வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-LOVE-Q-26

வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?

What is the importance of loving zeal and how may we cultivate it?

R2289[col.1 P4]: –

நாம் எஜமானருக்கு மிக நெருக்கமாக இருந்து, அவருடன் ஐக்கியம் கொள்ள அடிக்கடி சலுகைப் பெற்றால், அதன் விளைவாக நமக்கொருபடிப்பினை உண்டு. அதேபோல நாமும் உற்சாகமான. ஆர்வமுள்ள ஆவியில் உண்மையாக வளரவேண்டும். குளிர்ச்சியை கணக்கிடும் ஜனங்களுக்கு மற்ற நல்ல குணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்டவருடைய கிருபையை ஒரு முறை ருசித்தவர்களுக்கு, குளிர்ச்சிக்கும். வெது வெதுப்பான நிலைக்கு இடமில்லை. அப்படிப்பட்ட கொழுந்து விட்டெரியும் அன்பு, பட்சிக்கும் வைராக்கியத்திற்கு நம்மை வழிநடத்தவேண்டும். இவ்வாறாக நம்முடைய ஆண்டவராம் இயேசு. தம்முடைய தந்தையால் நேசிக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருந்தது. “என் பிதாவின் வீட்டைக் குறித்த பக்தி வைராக்கியம் என்னை பட்சித்தது” என்று அவரைக் குறித்து தீர்க்கதரிசி கூறினார். கர்த்தருடைய பார்வையில் பிரியமான இருக்க விரும்பும் யாவரும், நீதி மற்றும் சத்தியத்தின் அதே வைராக்கியமுள்ள ஆவியினால் நிறைந்து, அவைகள் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பலிகளாக அவருடைய பலிபீடத்தின்மேல் வைக்கப்படும். இவ்வாறு அவைகள் நம்முடைய கர்த்தராகிய இயேசுவினால், அவருக்கு மிகவும் பிரியமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவும் உள்ளது. சட்டப்பூர்வமாக, அனலும், வைராக்கியமும் உள்ளவர்கள் மட்டுமே, பாபிலோனிலிருந்து விடுதலைப் பெறமுடியும். அவர்கள் ஒளிக்குள்ளாகி, கணிசமானவற்றைப் பார்த்தபோதும், இந்த உலகம். மாம்சம் மற்றும் சாத்தானின் ஆவி, புதிய கண்மூடித்தனமான கட்டுகளினால், அவர்களை குருடாக்கி வைத்திருக்கும் வரையில் இவர்கள் ஆர்வமற்றவர்களாக காரியங்களை கணக்கிட்டு, எடைப்போட்டுக்கொண்டிருப்பார்கள்.

R3199[col.2 P4,5]: –

இந்த வழி எவ்வளவு குறுகியது. என்று சிலர் இறுமாப்பாக கூறுவதுண்டு, பவுலைப் போல சிலர், தங்களுடைய ஆற்றலை சத்திய சேவை என்ற ஒரே ஒரு காரியத்திற்காக ஒப்புக்கொடுப்பார்கள். ஆம். உங்களைப் போல் வெகு சிலர், இந்த “இடுக்கமான பாதையில்” செல்ல முற்பட்டு, எவ்வளவு இகழ்ச்சிகள் வந்தாலும், அதில் நடக்கத் தீர்மானிப்பவர்களை தவிர. இது உங்களுக்கு எதிரான தீர்மானமாக இருக்கும். நம்முடைய பரம அழைப்பின் பரிசுக்கான அடையாளத்தை குறிக்கும் வழி, வீணான தத்துவங்கள் மற்றும் மதியீனமாக கேள்விகள் மற்றும் பிதற்றுதல், அறிவியல் பற்றிய தவறான ஊகங்கள் ஏற்றுக்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. தேவனுடைய திட்டத்தை ஒப்புக்கொள்வது மட்டுமே போதுமானது. மற்ற எல்லா திட்டங்களையும் செயல்முறை ஏற்பாடுகளையும், கேள்விகளையும் நிராகரித்து. எவ்வளவு நிந்தைகள் வந்தாலும் அதை மனப்பூர்வமாக தாங்கிக் கொண்டு, தங்களை முழுமையாக அவருடைய பணியில் ஒப்புக் கொடுப்பார்கள். உங்கள் அழைப்பை எண்ணிப்பாருங்கள். உங்களை அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வர வழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு. நீங்கள் தெரிந்துக் கொள்ளப்பட்ட சந்ததியாயும், தேவனுக்கு ஏற்ற பலிகளை செலுத்தும் இராஜரீகமான ஆசாரியரும், பரிசுத்த ஜாதியும், விசேஷித்த ஜனங்களுமாக இருக்கிறீர்கள். இந்த ஒளிக்குள் நாம் அழைக்கப்பட்டிருக்கும் ஒரு நோக்கம், அதை நாம் பிரகாசிக்க வேண்டும் என்பதே. நாம் அதை பிரகாசிக்கவில்லை என்றால், அதற்கு நாம் அபாத்திரராகிவிடுவோம். நம்மிடம் இருந்து இந்த பொக்கிஷம் எடுக்கப்பட்டு, மீண்டும் நாம் இருளுக்குள் விடப்படுவோம். நாம் உண்மையில் வெளிச்சத்தைப் பெற்றிருந்தால், முழுமையாக தேவனுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருந்தால், “இருளிலிருந்த என்னை வெளியே கொண்டு வந்தவரைப் பற்றிய புகழை வெளிப்படுத்துவதற்கு நான் என்ன செய்துக் கொண்டிருக்கிறேன்?” என்ற கேள்வியை நம்மிடம் கேட்கலாம். என் அருகில் மற்றும் தொலைவில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு இந்த நற்செய்தியை அறிவிக்க நான் செல்லுகிறேனா? தெய்வீக குணத்தை மெய்ப்பித்து காட்டவும், தேவனுடைய நீதியான பாதைகளை அறிவிக்க, நாளுக்கு நாள் நான் சுறுசுறுப்பாக முயற்சிக்கிறேனா? என்னுடைய நேரத்தையும். பொருளாதாரத்தையும் சிக்கனம் செய்து, என்னுடைய தற்காலிகமான வேலைகளை ஒழுங்கு செய்து, போதுமான நேரத்தை தேவனுடைய வேலைகளை செய்வதற்கு ஒதுக்குகிறேனா? அதன்பின், சத்தியத்தை நன்கு அறிந்திருக்க நான் விடாமுயற்சியுடன் படித்து வருகிறேனா ? இப்படியாக, என்னை சுற்றியுள்ளவர்கள் என்னை வாசிக்கும் படியாக, உண்மையில் நான் ஒரு வாழும் நிரூபமாக இருக்கிறேனா? ஒரு ஊழியக்காரர், உண்மையில் வெட்கப்படவேண்டிய அவசியம் இல்லை

“என் அனைத்து பரிகரிக்கும் வல்லமைகள், என் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் எல்லாம். என் நாட்கள், என் மணிநேரங்கள் எல்லாம். இயேசுவுக்கே, எல்லாம் இயேசுவுக்கே”- என்று உறுதியாக என்னால் உண்மையில் சொல்ல முடியுமா ?

R2808[col.2 P3]: “நான் வரும் வரைக்கும் இவன் உயிரோடிருக்க எனக்கு சித்தமானால் உனக்கென்ன… ”

யோவானைப் பொருத்த வரையில் நம்முடைய ஆண்டவருடைய இந்த வார்த்தைகள், அப்போஸ்தலனாகிய யோவான் மரிப்பதில்லை என்ற யோசனையை சீஷர்களின் சிந்தையில் எழுப்பியதைப் போல் தோன்றுகிறது – அதாவது மற்றவர்கள் மரித்தாலும், இயேசுவின் இரண்டாம் வருகை வரைக்கும் யோவான் உயிரோடிருப்பார். ஆனால் இயேசு அப்படிப்பட்ட காரியத்தை சொல்லவில்லை என்று யோவான் தாமே கூறுகிறார். அது முற்றிலுமாக சீஷர்களின் ஒரு அனுமானமாக இருந்தது. சுவிசேஷ யுகத்தின் முடிவில், நம்முடைய ஆண்டவரின் இரண்டாம் பிரசன்னம் வரை, சபையாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் சிலரை யோவான் அடையாளப்படுத்துவதை நாம் காணலாம். யோவான் உயிரோடில்லை, ஆனால் அவர் அடையாளப்படுத்தும் வகுப்பார், தொடர்ந்து, இந்நாள் வரையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். பின்னர் மறுரூபமாக்கப்படுவார்கள். தேவனை மகிமைப் படுத்தும் ஞானமும், இந்த கிருபையும், இந்த ஆசீர்வாதத்தின், காலம் வரை உயிரோடிருப்பதற்கு நாம் சலுகைப் பெற்றுள்ளோம். மற்றும் யோவானின் அன்பான மனப்பான்மை, அவருடைய ஆற்றலும். பக்தியும். நமக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், அவர் அன்பான சீஷர் என்று அழைக்கப்பட்டாலும் அவருடைய சகோதரனுடைய பாணியில் கட்டுக்கடாங்காத வைராக்கியம் கொண்டிருந்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் – இடி முழக்கத்தின் சகோதரர்கள். அவர் நமக்கு தந்த நம்முடைய சரீரத்தினாலும், ஆவியினாலும், முழு ஆற்றலுடன், அன்பினால் ஏவப்பட்டு முழு பலிகளைச் செலுத்தி, நம்முடைய ஆண்டவரை மகிமைப்படுத்துவோம். இந்த முடிவு காலம் வரை, ஏழு சபைகளுக்கும் முழுமையாக பொருந்தக்கூடிய நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளை, நாம் நினைவில் கொள்ளலாம். “இவைகளைவிட என்னை அதிகம் நேசிக்கிறாயா?” என்று முழு சபையின் சார்பாக பேசக்கூடிய பேதுருவுக்கும் இது பொருந்தும். இதே கேள்வி, இன்றைய ஆண்டவரின் அனைத்து ஜனங்களிடமும் கேட்கப்படுகிறது. இந்த உலகம், வியாபாரம், வீட்டு கடமைகள், சமுதாய வசதிகள் முதலியவற்றிற்கு நாம் உலகோடு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடர்பு கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. இப்போது கேள்வி என்னவென்றால், “புது சிருஷ்டிகளாக”, அவருடைய “இராஜரீகமான ஆசாரியர்களாக” இருக்கும் நாம். தேவனுடைய கடமைகளுக்காக, நம்முடைய சொந்த கடமைகளை சமநிலைப்படுத்தி, தேவனுடைய கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது? அவரை காட்டிலும், பூமியின் காரியங்களை அதிகமாக நாம் நேசிப்பதை ஆண்டவர் காண்கிறாரா? அப்படியானால், நாம் அவருக்கு தகுதியற்றவர்கள் என்று அவர் அறிவிக்கிறார். மற்றும் அவருடைய மணவாட்டியாக நம்மை அவர் கண்டுணரமாட்டார். வீடுகளையும், நிலங்களையும், கணவர்கள் அல்லது மனைவிகள் அல்லது பிள்ளைகள் அல்லது மற்ற எந்த பூமிக்குரிய காரியங்களை விட அவரை அதிகமாக நேசிப்பவர்களை மட்டுமே அவருடைய சிறு மந்தையாக தெரிந்துகொள்கிறார். – மத்தேயு 10:37

R2888[col.2 P3]: –

யோசேப்பினிடம் வந்த செழிப்பு அவருடைய சிந்தையை மாற்றவில்லை. அதற்கு தன்னை தகுதியுள்ளவராக காண்பித்தார். அதாவது அந்த செழுமையை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள, அவருடைய முந்தைய அனுபவங்கள் ஆதாயமாக இருந்தது. வியாபாரத்தில் அவர் சுருசுப்புள்ளவராக இருந்தார். சிந்தையில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இதை கண்ட தேவன் அவருக்கு வழியைத் திறந்தார். அவர் உடனடியாக அவருடைய திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். களஞ்சியங்களை அல்லது பண்டக சாலைகளைக் கட்டியமைப்பதற்கு நேர்த்தியான தளங்களை தீர்மானிப்பதற்காக எகிப்தின் எத்திசையிலும் பயனித்ததே, அவருடைய முதல் நடவடிக்கையாக இருந்தது. ஆண்டவருடைய ஆசீர்வாதம் தொடர்ந்து அவரோடிருந்து, அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த வேலைகளில் முன்னேற்றம் அடைந்தார். இவ்வாறாக இது நம்முடனும் இருக்க வேண்டும். தேவனுடைய சேவையின் எந்த ஒரு துறையிலும், நமக்கு வாய்ப்பின் கதவை திறக்க அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். அதில் நாம் உடனடியாக ஆற்றலுடனும் வைராக்கியத்துடனும், அவர் நம்மை அழைத்ததற்கான நோக்கத்திற்காக அதில் பிரவேசிக்க வேண்டும். அவர் நம்மை ஏற்றுகொள்ளுவதற்கு இது ஒரு நிபந்தனையாகும். வாய்ப்புகளை பயன்படுத்துவதில் நாம் சோம்பலாக இருந்தால், சந்தேகத்திற்கிடமின்றி அவைகள் நம்மை விட்டு அகற்றப்பட்டு, மற்றவர்களுக்கு கொடுக்கப்படும். ஏனென்றால், ஆண்டவர் ஒருவரின் சுயாதீனத்தில் தலையிடாமல், ஒருவரை அல்லது மற்றொருவரை அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உயர்த்த, ஏராளமாக ஆற்றலுடையவராக இருக்கிறார். தேவனோடும் குறிப்பாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடும் கூட உடன் வேலையாட்களாக ஒருமித்து, இந்த மகத்தான சேவையைச் செய்வதற்கு நாம் பெற்ற சலுகையை எண்ணி அதிகதிகமாக பாராட்ட வேண்டும். மேலும், அவர் நம்மை அவருடைய மணவாட்டி மற்றும் பங்காளிகள் என்று அழைப்பதனால் நாம் பெற்ற ஐக்கியத்தை எண்ணி, சந்தோஷப்படவேண்டும்.

R2006 [col.1 P4, Last third]:

மகிழ்ச்சியோடு நற்செய்தியைப் பிரசங்கிக்க உங்களுக்கு பட்சிக்கும் பக்தி வைராக்கியம் இல்லை என்றால், அதற்காக உண்மையுடனும், விசுவாசத்துடனும், இடைவிடாமலும் ஜெபியுங்கள். அதற்காக முயற்சி செய்யுங்கள். நீங்கள் விரைவில் அதைப் பெறுவீர்கள். உங்களுக்கு நற்செய்தியின் மேல் அன்பும் வைராக்கியமும் இருந்தாலும், அதை வழங்குவதற்கு திறமை இல்லாவிட்டால், நீங்கள் பெற்ற திறமையை முழுமையாக பயன்படுத்திக்கொண்டே, அதிகமான திறமைக்காக ஜெபியுங்கள். உங்களுக்கு வைராக்கியமும், திறமையும் இருந்து, வாய்ப்புகள் இராவிட்டால், அதை நீங்கள் உடனடியாக ஜெபத்தில் தேவனிடம் கொண்டு செல்லுங்கள், உங்களிடம் உள்ள எல்லா வாய்ப்புகளையும் நீங்கள் உண்மையாகப் பயன்படுத்துகிறீர்கள் என்று அவரிடம் கூறுங்கள். பிறகு. உங்கள் அருகில் இருக்கும் மிகக் குறைவானதும், மிக எளியதுமான வாய்ப்புகளை சோர்வின்றி பயன்படுத்திக்கொண்டு விழித்திருங்கள்.