CD-PRAYER-Q-47
மாற்கு 14:38 நீங்கள் சோதனைக்கு உட்படாதபடிக்கு. விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவியோ உற்சாகமுள்ளது. மாம்சமோ பலவீனமானது.
R2692 [col. 1:2, 3]: –
எவ்வாறாயினும், ஜெபிப்பதை விட அவசியமானது உண்டு என்று நம்முடைய பொன்னான வேதபகுதி அறிவுறுத்துகிறது. இருதயத்தின் உணர்வுகளை முழுமையாக பிரதிபலிப்பது மட்டுமே ஜெபம் அல்ல. அது உடனடியாக சீர்குலைவதற்கு சொற்களின் வடிவமாக வெளிப்படுகிறது உதடுகளினால் ஆண்டவரிடம் நெருங்கினாலும் இருதயம் வெகு தூரத்தில் உள்ளது – ஒருவேளை தொழிலில் அல்லது சிற்றின்பங்கள் அல்லது பாவத்தில் சிக்கியிருக்கலாம். ஆகையால், ஆவிக்குரிய வழியில் முன்னேறுகிற எவரும் ஆவியோடும், புரிந்துகொள்ளுதலோடும் ஜெபிப்பது மட்டும் அல்ல. தன்னுடைய சொந்த மாம்சத்தின் பாவ போக்குகளுக்கு எதிராகவும் விழித்திருந்து கவனிக்கவேண்டும். சுயதிருப்தி, சுயநலம், உலக இன்பங்கள், உலக அபிலாஷைகள், மனிதர்களிடையே மரியாதை, பணத்தின் மேல் பேராவல் போன்றவற்றைத் தடுப்பதற்கான உலகின் கவர்ச்சிகளுக்கு எதிராகவும் இன்னும் “ஒளியின் தூதனாக” வேஷம் தரித்து, தேவனுடைய ஜனங்கள் மீது வரும் வழக்கமாக தாக்கும், எதிராளியின் தந்திரங்களுக்கு எதிராகவும், சுவிசேஷத்தில் நமக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைக்கு” (கொலோசேயர் 1:23) பதிலாக மனித உணர்வுகள், முறைகள் மற்றும் வேலைகளையும், அர்ப்பணிக்கப்பட்ட நோக்கங்கள், சிந்தைக்கு பதிலாக திருச்சபையின் பண்டிகைகள், சடங்குகள் போன்றவறால் ஏமாற்றுவதற்கு எதிராகவும் விழித்திருந்து கவனிக்கவேண்டும். மேலும், நம்முடைய இரட்சகரின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதற்கு, தேவனுடைய பல்வேறு மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களை காண்பதினால் அல்ல காணாமல் விசுவாசித்து இந்த ஓட்டத்தை ஓடுவதற்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நம்முடைய பாடம் குறிப்பாக கவனிப்பதைப்பற்றியது. ஆனால் பொன்னான வேத பகுதியோடு இணங்க – உண்மையாக கவனிக்கும் அனைவரும் ஜெபிக்கவும் வேண்டும். ஊக்கத்துடன் ஜெபிக்கக்கூடியவர்கள் கவனிப்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஜெபம் விசுவாசத்தைக் குறிக்கிறது. “கிரியை இல்லாத விசுவாசம் செத்தது” என்று அப்போஸ்தலர் கூறுகிறபடி, ஜீவனுள்ள விசுவாசம் இருக்கும் வரை, கவனித்தலோடு இணைந்து செயல்படும் கிரியையைக் குறிக்கிறது. அது விரைவாக அதன் சத்தையும், அதன் மதிப்பையும், இருப்பையும் இழக்கிறது.
R3178
“சோதனைக்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்.”- மாற்கு 14:38
பாவத்தில் விழுவதற்கு ஒரு காலத்தில் விட மற்றொரு காலத்தில் அதிக சாத்தியமாக இருப்பதைக் குறித்து விச்சித்திரமாக உள்ளது. ஆயினும் ஒவ்வொரு வசந்த காலத்திலும், பஸ்கா காலத்தில் வரும் சோதனையின் விசித்திரமான வல்லமையை பல ஆண்டுகளாக நாம் கவனித்து வருகிறோம். இதை முன்பு, மற்றவர்களின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த காலத்தில் அநேகர் அல்லது அனைவரும் தடுமாறுவதை அல்லது காயப்படுவதை நாம் கவனித்து வருகிறோம். ஆகையால் நம்முடைய கர்த்தருடைய வார்த்தைகளை மிகுந்த எச்சரிப்புடன் கவனித்து. மற்றவர்களுக்காகவும், நமக்காகவும் ஊக்கத்துடன் விழித்திருந்து ஜெபிப்போம். மேலும் ஒவ்வொருவரும் தன் சகோதரனுக்கு முன்பாக தடுக்கலின் கல்லை போடாதபடிக்கு கவனமாக இருக்கவேண்டும். ரோமர் 14:13. எபிரெயர் 2:1.
அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது. 51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். 60. அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். 66. அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். யோவான் 6:4,51,60,66,67 என்று பஸ்கா பண்டிகையின் போது நம்முடைய ஆண்டவர் கூறினார். இந்த பஸ்கா நேரத்தில் தான் யூதாஸ் நம்முடைய ஆண்டவரை காட்டி கொடுப்பதற்காக பேரம் பேசினான் – சிறிது நேரம் கழித்து அதை நிறைவேற்றினான். அப்பொழுது. அவர் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி,” (மத்தேயு 26:38) என்று நம்முடைய ஆண்டவர் பஸ்கா காலத்தைப் பற்றி தான் சொன்னார். “ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு. முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.” – லூக்கா 12:50.
இந்த பஸ்கா காலத்தில் தான் நம்முடைய ஆண்டவர் சீஷர்களை அழைத்து, மனுஷகுமாரன் பிரதான ஆசாரியர்கள் மற்றும் வேதபாரகரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, கொல்லப்படபோகிறார் என்றும் அவர்களுக்கு விளக்கத்தொடங்கினார். (மத்தேயு 16:21) பின்னர் பேதுரு தன்னை ஒரு சீஷன் என்பதை மறக்கும்படியாக சோதிக்கப்பட்டு, “ஆண்டவரை தனியே அழைத்துக் கொண்டுபோய் ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே. இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.” இவ்வாறு அவர் நம்முடைய கர்த்தருடைய பலியை நிராகரிக்கும்படி சோதிக்கப்பட்டார். ஆகவே, “எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய் தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்…” என்று நம்முடைய ஆண்டவர் பேதுருவை கடிந்துகொண்டார். – 22,23 வசனங்கள்.
பஸ்காவை புசிப்பதற்கு அனைவரும் சந்தித்தபோது, பன்னிரண்டு பேரில் இராஜ்யத்தில் யார் பெரியவராக இருப்பார் என்ற சர்ச்சை அவர்களுக்குள் உண்டாயிற்று. இவ்வாறு அவர்கள் நம்முடைய ஆண்டவரின் கடிந்துகொள்ளுதலைப் பெற்றார்கள். மேலும் நம்முடைய ஆண்டவர் அவர்களின் கால்களைக் கழுவுவதன் மூலம் மனத்தாழ்மையின் விளக்கத்தை ஒரு மாதிரியாக முன்வைத்தார்.
அதற்குபின் அவர்கள் ஒரு பாடலைப் பாடி, பஸ்காவிலிருந்து வெளியேறியபோதுதான், “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற இந்த கட்டுரையின் தலைப்பிலுள்ள வார்த்தைகளை நம்முடைய கர்த்தர் கூறினார். அவருடைய சித்தத்தை, தேவனுடைய சித்தத்திற்கு ஒம்புக்கொடுத்து, அவருடைய வேர்வை இரத்தத்துளிகளாக வரும் அளவுக்கு அவர் ஒரு வேதனையான போரில் இருந்தார். அப்போது அவர் ஊக்கத்துடன் ஜெபித்தபோது, அவர் பலப்படுத்தப்பட்டார். லூக்கா – 22:39-46.
சிறிது நேரத்திற்குப் பிறகு பிரதான ஆசாரியரின் சேனைகள் அவர்களிடம் வந்தபோது, மற்ற பதினோரு வரும் ஆண்டவரை தனித்து விட்டு விரைந் தோடினார்கள். (மாற்கு 14:50) சோதனையின் போது வந்த பயத்தை அவர்களால் எதிர்க்கமுடியவில்லை.
மற்றவர்களை காட்டிலும் கொஞ்சம் தைரியமாக இருந்த யோவனும், பேதுருவும், சிறிது நேரத்திற்குப் பிறகு ஆண்டவருக்கு நேரிடும் காரியங்களை காண பிலாத்தின் நீதிமன்றத்திற்கு சென்றார்கள். அங்கு பேதுருவை கிறிஸ்துவின் சீஷர் என்று அடைாயளம் கண்டுபிடிக்கப்பட்ட பின், அவர் இயேசுவை சபிப்பதன் மூலம் மறுதலித்து சோதனையில் விழுந்தார். – மாற்கு 14:68,70,71.
அதே சமயத்தில் நம்முடைய ஆண்டவரும் பிலாத்துவுக்கு முன்பாக சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணி” வெற்றி அடைந்தார். -தீமோத்தேயு 6:13.
அதற்குபின் நம்முடைய ஆண்டவருக்கு சோதனைகள் விரைவாக தொடர்ந்தது. அவருடைய எதிரிகள் அவர் மேல் துப்பி, முட்களால் முடிசூட்டி, “அவர் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்துவானால், அவன் தன்னை தான் இரட்சித்து கொள்ளட்டும்” என்று அவர்கள் அவதூறாக பேசியபோது, அவர்களை அவர் நோயால் அல்லது மரணத்தால் அடித்திருக்க முடியும். ஆனால் அவர் தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல, அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார், அவர் ஜெயித்தார், அவரை துன்புருத்தியவர்களுக்காக ஜெபித்தார். – ஏசாயா 53:7, லூக்கா 23:33- 37. அத்தகைய நன்றியற்ற மனிதர்களின் மீட்பராக நான் இருக்க மாட்டேன் என்றும் அவர் முடிவ செய்திருக்கலாம். அவருடைய எதிரிகளை முறியடிப்பதற்கு, அப்பொழுது அவர் பிதாவிடம் கேட்டிருந்தால் பன்னிரண்டு லேகியோன் தேவதூதர்களின் உதவியைப் பெற்றிருக்கலாம் என்று அவர் உணர்ந்திருந்தாலும் அப்படிப்பட்ட சோதனையை அவர் எதிர்த்தார். குறித்த காலத்தில் சாட்சியமளிக்கும்படி, அவர் அனைவருக்காகவும் மீட்பின் கிரயத்தைக் கொடுத்தார். நம்முடைய ஆண்டவரின் மரணம் அனைத்து சீஷர்களுக்கும் விசுவாசத்தின் ஒரு மிக பெரிய சோதனையாக இருந்தது. அவர்கள் அனைவரும் மனுஷரை பிடிப்பதை விட்டு விட்டு, நேராக தங்கள் பழைய மீன்பிடிக்கும் தொழிலுக்கு திரும்பி விட்டார்கள். – யோவான் 21:3-17. இந்த விசேஷித்த காலத்தில் பவுலும் பிற அப்போஸ்தலர்களும் கூட விசேஷித்த சோதனைகளை மேற்கொண்டனர். அப்போஸ்தலர் 20:16; 21:10,11,27-36 காண்க. கடந்த காலங்களில் இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, தற்போதைய அறுவடை 1874ல் தொடங்கியதிலிருந்து நம்முடைய சொந்த அனுபவத்தைப் பார்க்கும்போதும், ஒவ்வொரு வசந்த காலத்திலும் கர்த்தருடைய ஆடுகளுக்காக விசேஷித்த அக்கரையுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த வசந்த காலமும் இதற்கு விதிவிலக்கல்ல. சோதனைகள் நம்மீது செயல்படும் வரை சோதனையின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை தெளிவாக உணரமுடியாது. ஆனால் அவைகளைப் பற்றி நாம் முன்கூட்டியே அறிந்திருந்தால், அவைகள் சிறிய சோதனைகளாக இருக்கும். ஆகையால் உங்கள் எதிராளியான பிசாசானவர் யாரை விழுங்கலாம் என்று வகை தேடி சுற்றிகொண்டிருப்பதால், எப்பொழுதும் விழித்திருந்து ஜெபியுங்கள். இதுவே பாதுக்காப்பிற்கான ஒரே வழி. உங்கள் துல்லியமான பலவீனங்களை அவன் அறிந்திருக்கிறான். அவற்றை பயன்படுத்த அவன் ஆயத்தமாக இருக்கிறான். நாம் ஜெயிக்கவேண்டுமானால் நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய இருதயங்களில் ஆவியின் கனிகளும், “தேவைப்படும் நேரத்தில் உதவி பெற” தேவனுடைய கிருபாசனமும் தேவை. “சோதனைக்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்.” “என் ஆத்துமாவே உன்னைக் காத்துக்கொள், பத்தாயிரம் எதிரிகள் எழுகிறார்கள், பரிசு பெறுவதில் இருந்து உன்னை ஈர்க்க பாவத்தின் புரவலன்கள் உன்னை கடுமையாக அழுத்துகின்றன.”
நம்முடைய ஆண்டவா மற்றும் அப்போஸ்தலர்களின் விஷயத்தில், கஷ்டமான இருண்ட நேரத்தில் விழித்திருந்து ஜெபிப்பதன் மதிப்பை காண்கிறோம். நம்முடைய ஆண்டவர் சீஷர்களுக்கு காண்பித்த வழியைப் பின்பற்றினார். அவர் கவனித்து, ஜெபித்து, ஒரு ஆசீர்வாதத்தை பெற்று, பெலப்பட்டார், வெற்றியும் அடைந்தார். அவருடைய சீஷர்களோ கவனிக்கவும் இல்லை. ஜெபிக்கவும் இல்லை. சந்தர்ப்பத்தின் தேவைகளை உணரத் தவறிவிட்டார்கள். இதன் விளைவாக அவர்கள் சிதறடிக்கப்பட்டு கலக்கமடைந்தனர். “உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன்” என்று அவர்களின் ஒருவர் அவர்கள் அனைவரையும்விட மிகவும் வலிமையானவர் என்று சிறிது நேரத்திற்கு முன்பு பெருமை பேசினார். அவரது சுற்றுப்புறங்களால் மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார். மேலும் அவர் விழித்திருந்து ஜெபத்தினால் பெற வேண்டிய அந்த பலத்தில் குறைவாக இருந்ததால் அவர் பலவீனப்பட்டு, ஆண்டவரை அவதூறாக மறுதலித்தார்.
கர்த்தருடைய ஜனங்கள் அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் பரிசுத்தமான வாழ்ககையை வாழ முயற்சித்தாலும், “விழித்திருந்து ஜெபியுங்கள்” என்ற நம்முடைய ஆண்டவரின் கட்டளையை புறக்கணித்தால், அவர்கள் விவேகமற்றவர்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் கன்னிகைகளாக, தூய்மையானவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் புத்தி இல்லாதவர்கள், பாவம் மற்றும் எதிராளியை, தனித்து நின்று அவர்கள் வெற்றி பெறுவது நம்பிக்கையற்ற காரியமாகும். நம்முடைய ஆண்டவருக்கே பலம் தேவைப்பட்டால், நிச்சயமாக நமக்கும் தேவை, பலத்த சத்தத்தோடும், கண்ணீரிரோடும் அவர் வேண்டுதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் அதைப் பெற்றார். அவருடைய நாமத்திற்காகவும், ஊழியத்திற்காகவும், எல்லாவற்றையும், சகித்துக்கொள்ளும் நல்ல போர்வீரர்களாக நம்மை பலப்படுத்தக்கூடிய விசுவாசத்தின் முழு உத்திரவாதத்தை தேவன் கொடுப்பதில் மகிழ்ச்சி அடையும் விதத்தை நமக்கு அறிவிக்கிறது. கர்த்தராகிய இயேசுவைப்போலவே தேவனை ஆர்வத்தோடும், ஜெபித்து ஆசீர்வாதத்தை ஆறுதல்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஒரே மாதிரியான பரலோக தூதர் அவர்களிடம் வரமாட்டார். ஆயினும் வேறொரு வகையான பரலோக தூதர் நிச்சயமாக அனுப்பப்படுவார். அப்போஸ்தலர்கள் எவரும் நம் ஆண்டவருக்கு அனுதாபம் காட்டவோ அல்லது அவருக்கு உதவவோ முடியவில்லை. ஆனால் நம்முடைய சிரமமான சோதனைகளில், நம்முடைய சக சீஷர்கள் நம்மேல் அனுதாபப்பட்டு உதவலாம். அல்லது அனுப்பப்பட்ட தூதர் அப்போஸ்தலர்களில் ஒருவராக இருக்கலாம். பல கிருபையான ஊக்குவிக்கும் வார்த்தைகளின் வழியாக, தேவன் அவர்களின் வழியாக நம்மோடே தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால் வலிமை எவ்விதத்தில் வந்தாலும், அது மனிதர்களிடமிருந்தோ, தேவதூதர்களிடமிருந்தோ அல்ல. தேவனுக்கு நாம் மனமகிழ்ச்சியாகவும், அவரால் அங்கீகரிக்கப்படும்படியாகவும். அவரை நேசிப்பவர்களுக்கு அவர் முன்னேற்பாடு செய்துள்ள மிக உன்னதமான, விலைமதிப்பற்ற விஷயங்களை நாம் எதிர்ப்பார்த்து கேட்கும்படியாகவும், வலிமை தேவனிடம் இருந்து வரவேண்டும்.
சொல்லபோனால், இப்போது இந்த முழு உலகத்தையும் பரீட்சிக்கவந்த சோதனையின் காலத்தில் நாமும் இருக்கிறோம். “சோதனையின் காலம்” அல்லது இந்த யுகத்தின் முடிவில் சோதனை என்று நிகழ்காலத்தைக் குறித்து வேதவசனங்கள் குறிப்பிடுகிறது. தங்களை முழுமையாக அர்ப்பணித்த, தேவனுடைய உண்மையான ஜனங்களுக்கு இதுவே கெத்செமனே மணிநேரம். இந்த நேரத்தில் நம்மை சுமக்க அவருடைய பலத்தின்மேல் நம்பிக்கையோடு சார்ந்திருக்கும்படிக்கு, நம்முடைய கர்த்தரைப் போலவே, இந்த காலத்தில், நாம் தேவனுடையவர்கள் என்றும், அவர் நம்முடைய தேவன் என்றும் முழு உறுதிப் பெறுவதற்கு பிதாவின் முகத்தை தேடவேண்டும். “எந்த பூமிக்குரிய மேகமும் உமது அடியேனின் கண்களிலிருந்து உம்மை மறைக்கக்கூடாது” என்று நாம் பாடுவது போல, நாம் உறுதி செய்ய வேண்டிய நேரம் இது, நிச்சயத்து கொள்ளுவோம். “சோதனைக்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்” என்ற நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளை புறக்கணிப்பவர்கள், சோதனையில் விழுவது நிச்சயம். அவர்களின் வீழ்ச்சி கடுமையாக இருக்கும் – ஆனாலும் கூட அவர்கள் பேதுருவைப் போல அதிலிருந்து மீட்கப்பட வேண்டும். அது பலத்த அழுகையுடன் இருக்கும்.
சிலர் ஜெபிப்பார்கள் ஆனால் விழித்திருக்க மாட்டார்கள், சிலர் விழித்திருப்பார்களி ஜெபிக்கமாட்டார்கள். ஆனால் இரண்டையும் ஒன்றிணைக்க நமது ஆண்டவர் கூறிய முறையே பாதுகாப்பானதும், சரியானதுமாக இருக்கிறது. நாம் விழித்திருக்கவேண்டும், மற்றும் உலகம், மாம்சம் மற்றும் சாத்தானின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நாம் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். கர்த்தருடைய சொற்களில் உள்ள அனைத்து ஊக்குவிக்கும் வார்த்தைகளையும், அவைகள் நிறைவேறியதற்கான சான்றுகளையும், அவருடைய பிரசன்னத்தைக் குறிக்கும் அறிகுறிகளையும் மற்றும் மிக அருகில் இருக்கும் யுகத்தின் பெரிய மாற்றத்தையும் நாம் கவனித்திருக்கவேண்டும். விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், அன்பிலும் நம்மை பலப்படுத்தும் எல்லாவற்றையும் நாம் கவனிக்கவேண்டும். இவைகளை நாம் கவனிக்கும்போது இடைவிடாமல் ஜெபிக்கவேண்டும். கர்த்தருடைய ஜனங்களாகிய நாம் ஒன்றுக்கூடி ஜெபிக்கவேண்டும். நம்முடைய வீடுகளில் குடும்பம் குடும்பமாக ஜெபிக்கவேண்டும். தனிமையில் ஜெபிக்கவேண்டும், மறைவாக ஜெபிக்கவேண்டும். நாம் சொல்லும் மற்றும் செய்கிற எல்லாவற்றிலும் ஜெபத்தின் ஆவி இருக்கவேண்டும்: அதாவது, வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் வழிகாட்டுதலுக்காக நம் இருதயங்கள் தொடர்ந்து தேவனிடம் சென்று கொண்டிருக கவேண்டும். மேலும் அவர் ஏற்றுக்கொள்ளும் வகையில், நம்முடைய கைகள் செய்யக்கூடிய யாவையும் நம்முடைய முழு பலத்தோடு செய்யவேண்டும். இவ்வாறு செய்வதினால் நம்முடைய சோதனைகளில் அவர் நம்மை பாதுகாப்பார். இறுதியாக தீயவனிடமிருந்து விடுவிக்கப்பட்டு, நம்முடைய தேவனுடைய இராஜ்யத்தில் ஒரு இடத்தைப் பெறுவோம். சகோதரர்களே. சகோதிரிகளே, “நீங்கள் சோதனைக்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபியுங்கள்” என்ற நம்முடைய ஆண்டவருடைய வார்த்தைகளை மேலும் மேலும் நினைவில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும், நடைமுறைப்படுத்துவோம்.