CD-FAITH-Q-4
எபிரெயர் 11:6 “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம், ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.”
F315 (P1)
முதல் கூற்றின் அடிப்படையில் – பொதுவாக நல்ல போதனைகள் அனைத்தும் இழிவாய் எண்ணப்படும் நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மேலும், இக்காலத்தில் அநேகர் கிரியைகள் மற்றும் நல்லொழுக்கமும், விசுவாசம் மற்றும் உபதேசத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் எந்த விதமான மதிப்பையும் பெறுவதில்லை என்று கருதுகிறார்கள். இது தெய்வீக வார்த்தைக்கு அப்பாற்பட்டிருப்பதால், நாம் எவ்விதத்திலும் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில், இதில் முதலாவது விசுவாசமும், அடுத்து கிரியைகளும் இடம் பெறுகிறது. நம்முடைய விசுவாசமே தேவனால் ஏற்றுகொள்ளப்படுகிறது, இந்தப் பலவீனமான மாம்சத்தின் அனுமதியில், நன்மையான விசுவாசம், நற்கிரியைகளை நம்மிடத்தில் பிறப்பிக்கும் என்று தேவன் எதிர்பார்த்து, அந்த விசுவாசத்தின்படியே அவர் நமக்கு பலனளிப்பார். சகல வசனங்களிலும், இதுவே விசுவாசத்தின் கோட்பாடாக எழுதப்பட்டிருக்கிறது. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம், “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1யோவான் 5:4) ஆகவே, ஒருவர் தேவன் மேல் உள்ள விசுவாசத்தையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் தன்னுடைய வாழ்க்கையில், கடைபிடிக்காமல் சரியான முறையில் மேற்கொள்ள (ஜெயிக்க) முடியாது. இதை செயல்படுத்தவேண்டுமானால், அவைகளை முதலில் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வாய்ப்புகள் மற்றும் விசுவாசத்தில் உறுதியான வளர்ச்சியானது, யுகங்களைப் பற்றிய தெய்வீகத் திட்டங்களையும், மகத்தான விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களையும் புரிந்துகொள்ள வழி வகுக்கும். இப்படியாக, போதனைகள் மற்றும் கட்டளைகளை அறிந்து கொள்வதினால் தேவனுடைய ஜனங்கள், உலக ஜனங்களைக் காட்டிலும், தேவனோடு தொடர்பு கொள்வதற்கான அறிவில் விருத்தியடைந்து மகிழ்வதற்காக மட்டுமல்ல இந்த அறிவின் நிமித்தம் அவர்களில் விசுவாசமும், நம்பிக்கையும், நடத்தையும் தேவனுக்குள்ளாக வளர உதவி செய்கிறது. “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிற எவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.” (1யோவான் 3:3) நாம் பார்த்த அனைத்து வாக்கியங்களுக்கும் இந்த வசனம் நேர்த்தியாகப் பொருந்துகிறது. ஒருவர் தன்னைத்தான் சுத்திகரித்து, தன் நடத்தையையும் சுத்திகரிக்க விரும்புகிறவர், அதில் வெற்றியடைய வேண்டும். வசனங்கள் குறிப்பிடுவதுப்போல அது இருதயத்தில் துவங்கி, வளர்ச்சியடைந்து, சுத்திகரிப்புக்காக பயன்பட்டு, வாக்குறுதிகளை நினைப்பூட்டவேண்டும். இதற்கு “கிறிஸ்தவ போதனைகளில் அறிவு” என்று பொருள்படுகிறது.
F693(1)
விசுவாசத்தின் கண்கள் மற்றும் செவிகள், தெய்வீக வார்த்தைகளைக் காண்பதற்கும், கேட்பதற்கும் பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே புதியசிருஷ்டிகள், வரக்கூடிய அளவற்ற மகிமையான பொக்கிஷத்தை ருசிக்க முடியும். ஒரு சராசரி மனிதனால் கூடாததும், ஒருவர் தன்னை உடன்படிக்கைக்குள் முழுமையாக அர்ப்பணிக்கும் வரையிலும்கூட இவைகள் புரிந்துகொள்ளப்படுவதில்லை. சிலர் விசுவாசத்தினால், தேவனோடு தொடர்பு வைத்து, நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஆசரிப்புக்கூடாரத்தில் வேலை செய்யும் லேவியர்களின், ஆராதனை அங்கீகரிக்கப்பட்டாலும், பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளும் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பரிசுத்த ஸ்தலத்தின் மகிமையும், அதில் இருக்கும் விளக்குகள், அவைகளிலிருந்து பிரகாசிக்கும் வெளிச்சம், மேஜையின் மேல் உள்ள சமூகத்து அப்பங்கள், பொன்னான பலிபீடம் போன்றவைகளைப்பற்றிய அறிவு பெற்றிருந்தாலும், இவைகளைப் பயன்படுத்துவதற்கு ஆசாரியன் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.
R1719 (col. 2:4-6)
நாம் பெற்றிருக்கும் விசுவாசம் சரியானதா? என்று ஆராய்ந்து அறிந்துகொள்வது மிக அவசியம். ஏனெனில், ஒருவேளை நம்முடைய விசுவாசம் தவறாக இருந்தால், மணல் மேல் கட்டிய கட்டிடம் போலவும், சரியான பாதையில் செல்லாமல், பாறைகளின் மேல் மோதும் கப்பலைப் போலவும், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை அஸ்தமிக்கும். விசுவாசம், ரயில் இன்ஜினிலுள்ள நீராவியைப் போலிருக்கிறது. அதை நன்மை மற்றும் தீமைக்கென்றும் பயன்படுத்தலாம். இதற்காகவே நாம் சரியான விசுவாசம் கொண்டிருக்கவேண்டும்.
விசுவாசத்தின் இந்த முக்கியத்துவத்தினாலும், நன்மைக்காக அல்லது தீமைக்காக இயக்கும் வல்லமையாக இது செயல்படுவதினால், அப்போஸ்தலனாகிய பவுல் – தான் மனந்திரும்பியபின், சகோதரர் சரியான விசுவாசத்தில் நிலைத்திருக்க மிகவும் பிரயாசப்பட்டார். (1தெசலோ 3:2,5,6,7,10) ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, இதுவே உண்மை என்று நிரூபித்து, அசையாத நம்பிக்கையோடு சுவிசேஷத்தைப் பற்றிக்கொண்டு, கிறிஸ்துவில் வேரூன்றி, வளர்ச்சியடைந்து விசுவாசத்தை ஸ்தாபிக்க அவர் ஒவ்வொருவரையும் வேண்டிக்கொண்டார். “லௌகீக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.” (கொலோ 2:8, 1:23, 2:7) சபையின் விசுவாசம் மனித அறிவினால் நிலைத்திருக்கக்கூடாது என்றும் அது தேவனுடைய வல்லமையினால் உறுதி படவேண்டும் என்பதில் பவுல் மிகவும் கவனமுள்ளவராக இருந்தார். ஆகவே அவருடைய பிரசங்கங்களில் மதியீனமான கற்பனைகளையும் அல்லது தன்னைப் பின்பற்றவோ, அல்லது வேறெந்த மனிதனையோ அல்லது வேறெந்த புதிய கருத்துக்களையோ அவர்களுக்குப் போதியாமல், ஒரு தீர்க்கதரிசியாகவும், ஒரு அப்போஸ்தலனாகவும், அவருக்கு வெளிப்படுத்தப்பட்டக் காரியங்களை, பரிசுத்தமான வேதவசனங்களிலிருந்து மாத்திரம் பிரசங்கித்து, அதன் மூலமாக அனைவரையும் ஊக்குவித்து, கேட்ப்போரின் விசுவாசத்தைப் பலப்படுத்தினார் – 1கொரி 2:4,13, 2கொரி 12:1-7, கலா 1:11,12, 2பேது 3:15-16.
நாம் கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாக இருக்கவேண்டும் – அதாவது தேவனுடைய வார்த்தைகளின் அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டதாகவும், ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டதும், இருதயத்திலும், சிந்தையிலும் ஆழமாகப் பதிந்திருப்பதினால் ஜீவனுக்குரிய வல்லமையை ஊக்குவிக்க இந்த விசுவாசம் ஸ்தாபிக்கவேண்டும். இப்படிப்பட்ட விசுவாசம், தேவனுடைய வல்லமை செயல்படவும், இந்த உலகம், மாமிசம் மற்றும் எதிராளியான பிசாசை எதிர்க்க தங்களுக்குள்ளே போதுமான விசுவாசம் இல்லை என்பதை வெளியரங்கமாக காட்டிக் கொள்பவர்கள் தேடும் வண்ணமாக இது இருப்பதில்லை. மேலும், மெய்யான விசுவாசம், புதிதான காரியங்களைத் தேடிச் செல்வதில்லை. மேலும், மனிதனுடைய தத்துவ ஞானத்தின் அடிப்படையில், தேவனுடைய வார்த்தைகளை எவ்வளவு திறமையாக சமாளிக்கிறார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் இல்லை மற்றவர்கள் முன் அது பயப்படுவதுமில்லை.