவான்களாக்கும்படி தன்னை தரித்திரராக்கினார். நமக்கு மாதிரியை விட்டுச் செல்லும்படி, இதே அனுபவத்தை அப்போஸ்தலர்களும் பெற்றிருந்தார்கள். இப்படியிருக்க, தேவனால் அனுமதிக்கப்பட்ட “தீமோத்தேயு பட்ட பாடுகளையும்”, “அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய சரீரத்தில் பெற்றிருந்த முள்ளையும்” ஏன் அனைவராலும் காணமுடியவில்லை? உண்மையில் இவையனைத்தும் சாத்தானால் வந்தது. ஏனெனில், பாவம் சாத்தானால் நுழைந்தது. அனைத்து பலவீனங்களும் பாவத்தின் பின்விளைவாக இருக்கிறது. ஆனால் சிறையிருப்பு, அடிகள், கப்பல் சேதம் மற்றும் மரணம் இதை தவிர அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

இந்த இயற்கை சீற்றத்திற்கு, நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக தூண்டிவிடக்காரணமானான். ஆனாலும் அப்போஸ்தலன் தன்னை உயர்த்தாமல், தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, இப்படிப்பட்ட அனுபவங்களை, தான் தேவனுக்காக செலுத்த வேண்டிய பலியின் ஒரு பகுதியாக எண்ணி, சத்தியத்தின் நிமித்தம் மகிழ்ச்சியடைந்து உபத்திரவத்தில் தேவனை மகிமைப்படுத்தினார்கள். மற்றவர்களைக் காட்டிலும் இவருக்கு அதிகமாக துன்பங்கள் வந்தபோதும் வரக்கூடிய மகிமை அதிகரிக்கும் என்பதை அறிந்து இவர் மகிழ்ந்தார்.

இருப்பினும், நீதியின் நிமித்தம் வரக்கூடிய துன்பங்களிலும், தவறான செயலின் நிமித்தம் வரும் துன்பங்களிலும் இருக்கும் வித்தியாசத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். சுயக்கட்டுபாடில்லாதவர்கள் மற்றவர்களுடைய காரியங்களில் தலையிடுகிறதினாலும், மற்ற தீய செயலினாலும், பெருந்தீனியராக இருப்பதினால் (பிலி 3:19) அநேக உபத்திரவங்களுக்குள் அகப்படுகிறார்கள். இப்படிப்பட்ட உபத்திரவங்களில் நாம் என்றுமே சந்தோஷப்படுபவர்களாக இராமல் ஜெபத்தில் தரித்திருந்து – பொறுமையோடும், சுயக்கட்டுப்பாடோடும் இருக்கவேண்டும். புது சிருஷ்டிகளின் நியாயத்தீர்ப்பின் போது, முன்னதாகவே அறிவிக்கப்பட்டபடி சகல வாய்ப்புகளும் அவர்களுக்கு திறக்கப்படும். அதில் அவர்கள் பக்திவைராக்கியத்தோடும், சுயபலி செலுத்தும்போது, மாம்சீக ரீதியாக அநேக துன்பங்களை அடைவார்கள். இந்தக் காரியம் உலகத்தாரின் பார்வைக்கு விவேகமற்ற செயலாகத் தோன்றும். அப்பொழுது நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. இப்படிப்பட்டப் பாடுகள் மத்தியில் அவர்கள் தேவனை மகிமைபடுத்த வேண்டும் – கிறிஸ்துவின் நிமித்தம் பாடுகளை அனுபவிப்பதற்காக நாம் சந்தோஷப்பட்டு களிக்கூற வேண்டும்.

ஒருவேளை நம்முடைய பாவத்தினால் அல்லது சுய நலத்தினால் வராத எந்த உபத்திரவத்தையும் நாம் பொறுமையோடு சகித்து, தேவனுக்கு நன்றிசெலுத்த வேண்டும். ஆயிர வருட ஆட்சியில் வேதனையால் புலம்பிக்கொண்டிருக்கும் முழு மனுக்குலத்தை இரக்கத்தோடும், பரிவோடும் தேவனிடத்தில் சேர்க்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு தேவன் இக்காலத்தில் அனுமதிக்கும் அனுபவங்களின் மூலமாகப் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். இப்படியாக இருதயத்தில் வரும் கிருபையும், இரக்கமும் வாழ்க்கையில் எல்லா கட்டங்களிலும் சாதகமானக் காரியங்களைக் கொண்டு வராது. மேலும், நம்முடைய அழியக்கூடிய இந்தச் சரீரங்களைப் புதிதாகவும் மாற்றாது. ஏனெனில், “காணாமல் விசுவாசிக்ககூடிய நம்மை” கண்டு விசுவாசிப்பதற்குரிய நிலைக்குத் தள்ளக்கூடிய அபாயநிலை நேர்ந்திடுமே. ஆகவே சபைக்கு இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் அனுமதிப்பதில்லை. ஏனெனில், நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். இருதயத்தில் உள்ள கிருபையானது, உஷ்ணம், குளிர், தாகம், பசி போன்ற காரியங்களுக்கு நம்மை உணர்வற்றவர்களாக மாற்றுவதில்லை. இவைகளில் நமக்கு தேவைப்பட்டவைகள் கிடைக்க தாமதிப்பதன் மூலம் நாம் பொறுமையைக் கற்றுக்கொண்டாலும், நம்முடைய பரலோகப் பிதாவின் பராமரிப்பும், அவருடைய வாக்குத்தத்தங்களும் நம்பி, சகலமும் காலப்போக்கில் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று பொறுமையோடும் விசுவாசத்தோடும் காத்திருக்கிறோம்.

இந்த உலகம் தங்களுடைய வியாதிகளுக்காக வேர்களையும், மூலிகைச் செடிகளையும் தேடுகிறபோது, புது சிருஷ்டிகள் எதையும் பயன்படுத்தாமல் இருப்பார்கள் என்று பொருள்படுமா? கண்டுபிடிக்கப்பட்ட எதையும் பயன்படுத்தாமல் அந்த வேதனைகளிலும், வலியிலும், துன்பப்பட்டு, அவர்களின் பொறுமையை நிரூபிக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. சுவிசேஷ யுகத்தில் தேவன் விழுந்துபோன மாம்சத்தோடு அல்ல, ஆனால் அவர்களுக்குள் இருக்கும் புது சிருஷ்டியோடு மட்டுமே தொடர்பு கொள்கிறார் என்பதை நம்முடைய சிந்தையில் பதித்துக் கொள்ளவேண்டும். “மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது” – நாம் அதை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறோம். எப்படியாகிலும் அது அழியக்கூடியது. நமக்குள் இருக்கும் புது சிருஷ்டியே முக்கியமானது. நம்முடைய உடன்படிக்கையை நிறைவேற்ற தடையில்லாதபடிக்கு, வியாதிகளிலிருந்தும் நம்முடைய சரீரத்தைப் பாதுகாத்துக்கொள்ள நாம் நியாயமானக் காரியங்களைச் செய்யவேண்டும். உங்கள் சரீரம் பசியோடும் தாகத்தோடும் இருக்கும்போது, தேவனுடைய வேலைகளை முழு பலத்தோடு செய்ய, தேவையான ஆகாரத்தை அளவோடு கொடுக்க வேண்டும். நம்முடைய சரீரம் குளிரில் நடுங்கும்போது அதற்குத் தேவையான வஸ்திரத்தைக் கொடுக்க வேண்டும். இவையனைத்தும் தேவன் நமக்கு அனுமதிக்கிறார். நாம் ஜூரத்தில் இருக்கும்போதும், அதை குறைப்பதற்குத் தேவையான முயற்சிகள் எடுக்கவேண்டும். அதற்காக நாம் ஞானதிருஷ்டிக்காரர்களுக்கும், அறிந்த நிலையை உண்டாக்குபவர்களிடமும், சாத்தானின் உதவியோடு வேதனைகளைப் போக்க குறி சொல்பவர்களுக்கும் நாம் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அழிந்துபோகும் சரீரத்தைக் காத்துக் கொள்ள ஒரு சராசரி மனுஷன் எவ்வாறு செயல்படுகிறானோ, அவையனைத்தையும் செய்ய புது சிருஷ்டியும் உரிமைப் பெற்றிருக்கிறது. தங்களுடைய சரீரத்தை நியாயமாகப் பராமரித்துக் கொள்வது அவரவரின் கடமையாக இருக்கிறது. நம்முடைய ஆண்டவருக்காக இந்தச் சரீரங்களை மரணபரியந்தம், ஒப்புகொடுத்து, தேவனுக்கேற்ற பணிகளை தன்னால் முடிந்த வரையிலும் செய்யவேண்டும் என்ற காரணத்தினால், புது சிருஷ்டிகளின் இந்தக் கடமையைப் பற்றி புது சிருஷ்டி தொகுப்பில் மிகத் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. “