நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?

ஜெபம்

01. ஜெபம் என்றால் என்ன?
02. ஜெபத்தின் சலுகை மற்றும் வல்லமை
03. ஜெபத்தின் பொருள் என்ன?
04. ஜெயம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?
05. ஜெபத்தில் உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?
06. நாம் யாரிடம், யார் வழியாக ஜெபிக்க வேண்டும்?
07. யாரிடத்தில் நாம் ஜெபிக்க வேண்டும்?
08. நாம் எந்த முறையில் தேவனிடத்தில் ஜெபத்தில் அனுகவேண்டும்.
09. ஜெபத்தில் நம்முடைய நிலைமை என்னவாக இருக்க வேண்டும்?
10. தேவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஜெபத்திற்கான நிபந்தனைகள் என்ன?
11. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வதற்கும் வெறும் உதடுகளினால் தொழுது கொள்கிறதற்கும் உள்ள வேறுபாட்டை எப்படி காண்பிப்பது?
12. நம்முடைய விண்ணப்பங்கள் தேவைப்படும் நேரத்தின் உதவிக்காக ஏன் இருக்க வேண்டும்?
13. நாம் ஜெபிப்பதற்காக தேவனிடத்தில் அடிக்கடி அணுகலாமா அல்லது அவரது கவனத்திற்குகொண்டு செல்ல அற்பமாக காரியங்கள் ஏதாகிலும் உண்டா?
14. நம்முடைய பரலோக தந்தை தேவையானவைகளை நாம் விண்ணப்பிக்காமல் ஏன் கொடுப்பதில்லை?
15. நாம் "தகாதவிதமாய்" விண்ணப்பம் செய்யாதபடிக்கும், நம்முடைய எல்லா விண்ணப்பங்களும் பதில் அளிக்கப்படுவதற்கும் நாம் எவ்வாறு சுற்றுக் கொள்ளலாம்?
16. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் ஏன் தாமாக பதில் அளிக்கிறார்?
17. நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்க, நாம் அவரோடுக்கூட ஒத்துழைக்கும்படிக்கு முயற்சிக்க வேண்டுமா?
18. நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
19. நாம் எதற்காக ஜெபிக்கக் கூடாது?
20. ஜெபம் பாவிகள் மனமாற்றத்திற்காக ஜெபிப்பது சரியானதா?
21. சுயநலமான ஜெபங்களின் கட்டணம் என்ன?
22. ஜெபத்தில் வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என்பதற்கான பொருள் என்ன?
23. நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது எப்படி?
24. "இடைவிடாமல் ஜெபம் செய்வதன் அர்த்தம் என்ன?
25. நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
26. ஜெபம் நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்பணிக்கப்பட்ட நபர்கள், ஜெபத்தில் என்ன சலுகைகளைப் (ஒப்பிடக்கூடிய) பெறுகிறார்கள்?
27. அர்ப்பணிக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள், ஜெபத்தின் என்ன சலுகைகளை அனுபவிக்கிறார்கள்?
28. ஜெபத்தின் மூலம் ஒருவருக்கொருவர் நலன்களை நாம் எவ்வாறு கவனிக்க வேண்டும்?
29. விசுவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தொடர்பு என்ன?
30. ஜெபத்திற்கும் நன்றி செலுத்துவதற்கும் உள்ள தொடர்பு என்ன?
31. உபவாசத்திற்கும் ஜெபத்திற்குமுள்ள தொடர்பு என்ன?
32. அந்தரங்க ஜெபத்தின் மதிப்பு என்ன?
33. குடும்ப ஜெபத்தின் சிறப்பு நன்மைகள் யாவை?
34. சபையில் ஜெபத்தின் மதிப்பு என்ன?
35. வெளிப்படையான பொது ஜெபங்களுக்கு அங்கீகாரம் உள்ளதா?
36. தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் துவங்கும்போதும், முடிக்கம் போதும், வெளியரங்கமாய் ஜெபிப்பதன் அவசியம் என்ன?
37. ஜெயம் மற்றும் சாட்சி கூட்டங்களை பொறுத்தவரையில் சில நல்ல ஆலோசனைகள் என்னென்ன?
38. பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு பெறுவதற்கு ஜெபிப்பது சரியானதா?
39. அர்ப்பணித்தவர்கள் உடல் ரீதியான சிகிச்சைக்கு ஜெபிக்கலாமா?
40. ஆவிக்குரிய நோயைக் குணப்படுத்துவதிலும் நம்முடைய சிலாக்கியம் என்ன?
41. நவீன முறையில் விசுவாசத்தை குணப்படுத்தும் மற்றும் அற்புதங்கள் போன்றவற்றை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
42. யாக்கோபு 5:14-16 க்கு எவ்வாறு விளக்கம் அளிப்பது?
43. ஜெபத்தில் நம்முடைய கர்த்தருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்?
44. யோவன் 17:15-26ல் உள்ள நம்முடைய கர்த்தருடைய வேண்டுகோளின் ஆனால் தன்மை என்ன?
45. தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்த மாதிரி ஜெபத்தில் உள்ள பாடம் என்ன?
46. ஜெபம்நம்முடைய விண்ணப்பங்களின் சிறப்பு தன்மை என்னவாக இருக்க வேண்டும்?
47. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
48. ஜெயத்தின் ஆவி என்றால் என்ன?
49. ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காக பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்பதை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்?
50. ஆயிர வருட ஆட்சியில் ஜெபத்திற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது?

அன்பு

01. அன்பு என்றால் என்ன?
03. பின்காட்சித் தோற்றம் (spectrum) பற்றிய விளக்கம், அன்பை புரிந்துக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
04. இயல்பான அல்லது மனித அன்புக்கும், ஆவிக்குரிய அல்லது தெய்வீக அன்பிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
05. கடமை அன்புக்கும் (பிலியோ - phileo) மற்றும் தன்னலமற்ற அல்லது தெய்வீக அன்புக்கும் (அகாபே - agape) இடையில் உள்ள வித்தியாசம் என்ன?
06. அன்பின் ஆவியின் மூன்று விதமான (three-fold) வெளிப்பாடு என்ன?
07. உண்மையான மற்றும் பொய்யான அன்பை நாம் எவ்வாறு வேறுபடுத்தலாம்?
08. இந்த கிருபையின் (அன்பின்) முக்கியத்துவம் என்ன?
09. அன்பு எப்படி அடையப்படுகிறது?
10. அன்பைப் பெற ஒரு “வலுக்கட்டாயமான போர்" ஏன் தேவைப்படுகிறது?
11. ஆவியின் ஆரம்பகால "வரங்களுக்கும்" மற்றும் அன்பின் ஆவிக்கும் உள்ள ஒப்பீட்டின் முக்கியத்துவம் என்ன?
12. எமது அனைத்து செயல்களுக்கும், அன்பு ஒரு உந்துவிசையாக ஏன் இருக்க வேண்டும்.?
13. அன்பு மற்றும் இருதயத்தின் தூய்மை ஆகியவற்றிற்கும் இடையேயான உறவு என்ன, மற்றும் நாம் எப்படி நம்முடைய இருதயங்களை தூய்மைப்படுத்துவது.?
14. புது சிருஷ்டியாக நாம் ஜெநிப்பிக்கப் படுதலின் முத்திரையாக அல்லது ஆதாரமாக அன்பு எப்படி இருக்கிறது?
15. அன்பு ஏன் "ஒரு அடையாளமாக" அழைக்கப்படுகிறது?
16. கிறிஸ்தவ ஓட்டத்தில் கடக்க வேண்டிய நான்கு quarter-marks என்ன?
17. திருச்சபையின் அனுபவம் அதனுடைய "முன்னோடி"யிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
18. "அரைக்கச்சை” ஆக இருக்கும் அன்பின் முக்கியத்துவம் என்ன?
19. இறுதியாக அன்பு "பிரமாணத்தின் முடிவாக" எப்படி இருக்கிறது?
20. அன்பு "நியாயப்பிரமாணத்தை நிறை வேற்றுவது” எப்படி?
21. அன்பானது எவ்வாறு "புது சிருஷ்டியின் நியாயப்பிரமாணம்" - ஆக இருக்கும்?
22. அன்பு “சுயாதீனத்தின் பரிபூரண பிரமாணம்” என்று ஏன் அழைக்கப்படுகிறது?
23. "ஆவியின் கனிகள்" எவ்வாறு அன்பின் வெவ்வேறு வெளிப்பாடுகளாக உள்ளது?
24. பரிசுத்த ஆவியின் உண்மையான கனிகளை நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம்?
25. "பக்தி வைராக்கியம் அன்பின் அளவாக" எப்படி இருக்கிறது?
26. வைராக்கியமான அன்பின் முக்கியத்துவம் என்ன, அதை நாம் எப்படி வளர்ப்பது?
27. அன்பான கீழ்ப்படிதலை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்?
28. பூரண அன்பு பாவிகள் மற்றும் நம்முடைய எதிரிகளையும் உள்ளடக்க வேண்டுமா? மற்றும் நாம் வெறுப்பது பாவத்தை, பாவிகளை அல்ல என்பதை நாம் எவ்வாறு தீர்மானிக்லாம்?
29. அன்புக்கும் நீதிக்கும் இடையேயான உறவு என்ன?
30. அன்பு மற்றும் இரக்கத்திற்கும் இடையில் உள்ள உறவு என்ன?
31. அன்பு மற்றும் பயத்திற்கும் இடையிலான உறவு என்ன?
32. அன்பு மற்றும் அறிவுக்கு இடையிலான தொடர்பு என்ன?
33. கர்த்தர் நம்மை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த ஆதாரம் என்ன?
34. தேவனுடைய நேச குமாரனின் சாயலுக்கு நாம் எப்படி மாறலாம்?
35. நாம் எவ்வாறு தேவனுடைய அன்பை நமக்குள் காத்துக்கொள்ள வேண்டும்?
36. நாம் எவ்வாறு நம்மை ஆராய்ந்து, விமர்சனத்தின் அன்பற்ற ஆவியை மற்றும் கடுமையான நியாயத்தீர்ப்பை வெல்லுவது எப்படி?
37. தீய எண்ணங்களை அன்பு எப்படி கையாள்வது?
38. "ஒருவருக்கொருவர் அன்பு கூருங்கள்" என்ற கட்டளையை நாம் எப்படி நிறை வேற்றுவது?
39. அன்பின் வெவ்வேறு பண்பினை வெளிப்படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுமா?
40. "ஒருவரையொருவர் அன்பினால்" எவ்வாறு ஏவப்படுவது?
41. நாம் எவ்வாறு பொன்னான பிரமாணத்தை உபயோகிக்க வேண்டும்?
42. போராடும் குணத்தை அன்பு எவ்வாறு கையாளலாம்?
43. அன்பின் ஆவி நாவை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும்?
44. சகல மனிதர்களிடமும் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
45. "உலகத்தில் அன்புக்கூராதிருங்கள்'' என்ற எச்சரிக்கையின் முக்கியத்துவம் என்ன?
46. நம்முடைய "இருதயம்' நம்மை ஏமாற்றாதபடி நாம் எவ்வாறு நம்மை ஆராய வேண்டும்?
47. குறிப்பான அடையாளத்தை அடைந்த பின்னும், செயல்பாடுகள் இன்னும் அத்தியா வசியமா?
48. ஒரு மூப்பரின் தலைமையான பண்பு என்னவாக இருக்க வேண்டும்?
49. நாம் ''சீயோனில் ஆறுதல்படுத்துகிறவர்களாக" இருப்பதற்கு அன்பு நமக்கு எப்படி உதவுகிறது?
50. அன்பு “அறுவடையின் பரிட்சைகளில்" ஒன்றாக இருப்பது ஏன்?
51. நம் அன்பு மிகுந்த அளவில் பரி சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுமா?
52. அப்போஸ்தலர் ஏன் அன்பைக் காட்டிலும் பொறுமையுள்ள சகிப்புத்தன்மையைக் உயர்நிலையில் வைக்கிறார்?
53. ஆயிர வருட யுகத்தில் அன்பின் பிரமாணம் எவ்வாறு இயங்கும்?
54. தெய்வீக குடும்பத்தின் ஒருமைப்பாடு என்ன?
55. அன்பாகவே இருப்பவர் மனுஷனுக்காக அவரது அன்பின் மிக பெரிய வெளிப்பாடாக எதை காண்பித்தார்?
56. “பிதாவின் அன்பில் நிலைத்திருப்பதற்கு," இயேசுவின் வாழ்க்கையை குறித்த சிந்தனை நமக்கு எப்படி உதவியாக இருக்க வேண்டும்?

அறிவு

01. அறிவின் முக்கியத்துவம் என்ன?
02. அறிவை பெறக்கூடிய நான்கு வழிகள் என்ன?
03. பாவம் செய்வதற்கு முன் தீமையின் அறிவை ஆதாம் எந்த வழிகளில் பெற்றிருந்தார்?
04. உண்மையான ஞானத்தின் ஊற்று எங்குள்ளது?
05. அறிவு “மனிதனுக்கு தேவன் கொடுத்த முதல் பரிசாக” இருப்பது எப்படி?
06. விசுவாசத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
07. “தேவனுடைய ஆழமான காரியங்களை” அறிந்து கொள்வதற்கு தகுதி பெற்றவர்கள் யார்?
08. இரட்சிப்படைய அறிவு தேவையா?
09. தேவனைப்பற்றி அறிவதற்கும், தேவனை அறிவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
10. அறிவு பொறுப்புகளை அதிகரிக்கிறதா?
11. ஒருவருக்கொருவர் அறிவில் வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்ய வேண்டும் அல்லது நம்மேல் விழுந்த கடமை என்ன?
12. கிறிஸ்துவின் சரீர அங்கங்களாக பயிற்சி பெறுவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?
13. தேவனுடைய சித்தத்தின் அறிவுக்கு கீழ்ப்படிவதின் மூலம் இக்காலத்தில் நாம் சுதந்தரித்துக்கொள்வது என்ன?
14. சத்தியத்தை அறியக்கூடிய அறிவு, மூடநம்பிக்கைகளின் பயங்களின் மேல் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
15. அறிவில் நாம் எப்படி வளர்ச்சி அடைவது?
16. “இரட்சிப்பின் தலைச்சீரா” என்பதன் பொருள் அல்லது முக்கியத்துவம் என்ன? கடந்த காலத்தைவிட இப்போது இது எந்த அளவுக்கு அவசியம்?
17. நாம் அறிவை பெறுவதற்கு அதிகமான கவனம் செலுத்தலாமா?
18. அன்புக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
19. நீதிமானாக்கப்பட்ட விசுவாசத்தை முந்திக்கொள்ளும் அறிவுக்கும், நம்முடைய விசுவாசத்திற்கு சேர்க்கப்படக்கூடிய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
20. அறிவின் வழியாக “கிருபையும் சமாதானமும்” எவ்வாறாக பெருகும்?
21. அறிவுக்கும் ஜெபத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
22. அனைத்து விதமான அறிவும் நமக்கு நன்மையை வருவிக்குமா?
23. “ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது”? இந்த வசனத்தை நாம் எப்படி விவரிப்பது?
24. ஏசாயா 53:11ம் வசனத்தின் விளக்கம் கூறுக
25. இனி வரக்கூடிய காலத்தை குறித்த அறிவை நாம் பெறுவதற்கு எதிர்பார்க்க வேண்டுமா?
26. தானி 12:4ம் வசனம் நிறைவடைந்து கொண்டிருக்கிறதற்கான ஆதாரங்கள் என்னென்ன?
27. “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருப்பது போல, பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் மற்றும் சத்தியத்தை அறிகிற அறிவினால் அனைவரும் நிரப்பப்படுவார்கள்?” இவைகள் எப்போது சம்பவிக்கும்?
28. ஆயிர வருட ஆட்சியில், அறிவுக்கும் விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்னவாக இருக்கும்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

CD-PRAYER-Q-25

நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?

How should we understand, “Ye shall ask what ye will, and it shall be done unto you”?

யோவான் 15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

R1998 [col. 2:6 sub head through next page] 

நீங்கள் கேட்டுகொள்வது எதுவோ” (#25 கேள்வி காண்க)

ஆனால் மாற்கு 16: 17,18 ன் இந்த சேர்க்கப்பட்ட வாக்கியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, மற்றொன்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஆரம்பகால சபை “வரங்களை” பெற்றதாக அனைவரும் கூறுகின்றனர், நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பது தொடர்பான நம்முடைய ஆண்டவரின் வாக்குறுதிகள் முழுமையாக எல்லா காரியங்களையும் உள்ளடக்கியிருக்கிறது அல்லவா மேலும் இந்த முழு யுகத்தில், நோயுற்றவர்களை குணப்படுத்துவதையும், மலைகளை நகர்த்துவதையும் கூட சாத்தியமாக்குகிறது அல்லவா? மேலும் கடந்த காலங்களில் இவை அதிகம் காணப்படவில்லை என்பது நம்பிக்கையின்மை காரணமாகிறதா?

மற்றும் விசுவாசம் அதிகரிப்பினால் அல்ல, மாறாக ஆயிரவருட ஆட்சி தொடங்குவதால், நோயுற்றவர்களின் குணப்படுத்துதல் இப்போது அடிக்கடி ஏற்படுகிறதா?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் நாம் இல்லை என்று பதில் அளிக்கிறோம். ஜெபத்தில் நம்முடைய சிறப்புரிமைகளைப் பற்றி மிக பெரிய தவறான புரிதல் நிலவுகிறது. எனவே தினசரி வழங்கப்படும் பல ஆயிரக்கணக்கான ஜெபங்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை.

நாம் எதைக் கேட்கலாம் மற்றும் யார் கேட்கலாம் என்பதை குறித்த இந்த தவறான புரிதலே காரணம், மாறாக நம்முடைய ஆண்டவருடைய பங்கில் அவர் அளித்த வாக்குறுதியின் எந்தவொரு விசுவாச குறைவினாலோ அல்ல. “நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்ற வாக்கியம் சில நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய வாக்கியத்தில் காணப்படுகிறது : “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்..” இந்த நிபந்தனைகள் பிரமாதமாக விரிவாக்கம் பண்ணப்பட்டுள்ளது: எவருடைய விருப்பங்கள், கிறிஸ்து இயேசுவின் விருப்பத்திற்குள் புதைக்கப்படுகிறதோ அல்லது மூழ்கடிக்கப்படுகிறதோ இப்படியாக எனக்குள் இருக்கும் விசுவாசிகளே விண்ணப்பிக்கலாம் என்று காட்டுகின்றன, அது மட்டும் அல்ல “என்னில் நிலைத்திருக்கும் வரை” கேட்கக்கூடிய சிறப்புரிமையை பெற்றிருக்கிறீர்கள், ஏனெனில் ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான் (யோவான் 15:6) மேலும் அவருடைய விண்ணப்பங்களுக்கு பதில் அளிக்கப்படும் என்ற வாக்குத்தத்தத்திற்கு இனி அவருக்கு பங்கில்லை. இந்த வரம்புகள் இந்த வாக்குத்தத்தங்களில் உள்ள அனைத்து பங்குகளிலிருந்தும் துண்டித்து விடுகிறது. நாம் தொடர்ந்து ஆராய்ந்து பார்க்கும் போது. கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும் வகுப்பார் ஏறெடுக்கும் பல ஜெபங்கள் கூட துண்டிக்கப்படுவதற்கான, மேலும் சில வரம்புகளை நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளில் காண்கிறோம். நம்முடைய ஆண்டவர் சொன்ன இரண்டாவது நிபந்தனையை நாம் குறிப்பிடுகிறோம்.

அவர்கள் என்ன விரும்புவார்கள், யார் கேட்பது என்பதை விவரிக்கிறது அதாவது “என் வார்த்தைகள் உங்களுக்குள் நிலைத்திருந்தால்” நாம் அதை எழுதவேண்டும். தேவனுடைய பிள்ளைகள் என்று கூறப்படுகிறவர்கள் மத்தியில், வெகு சிலரே முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டு, அவருக்குள் நிலைத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். இவர்களிடம் தேவனுடைய வார்த்தை மிகுதியாக நிலைத்திருக்கிறது.

இந்த கடைசி விவரக்குறிப்பு அல்லது வரம்பின் முக்கியத்துவம் இதுதான்; எதையும் தேவனிடம் கேட்பதற்கு முன், அவருடைய சர்வ ஞானத்தை உணர வேண்டும். மேலும் ஒரு பூரணமான மற்றும் ஒழுங்கான திட்டத்தின்படி வரிசைப்படுத்தி, பொது விவகாரங்களை இயக்குகிறார் என்பதையும் நாம் உணரவேண்டும். மேலும் சிருஷ்டிப்பை ஆளும்படிக்கு. தேவன் நமக்கு அதன் மீது கட்டுபாட்டை கொடுத்தால் அவருடைய யுகங்களைப் பற்றிய தேவ ஏற்பாட்டில், நம்முடைய சொந்த அற்பமான நிலையையும். அத்தகைய ஞானத்தின் பற்றாக்குறையையும், சுற்றுப்புறங்களைப் பற்றிய புரிதலையும் ….நாம் உணரவேண்டும். வெறும் “குழந்தைகளாக” இல்லாத தேவனுடைய உண்மையான பிள்ளைகள் அனைவருமே இதை உணர்ந்துகொள்கிறார்கள். “நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்பதை தேவன் எந்தவிதமான வரம்பின்றி சொன்னாலும், இந்த கடுமையான பொறுப்பிலிருந்து வேகமானவர்கள் தங்களை கருக்கிக்கொண்டு. “ஓ. ஆண்டவரே அப்படி அல்ல”.

“இப்படிப்பட்ட விஷயங்களுக்கு நான் துணியமாட்டேன்” என்பார்கள். ஆண்டவருடைய வாக்குத்தத்தத்தைப் பொறுத்தவரை, நமக்கு விசுவாசம் இருந்தால், ஒரு மலையைப் பார்த்து பெயர்ந்து போகும்படி கட்டளையிட்டால் அது நமக்கு கீழ்ப்படியும். இதற்கான காரணம் பின்வருமாறு மற்ற வாக்குத்தத்தங்களைப் போலவே, அவரிடத்தில் நிலைத்திருத்திருப்பவர்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளில் நிலைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. மேலும் இது ஒரு எடுத்துக்காட்டாக வழங்கப்பட்டது: ஒரு மலையை அகற்றுவதற்கான அவசியமான அளவுக்கு அவசர நிலை ஏற்பட்டால், அது சொல்லர்த்தமாகவோ அல்லது உருவகமாகவோ இருந்தால், அது தேவனுடைய சித்தம் என்று நாம் உறுதியாக நம்பினால், நாம் கேட்டுகொள்வதைப் பெறலாம்.

ஆனால் மலைகள், ஏரிகள். கடல்கள் மற்றும் மேகங்கள், மற்றும் மழை மற்றும் சூரிய ஒளி ஆகியவைகளைப் பற்றி கிறிஸ்துவின் நாமத்தினால் பரலோகத்தை நோக்கி ஏறெடுக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டால். அவைகள் எவ்வாறு ஒன்றொடு ஒன்று தலையிடாமல் செயல்படும் என்று நாம் ஆழமாக ஆலோசிக்க வேண்டாம். அத்தகைய ஜெபங்களுக்கு பதில் அளிப்பதற்கு தேவன் தன்னை ஒப்புக்கொடுக்காமல், அவற்றைப் புறக்கணித்து, உலகத்தோற்றத்திற்கு முன்னே தீர்மாணிக்கப்பட்ட தனது சொந்த திட்டத்தை அவர் படிப்படியாக உருவாக்கி வருகிறார். மேலும் அவருடைய திட்டம் என்னவென்று தெரிந்துகொள்ள, அவருடைய வார்த்தையைத் தேடாதவர்களின் ஜெபங்களுக்கு அவர் செவிகொடுப்பதில்லை என்று அவர் நமக்கு உறுதியளிக்கிறார். ஆயினும்கூட “அவருடைய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும்.” ஆனால் அவருடைய பிள்ளைகளில் வெகு சிலரே மனுஷனுடைய திட்டங்கள். ஒப்புதல் வாக்குமுலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, ஆலோசனைகள் மற்றும் மனித தரநிலைகளுக்கு பதிலாக. அவருடைய வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுத்து. அவைகளிலிருந்து அவருடைய திட்டத்தை கற்றுக்கொள்ள தேடுகிறவர்கள், அவருடைய திட்டங்களையும், யோசனைகளையும் நிறைவேறும்படி அவரிடம் ஜெபிப்பார்கள். ஆயினும்கூட இறுதியில், தேவனுடைய வார்த்தை வெறுமையாக அவரிடம் திரும்பி வராது. அவர் நினைத்தை நிறைவேற்றி அனுப்பப்பட்ட காரியத்தை செழிப்பாக முடித்து திரும்பும் -ஏசாயா 55:11.

இல்லை, தேவனானவருக்கே நன்றி செலுத்துவோமாக. அவர் தனது திட்டத்தை, ஆவிக்குரிய காரியங்களிலும் கூட, தங்களது தப்பெண்ணத்தினால் – பார்வையிழந்துப்போன மற்றும் வகுப்புவாதப் பிள்ளைகளின் ஜெபங்களுக்கு உட்படுத்தவில்லை. இல்லையென்றால் ஒவ்வொருவரும் உலகம் முழுவதையும் தனது சொந்த இலட்சிய கொள்கைக்காக மாற்றியமைக்க விரும்பியிருப்பார்கள். அது மெத்தடிசம், லூத்தரனிசம், ப்ரீபிஸ்டீரியனிசம் பிராமணியம் போன்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மேலும் பல்வேறு தப்பறைகள் செழித்து வளர்ந்திருக்கும். அதே நேரத்தில் சியோனின் காவற்கோபுரம் மற்றும் ஆயிரமாண்டின் விடியல் (Zion’s Watch tower and Millennial Dawn) ஆகியன நீண்ட காலத்திற்கு முன்பே நிதி ரீதியாக சிதைந்திருக்கும். ஆமாம், எல்லா ஜெபங்களுக்கும் அவர் பதிலளிக்காமல் இருப்பதற்கு நாம் தேவானவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோமாக.

தேவன் நம்முடைய விண்ணப்பங்களுக்கு பதில் அளிப்பார் என்ற அவருடைய வாக்குத்தத்தத்தைப் பற்றி நம்முடைய மீட்பர் முன்வைத்த நெருங்கிய மற்றும் தேடக்கூடிய வரம்புகளுக்கான குறிப்பான ஒரு விசேஷித்த காரணத்தை நாம் காணலாம். அவருடைய சொற்களை நாம் படித்து. அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது நமக்கு தோன்றுவது இதுவே-

நீங்கள் என்னில் நிலைத்திருந்தால், நான் பிதாவின் அன்பில் நிலைத்திருப்பது போல. என் விருப்பத்திற்கும் திட்டத்திற்கும் முற்றிலும் உட்பட்டு. தன் சொந்த விருப்பத்தை செய்ய முற்படாமல், என்னை அனுப்பினவருடைய விருப்பத்தையே நாடுவேன் இவ்வாறு என் விருப்பம் உங்கள் தேர்வாக இருந்தால், உங்கள் சொந்த சித்தங்கள் புதைக்கப்பட்டு. புறக்கணிக்கப்படும்போது. பிதாவின் சித்தம் என்ன என்பதை ஆவலுடன் தேடுவீர்கள். இவைகளை நிறைவேற்றும்படி நான் தேடுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே உங்கள் நேரம். திறமைகள், ஜெபங்கள் மற்றும் அனைத்தையும் ஒரே திசையில் ஒரே இலக்கை நோக்கி பயன்படுத்த வேண்டும்.

மேலும். தேவனுடைய சித்தத்தை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற இருதயப்பூர்வமான விருப்பம் இருந்தால், நியாயப்பிரமாணம், சங்கீதம் மற்றும் தீர்க்கரிசிகள் வழியாக வெளிப்படுத்தப்பட்டது போல. நான் அவருடைய திட்டத்தை எவ்வாறு படித்தேன் என்பதையும், என்னுடைய சொந்த திட்டத்தையோ, தேர்வையோ அல்ல தேவனுடைய அந்த திட்டத்தை நிறைவேற்ற நாம் எப்படி முயற்சித்தேன் என்றும் நீங்கள் நினைவில் கொள்வீர்கள். “எழுதப்பட்டபடி, அனைத்தையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கும்.” என்பதை நான் எப்படி உங்களுக்கு சுட்டிக்காட்டினேன் என்றும் மேலும் தேவவசனங்களைத் தேட நான் உங்களுக்கு எவ்வாறு கற்பித்தேன் என்றும் நீங்கள் நினைவில் கொள்வீர்கள். இந்த போக்கைப் பின்பற்றுவதன் மூலம் குறித்த காலத்தில் தெய்வீக திட்டத்தை அதிகதிகமாக புரிந்துகொள்வதற்கு பரிசுத்த ஆவி எனக்கு வழிகாட்டியதைப் போல, உங்களையும் வழிநடத்தும். இதுவே உங்கள் உள்நோக்கமாக இருந்து. உங்கள் இருதயங்களும். உங்கள் ஆற்றலும் இவ்வாறு தேவனுடைய திட்டத்தில் உள்வாங்கப்பட்டால், உங்கள் இருதயங்களின் அனைத்து விருப்பங்களையும் நீங்கள் கேட்கலாம். “நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” பிதா தனது திட்டங்களை உங்களுக்காக மாற்றுவார் என்பதற்காகவோ, அல்லது உங்கள் சித்தம் செய்வதற்காகவோ அல்ல மாறாக. நான் குறிப்பிட்ட வழியில் பிதாவோடும் அவர் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அவருடைய யுகங்களைப் பற்றிய திட்டத்தோடும் முழுமையாக இணங்கி செயல்பபட இந்த தாராளமான வாக்குத்தத்தத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன். மேலும் நீங்கள் ஒருபோதும் அதிருப்தி அடையாமல், உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதை எப்போதும் காணமுடியும். ஏனென்றால் உங்கள் விருப்பமும். சித்தமும். உங்கள் மகிழ்ச்சியும். திருப்தியும். தேவனுடைய சித்தம் மற்றும் அவருடைய திட்டமும் அவருடைய சொந்த வழியிலும். காலத்திலும் முன்னேறுவதை காண்பதாக இருக்கும். இவ்வாறாக உங்கள் ஒவ்வொரு ஜெபமும். விருப்பமும் நிறைவேற்றப்படும். இந்த அனுபவத்திற்கு தலைகிழாக. தங்கள் சொந்த விருப்பங்களைச் செய்யவும். மனிதத் திட்டங்களை நிறைவேற்றவும். தங்கள் சொந்த ஆசைகளுக்காக ஜெபிக்கவும் விரும்புபவர்கள் எப்போதும் ஏமாற்றங்களை சந்திப்பார்கள்.

ஆகையால் அதை உங்கள் இருதங்களில் பதியவையுங்கள், முடிவுகளுக்கு பயப்படவேண்டாம். புயல் எவ்வளவு இருட்டாக இருந்தாலும் சரி. அல்லது துன்புறுத்தல் எவ்வளவு கூர்மையாக இருந்தாலும் சரி. தேவனுடைய மகத்தான. கிருபையுள்ள திட்டம் தவறாகபோகாது. இவ்வாறு உங்கள் விருப்பமும் திட்டங்களும் (தேவனுடையவை) தோல்வி அடைய முடியாது. மேலும் நீங்கள் பிதாவோடு முழுமையான இணக்கத்தில் இருந்து, அதையே விரும்பும் போது இப்படிப்பட்ட நோக்கம் சரியானதாகவும், தந்தையின் திட்டத்துடன் முரண்படாததாக இருக்கும் வரை உங்கள் ஜெபம் எப்போதும் கேட்கப்படும். மேலும் எந்த விஷயத்திலும் உலகின் ஆவியினால் அல்ல. என்னுடைய ஆவி அல்லது விருப்பத்தை கேள்விக்குட்படுத்துவதற்கு சிறிதளவு இடமிருந்தாலும், “ஆயினும்கூட என் சித்தம் அல்ல. பிதாவே உம்முடைய சித்தமே நிறைவேறட்டும்” என்று நீங்கள் கேட்க நான் ஜெபித்தபடி, நீங்களும் ஜெபியுங்கள். அத்தகைய எல்லா ஜெபங்களுக்கும் பதில் நிச்சயம். மேலும், தந்தையின் திட்டத்துடன் நீங்கள் நெருக்கமாக அருகில் வருவதோடு, அதை புரிந்துகொளும் போது, அவர் நமக்கு கொடுக்கும் நல்ல ஈவுகளுக்கு எதிராக எதையும் கேட்கூடிய அல்லது விரும்பக்கூடியவைகள் நம்மிடத்தில் குறைவாகவே காணப்படும்.

உங்கள் பூமிக்குரிய நலன்களை தேவன் தொடும் போது. அவருடைய ஏராளமான முன்னேற்பாடுகளையும், அவர் செலுத்துகிற கவனிப்பையும், ஞானத்தையும் நீங்கள் காணும்போது, காட்டுப் புஷ்பங்களை அழகாக உடுத்துபவர் மற்றும் ஆகாயத்து பறவைகளை போஷிப்பவர். அவைகளை விட உங்களை அதிமாக நேசித்து பராமரித்து, உங்களுக்கு என்ன தேவை என்பதை அதாவது கிறிஸ்துவின் மூலம் அவர் அளித்த மிகப் பெரிய பரிசுக்கான ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்களாக உங்களுக்கு எது பலமளிக்கும். பயனளிக்கும். எது உங்களை காயப்படுத்தக்கூடும் என்பதை உங்களை விட அவருக்கு நன்றாக தெரியும் என்பதை உணரவேண்டும். இந்த விஷயங்களை நீங்கள் உணரும்போது, தற்காலிக விஷயங்களுக்கான உங்கள் ஜெபங்கள் மிகவும் அடக்கமாகவும். மிதமாகவும் மாற வேண்டும். உண்மையில், அவருடைய ஞானத்தையும். பராமரிப்பையும் நீங்கள் படிப்படியாக உணரும்போது. ஜெபத்தை ஆவிக்குரிய ஒற்றுமைக்கான வழியாக பயன்படுத்துங்கள். வாழ்க்கையின் சுமைகளையும். கவலைகளையும் ஆண்டவரின் காலடியில் வைப்பதன் மூலம் உங்களை திருப்திப்படுத்தி கொண்டு. “என்னுடைய கவலைகளுக்கு பதிலாக உம்முடைய சித்தமே செய்வேன்’ என்று சொல்லி. அவருடைய அன்பு மற்றும் ஞானத்தின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.

“என் தேவன் என்னை வழிநடத்துவதால் நான் எதைப்பார்த்தாலும் உள்ளடக்கமாயிருக்கிறேன்” என்ற பாடலை உங்கள் இருதயத்தில் பாடிக்கொண்டு, முன் எப்போதையும் விட உங்கள் ஜெபங்கள் ஆவிக்குரிய வரங்கள். கிருபைகள். கனிகள் மற்றும் ஆசீர்வாதங்ளுக்காக இருக்கவேண்டும். ஆகவே. ஒழுங்காக அறிவுறுத்தப்பட்டால், கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் மற்றும் அவருடைய வார்த்தையில் நிலைத்திருக்கும் அனைவருமே. சுமையாக இருக்கும் பூமிக்குரிய விஷயங்களைப் பற்றிய அனைத்து கவலைகளுக்காக ஏறெடுக்கும்பல ஜெபங்களிலிருந்து விடுபடலாம். இவைகளை எல்லாம் நம்முடைய பிதாவின் ஞானத்துக்கும். அன்பிற்கும் விட்டுவிட்டு. நம்முடைய ஜெபங்கள் அதிகமாக நன்றி செலுத்துதலிலும். புறஜாதிகள் நாடி தேடும் காரியங்களை விட (மத்தேயு 6:32) நாம் ஏற்கனவே அனுபவித்த ஆசீர்வாதங்களையும், உதவிகளையும் திரும்ப நினைவில் கொண்டுவந்து. அவரை துதிப்பதற்கும். ஆராதிப்பதற்கும் நம்முடைய இருதயங்கள் தேவனை நோக்கி செல்லவேண்டும்.

உண்மையில் பூமிக்குரிய விவகாரங்கள் சில நேரங்களில் குழப்பாக இருக்கும். மேலும் அவை எவ்வாறு முடியும் என்பதில் ஆச்சரியப்பட்டு, ஆழமான ஆர்வம் காட்டுவதை தவிர்க்க இயலாமல் போய்விடும். ஆனால் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் ஆத்மா அவருடைய வார்த்தைகளில் நிலைத்திருப்பவர். அவரால் முடியும் என்பதை அவர் அறிந்திருந்தாலும், தனது சொந்த வழியில் நடக்க துணிய மாட்டார். எல்லாவற்றையயும் பிதாவின் கைகளில் ஒப்புக்கொடுத்துவிட்டு. கடுமையாக உழைத்து. தன்னால் முடிந்தவரை தேவனுடைய போக்கில் சென்று. எந்த அளவிலும் காரியங்கள் சிறிதளவாகிலும் மாற்றப்படவேண்டும் என்பதை கேட்கவும் மாட்டார்.

ஆனால் நம்முடைய எல்லா சோதனைகளிலும் குழப்பங்களிலும் நாம் தேவனிடத்தில் ஜெபிக்கிறோம் அல்லவா! ஆம், உண்மையில் நாம் செய்கிறோம். எந்த விதமான குழப்பத்திலும். துக்கத்திலும் எல்லாவற்றையும் தேவனிடம் சொல்லும் பாக்கியத்தை விட வேறு எந்த ஆறுதலும் பெரிதாக இருக்காது. அவருடைய “சிறு குழந்தைகளின்” அழுகைக்கு அவர் காதுகள் எப்போதும் திறந்திருக்கும். அவற்றை அவரிடம் சொல்வது மற்றும் நம்முடைய எல்லா காரியங்களிலும் அவர் காட்டக்கூடிய ஆர்வத்தை உணர்ந்து கொள்ளும் போது நம்மைப் புதுப்பித்து உற்சாகப்படுத்தும், “அவர் ஒருபோதும் நம்மை கைவிட மாட்டார்” என்ற வாக்குத்தத்தம் நம் நினைவுக்கு கொண்டு வரப்படும். மேலும் அவருடைய ஞானமும். அன்பும் நமக்கு நன்மைக்கு ஏதுவானவைகளையே நடப்பிக்கும் அதாவது, சாதகமானதும். சாதகமற்றதுமான சகல காரியங்களையும் உண்டாக்கும் திறனை நம்முடைய நன்மைக்காகவே செயலாற்றுகிறார். நம்முடைய எல்லா கவலைகளையும் அவர் மீது வைத்துவிட்டு. அவருடைய வாக்குத்தத் தங்களின்படி, தற்போதைய உபத்திரவங்கள் மற்றும் பிற விஷயங்கள் அனைத்தும் நன்மைக்கு ஏதுவாக அவர் நடத்துவதால், அவரை நாம் மகிழ்ச்சியோடும். அதிக நம்பிக்கையுடனும், முழங்கால்களில் எழும்பி, அவரை புகழலாம். அத்துடன் நம்முடைய சொந்த காரியங்களுக்காக கட்டளையிடுவதற்கு முயற்சிப்பதை விட ஆண்டவரோடு நெருங்கிய ஐக்கியத்தையும். தொடர்பையும் கொண்டிருக்கவேண்டும். மேலும் மகத்துவமான தேவனை நம்முடைய திட்டங்களை நிறைவேற்றும் ஊழியராக ஆக்குவது. சந்தேகத்திற்கு இடமின்றி அவருடைய பார்வையில் நிச்சயமாக இது ஒரு முட்டாள்தனமானது மற்றும் இது அனுமதிக்கப்பட்டால் நமக்கு அல்லது மற்றவர்களுக்கு இது தீங்கை விளைவிக்கும்.

R3407 [col. 1:3, 4]: –

“நீங்கள் என்னிலும், என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்” என்பதே நம்முடைய ஆண்டவரின் முக்கியமான வார்த்தைகளாகும். கர்த்தருடைய காது நமக்கு இருக்கவேண்டும் என்றால். நாம் அவருக்குள் அவருடைய சரீரமான அங்கத்தினராகவும் அவர் வழியாக பிதாவுக்கு புத்திரர்களாகவும் நிலைத்திருக்கவேண்டியது மிக அவசியம். அவருடைய வார்த்தைகள் நம்மில் நிலைத்திருப்பதும் மிக அவசியம். தேவனுடைய வாக்குத்தத்தங்களை நாம் படித்து, அவர் எதை வாக்களித்திருக்கிறார் என்பதை அறிந்து, இதனால் நமக்கு வழங்குவதில் அவர் மகிழ்ச்சி அடையக்கூடிய காரியங்களை அதாவது, அவர் முன்னதாகவே வாக்களித்த விஷயங்களை விஷயங்களை மட்டுமே நாம் கேட்கலாம். ஜெபத்தில் நாம் கேட்கக்கூடியவற்றையும், கேட்கக்கூடாவற்றையும் குறித்த மற்றொரு ஆலோசனை, இந்த விஷயத்தின் முழுமையான பரிசோதனையை மற்றொரு நேரத்திற்கு விட்டுவிடுகிறதாகும். நம்முடைய நண்பர்களின் மனமாற்றத்தை நாம் கேட்கக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு ஜெபிக்கும்படி கர்த்தர் சொல்லவில்லை. அவர் அப்படிப்பட்ட மாதிரியையும் முன்வைக்கவில்லை. அவருடைய அப்போஸ்தலர்களும் அப்படியாக எதையும் சொல்லவில்லை, வேத வசனங்களில் உள்ள போதனைகள் முற்றிலும் முரணாக உள்ளது. எவ்வாறாயினும், நாம் நேசிப்பவர்களுக்கும். சத்தியத்தின் செல்வாக்கின் கீழ் கொண்டுவர விரும்புவோருக்கும், ஆண்டவருடைய செய்தியை தெளிவாகவும், வல்லமையாகவும், அதை மெய்ப்பிக்கக்கூடிய வகையில் எவ்வாறு வழங்க வேண்டும் என்பதை நாம் அறிந்துக்கொளவதற்கு முதன்மையாக ஞானத்திற்காகவும், நம்முடைய இருதயங்களிலும், உதடுகளிலும் தேவைப்படும் கிருபைக்காகவும் நாம் ஜெபிக்கவேண்டும். “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” என்பதே தேவனுடைய ஒழுங்காகும்.

மேலும் அவசியமில்லாதபோது, அதிசயமான முறையில் நம் மனதில் சத்தியம் புகுத்தப்படாது. ஆனால், அதை ஏற்கனவே கற்றுக்கொண்டவர்களால் அறிவிக்கப்படும். ஆகவே, இந்த சுவிசேஷ யுகத்தில், சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்கு இதுவே தேவனுடைய வழிமுறையாகும். சத்தியத்தின் ஆசீர்வாதத்தை, அவருடைய கிருபையின் வழியாக பெற்றுக்கொள்ள சரியான மனநிலையில் உள்ளவர்களுக்கு அதை வழங்குவதில் தேவன் மகிழ்ச்சியாக இருக்கிறார். மற்றொரு விளக்கத்தை எடுத்துக்கொள்ளலாம்: பணம் அல்லது ஆடம்பரங்களுக்காக ஜெபிப்பதற்கு நாம் கற்பிக்கப்படவில்லை. ஆனால் நாம் உழைத்தபின் நம்முடைய உழைப்பிற்கான ஆசீர்வாதங்களை கேட்கலாம். மேலும் அதிகமானாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, ஆண்டவர் நமக்கு சிறந்தவைகளை வழங்கும்போது, அதை நன்றியுள்ள உணர்வோடு பெற்றுக்கொள்ள ஆயத்தமான மனநிலையைப் பெற்றிருக்கவேண்டும் என்ற வழிக்காட்டுதலே சிறந்ததாக இருக்கும். “எங்கள் அநுதின ஆகாரத்தை எங்களுக்கு தந்தருளும்.” என்று நம்முடைய ஆண்டவர் கற்பித்த காரியம் மட்டுமே நம்முடைய முழுமையான தேவையாக உள்ளது. “உம்முடைய இராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதாக”, என்று பதினெட்டு நூற்றாண்டுகளாக கிருபாசனத் தண்டைக்கு சென்ற இந்த விண்ணப்பத்திற்கு தேவன் ஏற்ற காலத்தில் பதில் அளிப்பார் என்றும், நம்முடைய இராஜாவின் இரண்டாம் பிரசன்னத்தின்போது ஆண்டவரிடம் இருந்து மழைபோன்று ஆசீர்வாதங்கள் வந்து, இந்த உலகம் இழந்த அனைத்தையும் திரும்ப கொடுக்கப்படும் என்பதை உறுதியாக நம்பி உரிமையோடும் நாம் ஜெபிக்கலாம்.

R3546 [col.2:1, 2] திராட்சைக் கொடியின் உறுப்பினரின் கனிகள்.

நம்முடைய ஆண்டவரின் ஐக்கியத்தினால் வரும் கனிகள் என்னவாக இருக்கும் என்பதை அவர் நமக்கு தெரிவிக்கிறார்:-

முதலாவதாக, அவர்கள் என்ன கேட்டுக் கொள்கிறார்களோ, அது அவர்களுக்கு செய்யப்படும். இதற்கு ஒரு நிபந்தனை மட்டும் உண்டு. அதாவது, அவர்கள் இவ்வாறு கேட்பதற்கு ஆயத்தமாகும் முன், அவருடைய சித்தம் இன்னது என்பதையும், அவருடைய சித்தத்தின்படி அவர்கள் என்ன கேட்கலாம் என்பதை அறிந்துக்கொள்ளும்படிக்கு, அவர்கள் தேவனுடைய வார்த்தைகளுக்கு கவனம் செலுத்தியிருக்கிறோமா என்று பார்க்கவேண்டும். கிறிஸ்துவில் நிலைத்திருப்பவர்களுக்கு சொந்த விருப்பம் இருக்கக்கூடாது. அவர்களுடைய சித்தம் தலையின் சித்தமாகவே இருக்கவேண்டும். மேலும் அவர்களின் தலை, பிதாவின் சித்தமே அவருடைய சித்தம் என்று முன்னதாகவே அறிவித்திருக்கிறார். நம்முடைய இருதயத்தில் பிதாவின் சித்தத்தையும், அவருடைய வாக்குத்தத்தங்களையும் கொண்டிருந்தால், நம்முடைய விண்ணப்பங்களும் இவற்றுக்கு இணங்க இருக்கும். இப்படிப்பட்ட அனைத்தையும் வழங்குவதற்கு தேவன் மகிழ்ச்சியுள்ளவராக இருக்கிறார். இவைகளே கொடுக்கப்பட்டுள்ளவரம்பகள் அல்லது நிபந்தனைகளாகும்.

F679 [P1] through F680 [P2]

“கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” (யோவான் 16:24)

“உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங்கீதம் 16:11) என்று தீர்க்கதரிசி கூறுகிறார். தெய்வீக ஆசீர்வாதங்களுக்கும், மிகுதியான மகிழ்ச்சிகளுக்கும் வழியை ஆயத்தப்படுத்தும்படியாக ஜெபம் ஆத்துமாவை தேவனுடைய சமூகத்திற்கு கொண்டுவருகிறது. தேவனுடைய ஜனங்கள், தெய்வீக சித்தத்தையோ, திட்டத்தையோ மாற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் அவருடைய கிருபாசனத்தை அணுகுவதில்லை என்பது தெளிவாக காணப்படுகிறது. அத்தகைய சிந்தனை, இந்த விஷயத்தின் ஒவ்வொரு நியாயமான கருத்திற்கும் பொருந்தாது. ஆகவே, முறையான ஜெபம் என்பது தெய்வீக சித்தத்திற்கு மாறாக, நம்முடைய விருப்பங்களைச் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வைப்பத்தில் இல்லை. ஆனால் தேவனுடைய சித்தத்திற்கும், திட்டத்திற்கும் முழுமையாக அடிபணிய வேண்டும் என்று அவர் நமக்கு அறிவுறுத்துகிறார். “…தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால் பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்.” (யாக்கோபு 4:3) என்று அப்போஸ்தலர் சிலரைப் பற்றி அறிவிக்கிறார். இவர்கள் தெய்விக ஒழுங்கிற்கும். திட்டத்திற்கும் இசைவாக அல்ல. தங்களுடைய விருப்பத்திற்கு இசைவாகவே வேண்டுதல் செய்கிறார்கள்.

இதே வார்த்தைகளை கூறி நம்முடைய ஆண்டவரும் நம்மை எச்சரிக்கிறார். “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்: என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை. அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் ஆகையால், நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள் நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.” (மத்தேயு 6:25-34) மீண்டுமாக, “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” (யோவான் 15:7) என்று நம் ஆண்டவர் கூறுகிறார். பின்வரும் நிபந்தனைகள் அனைத்தும் முக்கியமானவைகள்:

(1) ஜெபிக்கக்கூடியவர் கிறிஸ்துவுக்குள் இருக்கவேண்டும். அவருடைய ஒப்புரவாக்குதலின் புண்ணியத்தை ஏற்றுக்கொண்டு. அவருடைய சித்தம் மற்றும் ஊழியத்திற்கு அற்பணிப்பதன் மூலமாக அவருடன் நெருங்கிய ஐக்கியத்தை பெற்றிருக்க வேண்டும். இதற்கும் மேலாக, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஜெபத்தின் சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு, அவர் தொடர்ந்து கிறிஸ்துவுக்குள் அவருடைய சரீர அங்கத்தினராகவும், புது சிருஷ்டியாகவும் நிலைத்திருக்க வேண்டும்.

(2) தேவனுடைய வார்த்தைகள் அவருக்குள் நிலைத்திருக்க வேண்டும், கர்த்தருடைய சித்தத்திற்கு இணங்க, அவர் கொடுப்பதில் மகிழ்ச்சியடையக்கூடிய விஷயங்களைக் கேட்பதற்குத் தேவையான ஞானம் அவருக்கு இருந்தால், அவர் சத்திய வார்த்தைக்கும். கிருபைக்கும் பங்காளியாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர் கிறிஸ்துவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாக இருந்தாலும், அவருடைய ஜெபங்கள் தகாத விதமாக இருப்பதினால், அவைகளுக்கு பதிலளிக்கப்படாமல் போகலாம். இந்த இரண்டு தகுதிகளையும் பெற்றதாக சொல்பவர்கள் மட்டுமே. தேவன் குறித்த காலத்தில் தங்களுடைய விண்ணப்பங்கள் பதில் அளிக்கப்படும் என்ற முழு நம்பிக்கையுடனும், விசுவாசத்தின் முழு உறுதியுடனும், பரலோக சிருபாசனத்தண்டை அணுகலாம். இப்படிப்பட்டவர்கள் மட்டுமே முழுமையான மகிழ்ச்சியை உணரமுடியும்.

வசனங்கள் விளக்குகிறபடி, ஜெபம் என்பது தேவனுடைய பிரசன்னத்தை அணுகுவதற்கும் மற்றும் அவருடன் ஐக்கியப்படுவதற்குமான ஒரு முயற்சியாகும். “இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும்” யார் தைரியமாய்க் கிருபாசனத்தைண்டையிலே சேரமுடியும்? (எபிரெயர் 4:16) பொதுவாக இந்த உலகத்திற்கு ஜெபத்தின் சிலாக்கியமும், தேவனிடம் அணுகுவதற்கான வாய்ப்பும் இல்லை என்று அப்போஸ்தலரின் வார்த்தையின்படி நாம் பதில் அளிக்கலாம். உண்மை என்னவென்றால், மில்லியன் கணக்கான புறஜாதிகள் அவர்களின் தெய்வத்திற்கு ஏற்றபடி விதவிதமான ஜெபங்களை செய்கிறார்கள். ஆனாலும் அவர்களின் ஜெபங்கள் தேவனுக்கு ஏற்கத்தக்கவை அல்ல. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம், ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறர்வர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.” (எபிரெயர் 11:6) கொர்நெலியு இப்படிப்பட்டவராக இருந்தார். அவர் உண்மையான தேவனை கண்டறிந்து, அவரை பயபக்தியோடு ஆராதித்து, அவரையும், அவருடைய சித்தத்தையும் அறிந்துக்கொள்ள விரும்பினார். தெய்வீக திட்டத்தில், தேவனுடைய தயவு, புறஜாதியாருக்கும் கொடுக்கப்படுவதற்கு, தேவையான காலக்கட்ட வளர்ச்சி அடைந்தவுடன், அவருடைய ஜெபங்களுக்கும், தர்மங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டது. அதுவரையில், தேவனுடன் முழுமையாகவும், சரியான முறையிலும் தொடர்பு கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவர் அந்நியரும், பிரிந்திருக்கும் நிலையிலிருந்து, தேவனுடைய புத்திரனாகும்படிக்கும். தேவனோடு இசைந்திருப்பதற்கான தேவனுடைய வார்ததைகளை அவருக்கும் அறிவிக்கும்படி, பேதுருவை அழைக்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டது – இது கிருபாசனத் தண்டையில் பிதாவிடம் அணுகக்கூடிய ஒரு சிலாக்கியம்.

R3663 [col.1 P2]: –

ஜெபத்தைப் பற்றி நாம் எப்போதெல்லாம் நினைக்கிறோமோ, அப்போதெல்லாம் அதற்கான பதில்களுக்கு நம்முடைய கர்த்தருடைய வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.” (யோவான் 15:7) ஆ, இந்த அறிக்கையில் நிபந்தனைகள் உள்ளது. கிறிஸ்துவில் நிலைத்திருப்பவர்கள் விசுவாசத்திலும். மனந்திரும்புதலிலும் அர்ப்பணிப்பிலும் வேரூன்றியிருக்க வேண்டும். அவரிடத்தில் நிலைத்திருப்பது என்பது விசுவாசத்திலும், பாவத்திற்கான மனந்திரும்புதலிலும், அதை எதிர்ப்பதிலும் நிலைத்திருக்க வேண்டும். மேலும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பதிலும், அவருடைய ஊழியத்தில் நிலைத்திருப்பதிலும் நிலைத்திருந்து அவைகளை வெளிப்படுத்தவேண்டும்.