புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-EVILSPEAK-Q-5

புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?

What are the baneful influences of evil speaking, and what are some of the excuses and subterfuges offered by the fallen nature?

R2443 [col.2 p3] through R2444 [col.2 p2]

வெகு காலத்திற்கு முன்பு தீய பழக்கங்களை விரட்டிய பின்பும், பாவமென்று தெளிவாக அனைவரால் புரிந்துக் கொள்ளப்பட்ட பின்னும், சகோதரர் மத்தியில் இது பிரபலம் இல்லாத போதிலும் விழுந்து போன மனித நிலை அநேக உபாயதந்திரங்களை குறிப்பாக பயன்படுத்தி, மனசாட்சியின் குரலை அடக்க முயற்சித்து, தீமையான வழிகளை பயன்படுத்துவதை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறது.

1. “நான் ஒருவருக்கும் தீங்கு செய்வதில்லை, ஆனால் என் நண்பர்களோடும், அயலகத்தாரோடும் அமர்ந்து சிறிது நேரம் பேசுவது போல சுவாரஸ்யமான காரியம் ஒன்றும் இல்லை. இதை தவிர வேறு பொழுது போக்கு எனக்கொன்றுமில்லை.” என்று நம்முடைய மனசாட்சி கூறலாம். ஆயினும் வெளிச்சத்தின் பிள்ளைகள் இப்படிப்பட்ட பேச்சுகளுக்கு நிச்சயமாக கணக்கு ஒப்பிக்க வேண்டும் அல்லவா? “உங்கள் சம்பாஷனை பரிசுத்தவான்களுக்கு ஏற்றவிதமாக இருக்கக்கடவது” என்று வசனங்கள் நமக்கு கற்பிக்கிறதே”

“அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” “கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” (பிலிப் 1:27, கொலோ 4:6, எபே 4:29) என்ற கட்டளைகளை வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட அவதூறு பேசும் நபர்கள் தங்களுடைய வார்த்தைகளையும், செயல்களையும் சுத்திகரித்த போதிலும், வெகு தூரத்தில் இப்படிப்பட்ட பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கையில், மீதியுள்ள அந்தக் காரியங்களை சொல்லுவதற்கு மிகத் துரிதமாய்ச் சென்று விடுவார்கள். சரியோ தவறோ அல்லது அவர்களுக்கு தேவையான செய்தியோ தேவையில்லாத செய்தியோ, அவர்கள் இருதயத்தில் உள்ள எண்ணங்கள் அதிகதிகமாக தூண்டப்பட்டும் காட்டை கொளுத்திவிடும் நெருப்பாக அவர்களின் நாவு துரிதமாக செயல்படுகிறது. இது போல் மற்ற பலவீனங்களிலும் தேவனுடைய ஜனங்கள் எளிதில் விழுந்துவிடுகிறார்கள். விழுந்து போன நிலை இப்படிப்பட்ட காரியங்களில் மிகவும் மகிழ்ந்து, விருந்துண்கிறது. தாங்கள் செய்வது மிகச் சரியான காரியம் என்றும் பாவத்திற்கு எளிதாக போதித்து விட்டார்கள் என்று எண்ணியும் தங்களை நீதிமான்களாககாட்டிக் கொண்டோம் என்ற மகிழ்ச்சியிலும், அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். ஐயோ பாவம், விழுந்து போன மனிதனின் கிரியைகள் தேவனுடைய நீதிக்கு முன்பாக நிற்க முடியாமல் போய்விடுகிறது.

இதைக் குறிப்பாக கடைப் பிடிப்பதற்கு கிறிஸ்தவ சம்பாஷனைகளில், வெட்டிப் பேச்சுகளையும், குறை பேசுதலையும், முற்றிலும் அகற்றி விடுவது நலமாயிருக்கும். “அவதூறான பேச்சுக்களையும், தூஷணங்களும் உங்கள் வாயிலிருந்து புறப்படலாகாது.” என்ற நம்முடைய அப்போஸ்தலரின் கட்டளைகளை கண்டிப்பாக நாம் கடைபிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். கிறிஸ்தவர்களின் மத்தியில் எல்லாக் காரியங்களையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்கப்படுவதில்லை. கிறிஸ்து இயேசுவுக்குள் உண்டான தேவனுடைய கிருபையின் ஐசுவரியங்கள் மற்றும் தேவனுடைய வார்த்தைகளில் உள்ள விலையேறப்பெற்ற வாக்குறுதிகளை மட்டுமே பேசுவதற்கு அனுமதி பெற்றிருக்கிறோம். மேலும், இவைகளை பேசும் போது கேட்போருக்கு மட்டும் அல்ல பேசக்கூடியவர்களும் உண்மையாக கிருபை பெறுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பாஷனைகள் அங்கு கூடியுள்ள அனைவர் மேலும் ஆசீர்வாதங்களைப் பொழியும். அழிந்துக் கொண்டிருக்கும் பழைய மனுஷனின் கிரியைகளை புறம்பாக்கும். மேல் சொல்லப்பட்ட காரியங்களை அப்போஸ்தலர் மனதில் வைத்து – “அந்தகாரத்தினின்று ஆச்சரியமான ஒளிக்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்காக நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார். மேலும் அன்பின் ஆவி தேவனுடைய ஆவி, சத்தியத்தின் ஆவி நிரம்பி வழியக்கூடிய இருதயங்களின் வாயிலாக எந்தத் தீமையான காரியங்களும், மற்றவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளும் வெளிவராது. ஒரு வேளை தீமையான காரியங்கள் வந்தால் இருதயம் பரிசுத்தமாக காத்துக் கொள்ளவில்லையென்பது உறுதிப்படுகிறது. “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.” மத் 5:8, 1 பேது 2:9, மத் 12:14)

2. 27வது கேள்வியின் பதிலை காண்க

3. இப்படிப்பட்ட கேள்விகளை நல்ல கிறிஸ்துவ ஜனங்கள் வேறுவிதங்களில் தவிர்த்து விட்டு, தாங்கள் சத்தியத்தின்படி நடப்பதாக எண்ணி, மனிதனின் பொதுவான தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால் வழக்கமாக பேசும் அவதூறான காரியங்களையும், உண்மையில்லாத காரியங்களும் தங்களை நியாயத்தீர்ப்புக்கு உட்படுத்தும் என்று அறியாமல் பேசக்கூடிய காரியங்கள் மெய்யா, பொய்யா என்பதையும் அறியாமல் பேசுகிறார்கள். இப்படிப்பட்ட தவறான பேச்சை பேசி முடித்தபின், அவைகள் தவறாய் இருக்கும் பட்சத்தில் தேவனுக்கு முன்பாக அவர்களை பொய் சாட்சிகளாக நிறுத்திவிடும். அந்தத் தவறை கட்டாயமாக சரிசெய்ய வேண்டும் என்ற சூழ்நிலைக்குள் வந்தாலும், மாம்ச சிந்தைக்குள் வளர்ந்திருக்கும் பெருமை, சத்தியத்தை விசுவாசிப்பதற்கு மறுத்து, தங்களை திருத்திக்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளை தவிர்க்கும். இப்படியாக ஒரு பாவம் மற்றொன்றுக்கு வழி வகுக்கும். இப்படிப்பட்டவர்கள், “உண்மையை தவிர நான் எதையும் பேசுவதில்லை. என் கண்களினால் கண்டு, தனிப்பட்ட முறையில் அது உண்மை என்று உறுதிப்படுத்திக் கொண்டபின் மட்டுமே நான் பேசுவேன். உண்மை என்று நிரூபிக்கப்படாத காரியம் எதுவானாலும் சரி – நான் மிக ஜாக்கிரதையுடன் இவைகள் எனக்கு சொல்லப்பட்டது என்று சொல்லி முடித்துவிடுவேன். இப்படிப்பட்ட பேச்சுக்களுக்கு நான் உறுதியளிக்க மாட்டேன். இப்படியாக நாம் யாரைக் குறித்தும் தீமையான காரியங்களை பேசுவதில்லை” என்று சிலர் கூறலாம். இப்படிப்பட்ட துன்மார்க்கமான காரியங்கள் மனசாட்சிக்குபின் ஒழிந்துக் கொண்டு உண்மையைப் பேசுவது மட்டுமே மிகச் சரியானது என்று கூறிக்கொண்டு இருக்கிறது. ஏனெனில், உண்மை பேசுவது மட்டுமே, மாம்சம் மற்றும் சாத்தானின் கிரியைகளான தீய பேச்சுக்கள் என்று சொல்லப்படுகிறதே.

இது மிகப் பெரிய தவறாகும். தீமையான பேச்சுக்கள் உண்மையானாலும் சரி, பொய்யானாலும் சரி அது தீமையான பேச்சு தான். தேவனுடைய சட்டத்தில் மட்டுமல்ல நாகரீகமுள்ள எந்த மனுஷனின் சட்டத்திலும் இது நியாயமாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உண்மையில் மனித சட்டத்தில் ஒருவருடைய தீமையான காரியங்களை பேசினதற்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டால், உண்மையாக நடந்த சம்பவமாக இருந்தாலும், அதைக் குறித்து பேசினதற்காக அவர்கள் குற்றம் சாட்டப்படுவார்கள். ஏனெனில் அவரின் வார்த்தையினால் காயப்பட்டு அல்லது பாதிக்கப்பட்டவருக்கு இந்த உலக பிரகாரமான நீதிமன்றங்கள் நியாயம் செய்ய விரும்புகிறதே, ஆகவே உண்மையானாலும் சரி பொய்யானாலும் சரி, ஒருவரை காயப்படுத்தக் கூடிய நோக்கத்துடன் எந்தக் காரியங்களையும் நிச்சயமாக பேசக்கூடாது. மற்றவர்களை துன்புறுத்தக்கூடாது என்ற விஷயத்தில் தேவனுடைய சட்டமும் மனுஷருடைய சட்டமும் ஒன்றுக்கொன்று இசைவாக காணப்படுகிறது.

மற்றொரு வார்த்தைகளில் சொல்லப்போனால் முதல் தவறை இரண்டாவது தவறு நியாயப்படுத்தாது என்ற பிரமாணத்தை, மனித நேயமும் தெய்வீக கற்பனையும் ஒத்துக்கொள்ளுகிறது. ஒரு தவறு நடந்துவிட்டால், தவறு செய்பவர்களை தண்டிக்க நீதி மன்றங்கள் உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர் அந்தத் தீமைக்கான தண்டனையை – ஆயுதங்களை பயன்படுத்தியோ, தங்கள் நாவினால் தீமையான முறையில் புறங்கூறியோ, அவரின் குணலட்சணங்களை கசப்பான வார்த்தைகளை பேசுவதினாலோ தங்களது சொந்த கரங்களினாலோ, கெடுப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று மனித சட்டம் கூறுகிறது. உண்மையில் இப்படிப்பட்ட அநேகர் குற்றம் சாட்டப்படுவதில்லை, ஆயினும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட மானநஷ்ட வழக்குகள் நீதி மன்றங்களில் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.

R2445 (col.1 P3:6)

உண்மைகளை கண்டடைவதில் என்னுடைய நேரங்களை நான் விரயம் செய்யமாட்டேன். வாழ்க்கை மிக குறுகியதாக இருப்பதால், நான் மற்றவர்களின் சொல்கேட்டு பேசாமல், எப்போதும், என்னுடைய அறிவிலிருந்து பேசத்தக்கதாக மிக கவனத்தோடு உண்மைகளை தேடிப்பிடிப்பதில் என்னுடைய சொந்த வேலைகளை செய்வதற்கு எனக்கு நேரமில்லாமல் போய்விடுமே – என்று ஒருவர் மறுத்து பேசலாம்.

இப்படியாக, வசனங்களின் அடிப்படையிலாக நீங்கள் பின்பற்றக்கூடிய பிரமாணம் என்னவெனில் – “ஒருவனையும் தூஷிக்கவேண்டாம்”

1. ஏனெனில், உங்களுக்கு உண்மைகளை அறிந்துகொள்ள நேரமில்லாததாலும், உங்களுக்கு முன் எல்லா உண்மைகளையும் வைக்கப்பட்டாலும், அவைகளை நடு நிலைமையோடு பார்க்கக்கூடிய பக்குவம் குறைவாக இருக்கக்கூடும்.

2. ஏனெனில், உங்களுக்குள் கிறிஸ்துவின் ஆவியும், அன்பும் அதிகதிகமாக தங்கியிருந்தால், உண்மைகளைக் கூறுவதற்கு சகலவிதமான ஆதாரங்கள் இருப்பினும், நீங்கள் அவைகளை எடுத்துரைக்க விரும்பமாட்டீர்கள். நீங்கள் அறிந்த உண்மைகள் தீங்கானதாக இருப்பதால் அவைகளை அறிவிக்க உங்களுக்கு வெறுப்பாக இருக்கலாம். அப்படியானால் அவதூறான புரளிகளை கட்டாயமாக கேட்க வேண்டும் என்று ஆவலோடிருக்கும் காதுகளையும், இந்தத் தீயக் காரியத்தை பற்றிய எந்த விதமான முன் அறிவும் இல்லாமல், தவறான செய்திகளை ருசிகரமாக பேசி, அந்த தீய செய்திகளை வேகமாக பரப்பும் நாவுகளின் நிலை என்னவாகும்? இவர்களுக்குள் கிறிஸ்துவின் ஆவி சிறிதளவும் இருக்க வாய்ப்பில்லை. சகோதர அன்பில் இல்லாதவர்களும், “பொன்னான கோட்பாடுகளை” இந்நாள் வரைக்கும் இவர்கள் கற்றதுமில்லை என்று பொதுவாக காணப்படுகிறது.