உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-FAITH-Q-4

உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?

What is the im por tance of a proper faith?

எபிரெயர் 11:6 “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம், ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.”

F315 (P1)

முதல் கூற்றின் அடிப்படையில் – பொதுவாக நல்ல போதனைகள் அனைத்தும் இழிவாய் எண்ணப்படும் நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மேலும், இக்காலத்தில் அநேகர் கிரியைகள் மற்றும் நல்லொழுக்கமும், விசுவாசம் மற்றும் உபதேசத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் எந்த விதமான மதிப்பையும் பெறுவதில்லை என்று கருதுகிறார்கள். இது தெய்வீக வார்த்தைக்கு அப்பாற்பட்டிருப்பதால், நாம் எவ்விதத்திலும் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில், இதில் முதலாவது விசுவாசமும், அடுத்து கிரியைகளும் இடம் பெறுகிறது. நம்முடைய விசுவாசமே தேவனால் ஏற்றுகொள்ளப்படுகிறது, இந்தப் பலவீனமான மாம்சத்தின் அனுமதியில், நன்மையான விசுவாசம், நற்கிரியைகளை நம்மிடத்தில் பிறப்பிக்கும் என்று தேவன் எதிர்பார்த்து, அந்த விசுவாசத்தின்படியே அவர் நமக்கு பலனளிப்பார். சகல வசனங்களிலும், இதுவே விசுவாசத்தின் கோட்பாடாக எழுதப்பட்டிருக்கிறது. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம், “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” (1யோவான் 5:4) ஆகவே, ஒருவர் தேவன் மேல் உள்ள விசுவாசத்தையும் அவருடைய வாக்குத்தத்தங்களையும் தன்னுடைய வாழ்க்கையில், கடைபிடிக்காமல் சரியான முறையில் மேற்கொள்ள (ஜெயிக்க) முடியாது. இதை செயல்படுத்தவேண்டுமானால், அவைகளை முதலில் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வாய்ப்புகள் மற்றும் விசுவாசத்தில் உறுதியான வளர்ச்சியானது, யுகங்களைப் பற்றிய தெய்வீகத் திட்டங்களையும், மகத்தான விலைமதிப்பற்ற வாக்குத்தத்தங்களையும் புரிந்துகொள்ள வழி வகுக்கும். இப்படியாக, போதனைகள் மற்றும் கட்டளைகளை அறிந்து கொள்வதினால் தேவனுடைய ஜனங்கள், உலக ஜனங்களைக் காட்டிலும், தேவனோடு தொடர்பு கொள்வதற்கான அறிவில் விருத்தியடைந்து மகிழ்வதற்காக மட்டுமல்ல இந்த அறிவின் நிமித்தம் அவர்களில் விசுவாசமும், நம்பிக்கையும், நடத்தையும் தேவனுக்குள்ளாக வளர உதவி செய்கிறது. “அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிற எவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.” (1யோவான் 3:3) நாம் பார்த்த அனைத்து வாக்கியங்களுக்கும் இந்த வசனம் நேர்த்தியாகப் பொருந்துகிறது. ஒருவர் தன்னைத்தான் சுத்திகரித்து, தன் நடத்தையையும் சுத்திகரிக்க விரும்புகிறவர், அதில் வெற்றியடைய வேண்டும். வசனங்கள் குறிப்பிடுவதுப்போல அது இருதயத்தில் துவங்கி, வளர்ச்சியடைந்து, சுத்திகரிப்புக்காக பயன்பட்டு, வாக்குறுதிகளை நினைப்பூட்டவேண்டும். இதற்கு “கிறிஸ்தவ போதனைகளில் அறிவு” என்று பொருள்படுகிறது.

F693(1)

விசுவாசத்தின் கண்கள் மற்றும் செவிகள், தெய்வீக வார்த்தைகளைக் காண்பதற்கும், கேட்பதற்கும் பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே புதியசிருஷ்டிகள், வரக்கூடிய அளவற்ற மகிமையான பொக்கிஷத்தை ருசிக்க முடியும். ஒரு சராசரி மனிதனால் கூடாததும், ஒருவர் தன்னை உடன்படிக்கைக்குள் முழுமையாக அர்ப்பணிக்கும் வரையிலும்கூட இவைகள் புரிந்துகொள்ளப்படுவதில்லை. சிலர் விசுவாசத்தினால், தேவனோடு தொடர்பு வைத்து, நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஆசரிப்புக்கூடாரத்தில் வேலை செய்யும் லேவியர்களின், ஆராதனை அங்கீகரிக்கப்பட்டாலும், பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளும், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளும் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பரிசுத்த ஸ்தலத்தின் மகிமையும், அதில் இருக்கும் விளக்குகள், அவைகளிலிருந்து பிரகாசிக்கும் வெளிச்சம், மேஜையின் மேல் உள்ள சமூகத்து அப்பங்கள், பொன்னான பலிபீடம் போன்றவைகளைப்பற்றிய அறிவு பெற்றிருந்தாலும், இவைகளைப் பயன்படுத்துவதற்கு ஆசாரியன் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.

R1719 (col. 2:4-6)

நாம் பெற்றிருக்கும் விசுவாசம் சரியானதா? என்று ஆராய்ந்து அறிந்துகொள்வது மிக அவசியம். ஏனெனில், ஒருவேளை நம்முடைய விசுவாசம் தவறாக இருந்தால், மணல் மேல் கட்டிய கட்டிடம் போலவும், சரியான பாதையில் செல்லாமல், பாறைகளின் மேல் மோதும் கப்பலைப் போலவும், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை அஸ்தமிக்கும். விசுவாசம், ரயில் இன்ஜினிலுள்ள நீராவியைப் போலிருக்கிறது. அதை நன்மை மற்றும் தீமைக்கென்றும் பயன்படுத்தலாம். இதற்காகவே நாம் சரியான விசுவாசம் கொண்டிருக்கவேண்டும்.

விசுவாசத்தின் இந்த முக்கியத்துவத்தினாலும், நன்மைக்காக அல்லது தீமைக்காக இயக்கும் வல்லமையாக இது செயல்படுவதினால், அப்போஸ்தலனாகிய பவுல் – தான் மனந்திரும்பியபின், சகோதரர் சரியான விசுவாசத்தில் நிலைத்திருக்க மிகவும் பிரயாசப்பட்டார். (1தெசலோ 3:2,5,6,7,10) ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, இதுவே உண்மை என்று நிரூபித்து, அசையாத நம்பிக்கையோடு சுவிசேஷத்தைப் பற்றிக்கொண்டு, கிறிஸ்துவில் வேரூன்றி, வளர்ச்சியடைந்து விசுவாசத்தை ஸ்தாபிக்க அவர் ஒவ்வொருவரையும் வேண்டிக்கொண்டார். “லௌகீக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.” (கொலோ 2:8, 1:23, 2:7) சபையின் விசுவாசம் மனித அறிவினால் நிலைத்திருக்கக்கூடாது என்றும் அது தேவனுடைய வல்லமையினால் உறுதி படவேண்டும் என்பதில் பவுல் மிகவும் கவனமுள்ளவராக இருந்தார். ஆகவே அவருடைய பிரசங்கங்களில் மதியீனமான கற்பனைகளையும் அல்லது தன்னைப் பின்பற்றவோ, அல்லது வேறெந்த மனிதனையோ அல்லது வேறெந்த புதிய கருத்துக்களையோ அவர்களுக்குப் போதியாமல், ஒரு தீர்க்கதரிசியாகவும், ஒரு அப்போஸ்தலனாகவும், அவருக்கு வெளிப்படுத்தப்பட்டக் காரியங்களை, பரிசுத்தமான வேதவசனங்களிலிருந்து மாத்திரம் பிரசங்கித்து, அதன் மூலமாக அனைவரையும் ஊக்குவித்து, கேட்ப்போரின் விசுவாசத்தைப் பலப்படுத்தினார் – 1கொரி 2:4,13, 2கொரி 12:1-7, கலா 1:11,12, 2பேது 3:15-16.

நாம் கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாக இருக்கவேண்டும் – அதாவது தேவனுடைய வார்த்தைகளின் அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டதாகவும், ஆராய்ந்து நிரூபிக்கப்பட்டதும், இருதயத்திலும், சிந்தையிலும் ஆழமாகப் பதிந்திருப்பதினால் ஜீவனுக்குரிய வல்லமையை ஊக்குவிக்க இந்த விசுவாசம் ஸ்தாபிக்கவேண்டும். இப்படிப்பட்ட விசுவாசம், தேவனுடைய வல்லமை செயல்படவும், இந்த உலகம், மாமிசம் மற்றும் எதிராளியான பிசாசை எதிர்க்க தங்களுக்குள்ளே போதுமான விசுவாசம் இல்லை என்பதை வெளியரங்கமாக காட்டிக் கொள்பவர்கள் தேடும் வண்ணமாக இது இருப்பதில்லை. மேலும், மெய்யான விசுவாசம், புதிதான காரியங்களைத் தேடிச் செல்வதில்லை. மேலும், மனிதனுடைய தத்துவ ஞானத்தின் அடிப்படையில், தேவனுடைய வார்த்தைகளை எவ்வளவு திறமையாக சமாளிக்கிறார்கள் என்று எதிர்ப்பார்ப்பதும் இல்லை மற்றவர்கள் முன் அது பயப்படுவதுமில்லை.