CD-FAITH-Q-18
1 கொரி 2:9-10
F689(P2) – F692
தேவனுடைய பெயரிலுள்ள அர்த்தத்தின்படி தேவன் இருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். அவர் சுயமாக வாழ்ந்து, முழு வல்லமை, முழு ஞானம், முழு நீதி மற்றும் முழு அன்பு செலுத்தும் நம்முடைய சிருஷ்டிகராக இருக்கிறார். விடாமுயற்சியோடு அவரைத் தேடுபவர்களுக்கு அவர் பரிசளிப்பார் என்று விசுவாசித்தோமானால், நிச்சயமாக அதை பெற்றுக்கொள்வோம். அவருடைய வார்த்தைகளை அறிந்து, புரிந்துகொள்ள ஆவலுள்ளவர்களாக, அவைகளைத் தேடி புரிந்துகொண்டால், அதில் நாம் நம்பிக்கை கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையை அதின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளலாம். இப்படிப்பட்ட விசுவாசத்தின் துவக்கமானது, தெய்வீக இரக்கத்தின் கீழ் கிறிஸ்துவை நோக்கி செல்லும் பொழுது, தேவனிடத்தில் நாம் திரும்பி, மறுபடியும் அவருடைய இரக்கங்களைப் பெற்று அவருடன் ஐக்கியப்படும் புதிய வழியை நமக்கு ஆயத்தப்படுத்தும். இந்த விசுவாசத்தோடு, கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும் பட்சத்தில், நமக்குள் கீழ்ப்படிதல் அதிகரித்து, அதற்குத்தக்கதான ஆசீர்வாதங்கள் நம்மை வந்து சேரும். அப்போது நாம் புது சிருஷ்டிகளாக அங்கீகரிக்கப்படும் காரியங்கள் உறுதிப்படுகிறது. வளர்ச்சியடையக்கூடிய இந்த விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டு, – தேவனுக்குச் சுதந்தரவாளிகளாகவும், இரட்சகரகாகிய கிறிஸ்துவுக்கு உடன்சுதந்திரவாளிகளாகவும் நம்மை மாற்றுகிறது. இதன் விளைவாக பரிசுத்த ஆவியின் மூலம் நாம் ஜெநிப்பிக்கப்பட்டு, அபிஷேகிக்கப்பட்டு, குமாரர்களாக தத்தெடுக்கப்படுகிறோம்.
மேலும், இதன் வளர்ச்சியானது, பரிசுத்த ஸ்தலத்தில் உள்ள ஏழு விளக்குகளிலுள்ள வெளிச்சத்தைக் கண்டு, மகா ஆசாரியனுடைய விசேஷித்த ஊழியத்தை அறிந்துகொள்ள நமக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அதில் உள்ள சமூகத்தப்பம், தூபப்பீடத்தின் நற்சுகந்தம் மற்றும் திரைக்கு அப்பால் உள்ள கிருபாசனம் நம்முடைய ஆண்டவராம் இயேசுவின் ஊழிய முறைமைகளை நமக்குக் காட்டுகிறது. கீழ்ப்படிதலோடுகூடிய விசுவாசமானது படிப்படியாக தேவனுடைய இரக்கங்களையும், ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு, தெய்வீக வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டது போல உறுதிக்கு மேல் உறுதியடைந்து, தெளிவுக்கு மேல் தெளிவடைந்து, புதிய சிந்தைக்கு அடிப்படையான பகுதியாக அமைகிறது. மாம்ச சிந்தையிலிருக்கும் நிலையில் நாம் ஒருபோதும், வளர்ச்சியடைந்த இந்நிலையை புரிந்துகொள்ள முடியாது என்று அப்போஸ்தலர் தெளிவாக அறிவிக்கிறார் – “எழுதியிருக்கிறபடி – தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண்காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.” – 1கொரி 2:9
வாக்குத்தத்தத்தின் வார்த்தைகளின் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் செயல் முறைகளின் மூலமாகவும், பரலோகக் காரியங்களில் உள்ள அநேக விலைமதிப்பற்றவைகளையும், முதலாம் உயிர்த்தெழுதலில் அடையும் மகிமைகளையும் காணலாம். அதற்குப்பின் – இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவது – பூமியில் உள்ள முழு குடும்பங்களுக்கும் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருவதற்கான நீதியுள்ள அரசாட்சி – பாவம் மற்றும் தேவனுடைய மகிமைக்கும், அவருடைய தெய்வீகத் திட்டமாகிய அன்புக்கும் இசைவாயிராத தனிப்பட்ட பாவிகளின் முற்றிலுமான அழிவு – போன்றவைகள் நடைபெறும். புது சிருஷ்டிகள் இவையனைத்தையும் விசுவாசத்தின் கண்களினால் காண்கிறார்கள். சராசரி மனுஷருக்கு தெளிவாகவும் விளக்கமாகவும் புரிந்துகொள்ள முடியாத காரியங்களை மிகத் தெளிவாக இவர்கள் கண்டு அறிந்துகொள்வார்கள் என்று அப்போஸ்தலர் உறுதியளிக்கிறார் – 1கொரி 2:9,10
பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசமானது, இதுவரைக்கும் புது சிருஷ்டிகளின் இன்றைய ஆசீர்வாதங்களைக் காணக்கூடியதாக இராமல், ஒவ்வொரு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் வரக்கூடிய மகிமையைக் குறித்தே இருக்கிறது. உண்மையில், அப்போஸ்தலர் விவரிப்பதுப்போல நம்முடைய அனைத்து சந்தோஷங்களும், நம்பிக்கைகளும் இதன் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” இப்படியாக காணப்படாதவைகளைக் குறித்த தேவனுடைய வார்த்தைகளை நாம் விசுவாசிப்பதின் நிமித்தமாக அவைகளை நம்முடைய சிந்தையில் கண்டது போலத் தோன்றுகிறது. ஏனெனில், காணக்கூடியவைகள் அநித்தியமானது, காணக்கூடாதவைகள் நித்தியமானது என்று மிகத் தெளிவாக அப்போஸ்தலர் குறிப்பிடுகிறார். ஆகவே விசுவாசத்தின் கண்களின் மூலமாகக் காணக்கூடியவைகள் மட்டுமே நித்தியமானது.
வரக்கூடிய ஆசீர்வாதங்களைப்பெற, இன்று விசுவாசத்தின் மூலம், பரிசுத்த ஆவியினால் நாம் பெற்று, தக்கவைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் எவ்வளவு அவசியமானது என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபும் குறிப்பிடுகிறார் – “ஒருவர் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” மேலும் – “சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்” என்று அடுத்த வசனத்தில் சொல்லுகிறார். ஏனெனில், சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான் என்றும், அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினைத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் என்று யாக்கோபு மிகத் தெளிவாகக் கூறுகிறார் – யாக்கோபு 5:8 ஆகவே விசுவாசமில்லாமல், நாம் எதையும் மேற்கொள்ளவோ, சமாளிக்கவோ முடியாது என்று யாக்கோபு நமக்கு தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். ஆகவே ஒவ்வொரு தேவ ஜனங்களும் விசுவாசத்தில் வளர்ச்சியடைவதற்கு, அப்போஸ்தலர்கள் செய்தது போல, தேவனிடத்தில் ஜெபிக்கவேண்டும் என்று வேத வசனங்கள் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இந்த ஜெபம் கேட்கப்படும் விதத்தில் நாம் ஜெபிக்கவேண்டும். நம்முடைய ஜெபங்கள் கபடற்றதாக இருந்தால், நிச்சயமாக நாம் தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் தேடி, அவைகளுக்குக் கீழ்ப்படிபவர்களாகவும், அவருடைய பணியில் சந்தோஷப்படுபவர்களாகவும், சகல பரிசுத்த ஆவியின் கிருபைகளை அணிந்து கொள்ளக்கூடியவர்களாகவும் இருப்போம். இப்படியிருக்கும் பட்சத்தில் நாம் உறுதியான விசுவாசத்தைப் பெற்றிருப்போம். அந்த விசுவாசத்தின் மேல் முழு நம்பிக்கையுள்ளவராக இருப்போம். இவைகளைச் செய்தால் நாம் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. இவ்விதமாய், குறித்தக் காலத்தில் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும் – 11பேதுரு 1:10,11
F686(P3)
நாம் இருக்கும் எந்தச் சூழ்நிலையிலும், விசுவாசத்தின் வழியாக மகா பரிசுத்தமான விசுவாசத்தைப் பெற்று, தேவனுடைய பிரசன்னத்தில் பிரவேசிக்க, அவருடைய கிருபாசனத்தண்டையில் சேர்ந்து, கிருபை பெற்று, தேவைப்படும் நேரத்தில் உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.