ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-KNOWLEDGE-Q-28

ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

What will be the relation between knowledge and faith in the Millennial Age?

R2677 (col.1 P5) through R2678(P1): –

இந்த சுவிசேஷ யுகத்தில் “விசுவாசத்தினால் நீதிமானக்கப்படுதல்” என்று அழைக்கப்படும் நிலை, மேசியாவின் யுகத்தில் செயலாற்றப்படாது. ஏனெனில் அக்காலத்தில் இந்நிலை தேவைப்படாது. இக்காலத்து நிலைமையின் விதிமுறைகளுக்கும் வருங்கால நிலைமையின் விதிமுறைகளுக்கும் மிக பெரிய வித்தியாசங்களைக் காணலாம். ஏனெனில் இப்போது நாம் “தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்” விசுவாசம் அரிதானது. ஆகவே அது அதிகமாக பாராட்டப்பட்டு தேவனால் பரிசளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மேசியாவின் யுகத்தில் விசுவாசத்தின் யுகம் கடந்துவிட்டு, அறிவுக்குரிய யுகம் துவங்கிவிடும். ஒவ்வொரு யுகத்திற்கான ஆதாரங்கள் மிக தெளிவாக காட்டப்படுகிறது. “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு செய்வாருமில்லை; கேடு செய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல, பூமி கர்த்தரை அறியும் அறிவினால் நிறைந்திருக்கும்.” இதற்கு விசேஷித்த விசுவாசம் தேவை இல்லை. ஆகவே விசுவாசத்திற்குரிய விசேஷித்த பரிசுகளும் இனி கொடுக்கப்படுவதுமில்லை.

ஆகவே, நாம் மேசியாவின் யுகத்தில் மனுக்குலம் நம்ப மாட்டார்கள் என்று நாம் கூறவில்லை. அக்காலத்தில் அனைவரும் நம்பவேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள். ஆகவே அதை தவிர வேறு வழி இராது. நம்பிக்கைக்கும், விசுவாசத்தை நடைமுறைபடுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு. இன்று நாம் அநேக காரியங்களை விசுவாசத்தின் மூலம் நம்புகிறோம். ஆனால் மேசியாவின் யுகத்தில் ஆதாரம் இல்லாமல் நம்ப மாட்டார்கள். இவர்கள் விசுவாசத்தினால் நம்பாமல் அவர்கள் அறிவினால் பெற்ற ஆதாரத்தின் அடிப்படையில் நம்புவார்கள். தக்க ஆதாரங்கள் இருப்பதினால் அவர் சந்தேகப்படுவதற்கு வாய்ப்பிராது. எடுத்துக்காட்டாக, நாம் தேவனுடைய பார்வையில் நீதிமானாக எண்ணப்படுவதற்கு, நம்முடைய கடந்த கால பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும். நம்முடைய சிந்தையிலும், சரீரத்திலும் உள்ள பலவீனங்களை தொடர்ந்து கவனித்து பாவ மன்னிப்பு கேட்காவிட்டால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படாது. இந்நிலையில் நம்முடைய பாவங்கள் மூடப்படுமே தவிர சபை ஜனங்களின் மரணத்தில் இந்த மாம்ச சரீரத்தின் அழிவு நடந்து, ஆண்டவரின் வருகையில் முதலாம் உயிர்தெழுதலின் போது மகிமையான ஆவிக்குரிய பூரண சரீரத்தை கொடுக்கும் வரையில் அவர்களின் பாவங்கள் முழுமையாக வெளியேறாது. அப்போது அவர்களுக்குள் எந்த விதமான பாவமோ, பலவீனமோ, அபூரண நிலைகளோ காணப்படாது. அப்போது உண்மையில் பாவங்கள் முற்றிலுமாக வெளியேற்றப்படும். ஆனால், இப்பொழுது நாம் தேவன் சொன்னபடி அவர் பேரில் விசுவாசம் வைப்பதினால், நம்முடைய பாவங்கள் மூடப்பட்டது என்று நாம் நம்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அடுத்து பரம அழைப்பை பெற்றவர்கள், பூமிக்குரிய, தற்காலிகமான காரியங்களை பலி செலுத்தி பரலோக மகிமையையும், கனத்தையும், அழியாமையையும், பெறுவதே நம்முடைய விசுவாசத்தின் அடுத்த படியாக இருக்கிறது. ஆனால் இந்தப் பரலோக கிரீடமும், ஆசீர்வாதமும் விசுவாசத்தின் கண்களை உடையவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. சுவிசேஷ யுகத்தில் விசுவாசிகளாகிய நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பந்தயத்தில் விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவையும் அவருடைய நீதியான நியாயத்தீர்ப்பையும், அவர் தலையில் இருக்கும் நீதியான கிரீடத்தையும் நோக்கி பொறுமையோடு முடிவு பரியந்தம் சீராக ஓடுபவர்கள் கிரீடத்தைப் பெறுவார்கள். இப்படியாக நாம் விசுவாச யுகத்தில் நீதிமானாக்கப்பட்ட நிலையில் அநேக வாக்குறுதிகளின் மேல் நம்பிக்கை வைத்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்காக மிக மதிப்புள்ள பரிசையும் பெறுவோம்.

மேசியாவின் யுகத்தில் இப்படிப்பட்ட விதிமுறைகள் இருப்பதில்லை, மாறாக, அப்போது அறிவு அதிகரித்திருக்கும், ஒவ்வொரு நாளின் அனுபவங்கள் மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, ஒழுக்கம் சம்பந்தப்பட்ட வளர்ச்சியை அடைவதற்கு வழி நடத்தும். எதிர்பார்த்திருக்கிறபடி இப்படிப்பட்ட அனுபவங்கள் அநேக செயல்முறைகளை கற்றுக்கொடுக்கும். இந்த கீழ்ப்படிதலின் விளைவாக சீர்பொருந்துதலை பரிசாக பெறுவார்கள். கீழ்ப்படியாமல் போனால், இரண்டாம் மரணத்தை தண்டனையாக பெறுவார்கள்.

இந்தக் காரியங்கள் வசனங்களில் மிக தெளிவாக நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த யுகத்தில் “உங்கள் விசுவாசத்திற்கு ஏற்றபடி உங்களுக்கு கொடுக்கப்படும்” என்ற தெய்வீக கோட்பாட்டின்படியே நாம் தீர்க்கப்படுகிறோம் என்று வசனங்கள் தெளிவாக காட்டுகிறது. ஆனால் மேசியாவின் யுகத்தில் உலகத்தின் நியாயத்தீர்ப்பு எவ்வாறு நடக்கும் என்று வசனங்கள் தெளிவாக கற்பிக்கிறது. “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்த புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்” வெளி 20:12.

மேசியாவின் யுகத்தில் அனைவருக்கும் புத்திர சுவிகாரம் கொடுக்கப்படும் என்று நினைப்பது மிக தவறு. ஆயினும், இவர்கள் முழுமையாக தங்களை அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் நீதிமான்களாக ஆவதற்கு இவரே காரணராக இருப்பதினால், ஏற்ற நீதியில் நிலை நிற்கவேண்டும். முழுமையாக கீழ்ப்படிந்து, தெய்வீக சட்டத்திற்கு முழுமையாக இசைந்திருந்து, நீதியின் சட்டங்கள் மற்றும் அன்பின் கட்டளைகளை பூரணமாக கடைபிடித்தால் மட்டுமே நித்திய ஜீவன் கொடுக்கப்படும். இந்த அளவுக்கு தேவனோடு இசைந்திருப்பவர்கள் தேவையான பலியைச் செலுத்துவார்கள்.

பாவமும், சாத்தானும் “இந்தத் தீமையான உலகத்தில்” இருக்கிறது. ஆனால் வரப்போகிற மேசியாவின் யுகத்தில் இவைகள் இராததினால், அங்கு பலிகள் தேவைப்படாது. வரக்கூடிய இராஜ்யத்தில் நீதி வாசமாக இருக்கும். அதில் நீதியான நியாயாதிபதி, ஆட்சி செய்வார். மற்ற அனைவரும் இசைவாக இருப்பார்கள். அந்த ஆட்சியில் ஒவ்வொரு அம்சங்களும் நீதியாகவும், உண்மையாகவும் அன்பாகவும் இருக்கும்.

திரும்பக்கொடுத்தலுக்கான வாய்ப்புகள் மனுக்குலத்திற்கு அழைப்பாக கொடுக்கப்படுகிறது. “பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்” (எரே 31:29,30) என்று தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள் நிறைவடையும். உபத்திரவ காலம் வரைக்கும் அதாவது கி.பி.1915ம் வருடம் வரைக்கும் இந்தக் காலம் துவங்கவில்லை என்று நாம் அறிந்திருக்கிறோம். இந்த வருடத்திலிருந்து இராஜ்யம் பகிரங்கமாக ஸ்தாபிக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. சீர்பொருந்துதலின் வாய்ப்பைப் பெற்று துணிகரமாக பாவம் செய்து மரித்து போகிறவர்கள் ஆதாமின் பாவத்திற்காக அல்ல, தங்களுடைய பாவத்திற்காக மரிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தேவனுக்கு கீழ்ப்படிந்திருப்பவர்கள் திரும்ப கொடுத்தலின் காலத்தில் தேவனுடைய ஆசீர்வாதங்களை ருசித்து, உன்மையான மனம் திரும்புதலை வெளிப்படுத்தி உடனடியாக சீர்பொருந்த துவங்குவார்கள். இந்த அழைப்பின் கீழ் விசுவாசமுள்ளவர்கள் பரிசளிக்கப்படுவார்கள்.

மேசியாவின் யுகத்தின் ஆசீர்வாதங்கள், சுவிசேஷ யுகத்தின் முடிவுக்கு சற்று முன்னதாகவே துவங்கியிருப்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்.

1. இந்த வரிசையில் முதலாவதாக அறிவு, பின்பு விஞ்ஞான கண்டுபிடிப்புகள் – உலகத்தில் உள்ள மனுக்குலத்திற்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. இவைகள் அனைத்தும் இந்நாள் வரைக்கும் கண்டிராத ஆசீர்வாதங்களாகும். இதுவே “கர்த்தருடைய நாளின் ஆயத்த” வேலைகளாகும்.

2. சுவிசேஷ யுகத்தின் முடிவும் மேசியாவின் யுகத்தின் துவக்கமும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதினாலே, விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அதாவது மேசியாவின் யுகத்திற்கான ஆசீர்வாதங்களோடு, மகா உபத்திரவத்தின் காலமும் துவங்குகிறது. இதில் இக்காலத்து அமைப்புகள், சமுதாயம், பொருளாதாரம், அரசியல் மற்றும் மதங்கள் அனைத்தும் தரை மட்டம் ஆகிவிடும். அதற்குப்பின் தேவனுடைய நன்மையான காரியங்கள் அவருடைய இராஜ்யத்தில் புதிதான அமைப்புகளோடு ஸ்தாபிக்கப்படும்.

3. திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்கள் இப்பொழுது முழுமையாக சபையை வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது உலகத்தின் மேல் வரக்கூடிய ஆசீர்வாதங்கள் சபை முன்னதாகவே கண்டு, களிகூருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகவே தன்னுடைய இருதயத்தில் மேலான உள்ளுணர்வுகளோடும், துதியோடும், நன்றிகளை ஏறெடுக்கிறது. அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை மீட்டு நம்மை நேசித்து “நம்முடைய பாவத்திற்காக மட்டும் அல்ல இந்த உலகத்தின் பாவத்திற்காகவும் தன்னையே பலி செலுத்தினவருக்கும்” முழு மனதோடு நன்றி செலுத்தக்கடவோம்.

F106(P3) through F107: –

சீர்ப்பொருந்தும் காரியங்களைச் செயலாற்ற உண்மையான நிதிமானாக்கப்படுவதற்கு, விசுவாசம் மிக அவசியம் ஏனெனில் “விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாக இருப்பது கூடாத காரியம்.” மேலும் சீர்பொருந்துதலுக்குரிய ஆசீர்வாதங்களைப் பரிசாக பெறுவதற்கு விசுவாசம் மிக அவசியம். ஆனால் இக்காலத்தில் “பரிசுத்தவான்களாக அழைக்கப்பட்டு” கிறிஸ்துவின் பங்காளிகளாகவும், புது சிருஷ்டிகளாக மாறுவதற்கு தேவைப்பட்ட விசுவாசம், மேல் சொல்லப்பட்ட விசுவாசத்தைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. தேவனுடைய இராஜ்யத்தில் சாத்தான் கட்டப்பட்ட பின், கர்த்தரை அறிகிற அறிவினால் இந்த பூமி நிரப்பப்படும், அப்போது தெய்வீக வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றங்கள் அனைவராலும் புரிந்துக்கொள்ளப்படும். இப்போது விசுவாசத்தினால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய காரியங்களை மனுக்குலம் அப்போது கண்டு, அவர்கள் பெற்ற அறிவினால் எளிதாக உணர்ந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் பூரண நிலைமையை அடைவதற்கு அதற்கேற்ற விசுவாசம் கட்டாயம் தேவை. மேசியாவின் யுகத்தின் முடிவில் அவர்கள் பெற்ற விசுவாசத்தை செயலாற்றினால், அல்லது கிரியைகளினால் வெளிப்படுத்தினால் மட்டுமே உண்மையான நீதிமானக்கப்பட்ட நிலையை அடையமுடியும். “அப்போது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்” என்று அக்காலத்தைக் குறித்து அறிந்திருந்தாலும் அதற்கு எதிரிடையாக இக்காலத்தைக் குறித்து அறிந்திருந்தாலும் அதற்கு எதிரிடையாக இக்காலத்து சபையின் நியாயத்தீர்ப்பு “நாம் பெற்ற விசுவாசத்தின்” அடிப்படையில் நடந்துக்கொண்டிருக்கிறது. ஆயினும் அவர்கள் கிரியைகள் விசுவாசத்தோடு காணப்பட வேண்டும். அதாவது அவர்களால் முடிந்த வரைக்கும் விசுவாசத்தை கிரியைகளால் வெளிப்படுத்த வேண்டும்.

“மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக்கண்டு; உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது” (கலா 3:18) என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். நியாயப்பிரமாண உடன்படிக்கையின் அடிப்படையில் சீர்பொருந்தக்கூடிய காரியங்கள் நிறைவேறாமல், கிருபையின் பிரமாணத்தின் கீழ் நிறைவேறுவதை இந்த வசனம் காட்டுகிறது. ஆனால் மேசியாவின் யுகத்தில் புது உடன்படிக்கைக்குக் கீழ் கிருபையினால் சீர்பொருந்தப்படுவார்கள். அந்த உடன்படிக்கையின் கீழ் அனைவரும் தேவனையும் அவருடைய காரியங்களையும் நம்பி, ஏற்றுக்கொண்டு அதனால் பயனடைய வேண்டும். இக்காலத்தில் நீதிமனாக்கப்பட்ட நிலையை அடைவதற்கும் வருங்காலத்திலும் நீதிமானாக்கப்பட்ட நிலையை அடைவதற்கும் மற்றொரு வித்தியாசமும் உண்டு. இக்காலத்தில் சரியான விசுவாசத்தோடும், பிதாவினுடைய ஐக்கியத்தோடும் எல்லாவிதமான பாதகமான நிலையிலும் நீதிமானாக எண்ணப்படுகிற நிலையை அடைகிறோம். ஆனால் மேசியாவின் யுகத்தில் சாதகமான எல்லா சூழ் நிலைகளின் மத்தியில், அவர்கள் இந்நிலையை பெறுவார்கள். அப்போது இந்த முழு உலகமும் மத்தியஸ்தரின் கரங்களுக்குள் இருக்கும். அதில் தேவனுடைய சித்தத்தின்படி கிரியை செய்வார்கள், உன்மையாக நீதிமானாகப்பட்ட நிலை அடையும் வரைக்கும் திருத்தப்பட்டு, சீர்பொருத்தப்படுவார்கள். அதற்குப்பின் இந்த முழு உலகத்தையும் மாசற்றதாக பிதாவுக்கு முன் நிறுத்தி, தேவனும் பிதாவாக இருப்பவருக்கு இராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். (1கொரி 15:24)

சில கேள்விகளுக்கான நீண்ட விளக்கம் தொடர்கிறது.

R2208: – “தெய்வீக இரகசியங்களின் வெளிப்பாடு” (முதல் பாதி கட்டுரையைப் பார்க்கவும்) (7ம் கேள்வியைக் காண்க)

“கர்த்தருடைய இரகசியம் அவருக்கு பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்” – சங் 25:14

தெய்வீக திட்டத்தை பொறுத்தவரைக்கும் ஏதாகிலும் இரகசியம் உண்டோ? “அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைக்கெட்டுப் போவதில்லை.” என்று சொல்லும் அளவுக்கு தேவனுடைய ஏற்பாடுகள் எவ்வளவு தெளிவாக உள்ளது. சிறு பிள்ளைகளும் எளிதாக புரிந்து கொள்ளும் அளவுக்கு இரட்சிப்பின் திட்டத்திற்கான படிகள் மிக தெளிவாக உள்ளது அல்லவா?

இல்லை, நிச்சயமாக இல்லை. தெய்வீக திட்டத்தை பொறுத்தவரைக்கும், எல்லா இடங்களிலும் வித்தியாசமானக் கருத்துக்கள் நம்பப்பட்டு வருகிறது. முற்றிலும் தவறாக இருக்கும் அநேக புறஜாதியாரின் கூற்றுக்கள் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பகைமைகளும், விரோதங்களும் எழும்புவதற்கான வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகிறது. உலகத்தில் உள்ள ஞானமுள்ள கிறிஸ்தவ மண்டலம், தேவனுடைய உள்ளார்ந்த நோக்கங்களையும், அவருடைய சிருஷ்டிகளைப்பற்றிய காரியங்களையும் பற்றி எத்தனை விதமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்? கிறிஸ்துவ மண்டலத்தின் வெவ்வேறு பிரிவுகளில் காணப்படும் வெவ்வேறு கூற்றுகள் – இந்த வித்தியாசங்களை தெளிவாகக் காட்டுகிறது. “இலவசமான கிருபை” யின் கீழ் தேவன் அவருடைய அனைத்து சிருஷ்டிகளுக்கும் ஒரே விதமான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். ஆயினும், நம்முடைய கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அனைத்தும், ஒரே விதமான வாய்ப்புகளாக தோன்றவில்லை, அல்லது அனைவருக்கும் ஒரே விதமாக கூறப்பட்டதுபோல தெரியவில்லை அல்லது அனைவருக்கும் இதை பெற்றுக்கொள்வதற்கு ஒரே விதமான சூழ்நிலை இருப்பது போல தெரியவில்லை. ஆனால் மற்றொரு பக்கத்தில் பார்க்கும்போது “தேர்வுக்காக” கொடுக்கப்படும் பொதுவான அழைப்பில் அனைவருக்கும் கொடுக்கப்படும் கிருபைக் குறைக்கப்படுகிறது. ஆகவே, அதில் சிலர் மட்டுமே தேர்வுக்கு உட்படுகிறார்கள். இந்தக் கருத்துக்கள் மட்டுமல்ல, கிறிஸ்துவ மண்டலத்தின் இன்னும் பல முரண்பாடான கருத்துக்கள் காணப்படுகிறது. அநேக ஆண்மீகவாதிகள், பேராசிரியர்கள் மற்றும் சிறந்த வல்லுநர்களின் கருத்துக்களினால், பேதைகளும் பாதை மாறக்கூடிய சூழ்நிலையில் இப்போது அகப்பட்டிருக்கிறார்கள்.

தேவனுடைய திட்டம் இரகசியமானது. ஆகவே, நம்முடைய பாடத்திற்கான வாக்கியம் சொல்லர்த்தமாகவே உண்மை என்று தெரிகிறது. மேலும் கடந்த யுகங்களிலும், காலங்களிலும் “தேவனுடைய இரகசியம்” என்பதை பொறுத்த வரைக்கும் மற்ற வசனங்களில் சொல்லப்படும் வாக்கியங்களும் ஒத்துப்போகிறது. இந்த உண்மைக்கு இசைவாக அனைத்து தீர்க்கதரிசிகளும் தெளிவுள்ள வகையிலும், உவமைகளின் வழியாகவும் பேசினார்கள். மிக பெரிய தீர்க்கதரிசியாகிய நம்முடைய ஆண்டவரும் “உவமைகளின் வழியாகவே பேசினார் என்று வாசிக்கிறோம். குறித்த காலத்தில் பரிசுத்த ஆவி கொடுக்கப்படும், அப்போது சகல சத்தியத்திற்குள்ளும் உண்மையான சீஷர்கள் வழிநடத்தப்படுவார்கள் என்று வாக்களித்தார். “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவான் 16:13) தேவனுடைய சில இரகசியங்கள் உடனடியாக புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது. சில இரகசியங்கள் இந்த யுகம் முழுவதிலும் படிப்படியாகப் புரிந்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இன்று நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தெய்வீக இரகசியம், சுவிசேஷ யுகத்தின் முடிவு வரைக்கும் மறைக்கப்பட்டிருக்கிறது. அவர் இதை உலக தோற்றத்திற்கு முன்னிருந்தே இரகசியமாக வைத்திருந்தார். (வெளி 10:7)

தேவனுடைய ஆவியினால் ஏற்ற காலத்தில் சுவிசேஷ யுகத்தின் போது, படிப்படியாக புரிந்துக்கொள்ளக்கூடிய தேவனுடையத் திட்டத்தின் இரகசியம், பொதுவான உலகத்திற்கு வெளிப்படுத்தப்படாமல் ஒரு விசேஷித்த வகுப்பாருக்கு மட்டுமே அருளப்பட்டது. “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றப் பிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்”. “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்” – 1 கொரி 2:14,10 என்று அப்போஸ்தலனாகிய பவுல் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“தேவனுடைய இரகசியம் அவருக்கு பயந்தவர்களிடம் இருக்கிறது.” நம்முடைய பாடத்திலும் இதே சிந்தை நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த யுகம் முழுவதும் இது உண்மையாகவே இருந்து வருகிறது. சுவிசேஷ யுகம் முடிவில் அவருக்கு பயந்து, அவரை கனப்படுத்தக்கூடிய இந்த விசேஷித்த வகுப்பார் மட்டுமே தேவனுடைய இரகசியங்களைப் புரிந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவனுக்கு பயப்படக்கூடியவர்களுக்கும், மனுஷனுக்கு பயப்படக்கூடியவர்களுக்கும், அவனுடைய கிரியைகள், அமைப்புகள், தேவனுடைய விசுவாச அறிக்கைகளில் உள்ள வேறுபாடுகளை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். “மனுஷனுக்கு பயப்படுகிற பயம் கண்ணியை வருவிக்கும்” இந்தப் பயம் அறிவு மற்றும் கிருபையின் வளர்ச்சியை நிச்சயமாக தடுத்துவிடும். மேலும் “கர்த்தருடைய இரகசியங்களை” புரிந்துகொள்ளுவதையும் தடைசெய்யும். ஆனால் “தேவனுக்கு பயப்படுகிறதே ஞானத்தின் ஆரம்பம்”. மேலும் இந்த ஞானத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து, தேவனை அறிகிற அறிவில் நம்மை பூரணப்படுத்தும். அதனால் அவர் மேல் முழு நம்பிக்கை வைத்தவர்களாக, நெருங்கிய உறவு கொண்டவர்களாக அவருடைய இரகசியங்களை” புரிந்துக்கொள்ளுதலை பெறுவதற்கான புத்திர சுவிகாரத்தையும் பெறலாம்.

ஆபிரகாம் தெய்வீக நம்பிக்கையைக் கொண்டிருந்ததினால் அவர் “தேவனுடைய சிநேகிதன்” என்று அழைக்கப்பட்டார். ஆகவே மற்றவர்கள் அறிந்திராத காரியங்களை தேவன் ஆபிரகாமுக்கு அறிவித்தார். அந்தக் காலத்தில் ஒருவருக்கு தேவனுடைய காரியத்தை அறிவிக்க வேண்டியதாக இருந்தது. ஆகவே “கர்த்தரின் இரகசியம்” ஆபிரகாமுக்கு அறிவிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக – சோதோம் அழிக்கப்படும் முன் “நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனா?” என்று கர்த்தர் சொன்னார். ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதனாக இருந்தடியால், மனுக்குலத்தின் இரட்சிப்பின் தெய்வீக திட்டத்தின் சில காரியங்கள் அவருக்கு அறிவிக்கப்பட்டது. “உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார்.

தேவனைத் தவிர ஆபிரகாமுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ, இந்த வாக்கியத்தை முழுமையாக புரிந்துக்கொள்ள இயலாது அல்லது இரட்சிப்பின் தெய்வீக திட்டத்தின் ஆழத்தையும், அகலத்தையும், நீளத்தையும், உயரத்தையும் புரிந்துக்கொள்ளமுடியாது. ஆனால் இது முழு சுவிசேஷத்தையும் கொண்டிருக்கிறது. அதே போல நம்முடைய ஆண்டவர் தம்முடைய முதலாம் வருகையில் இஸ்ரயேல் வீட்டாரிடம் உவமைகளினால் பேசினார். ஆனாலும் சிலர் மட்டுமே முழு விசுவாசத்தோடும், கீழ்ப்படிதலோடும், தேவனிடம் தங்களை அர்ப்பணித்தார்கள். இவர்களை தேவன் சிநேகிதர்களை போல நடத்தினார். அவர்களுக்கு அநேக காரியங்கள் விவரிக்கப்பட்டது. ஆகவே இயேசு பேசின உவமைகளின் அர்த்தங்களைப்பற்றி கேட்டபோது “இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான், நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.” மீண்டுமாக “நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவ 15:15) என்றார்.

தெய்வீகத் திட்டத்தின் இரகசியங்கள், உவமைகளிலும், எண்களிலும், அடையாளங்களிலும், மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இவைகள் உடன்படிக்கை செய்த பிள்ளைகளுக்கு வெளிப்படுத்தி உலகத்திற்கும் பேர்க் கிறிஸ்தவர்களுக்கும் மறைக்கப்பட்டது. இவைகள் மிக ஆழமாக வெளிப்படுத்தன புத்தகத்தில் அடியாளப்படுத்தப்பட்டிருக்கிறது. சொல்லியிருக்கிறபடி, யோவானுக்கு இந்த அடையாளங்கள் தரிசனமாக காட்டப்பட்டது. பரலோக மகிமைகள் அடையாளங்களாகக் காட்டப்பட்டது. தம்முடைய வலது கரத்தில் 7 முத்திரைகளை முத்தரிக்கப்பட்ட ஒரு சுருளை பிடித்தவராக, பிதாவாகிய தேவன் தம்முடைய மகிமை பொருந்திய சிங்காசனத்தில் அமர்ந்திருப்பதாக காட்டப்பட்டது – இந்த உலகத்தின் இரட்சிப்பின் திட்டம் ஒருவரும் அறியாததும், தேவன் மட்டுமே அறிந்த இரகசியத்தின் மறைபொரும் இதுவே, – “புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.” என்ற அடையாளமாக ஒரு சத்தத்தை யோவான் கேட்கிறார். தேவனுடைய வழி நடத்துதலுக்கு தன்னை முழுமையாக ஒப்புவிப்பதற்கு பாத்திரவானாக இருப்பவர் யார்? மிகப்பெரிய தெய்வீக திட்டத்தை நிறைவேற்றுபவர் யார்? எவ்வளவு அற்புதமான ஞானம் மற்றும் அன்பின் நீளத்தையும், அகலத்தையும், ஆழத்தையும், உயரத்தையும் புரிந்துக் கொள்வதில் பாத்திரமாக இருப்பவர் யார்? என்ற சத்தம் கேட்கப்பட்டது. அமைதி நிலவியது. இதற்கு ஒருவரும் பாத்திரவான் இல்லை என்று எண்ணி யோவான் மிகவும் அழுதார். ஆகவே தெய்வீகத் திட்டம் முழுமையாக வெளிப்படுவதற்கு இனி வாய்ப்பில்லை என்று நினைத்து அழுதார். – “அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.”

ஆம், நம்முடைய அன்பான இரட்சகரின் கொடூரமான சோதனைகள் மற்றும் உபத்திரவங்களே அவரை தகுதிப்படுத்தியது. தன்னைத்தான் அவர் தாழ்த்தி, பிதாவிடம் தாம் கொண்டிருந்த மகிமையை விட்டுக்கொடுத்து, மனிதனாகி, இறுதியில் அனைவருக்காகவும் தன்னுடைய ஜீவனையே ஈடுபலியாக கொடுத்தார். மொத்தத்தில் அவர் இரண்டு வேலைகளை செய்தார்.

1. அவருடைய சொந்த இரத்தத்தினால் நம்மை மீட்டார்.

2. அடுத்து, பிதாவுக்கு கீழ்ப்படிந்து, தன்னை ஒப்புக்கொடுத்து, கடந்த யுகங்களிலும் காலங்களிலும் மறக்கப்பட்ட “தேவனுடைய சகல இரகசியமான” காரியங்களை நிறைவேற்றி, அவருக்கேற்ற பிரதிநிதியாக தன்னையே நிரூபித்தார் – எபே 3:3-5

ஆண்டவரின் முப்பதாவது வயதில், அவருடைய மனத்தாழ்மையினால் வந்த மேன்மையான நிலை அனைத்தும் தரிசனமாக காட்டப்பட்டது. இவைகள் அனைத்தும் “அடிக்கப்பட்ட ஆட்டைப்போல” அடையாளமாக காட்டப்பட்டது. அபிஷேகிக்கப்பட்ட கண்களுக்கு இந்தக் காட்சி எத்தனை வல்லமையாக தோன்றும். அதற்குப்பின் அடையாளமாக வரும் காட்சிகள் என்னனெனில் – “இரகசியமான தேவனுடைய சித்தத்தை,” யுங்களைப் பற்றிய தேவ ஏற்பாட்டை, உலக தோற்றத்திற்கு முன் திட்டமிட்ட தெய்வீக நோக்கத்தை பெற்றுக்கொள்ள ஆட்டுக்குட்டியானவர், பிதாவாகிய தேவனிடம் செல்வதை காண்கிறோம். இதற்கு முன் இந்த உலகத்தை தன்னுடைய சொந்த இரத்தத்தினால் இரட்சிக்கக்கூடிய வழியை ஆயத்தப்படுத்தினார். அதற்குப்பின் “தேவனுடைய இரகசியம்” “கர்த்தருடைய ஆட்டுக்குட்டியானவரிடம்” கொடுக்கப்பட்டது.

அதற்குப்பின் முத்திரைகள் உடைக்கப்பட்டது. தெய்வீக நோக்கத்துடன் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு காரியங்கள் வெளிப்பட்டது. ஒவ்வொரு முத்திரை உடைக்கப்படும்போது, அந்தச் சுருள் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டு, “தேவனுடைய இரகசியங்கள்” கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைந்து, ஜனங்களுக்கு புரிந்துகொள்ள வழிவகுத்தது, ஆகவே சுவிசேஷ யுகம் முழுவதிலும் தேவனுடைய ஜனங்கள் “கர்த்தருடைய இரகசியங்களை” – (தெய்வீகத் திட்டம்) – அறிந்துக் கொள்ளுவதற்கான சிறப்புரிமையைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் கடைசி முத்திரை உடைப்படும் வரைக்கும் அதாவது அந்தச் சுருள் முழுமையாக திறக்கப்படும் வரைக்கும் தேவனுடைய திட்டங்கள் முழுமையாக வெளிப்படவில்லை. “ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்” “வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர் மேல் ஆணையிட்டுச் சொன்னான்” வெளி 5:1, 10:7

இந்த உலகத்தில் வெவ்வேறு பகுதிகளில் வாழும் தேவனுடைய ஜனங்கள், தேவனுடைய திட்டங்களைக்குறித்து ஒரே சிந்தை உடையவர்களாக இருப்பார்கள் என்று நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் வசனங்கள் தெளிவாக காட்டுகிறது. ஆகவே தேவனுடைய ஜனங்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள், தாங்கள் எந்த நிலையில் உள்ளவர்கள் என்று முந்தி அறிந்து கொள்ளவேண்டும். இவர்கள் “ஊழியக்காரர்களா” அல்லது தேவனோடு நெருங்கிய ஐக்கியத்தோடிருப்பவர்களும், அவருடைய பரிசுத்த ஆவி என்னும் அச்சாரத்தை பெற்று, பரலோக பிதாவின் திட்டங்களை அறிந்த புத்திரர்களாக, எண்ணப்படுகிறவர்களா என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

நம்முடைய பாடப் பகுதி, தேவனிடத்தில் கொண்ட பயபக்தியை பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால், நாம் பார்த்தபடி இந்தப் பயபக்தியானது பிதாவின் சித்தம் மற்றும் அவருடைய பணிகளை செய்வதற்கு நாம் பெறும் கிருபையின் ஆழமான கிரியைகளுக்கு தொடர்ந்து வழி நடத்துகிறது. இந்த வகுப்பார் மட்டுமே தேவனுக்கேற்ற பயபக்தியை உடையவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் “ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபக புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்” இவர்களே, தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களும், கிறிஸ்துவின் சரீரமும், ஜெயித்தவர்களும், சிறுமந்தையும், கிறிஸ்துவோடுக்கூட ஆட்சி செய்யும் இராஜரீக ஆசாரியர்களுமாக, இந்தப் பூமியின் முழு குடும்பங்களை ஆசீர்வதிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இப்படியாக, மகா உபத்திரவத்தின் காலத்திற்கு முன்னதாகவே தேவன் அவர்களை மீட்டு தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல கடாட்சிப்பார்.

ஆசரிப்புக்கூடாரம் ஸ்தாபிக்கப்பட்ட போது ஆவிக்குரியவைகளை அடையாளப்படுத்தும் அழகான பொன் மேஜை, குத்துவிளக்கு, தூபபீடம் இன்னும் மற்ற காரியங்களும் இஸ்ரயேலரின் பார்வைக்கு மட்டும் அல்லாமல், மற்ற லேவியர்களின் பார்வைக்கும் மறைக்கப்பட்டிருந்தது. அதாவது அங்கு வேலை செய்யும் லேவியர்களும் அவைகளை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இவைகளை காணக்கூடிய பாக்கியத்தை ஆசாரியர்கள் மட்டுமே பெற்றிருந்தார்கள். ஆகவே இவர்கள் ஆவிக்குரிய “இராஜரீக ஆசாரியர்கள்” அடையாளப்படுத்துகிறார்கள். ஆகவே இவர்கள் மட்டுமே தேவனுடைய மறைப்பொருட்களையும், இரகசியங்களையும் புரிந்துக்கொள்ளக்கூடிய சிறப்புரிமையை பெற்றவர்கள்.

R3153 (col.1 P5 to end of article- “கிறிஸ்துவின் சீஷர்கள்” (14-ம் கேள்வி காண்க)

“உண்மையான சீஷர்கள்” என்று நம்முடைய ஆண்டவர் குறிப்பிடும் போது “பெயர் அளவில் சீஷர்கள்” இருப்பதாகவும் வலியுறுத்துகிறார். நாம் தொடர்ந்து உண்மையான சீஷர்களாக இருக்க விரும்புவதால்- “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;” (யோவா 8:31) இந்நிலையை நாம் தக்கவைத்து கொள்ள வேண்டும். மாய்மாலமாக, பெயர் அளவின் சீஷர்களாக இருப்பவர்களை தேவன் நிச்சயமாக அருவருக்கிறார்.

கிறிஸ்துவை நம்முடைய இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்வதே – கிறிஸ்துவ வாழ்க்கையின் முதல் படியின் ஆசீர்வாதமாக இருக்கிறது. ஆனால் இதற்குப்பின் கிடைக்கும் ஆசீர்வாதங்கள், நாம் தொடர்ந்து அவருடைய வார்த்தைகளைக் கீழ்ப்படிந்து, உண்மையான சீஷர்களாக இருப்பதை சார்ந்தே இருக்கிறது. இது கடினமானதுமல்ல. ஆனால் மனித பெருமையானது எளிமையாக தெய்வீக சத்தியத்தை விட்டுவிட்டு சொந்தமான புது கூற்றுக்களையும், மனித தத்துவங்களையும் தேடி அலையக்கூடியதாக இருக்கிறது. உலக அளவின் ஞானமாகவும், மிக பெரிய மனிதர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் இப்படியாக செயல்படுகிறார்கள்.

தொடர்ந்து உண்மையான சீஷர்களாக இருப்பவர்கள், சத்தியத்தை தொடர்ந்து அறிந்துகொள்வார்கள். ஆனால் “எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிறார்கள்” (2 தீமோ 3:7) என்று சொல்லப்படுகிறது. தேவனுடைய வார்த்தைகளில் தொடர்ந்து நிலைத்திருப்பதை சிலர் விட்டுவிடுகிறார்கள். அதற்குப் பதிலாக மனித தத்துவங்களையும், தேவனுடைய வார்தைகளை எதிர்க்கும் கூற்றுக்களையும் நாடுகிறார்கள். இவைகள் மத்தியில் சத்தியத்தை தேடுகிறவர்கள் கண்டடைவார்கள் என்று எங்கும் வாக்களிக்கப்படவில்லை. ஏனெனில் அவர்கள் என்றுமே சத்தியத்தை கண்டடையமாட்டார்கள். சரியான தெய்வீக வழிகளை தவிர தெய்வீக சத்தியத்தை ஒருவரும் கண்டடைய முடியாது. நம்முடைய ஆண்டவரும், அப்போஸ்தலர்களும், தீர்க்கதரிசிகளுமே அவ்வழியை நமக்கு முன் வைத்திருக்கிறார்கள். நம்மை கிறிஸ்துவுக்குள் வளர்ச்சி அடைவதற்கு ஊக்குவிக்கும், இவர்களின் எழுத்துக்களைப்படித்து, தியானித்து, அதை நம்பி, நம்முடைய குணலட்சணங்களை, விசுவாசத்தோடு, இவைகளுக்கு இசைவாக பொருத்துவதே தொடர்ந்து தேவனுடைய வார்த்தைகளில் நிலைத்திருப்பதாகும்.

ஆனால், ஒவ்வொரு காலத்திலும் கிறிஸ்துவின் சரீரமாக இருக்கும் நம்முடைய சகோதரர்கள் மத்தியிலிருந்து கொடுக்கப்படும் சகல விதமான உதவிகளைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். (எபே 4:11-15. 1 கொரி 12:13,14) கிறிஸ்துவின் சரீரத்தை போஷிப்பதற்காக ஆண்டவர் எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார். ஆனால் ஒவ்வொரு சரீர அங்கங்களும் மிக ஜாக்கிரதையாக மற்ற அங்கத்தினர்கள் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கக்கூடிய வார்த்தைகளை போதித்து தங்களுடைய கடமையை நிரூபித்து கொள்ள வேண்டும்.

இப்படியாக தொடர்ந்து நாம் தேவனுடைய வார்த்தைகளில் உண்மையான விசுவாசமுள்ள சீஷர்களாக நிலை நின்றால், நாம் உண்மையாக “சத்தியத்தை அறிந்துக் கொண்டு,” இக்காலத்து சத்தியத்தில் நிலைத்திருப்போம். விசுவாசத்தில் ஆழமாக வேர்க்கொண்டிருப்போம். மேலும் நமக்குள் இருக்கும் நம்பிக்கைக்கு சரியான காரணத்தை கொடுக்க அறிந்திருப்போம். பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்தில், நல்ல போராட்டத்தைப் போராடி, நல்ல சாட்சி பகிர்ந்து, கிறிஸ்துவுக்குள் நல்ல போர் சேவகர்களாக தீங்கநுபவித்து முடிவு பரியந்தம் நிலைநிற்போம். இந்த சத்தியத்தின் அறிவை ஒரே நாளில் பெற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் சரியான வழியில் செல்லும்போது படிப்படியாக இந்தச் சத்தியத்தை கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு படியும் நிச்சயமாக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். ஒவ்வொரு படியும் மேலான சத்தியங்களை புரிந்துக்கொள்ளும் அறிவைக்கொடுக்கும். அதனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆவிக்குரிய குணங்களை ஸ்தாபிக்கப்படும்.

இப்படியாக, பெற்றுக்கொள்ளப்படும் சத்தியம் படிப்படியாக சுத்திகரிப்பின் வல்லமையை நம்முடைய வாழ்க்கையில் அதிகரித்து, ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்பது ஆவியின் கனிகளையும் நமக்குள் வளர்ச்சி அடைந்து பூரணப்படும்.

இப்படியாக, இந்த உண்மையான சீஷர்கள் சத்தியத்தை அறிந்து, அதனால் சுத்திகரிக்கப்படுவார்கள் என்று நம்முடைய ஆண்டவரும் உரைத்திருக்கிறார். “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” சத்தியத்தைப் பெற்றவர்கள் சில ஆசீர்வதிக்கப்பட்ட அனுபவங்களினால் பெற்ற வல்லமையை வைத்து அதை உணர்ந்துக்கொள்ள முடியும். நன்மையானதும், உண்மையான இருதயத்தில் பெற்ற சத்தியம், உடனடியாக, பாவத்தின் செயல்பாடுகளையும், அறியாமையையும், மூடப்பழக்கங்களையும், பயத்தையும் தகர்க்க துவங்குகிறது. நம்முடைய இருதயத்தையும், சிந்தைகளையும் அலசி ஆராய்ந்துப் பார்க்கும். சத்தியத்தின் வெளிச்சத்தில் இருளான பாவங்கள் நிலை நிற்பதில்லை. மேலும் பாவத்தில் தொடர்ந்து நிலை நிற்பவர்கள், அதன் அபூரணத்தை எடுத்து காட்டுவதற்குத் தேவையான வெளிச்சம் பெற்றுக்கொண்ட பின்னும் பாவத்தில் நிலைத்திருந்தால் அந்த வெளிச்சம் அவர்களை விட்டு போய்விடும்.

உண்மையான வெளிச்சத்திற்கு முன்பாக அறியாமையும், மூட நம்பிக்கைகளும் மறைய வேண்டும். விடுதலை பெறக்கூடிய இந்த உணர்வுகள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கும். ஆனால் மில்லியன் கணக்கானோர் இன்னும் இப்படிப்பட்ட கசப்பான நுகத்தின் கீழ்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பயத்தினாலும், தப்பறையான நம்பிக்கையினாலும், சாத்தானுடைய சில வஞ்சகத்தில் அகப்பட்டு, (தேவனுடைய நித்திய ஆக்கினை) ஆவிக்குரிய வளர்ச்சியில் குறைவாக காணப்படுகிறார்கள். ஏனெனில் இவர்கள் தெய்வீக நியமனத்தை மாயமாகவே கோருகிறார்கள். சத்தியத்தை பெற்றவர்கள், அசத்தியமான காரியங்களிலிருந்து மிக பெரிய அளவில் தப்பித்திருக்கிறோம். சாத்தானோடு கட்டப்பட்டிருந்த கட்டுகள் துண்டிக்கப்பட்டு விட்டது. கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கே நன்றிகளை ஏறெடுப்போம்.

இந்த முழு உலகத்தின் மேல் வரும் பேராபத்தின் பயத்திலிருந்து நாம் விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். இந்நாள் வரைக்கும் மிக பெரிய அளவில் ஆட்சி செய்து வந்த சகல அமைப்புகளும் பயங்கரமாக அசைக்கப்படும். அனைவரும் வரக்கூடிய பயங்கரங்களை நினைத்து அஞ்சுகிறார்கள். அனைவரின் பயங்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. வரக்கூடிய அபாயங்கள், நாளுக்கு நாள் புலப்படுகிறது. ஆனாலும் இதற்கு மத்தியில் இன்னும் சில வருடகங்களில், இந்த உலகம் மிக பயங்கரமான நிலையை கடக்க வேண்டும் என்று வாக்கு மாறாத தேவனுடைய வார்த்தைகள் முழு உறுதியளிக்கிறது. உண்மையான கிறிஸ்துவின் சீஷர்கள், அவருடைய வார்த்தைகளில் நிலைத்திருப்பவர்கள், பயமில்லாதவர்களாக, மகிழ்ந்து களிக்கூறுவார்கள். ஏனெனில் இந்தக் கறைப்பட்ட உலகத்தின் ஆதாரங்கள் அல்லது தூண்களை முற்றிலுமாக அழிப்பதற்கு தேவன் இந்தப் பெரிதான அழிவை அனுமதிக்கிறார் என்பதை தெளிவாக அறிந்திருக்கிறார்கள். சத்தியத்தின் கட்டளைகளின்படி இப்படிப்பட்ட சூழ் நிலைகளின் அவசியத்தை உணர்ந்து, மனுஷனுடைய கோபம் தேவனுடைய மகிமையை விளங்கப்பண்ணும் என்ற தெய்வீக பராமரிப்பில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஆசீர்வதிக்கப்பட்ட வாக்குத்தத்தம் – “இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.” இப்படிப்பட்ட கிருபையை தேவனிடமிருந்து பெற்றவர்கள், தொடர்ந்து அதில் நிலைத்திருக்கலாம் அல்லவா? தவறான போதனைகளை நாம் நாடாமல், எல்லா சூழ் நிலைகளிலும் விசுவாசமுள்ளவர்களாக இருந்து எல்லா தவறுகளையும் எதிர்த்து நிற்போம் அல்லவா? ஆகவே, நம்முடைய விசுவாசத்தின் கிரியைகளினால் நம்முடைய புரிந்துகொள்ளுதலை நிரூபிப்போமாக.

==================================================================