பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?

தூஷணமும், பொல்லாத பேச்சுக்களும், வதந்திகளும்

01. தூஷணமான பேச்சுகள் என்றால் என்ன?
02. கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் மத்தியில் இந்தத் தவறுகள் சாதாரணமாக காணப்படுவது எப்படி?
03. நாவின் வல்லமை என்ன?
04. “ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறது” என்பதன் பொருள் என்ன?
05. புறம் கூறுதலின் அழிவுக்குரிய பாதிப்புகள் என்ன? மேலும் விழுந்துபோன நிலை, இதற்காக சொல்லும் காரணங்களும், தப்பித்துக் கொள்வதற்கான சாக்குப்போக்குகள் என்னென்ன?
06. தீமையான எண்ணம் கொள்வது என்றால் என்ன? மேலும் தீமையான எண்ணம் கொள்வதற்கும் அல்லது அவதூறாக பேசுவதற்கும் என்ன சம்பந்தம்?
07. “இரகசியமான குற்றம் என்றால் என்ன?” இவைகளின் இரண்டு வகைகள் என்ன?
08. தீமையான ஆலோசனை பாவமாக இருந்து, இரகசிய குற்றமாக மாறுவது எப்படி?
09. வெளிப்படையான பாவங்கள் என்றால் என்ன? இரகசியமான குற்றம் பகிரங்கமான பாவமாக மாறுவது எப்போது?
10. இந்த மிகுதியான துணிகரத்திற்கு வழி நடத்தும் பாவங்கள் என்ன?
11. இப்படிப்பட்ட பாவங்களிலிருந்து நம்முடைய இருதயங்களை எவ்வாறு சுத்திகரித்து காத்துக்கொள்வது?
12. ஆண்டவர் நம்மை எவ்வாறு நியாயந்தீர்க்கிறார்?
13. நாம் ஏதாகிலும் கெடுதல் உண்டாக்கும் வார்த்தைகளுக்கு நித்தமும் தேவனிடத்தில் ஏன் கணக்குக் கொடுக்கவேண்டும்?
14. நம்முடைய இருதயங்களின் முன்னுரையான வார்த்தைகள் எவ்வாறு இருக்கிறது?
15. இருதயத்தின் பரிசுத்தம் என்பதன் முக்கியத்துவம் என்ன?
16. சுத்தமான இருதயத்தின் முக்கியத்துவம் என்ன?
17. இருதயத்தில் பரிசுத்தத்தை நாம் எவ்வாறு பெறமுடியும்?
18. “நம்முடைய இருதயம் எல்லாவற்றிலும், கேடுள்ளதாக….” இருக்கும் பட்சத்தில் நம்முடைய நோக்கங்கள் பரிசுத்தமாக இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது?
19. மனசாட்சிக்கும், இருதயத்தின் பரிசுத்தத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
20. உண்மையைச் சொல்வது தீமையானதை பேசுதல் என்று பொருள்படுமா?
21. நமக்கு தெரிந்த எல்லா காரியங்களைப் பற்றி அனைவருக்கும் கட்டாயமாக சொல்ல வேண்டுமா?
22. மனதை புண்படுத்தும் பேச்சுக்கள் – தூஷணங்களாக குறிப்பிடப்படுமா?
23. பொதுவாக அறிவிக்கப்பட்ட போதனைகளை பகிரங்கமாக கண்டனம் (விமர்சிப்பது) செய்வது தவறானதா? தீமையான பேச்சா?
24. அவதூறு பேசுதல் என்றால் என்ன?
25. தவறான சாட்சி என்றால் என்ன? ஒரு வார்த்தையும் பேசாமல், மெளனமாக இருந்து கொண்டு தவறான சாட்சி பகிரக்கூடுமா?
26. ஒரு சகோதரனாவது சகோதரியாவது தீய காரியங்களை அறிவிக்க துவங்கும் போது நாம் எப்படி நடந்து கொள்வது?
27. தவறாக பேசக்கூடிய உலகத்தாரிடம் நாம் எப்படி நடந்து கொள்வது?
28. உலகத்தாருக்கு விரோதமாக பேசப்படுவதைக் காட்டிலும் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனுக்கு எதிராக பேசக்கூடிய வார்த்தைகள் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுமா?
29. வதந்திகள், புறங்கூறுதல், தீயப்பேச்சுகள், அவதூறு பேசுவது போன்ற காரியங்களை தவிர்ப்பதற்கும், வசனங்கள் மூலமாக சரி செய்வதற்கும் என்னென்ன வழி உண்டு?
30. மூப்பருக்கு எதிராக பேசப்படும் தீமையான அல்லது தவறான காரியங்களைக் குறித்து நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
31. மூப்பர் தன் நாவுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் என்ன?
32. தவறான காரியங்களை அல்லது தீமையான காரியங்களை பேசாதபடிக்கு நாம் என்னென்ன அறிவுரைகளை கேட்டுக் கொள்ள வேண்டும்?
33. பிறர் வேலையில் சம்பந்தமில்லாமல் தலையிடுவது, மற்றும் தீமையாக பேசுவது, இவைகளுக்குள்ள சம்மந்தம் என்ன?
34. புறங்கூறுதலையும் வெட்டிப் பேச்சுக்களையும், வதந்திகளையும் மேற்கொள்வதற்கு தேவனுடைய தெய்வீக பிரமாணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
35. “ஒருவரையும் தூஷிக்க வேண்டாம் என்ற கற்பனைக்கு விதிவிலக்கான ஒரே காரியம் என்ன?
36. இயேசுவின் மாதிரியில் நாம் பெறக்கூடிய ஊக்கமான, உபதேசங்கள் என்ன?
37. தீமையான அனுமானங்களையும், தீய பேச்சுக்களையும் எவ்வாறு மேற்கொள்வது?
38. “தீமை” என்ற தலைப்பின் கீழ் பரலோக மன்னாவின் முன்னுரையில் காணப்படும் கூடுதலான குறிப்புகள் என்னென்ன?

விசுவாசம்

1 - விசுவாசம் என்றால் என்ன?
2 - விசுவாசத்தின் அடிப்படையான இரண்டு உட்பொருட்கள் என்ன?
3 - எதையும் போதுமான அளவு ஆதாரங்கள் இன்றி எளிதில் நம்பக்கூடிய பாரம்பரியங்கள் மற்றும் விசுவாசம் எவ்வகையில் வேறுபடுகிறது?
4 - உண்மையான விசுவாசத்தின் முக்கியத்துவம் என்ன?
5 - விசுவாசத்திற்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6 - விசுவாசம் “தேவனுடைய பரிசாக” எவ்வாறு கருதப்படுகிறது?
7 - இரட்சிப்படைய, கிறிஸ்துவுக்குள் விசுவாசம் அவசியமா?
8 - இந்த சுவிசேஷ யுகத்தில் கிறிஸ்துவுக்குள் வைக்கும் விசுவாசத்திற்கு உடனடியாக கிடைக்கும் பலன் என்ன?
9 - இயேசு எப்படியாக நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிறார்?
10 - விசுவாசத்தை எளிமையாக அறிக்கையிடுவது அவசியமா?
11 - “உணர்வுகளுக்கு” விசுவாசத்தில் ஒரு முக்கிய பங்குள்ளதா?
12 - நீதிமானாக்கப்படுவதற்கும் அடிப்படையான விசுவாசத்திற்கும், ஆவியின் கனிக்கான அடிப்படை விசுவாசத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
13 - “விசுவாசத்தின் நல்ல போராட்டம்” என்றால் என்ன?
14 - நல்ல போராட்டத்தை நாம் ஏன் போராட வேண்டும்?
15 - நாம் யாருக்காக, யாரை எதிர்த்துப் போர் புரிகிறோம்?
16 - “விசுவாசத்தினால் நடப்பது” என்பதற்கு பொருள் என்ன?
17 - விசுவாசத்தின் சோதனைகள் ஏன் அனுமதிக்கப்படுகிறது?
18 - விசுவாசத்தின் தற்போதைய வெகுமதிகள் என்ன?
19 - விசுவாசத்தினால் வருங்காலத்தில் நாம் பெறும் பயன் என்ன?
20 - விசுவாசத்தில் இளைப்பாறுதல் என்பதன் பொருள் என்ன?
21 - விசுவாசம் மற்றும் நம்பிக்கையில் பூரண நிச்சயம் என்பதற்கான விளக்கம் என்ன?
22 - விசுவாசத்தின் முழு நிச்சயத்தை நாம் பெற்றுக்கொண்டு அதை எப்படி தக்கவைத்து கொள்வது?
23 - விசுவாசத்தின் உறுதியான அஸ்திபாரம் எது?
24 - நம்முடைய விசுவாசத்தை எவ்வாறு அதிகரிக்கலாம்?
25 - உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்க இன்றைய சத்தியங்களின் சில முக்கிய அம்சங்களைக் கூறவும்?
26 - கிரியைகளுக்கும், விசுவாசத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?
27 - யார் இந்த “விசுவாச வீட்டார்”?
28 - யாக்கோபு 5:14 முதல் 16 வசனங்களின் விளக்கம் கூறவும்
29 - விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கும் அடையாளமாகச் சொல்லப்படும் கேடயம் மற்றும் நங்கூரத்திற்கும் உள்ள தொடர்பின் முக்கியத்துவம் என்ன?
30 - விசுவாசம் மற்றும் அறிவுக்கும் உள்ள தொடர்பு ஆயிர வருட ஆட்சியில் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தன்னடக்கம் மற்றும் சுயகட்டுப்பாடு

சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் என்ன?
மற்றவர்களின் நலனில் சுய கட்டுப்பாடு அவசியமா?
நாம் எல்லாவற்றிலும் நிதானமாக இருக்க வேண்டுமா?
சுய சுட்டுப்பாடு இருதயத்தின் எண்ணங்கள் மற்றும் நோக்கங்களை தூய்மைபடுத்துவதைக் குறிக்கிறதா?
இச்சையடக்கத்தின் நிதானம் நமது பாஷைக்குப் பொருந்துமா?
வணிக விவகாரங்களில் சுய கட்டுப்பாடு நீட்டிக்கப்படுகிறதா?
நாம் புசிப்பிலும் குடிப்பதிலும் நிதானம் அல்லது கட்டுப்பாடு ஏன் அவசியம்?
நமது சந்தோஷத்திலும் துக்கத்திலும் நாம் நிதானமாக அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமா?
வேதத்தை படிப்பதிலும், அதில் கலந்துகொள்வதிலும் முனைப்புடன் (ஒருங்கிணைந்து) இருக்க முடியுமா?
மாம்சத்தின் கட்டுப்பாட்டிற்கும் புது சித்ததிற்கும் உள்ள தொடர்பு என்ன?
சுய கட்டுப்பாடு இல்லாத புது சிருஷ்டிகள் மீது சபையின் கடமை என்ன?
ஒரு மூப்பருக்கு சுய கட்டுப்பாடு ஏன் முக்கிய தகுதியாக இருக்க வேண்டும்?
பெற்றோர்கள சுயகட்டுப்பாட்டைக் கடைபிடிப்பதன் அவசியம் எண்ன?
பிள்ளைகளுக்கு சுயக்கட்டுப்பாட்டைக் கற்பிப்பதில் எப்படிப்பட்ட ஆலோசனையை பயன்படுத்தலாம்?
நாம் எவ்வாறு சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளது?
சுய கட்டுபாட்டின் மிகபெரிய அளவிலான வளர்ச்சி, இயல்பாக மற்ற எந்த முக்கியமான குணங்கனை நமக்குள் வளர்ச்சி அடையச் செய்யும்?
சில கேள்விக்கான நீண்ட மேற்கோள்கள் பின்தொடர்கின்றன

மனத்தாழ்மை மற்றும் சாந்தம்

1. இவ்விரு கிறிஸ்துவ குணங்களுக்கு தேவன் எவ்விதத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்?
2. மனத்தாழ்மை, சாந்தம் என்ற வார்த்தைகள் வசனங்களில் பரஸ்பரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டாலும், இவைகளுக்குள் உண்டான சரியான வித்தியாசம் என்ன?
3. சாந்தத்திற்கும், அறிவுக்கும் உள்ள தொடர்பு அல்லது சம்பந்தம் என்ன?
4. தெய்வீக அரசாங்கத்திற்கு அஸ்திபார கோட்பாடாக சாந்தம் அமைந்துள்ளது என்று நாம் எவ்வாறு அறிந்துக்கொள்வது?
5. மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?
6. மிக அதிகமான அளவில் மனத்தாழ்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?
7. மனத்தாழ்மை அல்லது சாந்தத்திற்கும் உள்ள எதிரிடையான குணங்கள் என்ன?
8. சாந்தத்திற்கு இயேசுவை மாதிரியாக கொண்டு நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
9. அப்போஸ்தலர்கள் தாழ்மையான குணத்தைக் கொண்டிருந்தார்களா?
10. ஒரு மூப்பருக்கு மனத்தாழ்மை மிக அவசியமாக இருப்பதற்கான காரணம் என்ன?
11. புருஷர்கள் மனத்தாழ்மை ஏன் செயலாற்ற வேண்டும்?
12. மனைவிகள் எவ்வாறாக மனத்தாழ்மை காண்பிக்க வேண்டும்?
13. நம்முடைய பிள்ளைகளுக்கு சாந்தத்தையும் மனத்தாழ்மையையும் கற்றுக் கொடுப்பதன் முக்கியத்துவம் என்ன?
14 & 15. சாந்த குணமுள்ளவர்களுக்கும், மனத்தாழ்மையுள்ளவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வாக்குத்தத்தங்கள் என்ன?
16. இந்த குணங்களை நமக்குள் வளர்த்துக்கொள்ள, தேவையான முறைகளை, ஆலோசனையாக கொடுக்கவும்
17. இந்தத் தலைப்புக்கு கூடுதலான மற்ற யோசனைகள் என்ன என்ன? (பரலோக மன்னா மற்றும் புதிய வேதாகமம்)

பொறுமை

1. பொறுமை என்ற கிறிஸ்தவ அடிப்படையான குணலட்சணத்தின் முக்கியத்துவம் என்ன?
2. பொறுமை என்ற இந்த வார்த்தையின் பொதுவான முக்கியத்துவம் என்ன?
3. வேத வசனங்களில் விசேஷமாக வெளிப்படுத்தல் 3:10ல் மற்றும் லூக்கா 8:15ல் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையின் ஆழமான முக்கியத்துவம் என்ன?
4. நீடிய பொறுமை ஏன் முக்கியமானதொன்றாகக் கருதப்படுகிறது?
5. நீடிய பொறுமைக்கும், சுய கட்டுப்பாட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன?
6. நம்முடைய சோதனைகளை நாம் ஏன் பொறுத்துக் கொண்டு காத்துக்கொள்ள வேண்டும்?
7. விசுவாசத்திற்கும் நீடிய பொறுமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
8. நாம் “உபத்திரவங்களில் ஏன் மேன்மை பாராட்ட” வேண்டும்?
9. நாம் ஓயாமல் எந்த விதமான சிந்தனைகளை மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தால், நம்முடைய “உபத்திரவங்களில் பொறுமையாக” இருக்க முடியும்?
10. ஜீவ பலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதற்கு நாம் விசுவாசத்தோடு செய்த உடன்படிக்கைக்குப் பொறுமை தேவைப்படுகிறதா?
11. நாம் எதிர்ப்புகளையும், உபத்திரவங்களையும் எதிர் நோக்குவது எப்படி?
12. நாம் “அனைவரிடமும் பொறுமையாக” எப்படி இருப்பது?
13. சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் விசேஷித்த பொறுமை தேவைப்படும், காரணம் என்ன?
14. பொறுமை நம்மை தேவனுடைய வழியைவிட்டு விலகச் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டா?
15. நீடிய பொறுமையை அன்பை விட சிறந்ததாக அப்போஸ்தலன் ஏன் கூறுகிறார்?
16. பொறுமை மற்றும் “கிறிஸ்துவுக்குள் நல்ல சேவகனாக தீங்கநுபவிப்பதற்கு” உள்ள தொடர்பு என்ன?
17. கிறிஸ்துவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஓட்டத்தை ஓடவேண்டும்?
18. நீடிய பொறுமை ஏன் இறுதி பரீட்சையாக இருக்கிறது?
19. “அவருடைய வார்த்தையின் பொறுமையைக் காத்துக் கொள்பவர்களுக்கு” தேவன் அளித்த வாக்குத்தத்தம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?
20. பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?
21. வேத வசனங்களில் பொறுமையைப்பற்றி குறிப்பிடப்பட்ட மற்ற எடுத்துக்காட்டுகள் என்னென்ன?
22. பொறுமை என்ற குணம் ஒரு மூப்பருக்கு அவசியமா?
23. நாம் நீடிய பொறுமையை எப்படி வளர்த்துக் கொள்வது?

Q-20

பொறுமைக்கு மாதிரியாக இருக்கும் இயேசுவிடம் நாம் என்ன பாடங்ககளைக் கற்றுக்கொள்ளலாம்?

What lessons do we learn from Jesus’ example of patience?

“எபி 12:3 – “ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு, நமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக் கொள்ளுங்கள்”.

 

R2313 (col. 2 P2)

நம்முடைய ஆண்டவர் நமக்காக நீடிய பொறுமையோடு பட்ட அவமானங்களை எண்ணுகையில் நம்முடைய நெஞ்சைத் தொடுகிறது. மேலும் அதைத் தொடர்ந்து தியானிக்கும்போது, நாம் மனம்வருந்தி, சீர்பொருந்துவதற்கு ஏதுவாக இருக்கிறது. நம்முடைய ஆண்டவரை ஏற்றுக் கொண்டு, உணர்வுப்பூர்வமாக அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களிடத்தில் இந்த வல்லமை குறைந்து போவதுமில்லை. இந்த சிந்தனை நம்மை உருகவைக்கும். ஏனெனில் அவர் நமக்காக செலுத்தின பலியினாலும், அவருடைய பாடுகளினாலும் உபத்திரவத்தினாலும் நாம் ஜீவனைப் பெற்றிருக்கிறோம். ஆகவே இயேசுவைப் பின்பற்றுபவர்கள் நீடிய பொறுமையோடும், சாந்தத்தோடும், கிறிஸ்துவுக்காக அனுபவிக்கும் துன்பத்திலும், அநீதியின் நிமித்தம் வரும் பாடுகளிலும், சோர்ந்துப் போகாமல் அனைத்தையும் சகிக்க நம்முடைய ஆண்டவராகிய இயேசுவை நினைத்துக் கொள்ளும்படி நமக்கு பாடம் கற்பிக்கிறார். (எபி 12:3) ஐசுவரியவானாக இருந்த அவர் நமக்காக தரித்திரரானாரே என்றும், நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ள அவர் மனப்பூர்வமாக தம்முடைய ஜீவனையே கொடுத்தாரே என்றும் மீண்டுமாக, அப்போஸ்தலர் கிறிஸ்துவின் பாடுகளைக் குறிப்பிடுகிறார். இப்படியாக “நாமும் சகோதர்களுக்காக நம்முடைய ஜீவனைக் கொடுக்க மனப்பூர்வமாக சம்மதிக்கவேண்டும்.

 

R2879 (col.2 P2)

பொதுவாக போராடுகிற ஜனங்கள் (மாம்சத்தில்) பழிவாங்கும் உணர்வுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் நம்முடைய ஆண்டவரிடத்தில், சுயகட்டுப்பாடு, சாந்தம், சகோதர சிநேகம், பரிவு, இரக்கத்தையும் கற்றுக்கொண்டவர்கள் – “தீமைக்குப் பதிலாகத் தீமை செய்யவேண்டாம்” – என்ற காரியத்தைச் செய்ய ஆயத்தப்பட்டவர்களாக இருப்பார்கள். நம்முடைய ஆண்டவர் வையப்படும்போது பதில் வையாமலிருந்தார் என்பதை அவர்கள் மாதிரியாக நோக்குவார்கள். அவர் பாவம் செய்து விட்டு, அதற்காக அவர் மெளனமாக இருந்தார் என்பது பொருள் அல்ல, மேலும், அவருடைய எதிரிகள் பூரணமாக இருந்தபடியால் அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை என்பதும் பொருள் அல்ல. அவர் தன்னை முழுமையாக தெய்வீக சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்திருந்தபடியால், ஜனங்களுடைய இகழ்ச்சியையும், தூஷணங்களையும் பொறுமையோடும், தாழ்மையோடும் சகித்தார். அழைக்கப்பட்டவர்களும் நீடிய பொறுமையுள்ளவர்களாக வாழ்ந்து, இப்படிப்பட்ட பாடங்களைக் கற்றுக்கொண்டு, நம்முடைய விசுவாசத்தை மெய்ப்பித்து, இயேசுவின் உண்மையான குணலட்சணங்களை நமக்குள் வளர்த்து, நம்முடைய வாழ்க்கையில் செயலாற்றி, அவர் ஜனங்களிடத்தில் இரக்கமுள்ளவராக இருந்ததுப்போல, நாமும் குருடராகவும், அறியாமையிலும் இருக்கக்கூடிய ஜனங்களுக்கு இரக்கம் பாரட்ட வேண்டும்.

ஆண்டவரின் குணலட்சணங்களில் வளர்ச்சியடைபவர்கள், தங்களை இகழ்வோரையும், தூஷிப்பவர்களையும் பொருட்படுத்தமாட்டார்கள். அனைத்தையும் இழந்தாலும், பாடுகளை சந்தோஷமாக அனுபவிக்க ஆயத்தமாக இருப்பார்கள். ஆகவே இக்காலத்தில் உங்கள் உபத்திரவங்களில் சந்தோஷமாகக் களிகூறுங்கள், ஏனெனில், இந்தப் பாடுகள் நாம் பெறப்போகிற மிகப்பெரிய மகிமைக்காக இன்று அனுமதிக்கப்படுகிறது. “உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை துன்பப்படுத்துபவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” என்ற நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளோடு பேதுருவின் வார்த்தைகள் எவ்வளவு இசைவாக இருக்கிறது. (பிலி 3:8, 2 கொரி 4:17, மத் 5:44, ரோமர் 12:14) ஆகவே நாம் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார். ஓட்டப்பந்தயத்தின் இறுதி கட்டமாகிய இந்தக் குணத்தை நாம் இன்னும் பெறாமலிருந்தால், பூரண அன்பின் குறிப்பாக – நம்முடைய எதிராளிகளையும் சிநேகிக்கும் அன்பும், அவர்களை மனமுவந்து ஆசீர்வதிக்கும் உணர்வு, அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம், அவர்களை இருளிலிருந்து தூக்கிவிடும் விருப்பம், மற்றும் அனைத்துக் காரியங்களும், தேவனுடைய தெய்வீகத் திட்டத்திற்கு இசைவாக இல்லாவிட்டாலும், நாம் தொய்ந்து போகவேண்டாம். வெகு சீக்கிரத்தில் இந்த இலக்கை எட்டிப்பிடிக்க நாம் முயற்சிப்போம். ஏனெனில், நிச்சயமாக ஓர் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

 

R2616 (col. 2 P1)

அப்போஸ்தலர் சில உபதேசங்களைச் சொல்லிவிட்டு, அதை நீடிய பொறுமையோடு சகித்தால், தேவனுடைய உண்மையான ஊழியக்காரர்கள் என்ற நிலையைப் பெறுவோம் என்று அறிவிக்கிறார் – “மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடியசாந்தத்திலும், தயவிலும், பரிசுத்தஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும், நீதியாகிய வலதிடது பக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும், கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும், எத்தரெனப்பட்டாலும் நிஜஸ்தராகவும், அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும், அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப் பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப் பண்ணுகிறோம்” (2 கொரி 6:4-10) நம்முடைய ஆண்டவர் உண்மையானவராக இருக்கும் பட்சத்தில், எப்பேர்பட்ட வஞ்சகன் என்று நினைக்கப்பட்டார். ஒளியின் பிரபுவாக இருக்கும்போது, அவர் பெயல்செபூலுக்கு தலைவன் என்று அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட பழிகளை எவ்வளவு நீடிய பொறுமையோடு சகித்தார். அவரை பின்பற்றுகிற நாம் அனைவரும் சாத்தானின் நயவஞ்சகத்தினால் தவறாக குற்றம் சாட்டப்படும்போது, இப்படிப்பட்ட துன்பங்களை பொறுமையோடு சகிக்க கட்டாயமாக எதிர்பார்க்கப்படுகிறோம். இப்படிப்பட்ட துன்பங்கள் நம்முடையப் பாடுகளின் ஒரு பகுதி என்று நம்முடைய பிதாவாகிய தேவன் கூறுகிறார். ஏனெனில் – “என்னிமித்தம் உங்களை நிந்தித்து துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூறுங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்” என்று இயேசு குறிப்பிட்டார்.

 

R3543 (col. 2 P2)

நமக்கு எதிராக இருப்போரிடம் நாம் எப்படியாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை நம்முடைய ஆண்டவர் யூதாஸோடு நடந்து கொண்ட விதத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது, அதை மட்டும் அல்ல, அவர்கள் மனந்திரும்புவதற்கு நாம் செய்யவேண்டிய இறுதி முயற்சிகளையும் நமக்கு பாடமாக அங்கு வைத்திருக்கிறார் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இயேசு தம்முடைய சீஷர்கள் கெட்டுப்போகாமலிருக்க நீடிய பொறுமையோடிருந்து, அவர்களை கடைசிவரைக்கும் செம்மையானப் பாதையில் வழி நடத்தி, அவர்களின் தவறுகளைத் திருத்தி, சீஷர்களாக மாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, சகல நன்மையான சூழ்நிலைகள் மத்தியிலும், தங்களுக்குள் இருக்கும் சுய நலத்தை வளர்த்து, மிகக் கடுமையானவர்களாக மாறுபவர்கள் ஆண்டவருடைய நேரடியான கண்டிப்பைக் கூட உணராமல், வசனங்களினால் எந்த மாற்றத்தை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளாமலிருப்பார்கள் என்ற பாடத்தையும் நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். “அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்ற பவுலின் வார்த்தைகளை இங்கு நாம் நினைவுகூறலாம். தேவனுடைய ஆவியை முழுமையாக தங்களுடைய இருதயத்தில் உள்ள சுய நலத்திற்காக முழுமையாக பயன்படுத்தும் போது, அவர்களை என்றுமே மனந்திருப்ப முடியாது.