இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-FAITH-Q-8

இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?

What is the immediate result of faith in Christ during the Gospel Age?

ரோமர் 5:1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.

A231 (P4)

சபை மகிமையடைவதற்குக் கடக்கவேண்டிய அதே படிகளை நம்முடைய ஆண்டவரும், போதகருமானவர் கடந்ததினால், “நாம் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றும்படி அவர் ஒரு மாதிரியை ஏற்படுத்தினார்” – நாம் மரண நிலையிலிருந்து இந்த ஓட்டத்தைத் துவக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் நம்முடைய ஆண்டவர் இந்த உலகத்திற்கு பூரண நிலைமையில் வந்ததால் (N) அந்நிலையிலிருந்து, இந்தப் பயணத்தைத் துவங்கினார். நாமோ ஆதாமின் சந்ததியாராக இருப்பதினால் மரண நிலையில் இருந்தோம். (R) – இது பாவமுள்ள, அபூரணம் மற்றும் தேவனுடைய சத்துருக்கள் என்ற நிலையையும் குறிக்கிறது. ஆகவே முதலில் நாம் இந்த மரண நிலையிலிருந்து, (R) பூரண நிலைக்கு (N) வருவதே, நமக்குத் தேவைப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியப்படும்? இது நற்கிரியைகளால் கூடுமா? எந்தப் பாவிகளும் நற்கிரியைகளை நடப்பிக்க முடியாதே. நாம் எவ்விதத்திலும் இதை தேவனிடம் கேட்க தகுதியற்றவர்களாக இருக்கிறோம். ஆகவே தேவன் – “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8) இப்படியாக, நம்முடைய பாவங்களுக்காக இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டு, மரணநிலையிலிருந்த நம்மை “அவருடைய இரத்தத்தின் மேலுள்ள விசுவாசத்தினால்” அவர் இரட்சித்து, ஆதாம் படைக்கப்பட்ட நிலையும், அதிலிருந்து அனைவரும் விழுந்துபோன அந்தப் பரிபூரண நிலைக்கு மறுபடியும் மேலே தூக்கி எடுத்தார். இப்படியாக, “நாம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுகிறோம்.” (N) நிலைமைக்கு உயர்த்தப்படுகிறோம். விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுபவர்கள் தேவனோடு சமாதானம் கொண்டிருப்பார்கள். (ரோமர் 5:1) இனி அவர்கள் ஒரு போதும் தேவனுடைய எதிராளிகளாக எண்ணப்படாமல், தேவனுடைய புத்திரர்களாகக் கருதப்படுகிறார்கள். இயேசு இந்த உலகத்திற்கு வந்த அதே பூரண நிலையில் நாமும் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். இயேசு உண்மையில் பரிபூரணராக இருந்தார் ஆனால் நாமோ பரிபூரணமானவர்கள் என்று கருதப்படுகிறோம். நாம் கிரயத்திற்குக் கொள்ளப்பட்டு, இரட்சிக்கப்பட்டு, நீதிமானாக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட ஒரு நிலைமையை – தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக நாம் உணர்ந்துகொள்ளலாம். விசுவாசத்தினால் நாம் அணிந்திருக்கும் கிறிஸ்துவினுடைய நீதியின் சால்வையினால் போர்த்தப்பட்ட நிலைமையில் நாம் இருப்பதினால், தேவனுடைய பார்வையில், குற்றமற்றவர்களாகவும், கறையற்றவர்களாகவும், பரிசுத்தமாகவும் தோற்றமளிக்கிறோம். நம்முடைய பாவங்களை அவர் சுமந்து, ஒரு பாவியை போலாகி, அதற்குரிய தண்டனையை அவர் பெற்றுக்கொண்டு, நமது சார்பாக அவர் மரித்தார். ஆகவே அவருடைய இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும், மனுக்குலம் பாவத்தில் விழுமுன் பெற்றிருந்த எல்லா உரிமைகளும், ஆசீர்வாதங்களும் மீண்டும் கொடுக்கப்படுகிறது. இந்த சிலாக்கியம் நம்மை ஜீவனுக்குள் வழிநடத்தி, தேவனோடு தொடர்பு கொள்ள செய்கிறது. விசுவாசத்தின் பயிற்சியின் மூலம் இந்த உறவை நாம் துவங்குகிறோம். அதை தக்கவைத்துக் கொள்ளும் பட்சத்தில் தேவன் “குறித்தக் காலத்தில்” அவரோடு நித்தியமாக என்றுமே ஜீவிப்போம்.

R2651(col. 2P5) – R2652 (col. 1P1)

“அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது” (ரோமர் 6:29) என்ற ஆண்டவருடைய வார்த்தைகளுக்கு உண்டான விளக்கத்தைக் காண்போம். இங்கு விசுவாசத்தோடு கிரியையும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இது கரங்களினால் செய்யப்படும் வேலை அல்ல, மாறாக, நம்முடைய தலையினாலும், நம்முடைய இருதயத்தினாலும் செய்யப்படுவதாக இருக்கிறது. நம்முடைய கரத்தினால் செய்யப்படும் எந்தவிதமான கிரியைகளைக் காட்டிலும், இருதயத்தினால் செய்யப்படும் கிரியைகளையே கர்த்தரின் பார்வையில் மேன்மையாக அங்கீகரிக்கப்படுகிறது. ஏனெனில், நம்முடைய விழுந்துபோன நிலையில் எந்த ஒரு கிரியைகளையும் பூரணமாக செய்ய இயலாது என்று நாம் நன்கு உணர்ந்திருக்கிறோம். ஆனால் தேவன் பூரணமானவர், அவருடைய வேலைகள் அனைத்தும் பூரணமாகவே உள்ளது. ஆகவே அவர் ஒருகாலத்திலும், இந்த அபூரணமான கிரியைகளை அதாவது சிறிதளவும் பாவமுள்ள செயல்களோடு, ஏற்றுக்கொள்ளமாட்டார். மிகச் சிறந்த முறையில் நாம் செய்த வேலைகளை தேவனுக்கு அர்ப்பணித்தாலும், விசுவாசம் இல்லாமல் அந்தக் கிரியைகள் தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

தேவன் ஒரு மிகப்பெரிய வேலையை நமக்காகச் செய்ய ஆலோசித்திருக்கிறார் – நாம் பந்தய சாலையில் ஓடுவதற்காக தன்னுடைய ஜீவனை ஈட்டு கிரயமாகக் கொடுப்பதற்கு நமக்காக ஓர் இரட்சகரைத் தந்ததின் மூலமாக இந்த மாபெரும் காரியத்தை செய்தார். இப்பொழுது தேவன் இயேசுவின் மேல் விசுவாசம் உள்ளவர்களை நீதிமான்களாக்குகிறார். ஆகவே, நாம் நியாயத்தீர்ப்பின் கீழ் இருப்பதினால், இயேசுவை நாம் விசுவாசிக்கும் வரைக்கும், நம்முடைய எந்த வேலைகளும் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஆனாலும், அவர் தாமே செய்த முன்னேற்பாட்டினால், கிறிஸ்துவின் மேலுள்ள நம்முடைய விசுவாசத்தை அவர் ஏற்றுக்கொண்டு, இந்த விசுவாசத்தின் மூலமாக நம்மை நீதிமானாக்குகிறார். இதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இதன் அடிப்படையில் செய்யப்படாத எந்த வேலைகளையும் தேவன் ஏற்றுக்கொள்வதில்லை. தேவனுடைய பார்வையில், அனைவரும் விசுவாசத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளும்படியாக இப்படி செய்தார். “விசுவாசம் இல்லாமல் தேவனை மகிழ்விப்பது கூடாத காரியம்.” அதிகமாக விசுவாசத்தில் பயிற்சி பெற்றால், தேவனை அதிகமாக மகிழ்விக்கலாம் – நிச்சயமாக கட்டுக்கதைகள், தேவன் சொல்லாதக் காரியங்கள் மற்றும் நாம் அல்லது மனிதர்களின் கற்பனைகளை நம்புவது விசுவாசம் அல்ல. தேவன் சொன்னவைகளை உறுதியாக நம்புவதே விசுவாசம், இதையே தேவனும் ஏற்றுக்கொள்கிறார். இதை அப்பியாசப்படுத்தும் ஒவ்வொருவரையும் அவர் நீதிமானாக்குகிறார் – “இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.” (ரோமர் 5:1)

இதற்கு மேல் சுவிசேஷ யுகத்தில் அழைக்கப்படும் பரம அழைப்பைக் குறித்து ஆண்டவர் இங்கு வேறொன்றும் விவரிக்கவில்லை. அதைக் குறித்து நாம் காணலாம். தேவனை தேடுவதற்கான முதல் படி – நீதிமானாக்கப்படுதல் – இதை குறித்தே அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையை நாம் பெற, கிறிஸ்துவை நம்முடைய ஜீவனுக்குரிய அப்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தந்தையாகிய ஆதாமின் மீறுதல்களினால், மரணம் நம் அனைவரின் மேலும் வந்தது. நமக்குள் தேவன் தந்த பூரணமான ஜீவன் நமக்குள் இல்லை என்பதை, நாம் அனுபவ ரீதியாக முதலில் உணரவேண்டும். நம்முடைய பிதாவாகிய ஆதாமின் மேல் வந்த மரணத்தை நீக்க ஆண்டவராம் இயேசு மாம்சமாகி, தன்னுடைய ஜீவனையே ஈடுக் கிரயமாகக்கொடுத்ததினால் இப்பொழுது, கிறிஸ்துவுக்கு தேவனுடைய இந்த இலவசமான கிருபையை ஏற்றுக்கொள்பவர்கள், கிறிஸ்துவின் பலியின் நன்மைகளைத் தனக்குள் ஏற்றுக்கொண்டு, இதினிமித்தம் இந்த உலகத்திற்குத் தன்னுடைய ஜீவனையே ஈடு பலியாகக் கொடுத்து அபிஷேகம் செய்தவரின் மூலமாக தேவன் கொடுக்கும் சகல ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் பெற்றுக் கொள்பவர்கள், மனரீதியாக இந்த உண்மைகளை ஒப்புக்கொண்டு, இருதயப் பூர்வமாக ஏற்றுக்கொள்பவர்கள், மனுஷகுமாரனின் மாம்சத்தைப் புசிப்பவர்களாக இருக்கிறார்கள் – இவர்கள் இந்த யுகத்தில் கிறிஸ்துவுக்குள் கொடுக்கப்பட்ட சகல வாய்ப்புகளையும், ஆசீர்வாதங்களையும், மனித உரிமைகளையும், பயன்படுத்திக் கொள்வார்கள்.