கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-LOVE-Q-16

கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?

What are the four “quarter-marks” of the Christian race-course?

F187 [P2] through F189[P1]

நாம் ஓட்டப்பந்தயத்தை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவது பகுதியில், அன்பு ஒரு திவ்விய தேவை என்பதை அறிந்து கொள்ளுகிறோம். அதை கடமை என்ற கருத்தின்படி மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியுமென்றாலும், அதைப் பெறும்படியாக நாடுகிறோம். நம்முடைய தேவனிடத்தில் அன்பு செலுத்தக் கடமை உள்ளவர்கள் என்று உணர்கிறோம். ஏனெனில், அவர் நம்முடைய சிருஷ்டிகராக, நம்முடைய கீழ்ப்படிதலை, அன்பை, பக்தியை வற்புறுத்த உரிமையுள்ளவராக இருக்கிறார். ஆண்டவராகிய இயேசுவினிடத்திலும் கடமை, அன்பு உள்ளவர்களாக இருக்கிறோம். ஏனெனில் அவர் நம்மேல் அன்பு கூர்ந்தார். ஆகவே நியாயப்படி பதிலுக்கு நாம் அவரில் அன்பு கூறவேண்டும். நம்முடைய சகல ஜனங்களோடும் அன்பு செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். ஏனெனில் அதுவே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

ஓட்டப்பந்தயத்தின் இரண்டாவது பகுதி, நம்மை இன்னும் சற்று முன்னோக்கி அழைத்துச் செல்கிறது. குறிக்கோளுக்கு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக அழைத்துச் செல்கிறது. ஆகவே முதலாவதாக கடமைப் பிரகாரமான அன்பினால் செய்ய முயன்றவைகளை நாம் படிப்படியாக நன்மையான விதத்தில் நோக்கினோம். ஏதோ என்று அல்ல. அதன் பிறகு சரியானது. செய்யவேண்டியது என்று தேவன் கட்டளையிடுகிறவைகள் எல்லாம் நல்லவைகள் என்றும், நமக்கு அதைக் குறித்ததான மேலான எண்ணங்கள் எல்லாம். நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் நீதி, அன்பு ஞானம் என்பவைகளோடு சம்பந்தப்பட்டவைகள் என்றும், அப்படி அந்த நேரத்திலிருந்து அவைகளை உயர்வாக எண்ணினோம் என்றும் பார்த்தோம். தேவன் நம்முடைய சிருஷ்டிகராக இருக்கிறார் என்பதற்காக கடமைக்காக அவரை நேசிக்கத் தொடங்கவில்லை, ஆனால் அதற்கு மேலாக, விசேஷமாக நம்மேல் சுமத்தப்பட்டதான குணாதிசயத்தின் உன்னதமான பகுதிகள் அவரிடத்தில் இருப்பதைப் பார்த்தோம், எல்லா கிருபைக்கும் நன்மைக்கும் அவரே அசலாக இருந்தார். இந்த இரண்டாவது பகுதியின் குறிக்கோளை அடைபவர்கள் எல்லாம், ஆண்டவர் முதலாவதாக நம்மை நேசித்தார் என்பதற்காக மாத்திரம் அல்ல. அதற்கு பதிலாக நாம் அவரை நேசிக்க வேண்டும் என்பது கமை என்பதற்காகவும் அல்ல, ஆனால் இப்போது கம்பீரமான மகிமையான அவருடைய குணாதிசயத்தில் சிலவற்றை அதாவது நம்முடைய சிருஷ்டிகளின் நீதி, அன்பு, ஞானம், வல்லமை ஆகியவற்றின் ஆழம், அகலம், உயரம், நீளம் ஆகியவைகளைப் பார்க்கும் அளவிற்கு விரிவாக நம்முடைய மனக்கண்கள் திறக்கப்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறபடியால் அவரை நேசிக்க முடியும்.

ஓட்டப்பந்தயத்தின் மூன்றாவது குறிக்கோளை சகோரருக்கான அன்பு என்று அழைக்கிறோம். ஆரம்பத்திலிருந்து பிதாவுக்கு காட்டின கடமை அன்பை விட சகோதரருக்குக் காட்டின கடமை – அன்பு குறைவானது என்று உணருகிறோம், ஏனெனில் சகோதரர் நமக்கு குறைவாக செய்திருக்கிறார்கள், நாம் அவர்களை அறிந்து கொண்டதின் முக்கியமான காரணம் பிதாவின் சித்தம் அப்படியாக இருந்தது. ஆனால் நாம் நீதியின் ஒழுங்குகளைப் பார்த்து அதன் மூலம் பிதாவை உயர்வாக எண்ணியபோது, நம்முடைய வேண்டுமென்று செய்யப்படாத கறைகளிருந்தாலும், அப்பொழுதும் பிதா தாமே நம்மை நேசிக்கிறார் என்பதைப் பார்த்தபோது நம்முடைய இருதயங்கள் சகோதரர்கள் பக்கம் அதிகமாக விசாலமடையவும் ஆழமாகவும் தொடங்கின. மேலும் இயேசுவின் பாதபடியிலும், அவருடைய திவ்விய சுபாவத்திற்கு, ஏற்றபடி நடக்க இருதய வாஞ்சையுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பதற்கு அவர்களில் ஆதாரங்களை கண்ட பின்னர், அவர்களுடைய பூரணமற்ற தன்மையையும், கறைகளையும், தவறுகளையும் அதிகதிகமாக நாம் பாராமுகமாக இருக்க முடிந்தது. சகோதருக்கான அன்பு நம்முடைய அனுபவங்களில் அதிகமாக காணப்பட்டது அந்தோ பரிதாபம், நம்முடைய உன்னத அழைப்பை நோக்கி, ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது குறிக்கோளினிடத்தில் ஆண்டவருடைய அருமையான ஜனங்களில் நிறைய பேர் வராமலிருக்கிறது தெரிகிறது. வேதம் அறிவுறுத்துகின்ற, சகோதர அன்பை, பொறுமையை நீடிய பொறுமையை வளர்த்துக்கொள்ள அதிக அவசியம் இருக்கிறது. இவைகள், நம்முடைய பிதாவோடு, ஆண்டவரோடு அதிகமாக பரீட்சிக்கப்படுவதைக் காட்டிலும் சகோதரர்களோடு சம்பந்தப்பட்டவைகளில் அதிகமாக பரீட்சிக்கப்படுகின்றன. பிதாவையும், குமாரனையும் பூரணராக நாம் காண்கிறோம். அவர்களிடத்தில் பூரணமற்றவைகிடையாது. அவர்கள் நமக்குக் காட்டும் பெருந்தன்மையையும், அவர்களுக்கு நேராக உள்ள நம்முடைய குறைபாடுகளையும் நாம் அறியலாம். நம்முடைய சகோதரரிடத்தில் ஒருவரிடத்தில் இந்த பெலவீனத்தையும் மற்றவரிடத்தில் அந்த பெலவீனத்தையும் காணலாம். இப்பொழுது வருகிற பொதுவான சோதனை, நாம் சகோரரிடத்தில் இப்படிச் சொல்லுவதாகும். “உன்னுடைய கண்ணிலிருந்து நான் ஒரு துரும்பை எடுக்கட்டும்” இப்படி துரும்பு எடுப்பது, சகோதரர்களுக்கு எதிராக குற்றம் கண்டுபிடிப்பது, தொந்தவு கொடுப்பது போன்றவைகள், நாம் சரி செய்ய வேண்டிய பொறுமையின்மை, அன்பில்லாமை என்ற பெரிய உத்திரம் நம்மிடத்தில் இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது. இந்த மூன்றாவது குறிக்கோளை நெருங்கி வரும்போது, நம்முடைய சொந்த கண்களிலிருந்து உத்திரத்தை படிப்படியாக அகற்றுகிறோம். அப்பொழுது நம்முடைய கறைகளைப் பார்க்கிறோம். நமக்கு ஆண்டவர் காட்டுகின்ற கிருபையின் ஐசுவரியத்தை அதிக உயர்வாக மெச்சுகிறோம். இப்படியான ஒரு நிலை வரும்போது நம்முடைய இருதயத்தில் எல்லாாரிடத்திலும் காண்பிக்கும் அதிகமான சாந்தத்தின், பொறுமையின், சாதுவான தன்மையின் ஆவியைப் பிறப்பிக்கும். இது மறுபடியும், சகோதரரில் பெருந்திரளான பாவங்களையும், பூரணமற்றவைகளையும் மூட அல்லது பாராதிருக்க உதவி செய்யும், அவர்கள் விலையேறப்பெற்ற இரத்தத்தில் நம்பிக்கை வைத்து, இதே பந்தயப் பொருளுக்காக இதே ஓட்டத்தை ஓடும் காலம்வரை இப்படி நமது உள்ளம் இருக்கும்.

நான்காவது, அதாவது ஓட்டப்பந்தயத்தின் நமது கடைசி குறிக்கோள் என்னவெனில், நாம் எல்லாரும் சீக்கிரமாக அடையும்படி நாட வேண்டிய பூரண அன்பு தேவனிடத்தில், சகோதரரிடத்தில், எல்லாரிடத்திலும் காட்டும் பூரண அன்பு ஆகும். நம்முடைய குறிக்கோள் ஒன்றிலும் அப்படியே நில்லாது. நாம் பொறுமையாக விடா முயற்சியோடு, ஊக்கத்தோடு ஓட வேண்டும். ஒரு வகையில் “நாம் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருக்க வேண்டும்” இன்னொரு வகையில் “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக யாவருக்கும் விசேஷாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்ய வேண்டும்.” (கலாத்தியர் 6:10) இது நம்முடைய சத்துருக்களையும் நேசிக்கிற அன்பாகும். இந்த அன்பு நம்முடைய பிதாவின் மேலும், அவருடைய குணாதிசயத்தின் மேலும் நம்முடைய சகோதரர் மேலும் வைத்திருக்கிற அன்பைக் குறைக்கவோ அல்லது நீக்கவோ செய்யாது. ஆனால் இவைகளை அதிகரிக்கும். இது அதிகரிக்கும் போது இந்த அன்பில் இரக்கத்தையும், நன்மையையும், தேவ புத்திரர் வெளிப்படும்படி பிரசவ வேதனைப்படுகிற சிருஷ்டிக்கு நாம் காட்ட உதவி செய்யும். “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”, என்பது ஆண்டவரின் கட்டளை நம்முடைய சத்துருக்களையும் நேசிக்கும் இப்படிப்பட்ட ஒரு அன்பின் நிலையை அடையும் வரை, ஆண்டவர் அவரைப் பின்பற்றுகிற நமக்குக் குறித்திருக்கிற நிலையை அடைந்துவிட்டோம் என்று ஒரு வினாடிகூட நினைத்துவிடக் கூடாது. நாம் இந்த நிலையை அடையும் வரை நாம் தேவனுடைய பிரியமுள்ள குமாரனின் பிரதிகள் அல்ல.

F369[P2] through F373
இலக்கை நோக்கி ஓடுதலும், அங்கே நிலைத்து நிற்பதும்

அப்போஸ்தலர் இன்னொரு விளக்கத்தில், நம்முடைய தற்போதைய அனுபவங்களை ஒரு ஓட்டப்பந்தய மைதானத்திற்கு ஒப்பிடுகிறார். மேலும் நாம் பாரமானயாவற்றையும், நம்மைச் சூழ்ந்திருக்கின்ற எல்லா பாவத்தையும், எல்லா மாம்சீக பெலவீனத்தையும் உலகப் பிரகாரமான எல்லா ஆசைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, சுவிசேஷத்தில் நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள ஓட்டத்தைப் பொறுமையுடன் ஓடக்கடவோம். பந்தயப் பொருளை அடையும்படி இலக்கை நோக்கி ஓடக்கடவோம், அவைகள் எல்லாவற்றையும் செய்து முடித்து உண்மையோடு, முழுமையாக கிறிஸ்துவுக்குள் நிலைநிற்க வேண்டும். (பிலி 3:13,14, எபி 12:1, எபே 6:13) இது நமக்கு முதலாவது, இரண்டவாது, மூன்றாவது, நான்காவது கால் – பங்குகளைக் கொண்ட ஒரு ஓட்டப்பந்தய மைதானத்தை நினைவுபடுத்துகிறது. ஓடுகின்ற வழியில் உள்ள சோதனைகள், துன்பங்கள், எதிர்ப்புகளையும், மேலும் நாம் இந்த ஓட்டத்தில் ஓடத் தொடங்குவதையும், பரிபூரண அன்பு என்னும் இலக்கை அடையும்படி ஓடத் தொடங்குவதையும், அந்த இலக்கை நாம் அடையாவிட்டால் தேவனுடைய பிரியமான குமாரனின் பிரதியாக நாம் இருக்கமாட்டோம் என்ற சிந்தனையையும் இது தருகிறது. மேலும் அப்படியானால், பரவலாக நோக்கும் போது தேவனைப் பிரியப்படுத்த இயலாது என்று ஒரு சிந்தனையை இது தருகின்றது. தேவனைப் பிரியப்படுத்த இயலாது என்றால், இராஜ்யத்தில் இயேசுவோடு உடன் சுதந்திரராக இருக்க முடியாது. ஆரம்ப வாசலிலிருந்து முடிவு வரை முழு ஓட்டப்பந்தய மைதானமும் அன்பைக் குறிக்கிறது. நாம் வாசலுக்குள் நுழையும் போது நம்முடைய பாவங்களை மன்னித்த கிறிஸ்துவுக்குள் நமக்கு கிடைத்த அவருடைய புண்ணியத்திற்காக தேவனுக்கு நன்றியுடன் கூடிய அன்போடு நுழைகிறோம். இந்தக் கடமை அன்புதான். ஆரம்பத்தில் நம்முடைய சரீரங்களை ஜீவ பலிகளாக ஒப்புக்கொடுக்க நம்மை வழிநடத்துகிறது. தேவன் நமக்கு இவ்வளவு செய்து இருப்பாரென்றால், நம்முடைய மதிப்பு மரியாதையை அவருக்குக் காண்பிக்க வேண்டும் என்று நமக்கு நாமே சொல்லிக் கொள்ளுகிறோம். கிறிஸ்து நமக்காகத் தன்னுடைய ஜீவனையே கொடுத்தார். நாமும் நம்முடைய வாழ்க்கையை சகோதரருக்காக அர்ப்பணிக்க வேண்டும்.

இப்படியாக இருக்கவேண்டிய கடமை அன்பானது முற்றிலும் சரியானது, நியாயமானது, உண்மையானது, ஆனால் அது போதாது அடுத்து, இன்னும் உன்னதமான அன்பிற்கு வழிநடத்த வேண்டும், மேலும் ஓட்டத்தில் முதலாவது கால் பங்கு ஓடியிருக்கும் வேளையில், இன்னமும் கடமை அன்பு நம்மிடத்தில் இருக்கிறது. ஆனால் அதைக் காட்டிலும் மேன்மை பாராட்டக் கூடிய அன்பை அடைந்திருக்கின்றோம். திவ்விய அன்பை நாம் மேன்மை பாராட்டக் கற்றுக்கொள்வது நல்லது. தேவனுடைய அன்பு ஒருவிதத்திலும் சுயநலம் என்ற வார்த்தையின்படி இருந்ததில்லை. ஆனால் அவருடைய கம்பீரமான உயர்ந்த குணாதிசயத்தின் கிரியை ஆகும். திவ்விய நீதி, திவ்விய ஞானம், திவ்விய வல்லமை, திவ்விய அன்பு ஆகியவற்றைக் குறித்துச் சில காரியங்களை உணருகின்றோம். மேலும் நம்முடைய சிருஷ்டிகரின் இந்தக் குணாதிசயங்களை நோக்கிப் பார்க்கும் போது, நாம் அவைகளை நேசிக்கிறோம். அதன் பின்னர் நாம் நீதியைக் கடைப்பிடிக்கின்றோம். நம்முடைய கடமையாக இருப்பதினால் மாத்திரமல்ல, நாம் நீதியை நேசிப்பதால் அப்படிச் செய்கிறோம்.

ஓட்டப்பந்தய மைதானத்துக்குள் தொடர்ந்து முன்னேறும் போது இரண்டாவது கால் – பங்கு இலக்கை வந்தடைகிறோம். இதற்குள் நாம் நீதியை நேசிக்கக் கற்றுக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல், அதே விகித்ததில் பாவத்தை வெறுக்க கற்றுக் கொள்கிறோம். மேலும் உலகத்தை மூழ்கடித்திருக்கின்ற பெரிய அலை போன்றதும், (அதன் சம்பளமாகிய) மரணத்தைக் கொண்டு வந்ததுமான பாவத்தைத் திருப்பிவிடுகிற திவ்விய திட்டத்தைக் குறித்த ஒரு இரக்கம் நம்முடைய இருதயங்களில் வருவதையும் காண்கிறோம். இந்த இரண்டாவது கால் – பங்கு இலக்கானது நமக்குள் ஒரு ஆர்வத்தைப் பிறப்பிக்கின்றது, ஒரு “எழுப்புதலையும்”, நீதிக்கான ஒரு செயலையும், பாவத்திற்கெதிரான செயலையும் பிறப்பிக்கின்றது.

நம்முடைய அன்பு வளர்ந்து கொண்டு வருகிறது. நாம் மூன்றாவது கால்- பங்கு இலக்கை நோக்கி முன்னேறுகின்றோம். நாம் அந்த இலக்கை அடையும்போது, நம்முடைய கடமை அன்பு, அதோடு கூட நீதியின் நியமங்களின் மேல் அன்பு. திவ்விய குணாதிசயத்திற்கு நேராக மாத்திரம் விரிவடையவில்லை, அதோடு கூட மனுக்குலத்திற்குத் தீங்கு விளைவிக்கின்ற எல்லாப் பொல்லாத காரியங்களின் மேல் வெறுப்பும். திவ்விய குணாதிசயத்தையும், திட்டத்தையும் மீறுகிற காரியங்களின் மேல் வெறுப்பும் விரிவடைந்தது. ஆனால் இந்த குறி அளவில் இருக்கும்போது நாம் மற்றவர்களுக்கு விசாலமான முறையில் இரக்கம் காட்டும் ஒரு நிலையை அடைந்துள்ளோம். தேவனுடைய உணர்வில் பங்கு பெறுவதற்கு ஆரம்பிக்கிறோம். பாவத்திற்கு எதிராக மாத்திரமல்ல, நீதியின், பரிசுத்தத்தின் வழியில் நடக்க விரும்புகிறவர்களுக்காக அன்பையும் இரக்கத்தையும் உணரத் தொடங்குகிறோம். இந்த வேளையில் சகோதரர்களை இதற்கு முன்பு இல்லாத எப்படியோ ஒரு வித்தியாசமான வெளிச்சத்தில் அறிந்து கொள்ள நம்மால் முடிகிறது. இப்பொழுது நம்மால் சகோரரைப் புது சிருஷ்டிகளாய்ப் பார்க்க முடியும், மேலும் அவர்களுக்கும் (புது சிருஷ்டி) அவர்களுடைய பரிபூரணமற்ற தன்மைகள் நமக்குத் தெளிவாக தெரிகின்ற அவர்களது அழிவுள்ள சரீரத்திற்கும் இடையில் வித்தியாசப்படுத்த முடியும். நாம் சகோதரர்களைப் புது சிருஷ்டிகளாக நேசிக்கக் கற்றுக்கொள்ளுகிறோம். மாத்திரமல்ல, அவர்களுடைய மாம்சத்தினால் ஏற்படும் பல்வேறு பெலகீனங்கள், தவறாகப் புரிந்துகொள்ளுதல் போன்றவைகளில் அவர்களுக்காகப் பரிதாபம் காட்டவும் கற்றுக்கொள்ளுகிறோம். நம்முடைய அன்பு அவர்களுக்காக அவ்வளவு அதிகமாய் கூடுகிறபடியால் நம்முடைய ஜீவனையே அவர்களுக்கென்று, தினமும், ஒவ்வொரு மணி நேரத்தையும் கொடுப்பதில் மகிழ்ச்சிடையகிறோம். அவர்களுக்கு உதவி செய்வதில் சேவை செய்வதில் நம்முடைய உலக நலன்கனை அல்லது சந்தோஷத்தை அல்லது வசதிகளைத் தியாகம் செய்வதிலும், நம்முடைய நேரம், நம்முடைய செல்வாக்கு, அல்லது எதுவென்றாலும் அவர்களுக்கென தியாகமாகத் செலுத்துவதில் சந்தோஷமடைகிறோம்.

ஆனாலும் இன்னும் நாம் இந்த வழியில் “இலக்கை”, நோக்கி முன்னேறுகிறோம். ஏனெனில் இதைக்காட்டிலும், நாம் அடையவேண்டிய ஓர் உன்னதமான அன்பு உண்டு, அதாவது நான்காவதும், கடைசி கால் – பங்கு இலக்காகிய “பந்தயப் பொருளுக்கான இலக்கை” அடைய வேண்டும். இந்த அன்பு எப்படிப்பட்டது? சகோதரருக்காக தன்னையே தியாகம் செய்கின்ற அன்பைக்காட்டிலும் அது எப்படிப் பெரிதாக இருக்க முடியும்? அது தேவனிடத்தில் முழு பயபக்தியுடனும் நீதியின் வழிகளிலும், அன்பிலும் பயபக்தியுடனும் கூடிய அன்பைக் காட்டிலும் அது எப்படி பெரிதாக இருக்க முடியுமா? நாம் பதில் சொல்லுகிறோம். ஆண்டவர் நியமித்திருக்கிற அன்புதான் பெரியதென்று, அவர் நம்முடைய சத்துருக்களையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் சொல்லும்போது, அதுதான் பெரிய அன்பாயிருக்கிறது. நாம் கெட்ட கிரியைகளினால் சத்துருக்களாய், அந்நியராய், பரதேசிகளாய் இருந்த போதுதான், “தேவன் இவ்வளவாய் இவ்வுலகத்தில் அன்பு கூர்ந்தார். “நாம் பாவிகளாய் இருக்கும்போதுதான், நமக்காகத் தன்னுடைய ஒரே பேறான குமாரனைத் தந்தருளினார். பரிபூரண அன்பின் நிலை இதுதான். இதைக் காட்டிலும் குறைந்த அளவில் நாம் நின்று விடக்கூடாது. யாரெல்லாம் மகிமையில், புது சிருஷ்டியின் அங்கமாக ஆண்டவரால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்களோ, அவர்களெல்லாரும் சத்துருவையும் நேசிக்கக்கூடிய அன்பின் நிலையை எட்ட வேண்டும்.

புது சிருஷ்டி தன்னுடைய சகோதரரை நேசிப்பது போலத் தன்னுடைய சத்துருக்களை நேசிக்க வேண்டும் என்றல்ல, ஏனெனில் நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள முறை இதுவல்ல. தேவன் தன்னுடைய புத்திரரை, நண்பர்களை நேசிப்பது போன்று தன்னுடைய சத்துருக்களை நேசிப்பதில்லை. மேலும் தன்னுடைய சீஷர்களை நேசிப்பது போன்று இயேசு தன்னுடைய சத்துருக்களை நேசிக்கவில்லை. ஆனால் அவர்களுக்கென ஆயத்தத்துடன் இருந்து, நீதியின்படி அவர்களுக்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்யும்படியாக தேவன் சத்துருக்களை நேசித்தார், இயேசு தன்னுடைய சத்துருக்களை நேசித்தார், அதனிமித்தம் அவர் இதய பூர்வமாக அவர்களுக்கு நன்மை செய்யும்படியாக இருந்தார். அவர்களுடைய எதிர்ப்புக்குப் பதிலாக அவரிடத்தில் அவர்களுக்கெதிராக விரோதமோ குரோதமோ இருந்ததில்லை. ஆனால் ஏற்ற சமயத்தில் அவர்கள் மேல் தன்னுடைய ஆயிரம் வருட யுகத்தின் ஆசீவாதங்களை ஊற்ற ஆயத்தமாக இருக்கிறார். அதன் மூலம் சத்தியத்தை அறிகிற அறிவிற்குள்ளாய் அவர்கள் எல்லோரும் வரும்படியாக அப்படிச் செய்வார், மேலும் அவரைக் குத்தினவர்களும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள், அப்பொழுது அவர்கள் மேல் கிருபையின் ஆவியையும் விண்ணப்பத்தின் ஆவியையும் ஏற்ற காலத்தில் ஊற்றுவார். (சகரியா 12:10) “உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்காக நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிற வர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்” (மத்தேயு 5:44) என்று நம்முடைய ஆண்டவர் கூறுவதுபோல், நாம் சத்துருவினிடத்தில் அன்பு கொள்ள வேண்டும். எவ்விதமான கசப்பு உணர்வோ, பகையோ, அல்லது வெறுப்பு உணர்ச்சியோ நம்முடைய இருதயங்களில் வாசம் பண்ண அனுமதிக்கக் கூடாது. இருதயம் அன்பினால் அவ்வளவாய் நிறைந்திருக்க வேண்டும். ஒரு சத்துரு கூட நம்முடைய இருதங்களில் ஒரு பொல்லாங்கான அல்லது குரோதமான எண்ணங்களைக் கிளராத அளவுக்கு அன்பினால் நிறைந்திருக்க வேண்டும்.
ஆ, குரோதத்தை, அல்லது வெறுப்பை, அல்லது சண்டையை உண்டாக்கக்கூடிய காரியம் ஒன்றையும் சத்துருவினிடத்தில் பார்க்கமுடியாத அளவுக்கு, இப்படி ஒரு குணாதிசயத்தை அடைவதற்கு எப்படியான நீடிய பொறுமையும் சகோதர அன்பும் குறித்து சொல்லப்படுகிறது. இந்த இலக்கை நோக்கித்தான் புது சிருஷ்டிகளாக நாம் கூட செல்ல வேண்டும். இந்த அன்பின் ஆவியைக் குறித்து நாம் வெளிப்படையாக மெச்சியுள்ளோம். நாம் அதற்கான அறிக்கை செய்துள்ளோம், அதன் கொள்கைகளுக்கு ஏற்ப நாம் நம்முடைய ஜீவியங்களை அர்ப்பணம் செய்துள்ளோம். இப்பொழுது நாம் அறிக்கை செய்தவைகள் எந்த அளவுக்கு உண்மையுள்ளவைகளாக இருந்தன என்பதைக் கண்டறியும்படியாக சோதிக்கப்படுகின்றோம். கர்த்தர், இந்த ஓட்டத்தை நாம் ஓடும்படிக்கும். நம்முடைய குணாதிசயத்தை அபிவிருத்திச் செய்யவும் அதிக கிருபையுடன் நேரத்தை தருகின்றார். “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார், நாம் மண்ணென்று நினைவு கூறுகிறார்.” இருந்தபோதிலும் புது சிருஷ்டியின் அங்கங்களாக தேவனுடைய பிரியமான குமாரனோடு உடன் சுதந்திரராக இருப்போமென்றால், நாம் இந்த ஒழுங்கு முறைகளோடு ஒத்து நடப்பது மிக முக்கியம்.

நம்முடைய இரட்சிப்பின் தளபதியாகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு இந்த ஓட்டத்தை ஓட அவசியமில்லாதிருந்தது. இந்த அன்பின் பல்வேறு அம்சங்களை அபிவிருத்தி செய்ய அவருக்கு அவசியமில்லாதிருந்தது. ஏனெனில் பூரணமாயிருப்பதற்கான தகுதிகளை அவர் ஆரம்பத்திலேயே பரிபூரணமாகப் பெற்றிருந்தார். அவருடைய பரீட்சை என்னவெனில் இந்த கொள்கைகளுக்கும். குணாதிசங்களுக்கும் ஏற்ப அவர் உறுதியாக நிற்பாரா, எல்லாவற்றிற்கும் மேலாக தேவனையும், நீதியையும் தொடர்ந்து நேசிப்பாரா, தன்னுடைய ஜீவனையே அவர்களுக்காகக் கொடுக்கும் அளவுக்குத் தொடர்ந்து சகோதரரை நேசிப்பாரா? தன்னுடைய சத்துருக்களுக்கு நன்மை செய்வதில் களிகூறும் அளவுக்கு அவர்களைத் தொடர்ந்து உறுதியாக நிற்பாரா என்பதாகும். அவர் தன்னுடைய ஜீவனை தன்னுடைய நண்பர்களுக்காக மாத்திரமல்ல. தன்னை சிலுவையிலறைந்த சத்துருக்களுக்காகவும் ஈந்தார் என்பதில், அன்பிற்கான தகுதியில் அவர் தொடர்ந்து உறுதியாக நிற்பாரா என்பதாகும். அவர் தன்னுடைய ஜீவனை தன்னுடைய நண்பர்களுக்காக மாத்திரமல்ல. தன்னை சிலுவையிலறைந்த சத்துருக்களுக்காகவும் ஈந்தார் என்பதில், அன்பின் எல்லா அம்சங்களிலும் அதன் மேல் உள்ள தனது வாஞ்சையை எப்படி அவர் வெளிப்படுத்தினார் அறிந்திருக்கிறோம். என்பதை நாம் இதே அனுபவம் நம்முடையதாகவும் இருக்க வேண்டும். நம்முடைய மாம்சத்தில் நம்முடைய இருதங்களின் உணர்வை எப்பொழுதுமே முழுமையாக வெளிப்படுத்த முடியாவிட்டாலும், நம்முடைய இருதயங்களில் பரிபூரண அன்பின் நிலையை நாம் எட்டியாக வேண்டும்.

சிலர் ஓட்டத்தை வெகு வேகமாக ஓடலாம். அவர்கள் இந்த மூன்று கால் பங்கு இலக்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்து, பரிபூரண அன்பு என்கிற நிலையைத் துரிதமாக அடையலாம். மற்றவர்கள் மனதில் சிறிதளவு வைராக்கியத்தோடு, அல்லது நம்முடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரை சாதாரணமாக உற்றுப்பார்த்து, ஓட்டத்தில் மெதுவாக முன்னேறுகிறார்கள். அவர்கள் பல வருடங்களாக கடமைக்கான அன்புடன் தங்களைத் திருப்திப் பண்ணிக்கொள்கிறார்கள். அல்லது ஒரு வேளை திவ்விய குணாதிசயத்தின் அன்புக்கும், நீதியின் முறைகளுக்கும் சற்று முன்னேறுகிறார்கள். குறிப்பிடத்தக்க விதத்தில் சிலர்தான். சகோதரருக்கான அன்பை அடையும்படி இதைவிட சற்று மேலாகச் சென்றிருக்கிறார்கள், அது அவர்களைத் தங்களுடைய சுயத்தை வெறுப்பதில் களிகூறச்செய்யும், இதன்மூலம் அவர்கள் விசுவாச வீட்டாருக்கு ஊழியம் செய்ய முடியும். இதை விட இன்னும் சிலரே தங்களுடைய சத்துருக்களுக்காக அன்பு, என்ற பரிபூரண அன்பின் நிலைக்குச் சென்றிருப்பார்கள். இந்த நிலை அவர்களை வார்த்தையினாலாவது அல்லது செயலினாலாவது தீமை விளைவிக்காது தடுப்பது மாத்திரமல்ல, அதற்கும் மேலாக அவர்களுடைய ஆசீர்வாதத்தில் களிகூரும். இலக்கை நாம் அடையும்படி நம்மோடு ஆண்டவர் அபரிமிதமாகப் பொறுமையுடன் இருந்திருப்பாரென்றால், நாம் அவருடைய இரக்கத்தில் களிகூர வேண்டும். மேலும் “பந்தயப்பெருளின் இலக்கை” அடைவதற்கு இன்னும் அதிக வைராக்கியம் உள்ளவர்களாய் இருக்கவேண்டும், அப்படிச் செய்யும்போது காலம் குறுகியதாய் உள்ளது என்பதையும், மேலும் இந்தப் பரிபூரண அன்பு என்ற குணாதிசயத்துக்குக் குறைவாக எதுவும் பிதாவினால் புது சிருஷ்டியில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

நம்முடைய ஆண்டவர் பரிபூரண அன்பு என்ற “இலக்கில்” சோதிக்கப்பட்டது போல, நாம் எல்லோரும் அதை அடைந்த பின்னர் சோதிக்கப்படுவோம். ஆகவே வாழ்வின் கடைசி மூச்சின்போது அந்த இலக்கை அடையலாம் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் கூடுமானவரை துரிதமாகச் செயல்பட வேண்டும். நாம் இந்த இலக்கை அடையும் வேகத்தை வைத்து நம்முடைய வைராக்கியத்தின் அளவும், அன்பின் அளவும் தேவனுக்கும் சகோதரர்களுக்கும் சுட்டிக்காட்டப்படும்.

அப்போஸ்தலருடைய வார்த்தையான “சகலத்தையும் செய்த முடித்தவர்களாய் நிற்கவும்” (எபேசியர் 6:13) என்பது பரிபூரண அன்பு என்ற இலக்கை அடைந்த பின்னர் நமக்கு அதிகமாக சோதனைகள் உண்டு. அவையாவன, விசுவாசத்தை சோதிக்கின்றவைகள், பொறுமையை சோதிக்கின்றவைகள், மேலும் அன்பின் பல்வேறு அம்சங்களில் வரக்கூடிய சோதனைகளாகும். நம்மைச் சரியான வழியில் முன்னேறும்படி உதவி செய்வதற்கு உலகமானது கிருபைக்கு ஒரு நல்ல நண்பனல்ல, சாத்தான் இன்னமும் நம்முடைய சத்துருவாயிருக்கிறான். நாம் அடைந்துள்ள நிலைமையிலிருந்து நம்மை பின்னடையும்படியாகப் பலவந்தப்படுத்த அதிகமான எதிர்ப்புகளைக் கிளறிவிட முடிந்தவனாயிருப்பான். இதுவே நம்முடைய சோதனையாகும். நாம் அடைகின்ற நிலையில் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும். நம்முடைய உலக வாழ்க்கையைத் துச்சமாக உதறிவிடும் வரை, நமக்குச் சமயம் கிடைக்கும் போதெல்லாம் எல்லா மனிதருக்கும் நன்மை செய்யவும், தேவனுடைய ஊழியத்தில் சகோதரருக்கென நம்முடைய ஜீவனையே கொடுக்கும் வரை நாம் “இலக்கை நோக்கித் தொடர வேண்டும்,” “நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவர்,” இந்த வழியில் நாம் செல்லும்போது தேவையான ஒவ்வொரு உதவியையும், ஆபத்தில் பாதுகாப்பையும் அவர் வாக்குத்தத்தம் பண்ணுகிறார். அவருடைய கிருபை நமக்குப் போதுமானது. (1 தெசலோனக்கியர் 5:24, 2 கொரிந்தியர் 12:9)