CD-EVILSPEAK-Q-20
R2444 (col.1p4 through col.2p1): –
மற்றும் சில நல்ல கிறிஸ்தவர்கள், இந்தக் கேள்வியை தவிர்த்து தாங்கள் உண்மையை மட்டுமே பேசுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு, பொதுவான இந்தத் தவறுகளில் தங்களைத் தாங்களே நியாயப்படுத்திக் கொள்கிறார்கள். வெட்டிப் பேச்சை பேச விரும்புவோர், தங்களுடைய நியாயத்தீர்ப்பை தாங்களே திசை திருப்பி, அவர்கள் அறியாததும், அந்த விஷயத்தில் எந்த விதமான அறிவும் இல்லாமலே, அவைகளை உண்மை என்று ஏற்றுக் கொள்கிறார்கள். அல்லது அந்தக் காரியங்களை உண்மை என்று ஏற்றுக் கொண்டபின் அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தோடு, அவர்கள் இது வரைக்கும் கேட்ட காரியங்கள் உண்மை என்று நிரூபிக்கப்படாவிட்டால், இவர்கள் பேசிய காரியங்கள் பொய்யாகிவிடும் என்று எண்ணி, அதை சரி செய்ய முயற்சிப்பார்கள். இயல்பான பெருமை கொண்ட மனது, உண்மைகளை விசுவாசிக்க மறுத்துவிட்டு, பேசின பொய்களை உண்மை என்று நிரூபிக்க முயற்சிக்கும். இப்படியாக ஒரு தீமை மற்றொரு தீமைக்கு வழி வகுக்கும்.
இருந்தபோதிலும் – “உண்மை என்று எனக்கு தெரிந்தால் மட்டுமே, நான் அதை பேசுவேன். நானே சொந்தமாக கவனித்து, என்னுடைய சொந்த அறிவின்படி அது உண்மை என்று விளங்கினால் மட்டுமே நான் அதைப்பற்றி பேசுவேன் என்று சொல்லுவார்கள். ஒரு வேளை அதைப் பற்றி நான் கேள்வி பட்டிருந்தால், நான் கேட்ட காரியத்தை மட்டும் சொல்வேன். இதை உண்மை என்று நான் அறிவிக்க மாட்டேன். இப்படியாக, நான் மற்றவர்களை பற்றி எந்த விதமான தீமைகளை பேசுவதில்லை என்று உறுதியளிப்பேன் என்று சிலர் சொல்லலாம். ஒழுக்ககேடுகளுக்கும் பின்னிருக்கும் நல்மனசாட்சிக்கு – உண்மையை பேசுவதே நன்மை என்றும் சத்தியத்தை பேசுவது வெட்டிப்பேச்சு இல்லை என்றும் தேவன் பொருள்படுத்துகிறார் என்று நல் மனசாட்சிக்கு அறிவிக்கிறது. ஆனால் வீண் பேச்சுக்களையும், தீமையாக பேசுவதும், மாம்சத்தின் கிரியையாக இருப்பதால் தவறானவைகளை பேசுவதே பாவம் என்று தேவன் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இரு மிகப் பெரிய தவறு – ஒரு காரியம் உண்மையானாலும் சரி, பொய்யானாலும் சரி, வெட்டிப்பேச்சு – வெட்டி பேச்சு தான். இதை தேவனுடைய சட்டம் மட்டும் அல்ல நாகரீகமுள்ள மனிதனுடைய சட்டமும் இதை வலியுறுத்துகிறது. உண்மையில், மனித சட்டத்தில் வீண் பேச்சுக்களை பேசினால் என்று வழக்கு தொடுக்கப்பட்டால், அதை உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், அதனால் ஏற்பட்ட மன கஷ்டங்களுக்கு அவர்கள் நியாயமான தண்டனைகளைச் சட்டப் பூர்வமாக பெறுவார்கள். ஆகவே மற்றொருவரை காயப்படுத்தும்படியாக அல்லது துக்கப்படுத்தும்படி பேசக்கூடிய எல்லா அவதூறான பேச்சுக்கள், புறங்கூறுதலாகவோ இருக்கிறது. ஆகவே உண்மையோ, பொய்யோ, மனிதர்களை காயப்படுத்தக்கூடிய எல்லா வார்த்தைகளும் தேவனுடைய சட்டத்தில் மட்டும் அல்ல, மனிதனுடைய சட்டத்திலும் தவறு என்று ஒத்துக்கொள்ளப்படுகிறது.