CD-EVILSPEAK-Q-22
R3030 (col. 1p3): –
அன்பின் செயலாற்றும் – முதலில் அயலகத்தாருக்கு அவர்களின் நன்மையான காரியங்களுக்கும் ஆசிரை வருவிக்கிறது. ஆகவே “அன்பு பிறருக்கு தீங்கு நினையாது” என்று எழுதப்பட்டிருக்கிறது. தேவனோடு உடன்படிக்கை செய்த ஜனங்கள் இந்தப் பாடத்தை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த பழக வேண்டாமா? ஆகையால் நம்முடைய கரங்களை விட வல்லமையான நம்முடைய வாயின் வார்த்தைகளினால் மற்றவர்களை காயப்படுத்தாமலும், துக்கப்படுத்தாமலும் இருக்க நாம் கற்றுக்கொள்ளாமல் இருப்போமா? அதற்குப்பின் ஒரு சகோதரனைப்பற்றியோ, அயலானைப் பற்றி இழிவாக பேசும் பேச்சுக்கள் அவர்களை காயப்படுத்தும் என்று அறிந்து அதை பேசாமல் இருப்போம் அல்லவா? ஒரு வேளை நாம் இவைகளை செய்யாவிடில், தேவனுடைய அன்பின் பிரமாணங்களையும், சட்டங்களையும் சீர்குலைப்பவர்களாக இருப்போம் அல்லவா? நம்முடைய சகோதரர் அல்லது அயலகத்தார், அபாயமான ஒரு சூழ்நிலையில், அகப்படும்போது, அவர் மேல் வைத்த அன்பின் நிமித்தமாக நாம் சில உண்மைகளை சொல்லுவது தவறாகாது. அதற்குப் பதிலாக நாம் தப்பித்துக்கொள்வதற்கும், மற்றவர்களை குற்றவாளி என்று தீர்ப்பதற்கும், நம்மை அதிக நீதிமான்களாக காட்டிக் கொள்வதற்கும், பேசப்படும் வார்த்தைகள் (மற்றவர்களை பற்றிய உண்மைகள்) தேவனுக்கு முன் தவறாகும்.
மனதை புண்படுத்தக்கூடிய உண்மைகள் தேவனுடைய பிரமாணங்களையும், பொன்னான சட்டங்களையும் சீர்குலைத்துவிடும் என்றால் – இன்னும் மரியாதையற்ற வார்த்தைகள் மற்றவர்கள் பெயரைக் கெடுக்கும் பேச்சுக்களைப் பற்றி நாம் என்ன சொல்லுவோம்? ஆனால் இப்படிப்பட்ட காரியங்கள் உலகத்தார் மத்தியிலும் பெயர் கிறிஸ்தவர்கள் மத்தியிலும், உண்மையான சபை ஜனங்களிடத்திலேயும் அதிகமாக காணப்படுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் மரியாதையற்ற வார்த்தைகள், பெயரைக் கெடுக்கும் பேச்சுக்கள் சத்தியமாக இருப்பதில்லை. “ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும்…” இருங்கள் என்ற தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாத தேவ ஜனங்களுக்கு வெட்கத்தின் மேல் வெட்கமாம். இவர்கள் அனுபவமற்ற நிலையில், தேவனுடைய பிரமாணத்திற்கு குழந்தைகளாக இருப்பவர்கள்.