புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-34

புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?

How should the Golden Rule help us to overcome evil speaking and evil surmising?

F 407 – நாம் நம்மை நியாயம் தீர்த்துக் கொள்ள வேண்டும்

“நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” 1 கொரி 11:31

மற்றவர்களை குறித்தான பிரச்சனைகளையும், வெட்டிப் பேச்சுக்களையும் பேசுபவர்களின் பலவீனத்தையும் தெய்வீக பிரமாணம் நிச்சயமாக மேற்கொள்ளும். இப்படிப்பட்ட வெட்டிப்பேச்சுகள், வதந்திகள், மற்றவர்களின் பிரச்சனைக்கான விபரம் – இவைகளை தவிர பேசுவதற்கு இந்த உலகத்திற்கு ஒன்றுமில்லையே. ஆனால் தேவனுடைய திட்டங்களும், “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக” என்று தூதர்கள் பாடின பாட்டின்” முழுமையாக நிறைவேறும் காலம் வரைக்கும், புது சிருஷ்டிகள் இவைகளை சிந்தித்து கொண்டும், வாயினால் பேசிக்கொண்டும், மற்ற உலக காரியங்களுக்கு மெளனமாய் இருப்பதே நலமாக இருக்கும். இவைகளே, தேவன் அங்கீகரிக்கக்கூடியதும், ஆசீர்வதிக்கக் கூடியதாய் இருக்கிறது.

அப்போஸ்தலர் நாவை குறித்துப் பேசுகையில் நம்முடைய சரீரத்தில் உள்ள அவயவங்களில் இது மிகவும் வல்லமயுள்ளது என்று காட்டுகிறார். அவைகள் பேசக்கூடிய அன்பான வார்த்தைகள் என்றும் அழிவதில்லை. ஜீவனுள்ளோருக்கும், இன்னும் பிறவாதவர்களுக்கும், ஆசீர் வழங்கக் கூடியதாய் இருக்கிறது. அல்லது விஷம் நிறைந்த வார்த்தைகள் மற்றொருவரின் வாழ்க்கையை கசப்பாக்கி அவருடைய ஜீவனை கொடூரமாய் நசுக்கி விடுகிறது. ஆகவே “துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? என் சகோதேரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.” (யாக் 3:8-11) என்று அப்போஸ்தலர் இயல்பான மனுஷ சுபாவத்தை தெய்வீக சட்டத்திற்கு உட்பட்ட உண்மையான ஆவிக்கேற்ற சுபாவமாக மாற்றுவதற்கு நியாயப்பிரமாணம் முயற்சித்தது என்று அப்போஸ்தலர் விவரிக்கிறார். ஆயினும் அந்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட சில தடைகள் “இதை செய்யாதிருப்பீர்களாக” என்று சொல்லக்கூடிய காரியங்கள் தெய்வீக சித்தத்திற்கு எதிராக மற்றவர்களை துன்பப்படுத்த கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்டது. தேவனுடைய வீட்டில் ஊழியக்காரர்களுக்கு இந்தப் பிரமாணங்கள் போதுமானதாக இருந்தது. ஆனால் தேவனுடைய வீட்டில் புத்திரர்கள் குடியேறின போதோ, (எபி 3:5,6) அவர்கள் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டதினால், அன்பின் பிரமாணத்தை முழுமையாக உணர்ந்து நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும் அதிகமாகவும் இன்னும் ஆழமாகவும் தேவனுடைய பிரமாணத்திற்கு கீழ்ப்படுகிறார்கள். “கொலைச் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, விபச்சாரம் செய்யாதிருப்பாயாக” – என்ற பிரமாணங்கள் “புது சிருஷ்டி” மட்டுமே கொண்டிருக்கும் அடிப்படையான அன்பின் பிரமாணத்திற்கு முரண்படாக இருக்கும்.

ஆனால் புதிய உடன்படிக்கையில் உள்ள புதிய பிரமாணமாகிய அன்பு – யூத உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டுள்ள நியாயப்பிரமாணத்தைக் காட்டிலும் மிக ஆழமாக புரிந்து கொள்ளக்கூடிய இருக்கிறது. “செய்ய வேண்டாம்” என்று சொல்லப்படும் பிரமாணங்கள் ஏதாகிலும் இருப்பினும் அது தேவனுடைய சட்டத்திற்கு முரண்பாடாய் இருக்குமே. ஆகவே “உங்களை நேசிப்பது போல பிறனையும் நேசிப்பாயாக” என்று சுருக்கமாய் சொல்லப்பட்டிருக்கிறது. அன்பின் பிரமாணம் அநேக அத்துமீறிய காரியங்களை தடுத்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்க “உண்மையான குற்றச்சாட்டையும்” பேசக்கூடாது என்று அன்பின் பிரமாணம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிள்ளைகளுக்கு கூறுகிறது. அதாவது உண்மையாக இருந்தாலும் அவைகளை பேசக்கூடாது என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது. ஒருவேளை இப்படிப்பட்ட காரியங்களை பேசுவது நம்மேல் விழுந்த கடமையாக இருக்கும் பட்சத்தில் எந்த விதமான பகை, விரோதம், கசப்பு போன்ற காரியங்களை அடிப்படையாக கொள்ளாமல், அன்பின் அடிப்படையில் நாம் பேச வேண்டும். தேவனுடைய புத்திரர் இப்படிப்பட்ட பிரமாணத்தை அவர்களுக்குள் மட்டுமல்லாமல் அவர்களின் நண்பர்கள் உற்றார் உறவினர் இன்னும் தங்களின் பகைவர்களுக்கும் அன்பை செயலாற்றினால் வேறெந்த குற்றங்களையும் செய்வதற்கும் வாய்ப்பில்லாமல் தங்களைத்தாங்களே எல்லா விதத்திலும் மகிழ்ச்சியுடன் பலி செலுத்துபவர்களாய் இருப்பார்களே. “கூடுமானால் விசுவாச வீட்டாருக்கும் நன்மை செய்யுங்கள்” இதுவே நம்மைப் போல் பிறரையும் நேசிப்பதாகும்.

பொன்னான பிரமாணம் – அன்பு

இந்த அன்பு மற்றவர்கள் ஆசீர் பெறுவதற்கு கிரியை செய்கிறது. “அன்பு மற்றவர்களுக்கு தீங்கு நினையாது” என்பதை நிறைவேற்றுகிறது. ஆண்டவரிடத்தில் உடன்படிக்கை செய்த ஜனங்களாய் இருக்கும் நாம் அன்றாட வாழ்க்கையில் இதை பழக்கப்படுத்த முயற்சிக்காமல், நம்முடைய கரங்களினால் ஏற்படும் காயங்களை காட்டிலும் நாவினால் ஏற்படும் காயங்கள் மிக ஆழமானது என்பதை அறிந்து வார்த்தைகளை நாம் கட்டுப்படுத்த பழகி, நம்முடைய வார்த்தைகளினால் ஒரு சகோதரையாவது ஒரு அயலானையாவது காயப்படுத்தாமல் இருப்போமா? ஒரு சகோதரனையோ, அயலானையோ குறித்து பேசும் கனவீனமான வார்த்தைகள் நிச்சயமாக அவர்களை காயப்படுத்துவதினால் தேவனுடைய அன்பின் பிரமாணத்தை (பொன்னான பிரமாணத்தை) நாம் மீறுகிறவர்களாய் இருப்போமே, ஒருவர் மற்றவரினால் பாதிக்கப்பட்டு நஷ்டமடையும் பட்சத்தில் மட்டுமே நாம் இப்படிப்பட்ட உண்மைகளை தேவையான அளவுக்கு அறிவிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்?

இப்படிப்பட்ட எச்சரிப்பை கொடுப்பதற்கு முன் நாம் பல முறை யோசித்து சீர்தூக்கிப் பார்த்து அதற்குப் பின் தேவைப்பட்டால் உண்மைகளைச் சொல்ல வேண்டும். மேலும் அவர்களை குறை சொல்லுவது நம்முடைய நோக்கமாயிராமல் அவரை அழிவிலிருந்து மீட்டுக் கொள்வதற்காக நாம் சில காரியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம். குற்றம் புரிந்த நபர் (மத் 18:15) வசனத்தின்படி தன்னை திருத்திக் கொள்ளாத பட்சத்தில் அவரிடம் தனியே சென்று இதை குறித்துப் பேசலாம். காரியங்கள் முக்கியமாக இருக்கும் பட்சத்தில் வேரிரண்டு பேரை அழைத்துச் சென்று பேசலாம். அப்போதும் திருந்தாவிட்டால் நாம் இந்தக் காரியத்தை மற்றவர்களிடம் பேச அனுமதிக்கப்படுவதில்லை, மாறாக சபையில் உள்ளே அழைத்து அவர்களின் ஆலோசனையைக் கேட்க வேண்டியதாயிருக்கும்.

அன்பு பிறருக்கு தீங்கு செய்யாது மற்றும் “தீமையானதையும் எண்ணாது” என்ற வாக்கியங்களின் அர்த்தங்களை நாம் ஆழமாக கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் நம்முடைய நாவு அல்லது கிரியை எந்த விதமான தவறான நோக்கங்களின் அடிப்படையைக் கொண்டிராமல் தீமை செய்யும் பட்சத்தில் இப்படிப்பட்ட அன்பை செயல்படுத்துவதின் மூலம் பிரமாணத்தை நிறைவேற்றக் கூடியவர்களாய் இருப்போம். குறிக்கப்பட்டுள்ள பரிசுப் பொருளை நாம் அடைந்ததாக எண்ணிவிட முடியாது. நாம் பொறுமையோடு நம்மை நாம் இந்தத் தெய்வீக பிரமாணத்திற்குட்படுத்தி வாழ்க்கையில் செயலாற்றினால் தேவனுடைய இராஜ்யத்தின் பங்காளிகளாக அங்கீகரிக்கப்பட்டு இன்னும் பெரிதான ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.

R2688 [col.2 p2,3]: –

ஆனால் இந்த அன்பின் பிரமாணம் தெய்வீக நீதியை நமக்குள் புகுத்தி அதற்கும் மேலாக தயையையும் தாராள குணத்தையும் நமக்குள் வளர்ச்சியடையச் செய்கிறது. இப்படிப்பட்ட மன நிலைகள் இருக்கும் பட்சத்தில் ஒருவருடைய இக்கட்டான காலங்களில் மனப்பூர்வமாய் உதவலாம். ஆண்டவரின் உண்மையான பரிசுத்தவான்கள் எப்படிப்பட்ட ஆவிக்குரிய குணலட்சணங்களில் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பொன்னான பிரமாணத்தின் மூலமாகவே இப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டுவரமுடியும். இது வாழ்க்கையின் கிரியைகளை மட்டும் பாதிக்காமல் தாங்கள் சந்திக்கக்கூடிய அனைவரிடமும் முதலில் நீதி நடப்பிக்கப்படும். அதற்குப் பின் எந்தவிதமான எதிர்ப்பார்ப்புமின்றி அவர்களை காயப்படுத்தாமல் அவர்களின் தேவைக்குத் தகுந்த உதவிகள் செய்யப்படும். கூடுதலாக இந்த அன்பின் பிரமாணம் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் காணப்படுகிறது. இந்தப் பிரமாணத்தின் கீழ் கசப்பும், கோபமும், அவதூறான வார்த்தைகளும் காணப்படுவதில்லை. இப்படிப்பட்ட வார்த்தைககளை பிறர் பயன்படுத்தக் கூடாது என்று நாம் எந்த அளவுக்கு நாம் எதிர்பார்க்கிறோம். ஆச்சரியமல்ல. கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டவர்கள் – கோபம், பகை, விரோதம், பொறாமை, அவதூறு பேசும் அனைத்து வார்த்தைகளையும் களைந்து போடவேண்டுமென்று அப்போஸ்தலர் கூறுகிறார். கூடுதலாக இப்படிப்பட்ட வார்த்தைகளை களைந்து போடுவது மட்டுமல்ல, கனிவான வார்த்தைகளையும் அன்பான கிரியைகளையும் நடப்பிப்பதற்கு இந்தப் பிரமாணம் நம்மை வழி நடத்தும். அப்போஸ்தலர் மீண்டும் கூறுவது போல “இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டு விடுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டீர்களே.” “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின் மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள். தேவ சமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களுமாயிருங்கள்.” (கொலோ 3:8-10, 12-15)

இந்தப் பொன்னான பிரமாணம் வெளிப்புறமான கிரியைகளில் துவங்கி நம்முடைய வார்த்தைகளில் காணப்பட்டு வெகு சீக்கிரத்தில் நம் சிந்தையை வந்தடையும். நம் கிரியைகளையும் வார்த்தைகளையும் கொண்டு பிறர் நம்முடைய தேவனுடைய பிள்ளைகளென்று புரிந்து கொள்ளும்படியாக மற்றவர்களை குறித்து நம்முடைய சிந்தைகளும் கிரியைகளும் மிகவும் தாராளமாக தயவுள்ளதாகவும் இருக்க வேண்டும்.